எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

சனி, 24 டிசம்பர், 2022

"உன்னுடன்[‘ஆரா’வுடன்] நான் கலந்துவிட்டேன். நீ எனக்குச் சொந்தமானவள்” -ஜக்கி!!!

அவனவன் தன்னுடைய மன அழுத்தம் குறையணும்னு இங்கே வந்தா, இருக்கிற நிம்மதியும் போயிடும். ‘சைலன்ஸ்’ பயிற்சி என்னும் 7 நாள் பயிற்சி மரண வேதனைக்கு ஒப்பானது. ‘பாப ஸ்பந்தனா’, ‘சூன்ய தியானம்’, ‘அட்ட யோகா’ உள்ளிட்ட பயிற்சிகள முடித்தால், ‘உங்களைச் சத்குருவே சந்திப்பார்’ என்று ஆர்வத்தைத் தூண்டிவிட்டு, ‘யாருக்கும் கிடைக்காத வாய்ப்பாகக் கடவுள்[ஜக்கி] நம்மைச் சந்திக்க உள்ளார்’ என்கிற மயக்க நிலையைப் பயிற்சிக்கு வந்தவர் மனதில் விதைப்பார்கள் பயிற்சியாளர்கள்.

அவர்கள் சொன்னபடியே ஜக்கியும் சந்திப்பார்; “உன்னுடைய ‘ஆரா’[நம் உடலைச் சுற்றி ஒளிக் கவசம் போல் தோன்றுகிற, மனிதனின் ஆற்றலில் இருந்து வெளிப்படும் ஒன்றுதான் ‘ஆரா’; ஆன்மா என்றும் சொல்லலாம்]வுடன் நான் கலந்துவிட்டேன். நீ எனக்குச் சொந்தமானவள்” என்பார் தான் சந்தித்த பெண்ணிடம். அப்புறம்.....[இதுக்கப்புறம் என்ன நடக்கும் என்று அனுமானித்துச் சொல்வது நம்மை வம்பில் மாட்டிவிட்டுவிடும்!].

ஜக்கியுடன் கலந்துவிட்டதாகச் சொல்லப்படும் நபர் ஆணாக இருந்தால்,  ஊதியம் இல்லாத வேலையாளாகவோ, ஏவல் நாயாகவோ ஜக்கிக்குச் சேவகம் செய்வார்

மேற்கண்ட இந்த விவரங்களை வழங்கியவர் ‘ஈஷா’வில் பணியாற்றிய ஒருவர்.

இதை அவர் ஏன் சொல்லவேண்டும்? அதற்கான சூழ்நிலை என்ன?

தொடர்ந்து படியுங்கள்.

மேலே விவரிக்கப்பட்டதான பயிற்சியில் கலந்துகொண்டார் ’சுபஸ்ரீ’ என்னும் பெண்.

பயிற்சி 11 மணிக்கு முடிவடையும் என்று அவர் தன் கணவன் பழனிக்குமாரிடம் சொல்லியிருந்தார்.

பழனிக்குமாரும் அந்த நேரத்துக்கு வந்து ஈஷா மையத்திற்கு வெளியே காத்திருந்தார்.

பிற்பகல் 3 மணிவரை சுபஸ்ரீ வரவில்லை.

விசாரித்ததில் சுபஸ்ரீ 9.30 மணிக்கு ஈஷாவிலிருந்து வெளியேறி வாடகைக் கார் பிடித்து, ‘செம்மேடு முட்டத்து வயலில் இறங்கியது தெரியவந்தது. அது தவிர, ஈஷாவிலிருந்து சுபஸ்ரீ தலை தெறிக்க ஓடிவரும் காட்சி சி.சி.டி.வி. யில் பதிவாகியிருந்ததும் தெரிய வந்தது. 

தனக்கான உடைமைகளை இஷாவிலேயே அவர் விட்டுவிட்டுச் சென்றதும் அறியப்பட்டது.

‘மனைவி எங்குச் சென்றார்? உயிரோடுதான் இருக்கிறாரா?’ என்னும் கேள்விகளுக்கு விடை தெரியாத நிலையில் காவல்நிலையத்தில் புகார் செய்திருக்கிறார் பழனிக்குமார். வழக்குப் பதிவு செய்து இந்த அசம்பாவிதம் குறித்து விசாரித்துக்கொண்டிருக்கிறார்கள் காவல்துறையினர்.

‘பாப ஸ்பந்தனா’, ‘சூன்ய தியானம்’, ‘அட்ட யோகா’... என்று இவையும், இன்னும் எவையெவையோ மந்திர தந்திரங்களையும் கையாண்டு, ஏராளமான அப்பாவி மக்களைத் தனக்கான அடிமைகள் ஆக்கிகொண்டிருக்கிறார் ஜக்கி. இவற்றையெல்லாம் இவர் யாரிடம் கற்றார்?

கற்றுக்கொடுத்தவர் அந்த ‘ஈஷன்’தானோ என்னவோ!?

                                                         *   *   *   *   *

*****‘நக்கீரன்’[2022 டிசம்பர் 24-27] இதழில் வெளியான செய்தித் தொகுப்பிலிருந்து திரட்டிய குறிப்பிட்ட சில தகவல்கள் மட்டும் இங்குப் பதிவு செய்யப்பட்டுள்ளன.

வேறு பல ஊடகங்களிலும் இச்செய்தி வெளியாகியிருப்பது அறியத்தக்கது.

==================================================================================

அல்லா[ஹ்] & எல்லாக் கடவுள்களாலும் கைவிடப்பட்ட ஆப்கானிஸ்தான் பெண்கள்!!!

நேற்று[23.12.2022] மாலை, ‘tamil.oneindia' வில் வெளியான கட்டுரையின் இறுதிப் பகுதி கீழே இடம்பெற்றுள்ளது.

//கடந்த 20 வருடங்களாகத்தான் ஆப்கன் பெண்கள், லேசாகத் தலைநிமிர தொடங்கினர்.....

வீட்டை விட்டு வெளியேறி மெல்ல மெல்லப் பெண்கள் படிக்க ஆரம்பித்தனர்.....

வேலைக்கும் செல்லத் துவங்கினர்.....

ஆப்கன் வரலாற்றில் கல்விக்கான பொற்காலம் என்று கடந்த 20 வருடங்களை மட்டுமே சொல்ல முடியும்.....

ஆனால், அதற்குள் இந்தத் தாலிபன்கள் ஆட்சிக்கு வந்துவிட்டார்கள்.. கல்வியை நோக்கி அடியெடுத்து வைத்துக்கொண்டிருந்த பெண்களுக்கு, உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளதும், கட்டுப்பாடுகள் அதிகரித்துள்ளதும், மீளாத் துயரில் ஆழ்த்தி வருகிறது.....

எங்கே போவது, என்ன செய்வது என்றே தெரியாமல் ஆப்கன் பெண்கள் விழிபிதுங்கி கொண்டிருக்கிறார்கள்...!!//

இச்செய்தியால் நம் அடிநெஞ்சிலிருந்து வெளிப்பட்ட வேதனைக் குரல் பின்வருமாறு:

ளும் தலிபான்கள் ‘சரியத்’[chariot] சட்டத்தை’ச் சரியாக அமல்படுத்துவதாகச் சொல்லிக்கொண்டு, அங்குள்ள பெண்களுக்கான அத்தனை உரிமைகளையும் பறித்து, உடலுறவுக்கான கருவிகளாக மட்டுமே அவர்களை ஆக்குவதில் தீவிரம் காட்டுகிறார்கள்.

இதை ஐ,நா.சபை கண்டிக்கிறது; அமெரிக்கா கண்டித்திருக்கிறது. இந்தியா ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியிருக்கிறது.

இதனாலெல்லாம் எந்தவிதப் பயனும் இல்லை என்பது இந்த நாடுகளுக்கு மட்டுமல்ல, அனைத்து உலக நாடுகளுக்கும் தெரியும்.

‘அல்லா[ஹ்]’ உட்பட உலகோரால் துதிக்கப்படுகிற, ஆயிரக்கணக்கில் உள்ள அத்தனைக் கடவுள்களும் மோனத் தவத்தில் மூழ்கிகிடக்கிறார்கள்[அதைத் தவிர அவர்களுக்கு வேறு வேலை இல்லைபோலிருக்கிறது!].

அவர்களாலும் ஆப்கானிஸ்தான் பெண்களின் வாழ்வில் விடியல் தோன்ற வழியேதும் இல்லை என்பது உறுதியாகிறது.

ஆக, ஆப்கானிஸ்தான் பெண்களுக்கென்று ஆதரவுக்கரம் நீட்ட எந்தவொரு நாதியும் இல்லை.

கடவுள்களும் மனிதர்களும்[ஆடவர்கள்] இவர்களைக் கைவிட்டுவிட்ட நிலையில்.....

ஆப்கானிஸ்தான், ஈரான் ஆகிய நாடுகளைத் தவிர ஏனைய நாடுகளில் வாழும் இஸ்லாம் மதப் பெண்கள்கூட அவர்களுக்காகக் குரல் கொடுக்க மறந்து மௌனம் சுமந்து முடங்கிக் கிடக்கிறார்களே, ஏன் இந்த அவலம்?!

ஆண்களுக்கு அடங்கி, வீட்டோடு அடைபட்டு வாழ்வதிலேயே சுகம் காண்பது இவர்களுக்கு வழக்கமாகிப்போனதோ!?

===========================================================================

https://tamil.oneindia.com/news/international/did-the-afghan-girl-students-dress-fancy-and-taliban-announces-indefinite-ban-on-university-educati/articlecontent-pf831919-490937.html