அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

புதன், 30 செப்டம்பர், 2020

மணம் ஆகாமலே விதவைக்கோலம் பூண்ட வினோத நடிகை & பாடகி!!!

#நான்  கட்டிலில் படுத்திருந்தேன். “ராஜா மாதிரி ஒருத்தர் உன்னைப் பார்க்க வந்திருக்கிறார்” என்று என் தாய் என்னிடம் வந்து சொன்னார். நான் எழுந்திருந்து முகத்தைச் சுத்தம் செய்துகொள்ளுமுன்னமே ‘அவர்’ என் கட்டிலில் வந்து அமர்ந்துகொண்டார்.

நான் பிரமித்துப்போனேன். கூச்சநாச்சம் இல்லாமல் என் கட்டிலில் அவர் உட்காரலாமா என்று எண்ணினேன். அவரோ என் தவிப்பைக் கண்டுகொள்ளாமல் பேச ஆரம்பித்தார். அவர் பேசப் பேச...

‘அடடா..... என்ன கம்பீரத் தோற்றம்! எப்பேர்ப்பட்ட காந்தக் குரல்!’ இப்படி, இன்னும் எப்படியெல்லாமோ எண்ணி எண்ணி மனம் கிறங்கினேன். என் கந்தர்வன் என்னைத் தேடி வந்துவிட்டதாகவே நான் நம்பினேன்.

[நாடகத்தில் என்னோடு நடிப்பதற்காக இலங்கைக்கு வரவழைக்கப்பட்டிருந்த] அவர், “மேடை ஏறுவதற்கு முன்னால் ஒத்திகை பார்க்க வேண்டும்” என்றார். 

“வேண்டாம்” என்றேன்.

“என் பாட்டு அலாதியானது என்பது எல்லோருக்கும் தெரியும். உன்னால் ஈடுகொடுக்க முடியுமா?” என்றார்

“சமாளிப்பேன்.” - நான்.

“தோற்றுவிடுவாய்.” - அவர்.

“தோற்பது யார் என்பது நாடகம் முடியும்போது தெரியும்” என்றேன் சிதறாத புன்னகையுடன்.

உரையாடல் முடிந்த பின்னரும் அவர் என் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தார். நானும் அவரின் அழகிய வதனத்தைப் பார்வையால் விழுங்கிக்கொண்டே இருந்தேன்.

எங்களை இன்பத்தில் ஆழ்த்திய இந்தச் சம்பவம் எங்களின் முதல் சந்திப்பில்[இலங்கையில்] நடந்தது. அன்றுமுதல் அவர் மறையும்வரை நாங்கள் பிரியவேயில்லை.

அவர் மறைந்ததும் நான் விதவைக்கோலம் பூண்டேன்#

இப்படிச் சொன்னவர்.....

‘கொடுமுடி கோகிலம்[கோகிலம்- குயில், கிளி] என்றழைக்கப்பட்ட கே.பி.சுந்தராம்பாள்.

“கல்யாணம் ஆகாமலே விதவைக்கோலம் பூணலாமா?” -வைதிகர்கள் இப்படிக் கேட்டார்கள்: கொதித்தார்கள்; நகைத்தார்கள். இவை பற்றியெல்லாம் கிஞ்சித்தும் கவலைகொள்ளவில்லை சுந்தராம்பாள்.

கிட்டப்பாவை, “என் ஆத்துக்காரர்” என்று அழைப்பதையே வழக்கமாகக் கொண்டிருந்த அவர், கிட்டப்பா இறந்த செய்தி அறிந்ததும், ரூபாய் 18000 எடுத்துக்கொண்டு புறப்பட்டார்; அவர் வைத்துவிட்டுப்போன கடன்களைக் கட்டினார். தன் ஆத்துக்காரர் ‘கடனாளி’யாகச் செத்துப்போனார் என்று பழிக்கப்படுவதை விரும்பாத அந்தக் கொடுமுடிக் குயில்.

காலஞ்சென்ற[அக்டோபர்,1980] கே.பி.சுந்தராம்பாள் ஓர் அபூர்வப் பாடகி மட்டுமல்ல; ஓர் அதிசயப் பெண்மணியும்கூட!

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

பதிவு ரொம்பவே பழசுங்க!

செவ்வாய், 29 செப்டம்பர், 2020

கடவுளின் முன்னோடிகள்!!

கடவுள் உண்டென்று சொல்லும் ஆன்மிகர்கள்,  வழக்கமாக முன்வைக்கும் ஓர் எடுத்துக்காட்டு, ’ஒரு மண்பானை தானாகத் தோன்றாது. அதைப் படைக்க ஒரு குயவன் தேவை. அது போல, உலகங்களையும் உயிர்களையும் பிறவற்றையும் படைக்கக் கடவுள் தேவை’ என்பதாகும்.

ஒரு குயவன், கண்களை மூடித் திறந்தோ, விரித்த உள்ளங்கையை மேலே உயர்த்தியோ[அபயக்கரம் போல] பானையைப் படைத்ததில்லை; களிமண், நீர் போன்ற மூலப் பொருள்களை சேர்த்து, தண்டச் சக்கரம், தட்டுப் பலகை [பானையைத் தட்டிச் சீர்படுத்தும் கருவி] போன்ற துணைக் கருவிகளைக் கொண்டுதான் படைத்தார்; படைக்கிறார். அது போல, கடவுள் தனக்குரிய மூலப் பொருள்களையும் துணைக் கருவிகளையும் எங்கிருந்து அல்லது எவரிடமிருந்து பெற்றார் என்பது அறியப்படவேண்டிய உண்மை.

அவற்றைக் கடவுள் தனக்குள்ளிருந்தே  என்றும் சொல்லப்படுவதுண்டு. அது உண்மை என்றால், உலகில் உள்ள அத்தனை பொருள்களும் கடவுள் தன்மை வாய்ந்தவையே. 

அது அவ்வாறாயின், கடவுளின் கூறான நம் உடம்பு, ஒரு துன்பம் வரும்போது கிடந்து துடிப்பது ஏன் கொஞ்சம் சிந்திக்கத் தெரிந்தவர்கள்கூட எழுப்பும் கேள்வியாகும்.

ஆன்மிக நெறியாளர் எவரும் இந்நாள்வரை இக்கேள்விக்குப் பதில் தந்ததில்லை.

இந்நிலையில் மீண்டும் ஒரு வினாவை, அவர்கள் முன் வைக்கிறோம். 

குயவன் தனக்குத் தேவையான துணைக் கருவிகளை அவரே உருவாக்கிக் கொள்ளவில்லை. அவற்றைப் படைத்தளித்தவர்கள் குயவனைப் போன்ற பிற மனிதர்களே.

ஆக, குயவர் பானையைப் படைக்கத் தொடங்குவதற்கு முன்னரே, துணைக் கருவிகளை உருவாக்கும் படைப்புத் தொழில் ஆரம்பம் ஆகிவிட்டது என்பது உண்மை.

இதைப் போலவே, கடவுள் படைப்புத் தொழிலைத் தொடங்குவதற்கு முன்னதாகவே, துணைக் கருவிகளைப் படைக்கும் தொழில் நடைபெற்றிருக்க வேண்டும் 

அந்தத் தொழில்களைச் செய்தவர்கள் படைப்புத் தொழிலில் கடவுளின் முன்னோடிகள் ஆவர்.

கடவுள் தானாகத் தோன்றியவர், அல்லது, இருந்துகொண்டே இருப்பவர் என்றால், இவர்களும் தாமாகத் தோன்றியவர்கள், அல்லது இருந்துகொண்டே இருப்பவர்கள் ஆவார்கள்.

ஆக, கடவுள் என்றொருவர் இருந்தால், அவர் ஒருவரே என்று சொல்வது அறிவுடைமை அல்ல.

அல்லவே அல்ல.

===============================================================




சனி, 26 செப்டம்பர், 2020

"தமிழில் பேசினால் ஸ்நானம் பண்ணனும்"... மஹா மஹா பெரியவா!!!

தமிழில் பேசினாலும், தமிழால் பிழைப்பு நடத்தினாலும்[குறிப்பாக, தினமலரும் காலைக்கதிரும்] மிகப் பெரும்பாலான பிராமணர்கள், சமஸ்கிருதத்தையும் இந்தியையும் ஆதரிக்கிறார்கள் என்பதும், இயன்றவரை தமிழுக்கு எதிராகச் செயல்படுகிறார்கள் என்பதும் அப்பட்டமான உண்மைகள்.

மறைந்த, 'மஹா பெரியவா' என்று பிராமணர்களால் இன்றளவும் புகழ்ந்து போற்றப்படுகிற சந்திரசேகரேந்திரர் குறித்து, அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் எழுதிய “இந்து மதம் எங்கே போகிறது?’’ என்ற நூலிலிருந்து…

'நாங்கள் பேசிக்கொள்வது சுத்த சமஸ்கிருதத்தில்தான். அதனால் பல பிராமணர்களுக்குக்கூட நாங்கள் பேசிக்கொள்வது புரியாது.

“ரகசியமா பேசுகிறீர்கள்? தமிழில் பேசினால் என்ன?’’ என்று மகா பெரியவர் நகர்ந்தபிறகு சிலர் என்னிடம் கேள்வி கேட்பார்கள்.

அதற்கு, “உனக்கு சமஸ்கிருதம் தெரியவில்லை என்றால் கற்றுக்கொள். உனக்காக அவர் ஒரு நாளைக்கு எத்தனை தடவை ஸ்நானம் பண்ணுவார்? புரிந்து நடந்து கொள்’ என்று பதில் சொல்வேன்.

சங்கராச்சாரியார் தமிழைப் பேசினால். அவர் தீட்டுப்படுவார். காரணம், தமிழ் நீஷப்பாஷை. தமிழை நீஷப்பாஷையான பிராமணோத்தமர் பேசினால், அவர் நாக்கினை நீஷப்பாஷை தொட்டுவிட்டால், பிரம்மாவின் நெற்றியிலே பிறந்தவர் தீட்டுப்பட்டுவிட மாட்டாரா?'

தமிழைப் பற்றியும் தமிழர்களைப்பற்றியும் பிராமணர்களின் நிலை என்ன என்பது தெரிந்தவர்களுக்கு இது கண்டிப்பாக ஆச்சரியத்தைக் கொடுக்காது.

கோயில் கருவறைக்குள் தமிழன் அர்ச்சகன் ஆனால் சாமி தீட்டாகிவிடும்; தமிழில் வழிபட்டாலும் தீட்டாகிவிடும் என்பதுதானே அவர்களின் நிலை.

இது தொடர்பான இன்னொரு நிகழ்வு.

ஆட்சி மொழிக் காவலர் கி.இராமலிங்கனார்[மறைவு: 1986] அவர்களை அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது சைவப் பழமாகக் காட்சி அளிக்கக் கூடியவர்கள்! ஊராட்சி, நகராட்சி, நகரியம், ஒன்றியம் என்கிற அழகிய சொற்களைத் தமிழுக்குத் தந்த பெருமகன் அவர்.

அவர் பேட்டியிலிருந்து[சற்றே சுருக்கப்பட்டது].....

'சங்கராச்சாரியார் என்னைப் பார்க்கணும் என்று சொன்னாராம். நரசிம்மய்யர் என்பவர் காஞ்சீபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலிலே நிர்வாக அதிகாரியாக இருந்தார். அவர் என்னை வந்து அழைத்தார்.

நான் கால் சட்டை மேல் சட்டையோட இருந்தேன். இதோடு அவரை நான் எப்படி பார்க்க முடியும் என்று கேட்டேன். அதெல்லாம் வரலாம் என்றார். சதாரணமாக அவர்களைப் பார்க்கும் போது மேல் சட்டையோடு போக முடியாது.

வரதராஜப் பெருமாள் கோயிலுக்குப் போனோம். 

அவர் பிரகாரத்தில் வந்துகொண்டிருந்தார். அப்பொழுது இந்த நரசிம்மய்யர் என்னைச் சீண்டுகிறார் …. நமஸ்காரம் பண்ணுங்க… நகமஸ்காரம் பண்ணுங்க விழுந்து கும்பிடுங்க என்று சொல்கிறார். நான் ஒன்றும் செய்யவில்லை.

பிரகாரத்தில் ஒரு பக்கத்தில் சுவர் ஓரமாக சங்கராச்சாரியார் நின்று கொண்டார். வலக்கைப் பக்கமாக நானும் நரசிம்மய்யரும் நின்று கொண்டோம். இடது கைப் பக்கம் ஒரு சமஸ்கிருத ஆசிரியர் நின்றார். இவர் ரேஷனிங்க் பற்றிக் கேள்வி கேட்கிறார். அதுவும் சமஸ்கிருதத்தில். அதை சமஸ்கிருத ஆசிரியர் தமிழில் சொல்கிறார் எனக்கு. தமிழிலே பதில் சொல்கிறேன் நான்.

பேச்சு முடிந்து வெளியே வந்தோம். வெளியே வரும் பொழுது அந்த நரசிம்ம அய்யரிடம், "என்ன அய்யா, அவர்தான் தமிழிலே சொன்னா தெரிஞ்சிக் கிறார். தமிழில் பேசவும் தெரியும். அப்புறம் எதுக்கு ஒரு மொழிபெயர்ப்பாளர்?" என்றேன்.

"இதிலே பாருங்கோ…. பன்னிரெண்டரை மணிக்கெல்லாம் சந்திர மௌலீஸ்வரர் பூஜை இருக்கில்லையா, அதுவரைக்கிலும் எந்த நீசப் பாஷையிலும் பெரியவா பேச மாட்டார்" என்றார். எனக்கோ அறைந்துவிடலாமான்னு இருந்தது.

பெரியவாவின் தமிழ் மொழித் துவேஷத்துக்கான ஆதாரங்களில் இந்நிகழ்வுகளும் அடங்கும்!
===============================================================
ஆதாரம்: http://dvkperiyar.com/?p=25630

வெள்ளி, 25 செப்டம்பர், 2020

இன்றைய அறிவியலுக்கு அடிப்படை அன்றையப் புராணக் கதைகளா?![ஒரு சாடல் பதிவு]

'அறிவியலின் உச்சத்தை நோக்கி உலகம் சென்றுகொண்டிருக்கின்ற இக்காலத்தில்கூட அப்பட்டமான மூடநம்பிக்கைகளை அறிவியல் என்றும், இன்றைய அறிவியலுக்கு அவைதான் அடிப்படை என்றும் காவிக் கும்பல் அலம்பல் பண்ணுது.

சென்ற நூற்றாண்டின் அரிய கண்டுபிடிப்பான “குளோனிங்’’ முறையில் உயிர்களை உருவாக்க முடியும் என்று நிரூபித்த அறிவியல், வேத காலத்திலேயே இருந்தது என்று பிரதமர் மோடி முதற்கொண்டு பலர் மேடைகளில் பரப்புரை செய்துவருவது தெரிந்ததே.

இதுக்கு என்னடா ஆதாரம் இருக்குன்னு கேட்டா, மகாபாரதக் கதைய ஆதாரமா காட்டுறாங்க.

மகாபாரதத்துல திருதராட்டிரன் மனைவி காந்தாரி ரெண்டு வருசம் கர்ப்பமா இருந்தும் குழந்தை பிறக்கலயாம். ஒரு அம்மிக்கல்லத் தூக்கி அவ வயித்துல அடிச்சிருக்கா. கரு கலைஞ்சி கீழே ஒழுகியிருக்கு. அதை எடுத்து 101 பானையில் போட்டுவைக்க, கௌரவர்கள் பிறந்தாங்களாம்.

இதில என்னடா அறிவியல் இருக்கு.?

ஒரு பொண்ணு கர்ப்பமாகிப் பத்துமாசம் ஆச்சினா குழந்தை பெத்தாகணும். இல்ல குழந்தையும் தாயும் செத்துரும். ரெண்டு வருசமா எப்படிக் கர்ப்பமா இருக்க முடியும்? கலைஞ்ச கருவ ஒரு குண்டாஞ்சட்டிக்குள்ள போட்டா எப்படிக் குழந்தை பிறக்கும்?

புராணக்கதை காலத்துலயே நம்ம ஆளுக பிளாஸ்டிக் சர்ஜரி   பண்ணிருக்கானுகன்னு சொல்லி, அதுக்கு ஆதாரமா புள்ளையாரக் காட்டுறாங்க. புள்ளையார் பொறப்பப் பத்தி இந்துப் புராணத்தில ஒரே மாதிரி எழுதியிருக்கா? இல்ல. யானையைப் புணர்ந்ததால விநாயகன் பொறந்தாங்கிறது ஞானசம்பந்தர்  வாக்கு. பார்வதி தேவி ஒரு 5 கிலோ அழுக்க அதோட உடம்புல இருந்து தெரட்டிப் புள்ளையார உருவாகியிருக்கிறதாவும்  எழுதி வச்சிருக்கானுக..

அழுக்கைப் புள்ளயாக உருவாக்குறதுதான் உங்க அறிவியலா?  சாணிய உருட்டிச் சாமின்னு கும்புடுறானுக. இதெல்லாம் அறிவியலா? தலைய வெட்டி இன்னொரு தலைய ஒட்டவைக்குறதான் உங்க பிளாஸ்டிக் சர்ஜரி அறிவியலா? பித்தலாட்டத்தனத்துலயும் ஒரு லாஜிக் வேணாமா மக்களே? மனுச மண்டைக்குப் பதில் எப்படி யானை மண்டைய ஒட்டவைக்க முடியும்? போட்டோசாப் பண்ணுனாலும் பொருந்தாதே. 

ராமர் பாலம்னு புதுசா புரளியக் கிளப்பி விட்டுட்டு இருக்கானுக.  எந்த ஒரு நவீன இயந்திரமும், ரோடு ரோலரும், கிட்டாச்சி வண்டியும், பொக்குலின் மிஷினும் இல்லாம அந்தக் காலத்துலயே தமிழ்நாட்டுக்கும் இலங்கைக்கும் இடையே பாலம் அமைத்திருக்கிறார்களாம். பாலம் கட்டுன கல்லுலகூட ஜெய் ஸ்ரீராம் என்ற வார்த்தை அழியாமல் இருக்குதாம். இந்த மாதிரி பதிவுகள் வாட்ஸ்அப், பேஸ்புக்னு எப்போவும் சுத்திட்டுக் கெடக்கும். இதுல நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லைனு தலைப்பு வேற..

உங்க ஆபாசப் புராணத்துல அரக்கன், அசுரர்கள்னு குறிப்பிடுற ராவணன், சிங்கிலா வந்து சிதையத் தூக்கிட்டு போயிருக்கான். அதும் ஒரே நாளுல. கடவுள்னு கும்புடுற ராமனுக்கு அங்க போகப் பத்து வருசமா பாலத்த போடனுமாடா?

மாட்டு மூத்திரத்தில என்ன அறிவியல் இருக்கு? மாட்டு மூத்திரம் குடிச்சா உடம்புக்கு நல்லதுன்னு எந்த ஆஸ்பத்திரியில எழுதிப் போட்டுருக்கானுக? குடிக்கிறது மூத்தரம். இதச் சமாளிக்குறதுக்கு ஏண்டா அறிவியலப் புடிச்சி இழுக்குறீங்க?

அந்தக் காலத்திலேயே நாங்க கோள்களைக் கணிச்சிருக்கோம்னு இப்ப சொல்லிப் பீத்திட்டுத் திரியுறாங்க காவிக. இது யாருடா கண்டுபிடிச்சதுனு கேட்டா பதில் வராது. கோள்கள் ஒன்பது இல்ல, ஏழுதானு இப்ப அறிவியல் சொலிருச்சி. இன்னும் இவனுக பித்தலாட்டம் பண்ண அப்டேட் ஆகாம இருக்கானுக. 

இப்பவரைக்கும் மனிதர்களின் தேவைகளுக்கான அறிவியல் கண்டுபிடிப்புகள் எல்லாமே மேற்கத்திய நாடுகள்லதான் அதிகமா இருக்கு, இப்ப நாம பயன்படுத்துற பேஸ்புக் வரைக்கும்.

ஒரு எழவுக்கும் உதவாத மதத்தத் தூக்கிட்டு இந்து மதம்தான் உலக அறிவியலுக்கு அடிப்படைனு அடுத்தவங்க கண்டுபிடிச்ச ஊடக சாதனத்துலயே இவனுக பிரச்சாரம் பண்ணுறானுக.

டூவீலர், ப்போர்வீலர்னு மக்கள் பயன்பாட்டுக்குக் கண்டுபிடிச்சிக் கொடுத்தா, அந்த டூவீலர்க்குக் கோயிலுல அர்ச்சனை பண்ணிப் பூசையப் போடுறாங்க. ஏண்டா பூசைனு கேட்டா, விபத்து வராதாம். வெள்ளைக்காரன் ஒரு டூவீலர் வாங்குனா கிறுக்குத் தனமா ஐயருக்கு ஒரு 200, மாலைக்கு ஒரு 100, தேங்கா, பழம், சந்தனம், குங்குமம், பத்தி, சூடம் 150னு உங்களமாதிரி கிறுக்குதனமா பூசை போட்டுட்டாத் திரியுறான்?

உங்க முன்னோர்கள் முட்டாள்கள் இல்லனு சொல்லிட்டுத் திரியுற அறிவியல் என்னனு தெரியுனுமுனா  காலையில ஐயர் வீட்டுப் பக்கம் போங்க. கோலத்தப் போட்டு, சென்டர்ல சாணியை உருட்டி வைச்சிருப்பாங்க. கேட்டா புள்ளையார்னு சொல்லுவாங்க.

இன்னும் ரெம்ப டீப்பா தெரியுனுமுனா. அதிகாலை வைணவக் கோவில்களுக்குப் போங்க. ஒரு பசு மாட்டப் பெருமாள் சிலைக்கு நேரா பெட்டக்ஸை திருப்பி நிக்க வைச்சிச் சாணிபோட விடுவாங்க. இது என்னனு கேட்டா, பெருமாள் மனைவி லட்சுமி வாசம் செய்யுற புனிதமான இடம் அதுன்னு சொல்லுவாங்க.

உண்மையில் சாணி, மூத்திரத்தைத் தவிர உங்க கண்டுபிடிப்புன்னு ஒன்னுமே இல்ல.'

===============================================================

நன்றி: பதிவர் முத்துக்குமார்

வியாழன், 24 செப்டம்பர், 2020

எதிர்நீச்சல்!...ஒரு பக்கக் கதை

“கவின், உன்     பள்ளித்  தமிழாசிரியரைப் பார்த்தேன். ஆண்டுவிழாவுக்கான பேச்சுப் போட்டிகள் நடக்க இருப்பதாகச் சொன்னார்.  போட்டிகள்ல நீயும் கலந்துக்கிறதானே?” என்று மகனிடம் கேட்டார் துரைசாமி.

“இல்லப்பா.” -சலிப்புடன் சொன்னான் கவின்.

“ஏன் கவின்?”

“பேச்சுப் போட்டி எதிலும் என்னால் ஜெயிக்க முடியறதில்ல; ஆர்வமும் இல்ல.”

“அப்படிச் சொல்லக்கூடாது. வெற்றியோ தோல்வியோ இன்னிக்கே பேர் கொடுத்துடு.”   

தலையசைத்துவிட்டுப் பள்ளிக்குப் புறப்பட்டான் கவின்.

துரைசாமியின் மனைவி சரிதா கேட்டார்: “கவின் ரொம்ப நல்லாப் படிக்கிறான். பேச்சுப் போட்டி, விளையாட்டுப் போட்டிகளில் எல்லாம் அவனுக்குப் பிரியம் இல்ல. வேண்டான்னா விட்டுடலாமே. ஏன் கட்டாயப்படுத்துறீங்க?”

“நாட்டில் மக்கள் தொகை பெருகிட்டே போகுது. எல்லார்த்திலேயும் போட்டி அதிகமாயிட்டு வருது. பிரியப்படுற வேலை கிடக்கும்கிறது நிச்சயமில்ல. பிடிக்காத வேலையைச் செய்தாத்தான் பிழைக்க முடியும்கிற நிலை வரலாம். அதுக்கான மனப் பக்குவத்தை இப்போதிருந்தே வளர்த்துக்கிறது நல்லதில்லையா?” என்றார் துரைசாமி.

கணவன் சொல்வது சரியே எனப்பட்டது சரிதாவுக்கு.

===============================================================


புதன், 23 செப்டம்பர், 2020

சீனர்களை ஒழிக்க... "ஐம் ஹ்ரீம் க்ளீன் சமுண்டாய விச்சி "!!!

யாகம், ஹோமம் என்பவை பற்றி அறிந்திருப்பீர்கள்['ஹோமம் என்பது ஒரு சிறிய யாகமே ஆகும். அது ஒரு மணி நேரத்தில் இருந்து ஒரு நாளுக்குள் செய்யப்படுவது. ஹோமம் என்பது, தனிப்பட்ட மனிதர்கள் குறிப்பிட்ட நோக்கத்துக்காக, தங்கள் இஷ்ட தெய்வங்களை வேண்டித் தங்கள் வீட்டிலோ அல்லது ஒரு ஆலயத்திலோ செய்வதாகவும் இருக்கலாம்.' -quora 

எதிரிகளை அழிப்பதற்கென்றே யாகங்களும் ஹோமங்களும் உள்ளனவாம். https://www.maalaimalar.com/devotional/devotionaltopnews/2020/09/16115308/1887727/Chandi-Homam.vpf

இமயமலையின் மிகப் புனிதமான ஓர் இடத்திலோ, இந்தியா-சீனா எல்லைப் பகுதியிலோ, "ஐம் ஹ்ரீம் க்ளீன் சமுண்டாய விச்சி"[சண்டி ஹோமம்]என்ற இந்த மந்திரத்தைச் சொல்லி ஒரு யாகம் நடத்தினால் போதும், நம் நிரந்தர எதிரியான சீனன் ஒழிந்தே போவான்; அல்லது, நாம் யாகம் செய்யப்போவது தெரிந்து, நம்மிடம் சரணடைந்து நமக்கான ஆகச் சிறந்த நண்பனாக மாறுவான்.

கோயில் 'குருக்கள்'களால் செய்யப்படும் யாகங்களும் ஹோமங்களும் இந்த அளவுக்குச் சக்தி வாய்ந்தவையாம். இவற்றை மங்கலகரமான நாட்களில் செய்து பாகிஸ்தான் போன்ற பிற எதிரிகளையும் ஒழித்துக்கட்டலாம். 

எதிரிகளை அழிப்பதற்கான சில ஹோமங்களும் யாகங்களும் .....

* 'நிகும்பலா' ஹோமம்  https://www.dinamalar.com/news_detail.asp?id=765960

இது உலகப் புகழ் பெற்றது. இதைச் செய்தால் எதிரிகள் பூண்டோடு அழிந்துபோவார்கள். இந்த ஹோமத்திற்குக் கிலோ கணக்கில் வறமிளகாய் பயன்படுத்தப்படுமாம். கண்ணீரே வராதாம்! 

* சூலினி யாகம்  https://minnambalam.com/k/2020/01/20/123

[யாக குண்டம் 6 அடி நீளம், 6அடி அகலம், 10 அடி ஆழம் இருக்கும். இதில்தான் யாகப் பொருள்களைப் போட்டுப் பிழை இல்லாமல் மந்திரம் ஓதுவார்களாம்].

சசிகலா சிறையிலிருந்து தற்போது வெளியே வராமலிருக்கவும், திமுக ஆட்சியைப் பிடிக்ககாமலிருக்கவும் தமிழ்நாட்டின் முக்கிய சில அமைச்சர்கள் கேரளாவிற்குச் சென்று இந்த யாகத்தை நடத்தினார்கள் என்பது அண்மைச் செய்தி[வதந்தி?].

* சத்ரு சம்ஹார ஹோமம் https://www.seithipunal.com/article/sasikala-mystery-pooja-at-midnight

ஓராண்டுக்கு முன்னால், தன் அரசியல் எதிரிகளை வீழ்த்த 'ராஜாதி ராஜா' இந்த ஹோமத்தை நடத்தியது நாடறிந்த செய்தி!

சத்துரு ஜெய ஹோமம் https://www.patrikai.com/

நடிகராக இருந்து கட்சித் தலைவராகி, கிடுகிடு வளர்ச்சி கண்டு, உடல் நலமும் மன நலமும் பாதிக்கப்பட்டு, 'சடசட' சரிவை அவர் சந்திக்க... அவரின் துணைவி, ஜெயலலிதா போல் அரியணையைக் கைப்பற்றுவதற்காக அண்மையில் நடத்திய ஹோமம் இது.

* ஸத்ரு ஸம்ஹார ஸ்கந்த ஹோமம் https://www.jananesan.com/8499

ஸத்ரு சம்ஹார ஹோமத்தைக் காட்டிலும் மிகுந்த பலனை விரைவில் அளிக்கக்கூடியது இது.

* அஸ்திர ஹோமம் https://www.google.com/search?

இந்த ஹோமம் எதிரிகளை மட்டுமல்ல, தீய சக்திகளையும் அழிக்க வல்லது. கடவுள்களுக்குரிய ஆயுதங்களின்  சக்திக்கு இணையான சக்தி வாய்ந்தது.

ஆக, இந்த யாகங்களாலும் ஹோமங்களாலும் விளைந்த நற்பயன்கள் அளவிறந்தன என்கிறார்கள் ஆன்மிகப் பரப்புரையாளர்கள்.

பாரத தேசத்தின் பெரும் பரப்பளவைக் கைப்பற்றி ஆண்ட மொகலாயர்களை விரட்டியடித்தது, ஆங்கிலேயர்கள் அலறியடித்துக்கொண்டு இந்தப் புண்ணிய பூமியைவிட்டு ஓட்டம்பிடிக்கக் செய்தது போன்ற வரலாற்றுச் சாதனைகள் பலவற்றை நிகழ்த்தியது இந்த ஹோமங்களும்  யாகங்களும்தானாம்.

இத்தனை அதிசய மந்திர சக்திகளும், யாக ஹோம வகையறாக்களும் நம் கைவசம் இருக்கும்போது, நம் பரம்பரை எதிரிகளான பாகிஸ்தானையும் சீனாவையும் விரட்டியடிக்க, கோடானுகோடி ரூபாய்களைப் போர்க்கருவிகளுக்காகவும், போர் தொடர்பான இதர பணிகளுக்காகவும் செலவு செய்ய வேண்டுமா என்ன?!

ஆட்சியாளர்களிடம் அணுக்கமாக உள்ள பிரமுகர்கள், இந்த 'யாகஹோம' மந்திர தந்திரங்களின் மகிமைகளைப் பக்குவமாக எடுத்துரைத்து, இவற்றை முழுமையாகப் பயன்படுத்துமாறு நெறிப்படுத்தினால், அது இந்த மண்ணுக்குப் பெரும் பயன் தருவதாக அமையக்கூடும் என்பது அடியேனின் கருத்து. 

மறுப்பாரும் உளரோ?! ஹி...ஹி...ஹி!!!

===============================================================


செவ்வாய், 22 செப்டம்பர், 2020

என் குமரப் பருவத்தில் ஒரு குமரியிடம் ஏமாந்த கதை!!![நகைச்சுவை]

வாசிப்புச்சுவை கருதி ஆங்காங்கே கொஞ்சம் ஆங்கிலச் சொற்களைக்[தமிழ் வரிவடிவில்] கலந்துள்ளேன். பொறுத்தருள்க. இது ஒரு பழம்பதிவு].

ன்று முகூர்த்த நாள்.

மக்கள் வெள்ளம் பேருந்து நிலையத்தில் நிரம்பி வழிந்துகொண்டிருந்தது.

அங்கு நிற்கும் பேருந்துகளைவிட, நிற்பது போல் ‘பாவ்லா’ காட்டிவிட்டுப் பறந்துகொண்டிருந்தவையே அதிகம்.

எப்படியோ தொத்திக்கொண்டால் போதும் என்று, எத்தனையோ உத்திகளையும் உபாயங்களையும் கையாண்டு மனம் சலித்துப்போன மகானுபவர்களைப் பார்த்து நானும் ஒரு முடிவுக்கு வந்தேன்.

பயணத்தை ஒத்திப்போடுவதுதான் அது. 

வீடு நோக்கி நடக்கலானேன். அப்போது.....

“சார்” என்னும் அழைப்பு, ‘சடக்’கென மிதிக்கப்பட்ட ‘ஏர் பிரேக்’காக என்னைத் தடுத்து நிறுத்தியது.

திரும்பிப் பார்த்தேன்.

என்னை அழைத்தது ‘குயில்’ என நான் நினைத்திருக்க, வண்ண 'மயில்’ ஒன்று என்னருகே, மிக நெருக்கமாக நின்றுகொண்டிருந்தது!

“சார், நீங்க சென்னைக்கா?” -செழித்த கன்னங்குழியச் சிரித்துக்கொண்டே கேட்டது அந்தப் பஞ்சவர்ணக் கிளி!

“சென்னைக்கென்ன, உன் முகவரி தெரிஞ்சா அங்கேயும் வரக் காத்திருக்கிறேன்” என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டேன்.

இப்படித் தத்துப்பித்தென்று எதையாவது நினைப்பது எனக்குச் சாதாரணம். அதை வெளியே சொல்வது அசாதாரணம்.

கிளி தொடர்ந்து கொஞ்சியது, “உங்களோடு சேர்த்து, சென்னைக்கு ஒரு டிக்கெட் வாங்கித் தருவீங்களா? ப்ளீஸ்.....”

நான் கூட்டத்தைக் கண்டு மிரண்டு போய் வீடு திரும்ப நினைக்கும் போது உறங்கிக் கொண்டிருந்த என் ஆண்மை விழித்துக்கொண்டது. அலைகடலெனப் புரண்டுகொண்டிருந்த ஜனக்கூட்டத்தை ஒரு முறை அலட்சியமாகப் பார்த்துக்கொண்டேன்.

“ஒரு டிக்கெட்தானே, கவலைப் படாதீங்க” என்று சொல்லிக்கொண்டே சட்டையை முழங்கைவரை மடித்துவிட்டபடி ‘கோதா’வில் இறங்கத் தயாரானேன்.

“இங்கிருந்து சென்னைக்கு எத்தனை கிலோமீட்டர் சார்?” -மயில் அகவியது.

“இருநூத்திச் சொச்சம்.”

“வெரி லாங் ஜேர்னி. நல்ல வேளை உங்க துணை கிடைச்சுது” -அவள் பாட்டுக்குச் சொல்லிக்கொண்டிருந்தாள்.

“ஐயோ, துணை கிடைச்சதுன்னு சொல்றாளே! கடவுளே, ரெண்டு டிக்கெட்டுக்கு வழி பண்ணிடு. உனக்கு லட்சார்ச்சனை பண்றேன்” என்று என் குல தெய்வத்தை மானசீகமாய்த் தொழுதேன்.

“சார், இன்னொரு முக்கியமான விசயம்.....” என்று என் கவனத்தை ஈர்த்தவள், “தூரப் பயணம் இல்லீங்களா. ஒரு ஓரமா இடம் பிடிச்சிட்டா வசதியா இருக்கும்” என்றாள்.

‘வசதியா இருக்கும்’ என்ற வார்த்தைகளை மட்டும், கிறங்கும் குரலில் இரண்டு முறை சொன்னாள்.

இனம் புரியாத இன்ப உணர்வு, ‘ஜிவுஜிவு' என்று என் உடம்பு முழுக்கப் பரவிக் கொண்டிருக்கையில்.....

“டிக்கெட் வாங்கின உடனே, நீங்க பஸ்ஸில் ஏறி, ஜன்னல் ஓரத்தில் இடம் பிடிச்சி உங்களுக்குப் பக்கத்திலேயே ஒரு இடம் போட்டுடுங்க” என்றாள்.

எனக்குள்  திடீர்க் குழப்பம்.

’ஒரு வயசுக் குமரி, முன்பின் தெரியாத வாலிபனான என் பக்கத்தில் இடம் போடச் சொல்கிறாளே, மன நிலை பாதிக்கப்பட்டவளோ?’

அவளைக் கூர்ந்து ஆராய்ந்தேன்.

தெளிவோடுதான் காணப்படுகிறாள். “என்ன சொன்னீங்க? எனக்குப் பக்கத்திலா?” என்றேன்.

“ஆமாங்க. உங்களுக்குப் பக்கத்தில்தான்.”

‘பக்கத்தில்’ என்ற வார்த்தைக்கு, செம அழுத்தம் கொடுத்துச் சொன்னாள்.

அடுத்த வினாடியே,  பீர் குடித்த ரேஸ் குதிரையாக நான் திணவெடுத்து நின்றேன்; "இரண்டு டிக்கெட்டுகள் வாங்கியே தீருவேன்” என்று சபதமும் எடுத்தேன்.

”சார், பஸ் வருது” -அவள் அலறினாள்.

பேருந்திலிருந்து இறங்கி நின்ற நடத்துனரைக் கண்டதும் எனக்குள் ‘குபீர்’ உற்சாகம்.

அவன் என் பால்ய நண்பன்!

“டேய் வாசு நீயா?” -என்னை மறந்து கூச்சலிட்டேன்.

“ஆமாடா. எங்கே போகணும்?” என்றான் வாசு.

“சென்னைக்கு. ரெண்டு டிக்கெட்” என்று இரு விரல் காட்டிவிட்டு, ”இடம் பிடிக்கிறேன். நீ மெல்ல ஏறு” என்று உரிமையுடன் என் தேவதையிடம்  சொல்லிவிட்டுப் பேருந்தில் பாய்ந்தேன்.

அடுத்து நான் சொல்வதைக் கேட்டால் நீங்கள் பொறாமையில் வெந்து புழுங்குவீர்கள்.

இருவர் மட்டுமே அமரக்கூடிய ஒரு இருக்கையே காலியாக இருந்தது!

கைக்குட்டையால் தூசு தட்டி இடம் போட்டுவிட்டு அவள் வருகையை எதிர்பார்த்துத் திரும்பினேன்.

என் உடம்பெங்கும் லேசாக வியர்த்தது; மெலிதான பதற்றம்.

அவள் பேருந்தில் ஏறி என்னை நோக்கி வந்துகொண்டிருந்தாள். எனக்குள் இனம்புரியாத தடுமாற்றம்.

அவள் ஒரு கிழவியைக் கைத்தாங்கலாக அழைத்து வருகிறாளே, எதற்கு?

என்னை நெருங்கியதும், “பாட்டி, நீ ஜன்னலோரமா உட்கார்ந்துக்கோ. நான் சொன்னேனே அந்த ஜெண்டில்மேன் இவருதான். சென்னை வரைக்கும் உனக்குத் துணையா இருப்பாரு” என்றவள், என்னைப் பார்த்து, "சென்னையில்தான் என் அண்ணா வீடு இருக்கு. பாட்டி அங்கேதான் வர்றாங்க. அவங்களைத் தனியே எப்படி அனுப்புறதுன்னு கவலைப் பட்டுட்டிருந்தேன். அந்த ஆண்டவன்தான் உங்களை இப்போ அனுப்பி வெச்சிருக்கார். ரொம்ப நன்றி பிரதர். பை......” என்றவள் என் பதிலை எதிர்பாராமல் நடையைக் கட்டினாள்.

என் நிலை?

உங்கள் மனம் போனபடி கற்பனை செய்து சந்தோசப்பட்டுக் கொள்ளுங்கள்.
=====================================================================


திங்கள், 21 செப்டம்பர், 2020

பெரியாரை 'விஷமி' என்று பரப்புரை செய்யும் 'தினமலர்' பார்ப்பான்!!!

திராவிட இயக்கத்தைச் சார்ந்த சிலரைத் தவிர,  பிராமணர் என்று சொல்லப்படுவர்களை, தமிழ் உணர்வாளர்கள் பலரும் 'பார்ப்பனர்' என்று எழுதுவதையோ பேசுவதையோ தவிர்த்துவரும் இன்றைய சூழலில், 'பிராமணர்களுக்கு எதிரான பிரச்சாரத்தை நஞ்சாய்ப் பரப்பிய 'விஷமி' ஈ.வெ.ரா  என்று பரப்புரை செய்வதை வழக்கமாக்கிக்கொண்டிருக்கிறது 'தினமலர் பொறுக்கி'க் கும்பல்.

'பணத்திற்குக் குறைவில்லாமல் இருந்தும் அவர் ஆரம்பக் கல்வியான ஐந்தாம் வகுப்பைத் தாண்டவில்லை. அவருக்குப் படிப்பு ஏறவில்லை' என்று, நக்கல் செய்திருக்கிறது[சில நாட்கள் முன்பு வெளியான தினமலர்க் கட்டுரையில்]. முகவரி கீழே. 

தங்களைப் பிராமணர்கள்' என்று பீத்திக்கொள்ளும் இவர்கள், காமராசரை இப்படிக் கிண்டல் செய்யும் காலம் வெகு தூரத்தில் இல்லை.

பெரியாரை, 'ஈ.வெ.ராமசாமி நாயக்கர்' என்று குறிப்பிட்டுத் தன் குதர்க்கப் புத்தியையும் வெளிப்படுத்தியிருக்கிறது இந்தத் தினப்புருடா. ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளுமே அவருக்குத் தெரியாது என்கிறது பரம்பரையாய் 100% படித்தவர்களைக் கொண்ட இந்தத் திமிர் பிடித்த கூட்டம். இப்படிப் பலவகையிலும் பெரியாரை இழிவுபடுத்தியிருக்கும் இந்தத் தின மலம், தங்களின் ஜாதிப் பெருமையைப் பக்கம் பக்கமாகப் பட்டியலிட்டிருக்கிறது.

கபிலர், தொல்காப்பியர் போன்றவர்கள், பிராமணர்கள் என்றே வரலாறு கூறுகிறதாம். நல்லது எது, கெட்டவை எது என்பது தெரிந்ததால், பல மன்னர்கள், பிராமணர்களைத் தங்கள் குருவாக ஏற்றிருந்தார்களாம். அவர்கள், பிராமணர்கள் தனியே வாழ, தனித் தெருக்களை அமைத்து, இல்லங்களையும் கட்டிக் கொடுத்தார்களாம்.

'அந்தணர் என்போர் அறவோர்' என்பது பெரியோர் வாக்கு. இந்தப் பார்ப்பனர்கள் அந்தணர்கள் அல்ல. 

இவர்களை அக்கால மன்னர்கள் சிலர் குருவாக ஏற்றிருந்தனர் என்பது உண்மைதான். இவர்கள் நல்லது கெட்டது தெரிந்தவர்கள் என்பதால் அல்ல; கடவுள், சொர்க்கம், நரகம் என்பனவற்றின் பெயரால் அளப்பரிய பொய்க் கதைகள் சொல்லித் தங்களைக் கடவுளின் பிரதிநிதிகள் என்று அவர்களை நம்ப வைத்ததால்.

இவர்கள் தமிழோடு சமஸ்கிருதம் கற்றவர்களாம்.

சமஸ்கிருதம் தேவ பாஷை, தமிழ் நீஷபாஷை என்று எழுதியதையும் பேசியதையும் மூடி மறைத்தது ஏன்?

'தீக்குறளை சென்றோதோம்'[குறளை-புறம் பேசுதல்] என்ற ஆண்டாள் பாடல் வரிகளுக்கு, 'மஹா பெரியவா' தீய திருக்குறளைப் படிக்க மாட்டோம்' என்று பொருள் சொன்னதையெல்லாம் ஏன்  இருட்டடிப்புச் செய்தார்கள்?

உ.வே.சா. போன்ற தமிழுக்குத் தொண்டு செய்த சில[சிலர்தான்] ஐயர்களைக் குறிப்பிடத் தெரிந்த இவர்கள், இன்றளவும் தன்னைத் தமிழன் என்றோ, என் தாய்மொழி தமிழ் என்றோ சொல்லிக்கொள்ளும் பார்ப்பனர்கள் எத்தனை பேர் என்று விரல் விட்டு எண்ணிச் சொல்வார்களா?

'காலையும், மாலையும் சூரியனை வணங்குபவர்கள். முப்புரி நுால் எனும் பூணுால் தரித்தவர்கள். சிவனையும், விஷ்ணுவையும் கும்பிடுபவர்கள்; ஆசாரமாய் விளங்குபவர்கள்' என்று தங்களைப் பற்றிக் குறிப்பிடும் இவர்கள், கடவுள்களைப் பற்றிக் கணக்குவழக்கில்லாமல் ஆபாசக் கதைகளை எழுதி எழுதித் தமிழர்களை முட்டாள்கள் ஆக்குவதில் முன்னிலை வகித்தவர்களும் இவர்கள்தான்  என்பதை அடியோடு மறந்துவிட்டது ஏனோ?

இவர்கள் வேதம் ஓதியவர்களாம்.

பார்ப்பனர்களைக் கடவுளுக்குச் சமமாக உயர்த்தி, ஏனையோரை இழிபிறவிகளாக் கற்பிப்பதும், மனிதர்களால் கற்பனையாக எழுதப்பட்டதுமான வேதங்களை ஓதுபவன் மட்டும் யோக்கியனா? மற்ற ஜாதிக்காரர்கள் எல்லாம் அயோக்கியர்களா?

'ஆரியபட்டர் பிராமணர். அவரின் கலையைக் கற்று, ஜோதிடம் பார்த்தனர். சுக்ருதர் என்ற முனிவர் பிராமணர். இவரின் கலையைக் கற்று, நாட்டு மருத்துவம் அறிந்தனர். அதே போல, வராஹ மிஹிரரும் பிராமணர் தான். அவரும் ஜோதிடத்தில் வல்லுனர். விஷ்ணு குப்தர் என்று அறியப்பட்ட சாணக்கியர், இயேசு கிறிஸ்து பிறக்கும் முன்பே தோன்றிய பிராமணர். அவர் அரசியலிலும், பொருளாதாரத்திலும் வல்லுனர்' என்கிறது தினப்பொய் பரப்பும் தினமலர்.

ஆரியப்பட்டரையும், சுக்குருதரையும், வராஹமிஹிரரையும், விஷ்ணுகுப்தர் எனப்படும் சாணக்கியரையும் நீங்களே வைத்துக்கொள்ளலாம். எங்களுக்குத் தேவையில்லை.

இவர்கள் மாமிசம் உண்பதில்லையாம்.

இவர்களில், முட்டை தின்கிறவர்கள் இன்று பலர் இருக்கிறார்கள். இது அசைவ உணவு இல்லையா?

மாமிசம் உண்ணாமலிருப்பது யோக்கியனுகளுக்கான தகுதிகளில் ஒன்றா? அசைவம் உண்ணுகிற எத்தனையோ சமூகத் தொண்டர்களும், அறிவியல் அறிஞர்களும் உலக அளவில் பரவிக்கிடக்கிறார்கள். அவர்களெல்லாம் அயோக்கியர்களா?

'மெட்ரிகுலேஷன் எனும், பள்ளிப்படிப்பு முடிவு வரை படித்தவர்கள், அரசில் வேலை பார்த்தனர். எட்டாவது படித்த பிராமணர் கூட, தாலுகா ஆபீசில் வேலை பார்த்தார்' என்கிறது தினமலர்.

அந்தக் காலம் மலயேறிவிட்டது என்று கவலைப்படவும் செய்கிறது. 

'தமிழருக்கு வேண்டிய எல்லாவற்றையும் கற்று, மக்கள் தொகையில் குறைவாக இருந்தாலும், அனைத்திலும் முதலாக நின்றனர்; பெருமை அடைந்தனர்[பிராமணர்கள்].'

தினமலர்க்காரரே, ஒரு திருத்தம். 'தமிழருக்கு வேண்டிய' என்பதை, 'பார்ப்பனர்களுக்கு வேண்டிய' என்று திருத்துங்க.

இன்றைக்கும் நடுவணரசின் அதிகாரம் மிக்க பதவிகளில் உங்க ஆட்கள்தானே இருக்காங்க. அப்படிப் பல பேர் இருக்கிறதாலதான், சமஸ்கிருதத்தைப் பாடமொழி ஆக்கணும்னு உத்தரவு போட மத்திய அரசை உங்களால தூண்ட முடியுது, இல்லையா?

வெள்ளையர்களால் பேச முடியாத ஆங்கிலத்தைச் சில பிராமணர்கள் பேசினார்களாம்.

'எந்தவொரு சூழலிலும் பிழைக்கத் தெரிந்த புத்திசாலிகள் நாங்கள்' என்பதைச் சொல்லாமல் சொல்கிறார்கள். 1962இல் சீனப் படையெடுப்பில், சீனன் இந்தியாவைக் கைப்பற்றுவான் என்ற வதந்தி பரவியபோது, உங்கள் இனத்துக்காக, அவசர அவசரமாகச் சீன மொழிக்கான அகராதி தயாரித்தவர்கள்தானே நீங்கள்?

'பிராமணர்களுக்குக் கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் ஒதுக்கீடே இருக்கக் கூடாது' என, உத்தரவிட்டார் அவர்[?]. அது இன்றளவும் எழுதாத சட்டமாகிவிட்டது. இதற்காகத் தமிழகப் பிராமணர்கள் போராடவில்லை.' -தினமலர்

ஏன் போராடல?

நாங்க பரம சாதுக்கள்னு சொல்லிகிட்டு, மத்த இளிச்சவாயன்களைத் தூண்டிவிட்டுக் காரியம் சாதிப்பது உங்களுக்குக் கைவந்த கலை. வேறு காரணம் ஏதுமில்லை.

கோயிலில் மணியடிக்கிறதும், யாகம் ஹோமம் செய்யிறதும்தான் எங்க குலத்தொழில், மத்ததெல்லாம் உங்க தொழில்னு சொல்லிகிட்டு, தமிழ் மன்னர்களைத் தூண்டிவிட்டு, ஆயிரக்கணக்கான சமணர்களை அன்னிக்கிக் கொன்று குவிச்சீங்க. புத்தமதக் கோயில்களை இந்துக் கோயில் ஆக்கினீங்க. இன்னிக்கும் அம்மாதிரி அடாவடித்தனங்களை வேறு வேறு தந்திர உத்திகளைக் கையாண்டு செய்யுறீங்க. உங்களால் முடியாது எதுவுமே இல்லை பிராமணர்களே.

'அவரின் வகுப்புத் தோழர் ஒருவர், ௬௦ வருடங்களுக்கு முன், எங்கள் குடும்ப நண்பர்; முதலியார் வகுப்பைச் சேர்ந்தவர். அவர் பல விஷயங்களை என்னிடம் சொல்லியிருக்கிறார்; அவற்றை நான் எழுத முடியாது'

ஏன் முடியாது?

உங்களுக்குப் பலமான அரசியல் பின்னணி இருக்கு[பெரியாரைச் செருப்பால் அடிப்பேன்னு ராஜாதி ராஜா சொன்னாரே, அதற்கெல்லாம் இந்தப் பின்னணிதான் காரணம். அதனால.....

தைரியமா எழுது. திராவிடக் கட்சிக்காரனோ, பெரியார் தொண்டனோ எவனும் உன் ஒரு மயிரைக்கூடப் புடுங்க முடியாது. எழுது பிராமணா, எழுது!

 ===============================================================

https://m.dinamalar.com/detail.php?id=2617174



ஞாயிறு, 20 செப்டம்பர், 2020

பறவைகள் குறித்த சில தவறான நம்பிக்கைகள்.....

*சிட்டுக்குருவிகள் அழியும் நிலையில் உள்ளனவா? அதற்கு கைபேசி கோபுரங்களின் கதிர்வீச்சு காரணமா?

சிட்டுக்குருவிகள் அழியும் நிலையில் இல்லை. இவை உலகெங்கும் பரவியுள்ளன. ஒரு சில நாடுகளில், நகரமயமாதல், இனப்பெருக்கக் காலங்களில் குஞ்சுகளுக்கு ஏற்ற உணவு (பூச்சிகள்) கிடைக்காத காரணங்களால், ஒரு சில இடங்களில் மட்டும் குறைந்தும், அற்றும் போயிருக்கலாம். ஆனால், கைபேசிக் கோபுரங்களில் இருந்து வரும் மின்காந்த அலைகளினால் எண்ணிக்கையில் குறைகின்றன, முற்றிலுமாக அழிந்து வருகின்றன என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படாத கூற்று.

*ஆந்தை, கூகை இனப் பறவையாகும். இது ஆஸ்திரேலியாவிலிருந்து வருவதா??

செய்திகளில் அவ்வப்போது வெளியிடப்படும், கூகை அல்லது வெண்ணாந்தை, தலை உச்சியில் கொத்தாகச் சிறகுகள் கொண்டு கொம்பு போலக் காட்சியளிக்கும் ஆந்தைகள் வெளிநாட்டில் இருந்து வருபவை என்பது தவறான தகவல். கூகை உலகின் பல பகுதிகளில் பரவலாகத் தென்படும் ஒரு பறவை. அவை கோயில் கோபுரங்கள், பழைய கட்டிடங்களில் பகலில் அடைந்து இரவில் வெளியே வந்து இரைதேடும். தென்னிந்தியாவிற்கு Short-eared Owl (Asio flammeus) எனும் ஒரே ஒரு ஆந்தை வகை மட்டுமே வலசை வருகிறது. ஏனையவை இங்குள்ளவையே.

*பாறு கழுகுகளை தவறான கருத்துக்களின் பிரதிநிதிகளாக, தீய எண்ணங்களின் உருவகமாக, எதிர்மறையாக வரைபடங்களில் சித்தரிக்கப்படுவது சரியா?

பாறு கழுகுகள் அழிவின் விளிம்பில் உள்ள பறவை இனம். இவை இறந்த கால்நடைகளையும், பெரிய பாலூட்டிகளான யானை, மான், காட்டெருது முதலிய காட்டுயிர்களின் இறந்த உடல்களையும் உண்டு சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைக்க உதவுகின்றன. 

கால்நடைகளுக்கு வலிநீக்கி மருந்தான டைக்லோபீனாக் (Diclofenac) கொடுக்கப்படுகிறது. இந்த மருந்து செலுத்தப்பட்ட கால்நடைகள் இறந்த பின்னும் இம்மருந்து அவற்றின் உடலில் தங்கிவிடுகிறது. இம்மருந்து, இந்த இறந்த கால்நடைகளை உண்ணும் பாறு கழுகுகளுக்கு நஞ்சாகிறது. தமிழ் நாட்டில் நீலகிரி மாவட்டத்தில், மாயாறு பகுதியில் சிறிய எண்ணிக்கையில் இப்பாறு கழுகுகள் உள்ளன. அங்குள்ள பூர்வக்குடியினர் இப்பறவைகளை அவர்களது மூதாதையர்களாக மதிக்கின்றனர். ஆனால் அப்பகுதிகளில் குடியேறிய மக்கள் இப்பாறு கழுகுகளைக் காண்பதைக் கெட்ட சகுனமாக நினைக்கின்றனர்.

அழிந்து வரும் ஒரு பறவையினத்தைப் பற்றி, தவறான கண்ணோட்டத்தைப் பொதுமக்களிடம் பரப்புவது முறையாகாது. வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல, இது போன்ற எதிர்மறைக் கண்ணோட்டங்கள் அப்பறவையினத்தினை பாதுகாக்கும் முயற்சிகளுக்கு தடங்காலாக அமையும்.

===============================================================

நன்றி: quora 

https://uyiri.wordpress.com/2020/02/17/birds_myths-and-scientific-explanations/

சனி, 19 செப்டம்பர், 2020

'செருப்படி' மக்கள் கட்சி!!!

ஏதோ இந்து மக்கள் கட்சியாம். யாரோ 'தர்மா'வாம். அந்த ஆளுதான் அதனோட துணைப் பொதுச் செயலாளராம். திண்டுக்கல் மேட்டுப்பட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டாராம்.  அதில் அந்த நபர் பேசும்போது..... 

"அகரம் பவுண்டேசன் என்ற பெயரில் இடதுசாரிகளுடன் கூட்டணி வைத்துக் கொண்டு இருக்கும் நடிகர் சூர்யா, நீட் விவகாரத்தில் நீதிமன்றத்தை அவமதித்துப் பேசியிருக்கிறார். நடிகர் சூர்யாவை யாரேனும் செருப்பால் அடித்தால் அந்த நபருக்கு இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் தலைமையில் ரூ1 லட்சம் பரிசு வழங்கப்படும்"னு சொல்லியிருக்கான்ரு. 

[https://tamil.oneindia.com/news/dindigul/neet-row-hindu-outfit-announces-rs1-lakh-reward-for-thrashing-actor-suriya-398000.html]

அத்தனை மூடத்தனங்களையும் ஒட்டுமொத்தமா குத்தகைக்கு எடுத்திருக்கிற இந்தக் கும்பலுக்கு எதிரா அறிவுபூர்வமான கருத்துகளைக் சொன்னால், சிந்தித்துப் பதில் சொல்லத் தெரியாது. "சொன்னவன் நாக்கை அறு. மூக்கை அறு. காதை அறுன்னு சொல்வாங்க. அப்படிச் செஞ்சா லட்சக்கணக்கில் ரூபா பரிசு தர்றதாகவும் அறிவிப்பாங்க[நல்ல வேளை, "குஞ்சை அறுத்துட்டு வா. பரிசு தர்றேன்"னு இதுவரை அறிவிக்கல!].  

இந்த அறுக்கிறது, வெட்டுறது, சீவி எடுக்கிறதெல்லாம் ரொம்ப விவகாரமானதுன்னு இந்தக் கலியுக தர்மர் நினைச்சிருப்பார் போல. அதனாலதான் தன் கட்சித் தொண்டர்களுக்கு, "சூர்யாவைச் செருப்பால் அடிங்கடா"ன்னு உத்தரவு போட்டிருக்கார்.

சூர்யாவைக் செருப்பால் அடிச்சி அவமானப்படுத்தினா, அவர் சொன்ன 'நீட்' தொடர்பான கருத்து அழிஞ்சிடாதுன்னு இந்த ஞானசூன்யத்துக்கு ஏனோ புரியல. புரிஞ்சிருந்தா இப்படியொரு பரிசை அறிவிச்சிருக்க மாட்டார்.

இந்த இந்து மக்கள் கட்சித் துணைப் பொதுச்செயலாளருக்கு நான் வைக்கும் ஒரே ஒரு கோரிக்கை.....

"தர்மரே, இப்படியெல்லாம் பேசுற நீங்க ரொம்பப் புனிதமானதுன்னு சொல்லப்படுற இந்து மதத்தைச் சார்ந்தவரா இருக்கிறதுக்கும், 'இந்து' என்னும் சொல்லைப் பயன்படுத்துறதுக்குமான தகுதியை இழந்துட்டீங்க.  உங்களை இப்படிப் பேச அனுமதிச்ச அர்ஜுன் சம்பத்துக்கும் அதற்கான தகுதி இல்ல. அதனால, நீங்க உங்களுடைய கட்சிப் பெயரை, 'செருப்படி' மக்கள் கட்சி'ன்னு மாத்திடுங்க.

இது என் வேண்டுகோள்!

===============================================================

=====================================================================
கலியுக தர்மர்கள் 'பல்டி'!!!

சூர்யாவைச் செருப்பால் அடித்தால் பணம் தருவதாக நான் அறிவிக்கவில்லை.. அர்ஜுன் சம்பத் விளக்கம்
By Veerakumar
| Published: Saturday, September 19, 2020, 15:12 [IST]
சென்னை: நடிகர் சூர்யா மீது செருப்பால் அடித்தால் பணம் தருவதாகத் தான் கூறவில்லை என்று இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் மறுப்பு தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வு தொடர்பாக, நடிகர் சூர்யா, சமீபத்தில் காட்டமாக ஒரு அறிக்கை வெளியிட்டு இருந்தார். அதில் நீட் தேர்வை மனுநீதித் தேர்வு என்று சூர்யா குறிப்பிட்டு இருந்தார்.

இந்த நிலையில்தான் சூர்யாவைச் செருப்பால் அடித்தால் ஒரு லட்சம் பரிசு வழங்கப்படும் என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்ததாக ஒரு தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வந்தது




வெள்ளி, 18 செப்டம்பர், 2020

ரஜினி மயக்கம்!!!

#நேற்று (செப்டம்பர் 16) முதல் ரஜினி ரசிகர் முரளியின் ட்வீட் பலராலும் பகிரப்பட்டு வருகிறது. முரளிக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்தச் சமயத்தில் அவருக்குச் சிறுநீரகப் பிரச்சினை இருப்பதும் தெரியவந்துள்ளது. இதனால் அவருடைய உடல்நிலை மிகவும் மோசமடைந்தது.

தாம் இனிமேல் பிழைக்க மாட்டோம் என நினைத்த முரளி, தனது ட்விட்டர் பதிவில், "தலைவா, என் இறுதி ஆசை. 2021 தேர்தலில் வெற்றிபெற்று தமிழக மக்களுக்கு மிகச்சிறந்த தலைவராகவும் தந்தை மற்றும் ஆன்மிக குருவாகவும் வீரநடை போட்டு, அடித்தட்டுக் கிராம மக்களின் தனிநபர் வருமானம் 25 ஆயிரம் என்ற நிலையை உருவாக்கிக் கொடு. உங்களை அரியணையில் ஏற்றப் பாடுபடாமல் போகிறேனே என்ற ஒரே வருத்தம்" என்று பதிவிட்டுள்ளார்#

இவை, 'இந்து தமிழ்'https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/579966-rajini-audio-for-murali.htmlஇல் வெளியான செய்தியின் தொடக்கப் பத்திகள்.

                                *************************************

முரளி விரைவில் குணம் பெற்றிட என் வாழ்த்தினைத் தெரிவிப்பதோடு, என்['பசி'பரமசிவம்] மன வருத்தத்தையும் வெளிப்படுத்திட விரும்புகிறேன்.

"முரளி, சாதனைகள் நிகழ்த்தத் துடிக்கும் இளவட்டம் நீ.  நீ மிகப் பல ஆண்டுகள் வாழ்ந்து, உன்னைப் பெற்றெடுத்தவர்களுக்கும், உற்றார் உறவினருக்கும், தமிழுக்கும், தமிழ் இனத்திற்கும் நீ ஆற்ற வேண்டிய பணிகள் ஏராளமாக உள்ளன.

இத்தகைய தலையாய கடமைகளை மனதில் இருத்தி, "மரணத்தை நெருங்க விடமாட்டேன். வாழ்வேன். நூறாண்டு வாழ்வேன்" என்று உறுதிபூண்டிருக்க வேண்டும் நீ. 

நீ கடவுள் நம்பிக்கை உள்ளவனாக இருந்தால்[என்னளவில் அவசியமில்லை], உன் விருப்பத்திற்குரிய கடவுளை மனப்பூர்வமாய் வழிபட்டிருக்க வேண்டும்.

மாறாக,

உலகம் போற்றும் உச்ச நடிகராகவும், உயர் பதவி வகிப்போரின் செல்லப்பிள்ளையாகவும் சுகபோக வாழ்வு வாழ்ந்துகொண்டிருக்கிற ரஜினியை அரியணையில் ஏற்றாமல் போகிறேனே என்று வருத்தப்பட்டிருக்கிறாய்.

அந்த வருத்தத்தைப் பலருடன் பகிர்ந்துகொண்டிருக்கிறாய்.  

அனுதாபத்திற்குரிய உன் மனநிலை குறித்து மிக மிக வருந்துகிறேன் முரளி.

உன் நிலை குறித்த செய்தியை ரஜினிக்கு நெருக்கமானவர்கள் அவரிடம் எடுத்துக் கூற, அவரும் உனக்குக் 'குரல் பதிவு' ஒன்றை அனுப்பினாராம்.

"முரளி, நான் ரஜினிகாந்த் பேசுறேன். உனக்கு ஒன்றும் ஆகாது கண்ணா. தைரியமாக இருங்க. நான் இறைவனைப் பிரார்த்திக்கிறேன். சீக்கிரம் குணமடைந்து நீங்கள் வீட்டுக்கு வந்துவிடுவீங்க. நீங்கள் குணமடைந்து வந்த பிறகு, ப்ளீஸ் என் வீட்டுக்குக் குடும்பத்தோட வாங்க. நான் உங்களைப் பார்க்கிறேன். தைரியமாக இருங்க. ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன். தைரியமாக இருங்க. தைரியமாக இரு. வாழ்க" என்றிவ்வாறு அதில் பேசியிருக்கிறாராம்.

அவரை அரியணை ஏற்ற விரும்பிய நீ உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கிற நிலையில், இந்த அவரின் ஆறுதல் மொழி போதுமா? உனக்கு உதவி ஏதும் செய்யாமல், ஆண்டவனைக் கைக்காட்டியிருக்கிறார் உச்ச நடிகர்[உன்னைப் போல, கொரோனோ நோயாளிகள் பலரும் தன்னை அரியணையில் ஏற்ற நினைத்ததாகச் சொன்னால், எத்தனை பேருக்கு உதவுவது என்று யோசிப்பாரோ என்னவோ?]

தனக்கான அறிவிலும், திறமையிலும் நம்பிக்கை வைக்காமல், தொட்டதுக்கெல்லாம் ஆண்டவனைக் கைகாட்டுகிற இவரையா அரியணையில் ஏற்றக் கனவு கண்டாய்...காண்கிறாய்?

சில நாட்களில் கொரோனாவிலிருந்து விடுதலை பெறவிருக்கும் நீயும் உன்னைப் போன்ற பல இளைஞர்களும்  இனியேனும் நடிகர் ரஜினி மீதான மயக்கத்திலிருந்து விடுபடுதல் வேண்டும் என்பது என் விருப்பம். நம் மக்களின் விருப்பமும் இதுதான்.

===============================================================

Darshan

@Darshan47001815

@rajinikanth தலைவா என் இறுதி ஆசை. 2021 தேர்தலில் வெற்றிபெற்று தமிழக மக்களுக்கு மிகச்சிறந்த தலைவனாகவும் தந்தை மற்றும் ஆன்மீக குருவாகவும் வீரநடைபோட்டு அடித்தட்டு கிராம மக்களின் தனிநபர் வருமானம் 25K என்ற நிலை உருவாக்கி கொடு.உன்னை அரியணையில் ஏற்ற பாடுபடாமல் போகிறேனே என்ற ஒரே வருத்தம்


வியாழன், 17 செப்டம்பர், 2020

தினமலரின் 'அரைவேக்காடு' ஆன்மிகப்பணி!!!

#"கடவுளைப் பார்த்திருக்கிறீர்களா?" என்று ஆன்மிகவாதி பகுத்தறிவாளரிடம் கேட்டார்.

"இல்லை" என்று திடமாகச் சொன்னார் பகுத்தறிவாளர்.

"உங்கள் இருதயம் துடிப்பதைப் பார்த்திருக்கிறீர்களா?" -இது, ஆன்மிகவாதியின் அடுத்த கேள்வி.

"இல்லை" -பகுத்தறிவாளர்.

"உங்கள் மார்பின் மீது கை வையுங்கள்."

வைத்தார் பகுத்தறிவாளர்.

"இப்போது எதை உணருகிறீர்கள்?"

"என் இருதயம் துடிப்பதை உணர்கிறேன்."

"கண்ணால் பார்க்க முடியாத இருதயத் துடிப்பை உங்களால் உணர முடிந்தது. அதைப் போல, கடவுளையும் பார்க்க முடியாது; உணரத்தான் முடியும்" என்று சொன்னார் ஆன்மிகவாதி.

பகுத்தறிவாளர் வாயடைத்துப்போனார்.#

-இப்படி முடிகிறது கதை.[https://temple.dinamalar.com/news_detail.php?id=107587]

தன்னிச்சையாய்த் தரப்பட்ட 'முடிவு' இது.

"இருதயத் துடிப்பைத் தொட்டு உணருவதுபோல் எதைத் தொட்டால் கடவுளை உணரலாம்?' என்று ஒரு கேள்வியை எழுப்பி, எதையும் தொட்டு மட்டுமல்ல, பார்த்தோ, கேட்டோ, நாக்கால் சுவைத்தோ, மூக்கால் நுகர்ந்தோ கடவுளை உணர முடியாது" என்பதைக் கொஞ்சம் சிந்தித்தாலே அறிய முடியும்.

உணர்கிறார்களோ இல்லையோ, தினமலர்க்காரர்களின் நோக்கம் நம் மக்கள் எக்காலத்தும் மூடநம்பிக்கைகளிலிருந்து விடுபட்டுவிடக் கூடாது என்பதுதான். 

                              **************************************

'கோயில்'[temple.dinamalar.com] என்று ஒரு தளத்தை உருவாக்கி வைத்துக்கொண்டு, நம்பவே இயலாத புராணக் கதைகளை வெளியிட்டுவருகிறது இந்த 'அரைவேக்காடு' நாளிதழ்.

பக்தகோடிகளுக்கு, சிவபெருமானைத் தெரியும்; பார்வதி தேவியையும் தெரியும். பார்வதிக்கு மாமியார் இருப்பது எத்தனை பேருக்குத் தெரியும்?

'பார்வதியின் மாமியார்' என்றொரு கதையைக்[இது காரைக்காலம்மையார் புராணத்தில் இல்லை] கற்பனை செய்து வெளியிட்டிருக்கிறது தினமலர். 

ஒரு நாள், "எல்லாப் பெண்களுக்கும் மாமியார் இருப்பார். அப்படியொருவர் எனக்கு இல்லையே"ன்னு அம்மை அப்பனிடம் வருத்தப்பட்டாராம்.

"காரைக்காலம்மையார்தான் என் தாய். அவர்தான் உனக்கு மாமியார். நம்மைக் காண வந்துகொண்டிருக்கிறார்" என்றார் ஐயன்.

அம்மை, காரைக்காலம்மையின் வருகைக்காக ஆவலுடன் காத்திருந்தார்.

கணவன் தன்னைத் தெய்வமாக மதித்து வணங்கியதால் வருத்தப்பட்ட அந்த அம்மையார், இறைவனை வேண்டிப் பேய் உருவம் பெற்றிருந்தார்[கூகுள் தேடலில், 'காரைக்காலம்மையார்'ஐத் தேடிக் கதையைப் படித்துவிடுங்கள்].

நடந்து சென்றால் அது சிவனை அவதித்ததாகும் என்று நினைத்துக் கைகளால் நடந்து[தலைகீழாக] கயிலைமலைக்குப் போனார் காரைக்கால் அம்மையார். அது கண்டு நெகிழ்ந்த சிவபெருமான், அவரைத் தன்னருகே அமர்த்தி, "இவர்தான் உன் மாமியார்" என்று தன் துணைவியிடம் சொன்னார்[*இதுவரையிலான கதை நிகழ்வு தினமலரின் கைங்கரியம். உண்மைக் கதையின் இறுதி நிகழ்வைக் கீழே தந்திருக்கிறேன்.]

பார்வதிதேவி பெரு மகிழ்ச்சியில் திளைத்தார்.

இம்மாதிரி, கிஞ்சித்தும் பகுத்தறிவுக்கு ஒவ்வாத கதைகளையும் கட்டுரைகளையும் வெளியிட்டுத்தான் ஆன்மிகப் அழிப்புப் பணி செய்துகொண்டிருக்கிறது தினமலர்.

* "சுவாமீ! இங்கே தலையினால் நடந்து ஏறிவருகின்ற எற்புடம்பை யுடையவரது அன்பின் மகிமை இருந்தபடி என்னை" என்று விண்ணப்பஞ்செய்ய, பரமசிவன் "இங்கே வருகின்றவள் நம்மைத் துதிக்கின்ற அம்மை என்றறி இந்தப் பெருமை பொருந்திய வடிவத்தையும் வேண்டிப் பெற்றாள்' என்றார். 

பின் புனிதவதியார் சமீபத்தில் வந்தவுடனே உலகமெல்லாம் உய்யும் பொருட்டு, அவரை நோக்கி, "அம்மையே" என்று அழைத்தார். அது கேட்ட புனிதவதியார் "அப்பா" என்று சொல்லிக்கொண்டு அவருடைய திருவடிகளிலே விழுந்து நமஸ்கரித்து எழுந்தார். 

சுவாமி அவரை நோக்கி, "உனக்கு வேண்டும் வரம் யாது" என்று வினாவ; புனிதவதியார் வணங்கி நின்று, "சுவாமி! அடியேனுக்கு இறவாத பேரின்பமயமாகிய அன்பு வேண்டும்; இனி பிறவாமை வேண்டும்; பிறக்கினும் தேவரீரை ஒரு காலமும் மறவாமை வேண்டும்; இன்னும் தேவரீர் திருநிருத்தஞ் செய்யும்பொழுது, தேவரீருடைய திருவடியின் கீழே சிவானந்தத்தை உடையேனாகி, தேவரீரைப் பாடிக் கொண்டு இருத்தல் வேண்டும்." என்று விண்ணப்பஞ்செய்தார். 

சுவாமி அவரை நோக்கித் "தென்றிசையிலுள்ள ஆலங்காட்டிலே நம்முடைய நடனத்தைத் தரிசித்து, பேரானந்தத்தோடு நம்மைப் பாடிக்கொண்டிரு" என்று அருளிச்செய்தார். 

அதுகேட்ட காரைக்காலம்மையார் சுவாமியை நமஸ்கரித்து அநுமதி பெற்றுக்கொண்டு, திருவாலங்காட்டுக்குத் தலையினால் நடந்து சென்று, சுவாமியுடைய திருநடனத்தைத் தரிசித்து, "கொங்கை திரங்கி" என்னும் மூத்த திருப்பதிகத்தையும், "எட்டியிலவமீகை" என்னுந் திருப்பதிகத்தையும் பாடினார். அவர் சுவாமியுடைய தூக்கிய திருவடியின் கீழே சிவானந்தத்தை அநுபவித்துக் கொண்டு எக்காலமும் இருக்கின்றார்...'[நகல் பதிவு].

===============================================================


புதன், 16 செப்டம்பர், 2020

தமிழுக்குப் பெருமை சேர்க்கும் 'காமன்வெல்த்' அறக்கட்டளை!

#காமன்வெல்த் அறக்கட்டளை எனும் அமைப்பு காமன்வெல்த் நாடுகளைச் சேர்ந்த எழுத்தாளர்களுக்கான சிறுகதைப் போட்டியினை 2012 -ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. இந்த அமைப்பின் 2021 - ஆம் ஆண்டுக்கான சிறுகதைப் போட்டி அறிவிப்பு தற்போது வெளியாகி இருக்கிறது.

காமன்வெல்த் நாடுகள் ஆப்பிரிக்கா, ஆசியா, கனடா மற்றும் ஐரோப்பா, கரீபியன், பசிபிக் என்று ஐந்து மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. ஆப்பிரிக்க மண்டலத்தில், 19 நாடுகளும், 3 பெருங்கடல் பிரதேசங்களும், ஆசிய மண்டலத்தில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் உள்ளிட்ட 9 நாடுகளும், கனடா மற்றும் ஐரோப்பா மண்டலத்தில் 4 நாடுகளும், 2 பெருங்கடல் பிரதேசங்களும், கரீபியன் மண்டலத்தில் 12 நாடுகளும், 6 பெருங்கடல் பிரதேசங்களும், பசிபிக் மண்டலத்தில் 11 நாடுகளும், 3 பெருங்கடல் பிரதேசங்களும் இடம் பெற்றிருக்கின்றன.

இச்சிறுகதைப் போட்டிக்கு ஆங்கிலம், வங்காளம், சீனம், பிரெஞ்ச், கிரேக்கம், கிஸ்வாகிலி, மலாய், போர்த்துக்கீசு, சமோவன், தமிழ், துருக்கீஷ் ஆகிய 11 மொழிகளில் எழுதிச் சமர்ப்பிக்க முடியும். இவை தவிர, காமன்வெல்த் நாடுகளைச் சேர்ந்த எந்த ஒரு மொழியிலான சிறுகதையினையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்புச் செய்தும் சமர்ப்பிக்கலாம்.#

இது 'தினமணி'யில்[14.09.2020]  வெளியான செய்தி.

போட்டிக்கான சிறுகதைகளை எழுதி அனுப்புவதற்கான 11 மொழிகளில் ஒன்றாகத் தமிழும் இடம்பெற்றுள்ளமை, அறிந்து மகிழத்தக்கது.

இந்திய மொழிகளில் தமிழும் வங்காளமும் மட்டுமே போட்டிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளதை எண்ணி நாம் பெருமிதப்படலாம்.

அதே வேளையில்.....

காமன்வெல்த் அறக்கட்டளையின் நம் மொழியின் மீதான மதிப்பு இனியும் குறைந்துவிடாமல் காப்பது, கதை எழுதுவதில் ஈடுபாடுள்ள அனைத்துத் தமிழர்களுக்கும் உள்ள கடமையாகும்.

பலனை எதிர்பார்க்காமல், பெருமளவிலான படைப்புகளை உரிய காலக்கெடுவுக்குள் தவறாமலும் மறவாமலும் அனுப்பிவைத்தல் வேண்டும்.

சிறுகதை எழுதுவதில் தேர்ச்சி பெற்றவர்கள் தரமான கதைகளை அனுப்புவது வரவேற்கத்தக்கது.

முக்கிய விதிகள்:

*ஒருவர் ஒரு கதை மட்டுமே அனுப்பலாம்.

*படைப்பு சொந்தமானதாக இருப்பது மிக அவசியம். வேறு இதழ்களிலோ இணையத் தளங்களிலோ வெளியானதாக இருத்தல் கூடாது.

*போட்டிக்கான சிறுகதைகள் மண்டல வாரியாகப் பரிசீலிக்கப்பட்டு ஐந்து மண்டலங்களுக்கும் தனித்தனியாகப் பரிசுக்குரிய ஐந்து கதைகள் தேர்ந்தெடுக்கப்படும். இந்த ஐந்து கதைகளிலிருந்து ஒட்டு மொத்த பரிசுக்குரிய கதையாக ஒரு கதை தேர்வு செய்யப்பட்டு, அக்கதைக்கு ரூ.5,000 பரிசுத்தொகை வழங்கப்படும். மற்ற நான்கு கதைகளுக்கும் ரூ.2,500 வீதம் பரிசுத்தொகை வழங்கப்படும்.

கூடுதல் விவரங்களைக் கீழ்க்காணும் முகவரிக்குச் சென்று அறிந்துகொள்ளுங்கள்.

===============================================================

செவ்வாய், 15 செப்டம்பர், 2020

"இந்தியைத் திணிக்காதே"... கர்நாடகா முன்னாள் முதல்வர் குமாரசாமி கடும் எச்சரிக்கை!!!

தமிழ்நாடு தவிர மற்ற மாநிலத்தவர் இந்தி எதிர்ப்பில் கவனம் செலுத்துவதில்லை என்னும் வருத்தம் நம்மவர்களுக்கு உண்டு. அவ்வருத்தத்தைப் போக்கும் வகையில் உள்ளது கர்நாடகா 'ஜனதா தளம்[சமயக் சார்பற்ற] கட்சித் தலைவர் குமாரசாமி அவர்களின் 'டிவிட்டர்' பதிவு. அதை மேற்கோள் காட்டிச் செய்தி வெளியிட்டிருக்கிறது'மாலைமலர்'[15.09.2020]. https://www.maalaimalar.com/news/national/2020/09/15080008/1887421/Kumaraswamy-trilingual-policy-only-in-nonHindi-speaking.vpf 

செய்தி:

#நாட்டில் பல்வேறு மொழிகள், கலாசாரங்களை உள்ளடக்கிய இந்தியாவில் கன்னடம் உள்பட பிற மொழிகள் மீது இந்தியை வலுக்கட்டாயமாகத் திணிக்கும் முயற்சி நடந்து வருகிறது. இன்று (அதாவது நேற்று) கொண்டாடிய இந்தி தின விழாகூட அத்தகைய நோக்கம் கொண்டதுதான். மொழி ஆணவத்துடன் கொண்டாடப்படும் இந்தி தின விழாவுக்குக் கன்னடர்களின் எதிர்ப்பு உள்ளது. இந்தி தேசிய மொழி அல்ல. அத்தகைய ஒரு அம்சம் அரசியல் அமைப்புச் சட்டத்தில் இல்லை.

ஆயினும் இந்தி தேசிய மொழி என்று முன்னிறுத்தும் முயற்சி முன்பு இருந்தே தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அது தற்போது மேலும் அதிகரித்துள்ளது. நாட்டின் பிற மொழியினர் கிளர்ந்து எழுவதற்கு முன்பு இந்தித் திணிப்பைக் கைவிட வேண்டும். இந்தியைக் கற்றுக்கொள்வதில் தவறு இல்லை என்று சொல்கிறார்கள். விருப்பம் உள்ளவர்கள் மொழிகளைத் தேர்ந்தெடுத்துக் கற்கலாம். ஆனால் ஒரு மொழியைத் திணித்துக் கற்றுக்கொள்ளக் கட்டாயப்படுத்தினால் அது சாத்தியமில்லை.

நாட்டின் ஒற்றுமை, கலாசாரத்திற்குப் பங்கம் ஏற்படுத்தக்கூடாது. இந்தி தின விழா கொண்டாடுவதை ரத்து செய்ய வேண்டும். அல்லது, இந்தி தின விழா கொண்டாடுவது போல், கன்னடம் உள்பட பிற மொழிகளின் தின விழாவையும் கொண்டாட வேண்டும். நவம்பர் 1ஆம் தேதியைக் கன்னட தினமாகக் கொண்டாட வேண்டும். அரசியல் அமைப்புச் சட்டத்தில் 343, 344, 345 ஆகிய பிரிவுகளில் இந்திக்கு ஊக்கம் அளிக்கும் குழப்பமான அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

அரசியல் அமைப்புச் சட்டத்தில் அடிக்கடி திருத்தங்களைக் செய்துவரும் பா.ஜனதா, இதையும் மாற்ற வேண்டும். இதன் மூலம் கன்னடம் உள்பட பிற மொழிகளைப் பாதுகாக்க வேண்டும். இந்தி விழாவைப் போல் மும்மொழிக் கொள்கையை முன்னிறுத்தும், தேசியக் கல்வி கொள்கையிலும் இந்தியைத் திணிக்கும் முயற்சி இடம் பெற்றுள்ளது. இருமொழிக் கொள்கை இருந்தால் என்ன பிரச்சினை? இந்தி மொழி பேசும் மாநிலங்களில் மும்மொழிக் கொள்கை பின்பற்றப்படுகிறதா?

இந்தி பேசாத மாநிலங்களில் மட்டும் ஏன் மும்மொழிக் கொள்கை அமல்படுத்தப்படுகிறது. தேசியக் கல்விக் கொள்கையை மத்திய அரசு ஏற்கக்கூடாது. சமீபகாலமாக இந்தி மொழி, சித்தாந்த ரீதியாக மாற்றப்பட்டு வருகிறது. தேசிய வாதம், தேசபக்தி, இந்துத்துவா ஆகியவற்றுடன் இந்தி மொழியும் இணைக்கப்பட்டுள்ளது. இத்தகைய முயற்சி மிகப்பெரிய தேசத்துரோகம். பல்வேறு மொழி பேசும் நமது நாட்டில், இந்தி மூலம் தேசபக்தியை ஏற்படுத்த முயற்சி செய்வது சரியல்ல. இது ஒற்றுமைக்கு விடப்பட்ட சவால்.

தென்இந்தியாவில் உள்ள மாநிலங்களில் கர்நாடகத்தில் இந்தியை எளிதாகப் புகுத்திவிடலாம் என்று சிலர் திட்டமிட்டு உள்ளனர். இதற்குக் கர்நாடக பா.ஜனதா தலைவர்கள் நடந்து கொள்ளும் விதமும் ஒரு காரணமாக இருக்கலாம். கன்னடர்கள் நல்லிணக்கக் குணம் கொண்டவர்கள். அதைப் பலவீனம் என்று கருத வேண்டாம். கன்னடர்களுக்கு இன்னொரு குணம் உள்ளது. அது வெடித்தால் என்ன ஆகும் தெரியுமா?#

===============================================================


திங்கள், 14 செப்டம்பர், 2020

பெண்களின் பலவீனமும் அதிகரிக்கும் ஆண்களின் வன்புணர்ச்சி வெறியும்!!!

உலக அளவில் அதிகக் கற்பழிப்புச் சம்பவங்களும், முறைகேடான பாலியல் குற்றங்களும் பெருகிவரும்  10 முன்னணி நாடுகளில் நம் புண்ணிய பாரதமும்[5ஆம் இடம்] ஒன்று. காஷ்மீர் முதல் குமரிவரை இக்குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன.

இந்த நாட்டில், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் கொடிகட்டிப் பறக்கின்றன.

2014 முதல் 2016 வரை இக்குற்ற நிசழ்வுகள் உச்சத்தில் இருந்ததாகத் தெரிகிறது. அந்தக் காலக்கட்டத்தில் குற்றங்களின் எண்ணிக்கை 4,00,000ஐத் தொட்டிருக்கிறது.

மாநில வாரியாகப் பார்க்கும்போது மத்தியப் பிரதேசம் முன்னிலையில் உள்ளது. மத்தியப் பிரதேசம் (3,285), ராஜஸ்தான் (3,285), மகாராஷ்ட்ரா (3,063), உத்திரப் பிரதேசம் (3,050)  என்றிவ்வாறு கற்பழிப்பு நிகழ்வுகள் இம்மாநிலங்கள்களில் பதிவாகியுள்ளன.

இந்தியாவில் நகரங்களிலேயே அதிக அளவில் கற்பழிப்புகள் நடக்கின்றன. புது டெல்லி (1,636), மும்பை (391), ஜெய்ப்பூர் (192), புனே (171) ஆகியவை அதிகமாகக் கற்பழிப்பு நடந்த நகரங்களாக உள்ளன.

நம் நாட்டில், தினமும் சராசரியாக 93 பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறார்கள்[முன்னேற்றம்தான்]. குற்றம் புரிபவர்கள் பெரும்பாலும் அவர்களுக்குத் தெரிவ்தவர்கள்தானாம். இதில் உறவினர்கள் மட்டுமல்லாது, பெற்றோர்களும் உள்ளடக்கம் என்பது பேரதிர்ச்சி தரும் செய்தி.

குற்றங்களில் 54% காவல்நிலையங்களில் பதிவு செய்யப்படுவதில்லை என்பது கொடுமையிலும் கொடுமை. இந்தக் கணிப்பு தவறானது. உண்மையில் 90% பாதிக்கப்பட்ட பெண்கள் வழக்குத் தொடுப்பதில்லை என்றும் சொல்லப்படுகிறது.

இங்கிலாந்து[04 ஆம் இடம்], அமெரிக்கா[03], ஸ்வீடன்[02], தென்னாப்பிரிக்கா[01] ஆகியவை இது விசயத்தில் நம்மைக் காட்டிலும் முன்னேறிய நாடுகள் ஆகும்.

தென்னாப்பிரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் 5 லட்சம் வழக்குகள் பதிவாகின்றனவாம். பதிவானவற்றைக் காட்டிலும் 8 மடங்கு அதிகக் குற்றங்கள் நடந்திருக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

ஒரு கோடி மட்டுமே மக்கள் தொகை கொண்ட ஸ்வீடன் நாட்டில், நான்குக்கு ஒன்று என்ற அளவில் பெண்கள் வன்கொடுமைக்கு உள்ளாகிறார்கள்.

அமெரிக்காவில் கல்லூரிப் பெண்கள் அதிக அளவில் காமுகர்களால் வன்புணர்வு செய்யப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு ஆண்பிள்ளைகளையும் அவர்கள் விட்டுவைப்பதில்லையாம்.

பொதுவாக, 18 முதல் 24 வயதுடைய பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். மூன்றில் ஒருவர் வாழ்நாளில் ஒருமுறையாவது வன்கொடுமை செய்யப்படுகிறார்.

உலக அளவிலான குற்றங்களில், ஆஸ்திரேலியாவும் நியூசிலாந்தும் 16.04 சதவீதத்தைப் பகிர்ந்துகொள்கின்றன.

இங்கிலாந்து நாட்டுக் காமுகர்களிடையே, சிறுமிகளைப் போதைக்குள்ளாக்கிப் புணரும் போக்கு அதிக அளவில் உள்ளது என்கிறது புள்ளிவிவரம்.

நான்கு கனடா நாட்டுப் பெண்களில் ஒருவர் வாழ்நாளில் ஒரு முறையாவது வன்புணர்வுக்கு ஆளாகிறார்.

ஜிம்பாப்வேயில் சிறுமிகளைக் கற்பழிப்பது மிக அதிகம் என்கிறது யுனிசெஃப் அமைப்பு. இங்கு 90 நிமிடத்திற்கு ஒரு பெண் பாதிக்கப்படுகிறார்.

விரிவஞ்சி இத்துடன் பதிவு நிறைவு செய்யப்படுகிறது.

முத்தாய்ப்பாக, நான் சொல்ல விழைவது ஒன்றுண்டு.

கடவுள் என்று ஒருவன் இருந்தால்.....

மனித இனத்துப் பெண்களை மிகப் பலவீனமாகப் படைத்தது அவன் செய்த மாபெரும் குற்றங்களுள் ஒன்று!
===============================================================