எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

புதன், 25 பிப்ரவரி, 2026

’நீட்’ தேர்வுத் திணிப்பு... நேற்றுவரை பல தற்கொலைகள்! இன்று ஒரு கொலை!!

மாநில அரசுகளின் உரிமைகளைப் பறிப்பதற்கான சங்கி அரசின்[ஒன்றியம்] தொடர் நடவடிக்கைகளால் விளைந்த/விளையும் தீமைகள் பல.

அவற்றில், மாநில அரசுகள் மருத்துவர்களைத் தேர்வு செய்வதற்கு நடத்தும் தேர்வுகளுக்குப் பதிலாக ‘நீட்’ தேர்வைத் திணித்ததும் ஒன்று. 

இதனால், பெரும் எண்ணிக்கையில் மாணவர்கள் மனச் சிதைவுகளுக்கு உள்ளாகி,  தற்கொலை செய்துகொள்ளும் நிகழ்வுகள்['நீட்' திணிப்புக்கு முன்பு, தோல்வியால் தற்கொலை புரிந்த மாணவர்கள் எண்ணிக்கை மிக மிகக் குறைவு] அதிகரித்திருக்கிறது.

இந்த அவலம் தொடரும் நிலையில், 

21 வயது மாணவர் ஒருவர், தேசியத் தகுதி & நுழைவுத் தேர்வில்(நீட்) தேர்ச்சி பெற, தொடர்ந்து அழுத்தம் கொடுத்த தன் தந்தையைக் கொடூரமான முறையில் கொலை செய்து, உடலைத் துண்டு துண்டாக வெட்டி பிளாஸ்டிக் டிரம்மில் அடைத்து வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘பாஜக’ சங்கிகளின் ஆதிக்க வெறி இதைப் போன்ற மேலும் பல கொலைகளுக்குக் காரணமாக அமையக்கூடும்.

எனவே, நீட் தேர்வை ரத்து செய்வது மிக அவசியம்.

ஆனால், ஆதிக்க வெறி பிடித்த சங்கிகள் ஆட்சிப்பீடத்திலிருது அகற்றப்பட்டால் மட்டுமே இது சாத்தியம் ஆகும்.

அகற்றப்படுவது அத்தனை எளிதில் நிகழாது; காரணம், வடபுலத்தில் சிந்திக்கவே தெரியாத முட்டாள்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருப்பதுதான்.

                                   *   *   *   *   *

*https://tamil.newsbytesapp.com/news/india/lucknow-murder-son-shoots-father-dismembered-body-dumped-in-blue-drum/story

*Lucknow horror: Father's NEET dream for son ends in chop-and-drum murder — what we know

“ஆண்களுக்குப் பெண்டாட்டிகள் இலவசம்” -சி.வி.சண்முகம்! பெண்களுக்கு?

          முன்னாள் அமைச்சர் சண்முகம் அவர்களே,

“ஓட்டுக்காக ஸ்டாலின்[முதலமைச்சர்] ஆண்களுக்கு ஆளுக்கொரு பெண்டாட்டி[திருமணம் ஆனவர்ளுக்கும்தான்> எத்தனைப் பெண்டாட்டிகளும் ‘வைப்பாட்டி’களும் இருப்பினும்]யை இலவசமாகக் கொடுப்பார்” என்ற உங்களின் பேச்சை  மனப்பூர்வமாகப் பாராட்டுகிறோம்.

ஆனால், ஸ்டாலினை மட்டம்தட்டுவதற்காக நீங்கள் இப்படிப் பேசியிருந்தாலும், அதி புத்திசாலி அரசியல்வாதியான அவர், உடனடியாக ஆளுக்கொரு பெண்டாட்டியை இலவசமாகக் கொடுத்து 2026 தேர்தலில் ஆண்களின் ஒட்டுமொத்த வாக்குகளையும் அள்ளுவார் என்பதில் எள்முனை அளவும் சந்தேகமில்லை.

தேர்தலுக்கு இரண்டொரு நாட்கள் இருக்கும்போது உங்கள் கட்சியின் தலைவரான 'புரட்சித் தமிழர்’ எடப்பாடியார் மூலம், “நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் ஆண்களுக்கு இலவசமாகப் பெண்டாட்டிகள் தருவோம்” என்று சொல்ல வைத்திருக்கலாம்.

தவறு செய்துவிட்டீர்கள்.

“ஆண்களுக்கு இலவசமாகப் பெண்டாட்டிகள் தருவார் ஸ்டாலின்” என்ற உங்கள் பேச்சால் வாக்குரிமை பெற்ற அனைத்து ஆண்களுக்கும் ஸ்டாலின் பெண்டாட்டிகளைத் தருவது போலவே, “ஸ்டாலின், ஓட்டுக்காக ஒவ்வொரு பெண்ணுக்கும்[மணமானவர்கள் உட்பட] இலவசமாகப் புருஷன் வழங்குவார்” என்று நீங்கள் சொல்லாதிருப்பினும், கலியுகச் சாணக்கியரான ஸ்டாலின் வாக்குரிமை பெற்ற அத்தனைப் பெண்களுக்கும், ஆண்களுக்குச் சமமாகப் புத்தம் புதியப் புருஷன்களை இலவசமாக வழங்குவார் என்பது நூறு விழுக்காடு உறுதி.

ஆக, 

தற்குறித்தனமான உங்கள் பேச்சால், 2026 தேர்தலில் உங்கள் கட்சி படு படு படு தோல்வியைத் தழுவும்[ஒட்டுமொத்த ஆண்களும் பெண்களும் வாக்களிக்காததால்] என்பது உறுதி.

தெரிந்தோ தெரியாமலோ இமாலயத் தவறு செய்துவிட்டீர்கள் சண்முகம் அவர்களே!