வெகு சாமானிய வலைப்பதிவனான எனக்கு, புகழின் உச்சம் தொட்டவர்களை விமர்சனம் செய்து பிரபலம் ஆகும் ஆசை அறவே இல்லை. பெரும் புகழ் ஈட்டியவர் எவராயினும் அவரால் நம் மக்கள் மூடர்கள் ஆக்கப்படுவதைச் சகித்துக்கொள்ள இயலாததால்தான், என் விமர்சனத்தால் எதிர்பார்க்கும் பலன் கிட்டாது என்பது தெரிந்திருந்தும் அதைத் தொடர்ந்து செய்கிறேன்; வேறு உள்நோக்கம் ஏதுமில்லை.