எனது படம்
மாந்தராய்ப் பிறந்த அத்தனைப் பேரும் ‘மனிதம்’ போற்றி, அச்சம் தவிர்த்து, அமைதியாக வாழ்ந்து முடிப்பதற்கான வழிவகைகளைக் கண்டறிவதே அறிவுடைமை ஆகும். கடவுளைத் தேடி அலைந்து, விதம் விதமாய் விழாக்கள் நடத்திக் கூத்தடித்துக் கோரிக்கைகள் வைத்துக் காத்திருப்பதால் பயனேதும் இல்லை.

செவ்வாய், 3 பிப்ரவரி, 2026

மூளைப் புற்றுநோய்... அறிகுறிகள்:

மூளைப் புற்றுநோய்க் கட்டி மிகவும் ஆபத்தானது. இதற்கான அறிகுறிகள்:

*வலி நிவாரணிகளுக்குக்  கட்டுப்படாத  நீடித்த தலைவலி.

*குமட்டலோ வாந்தியோ ஏற்படுதல்.


*பார்வை மங்குதல்; இரட்டைப் பார்வை.


*அடிக்கடி கண்களைச் சுருக்குதல், கவனம் செலுத்துவதில் சிரமம், பிரகாசமான விளக்குகளைப் பார்க்கும்போது கண் கூசுதல்[கண்ணாடி அணிந்திருந்தாலும் கூட]. 


*தற்காலிக மனக் குழப்பம், பேசுவதில் சிரமம், சிறிது நேரத்திற்குச் சுயநினைவு இழப்பு. 


*நினைவாற்றல், முடிவெடுக்கும் திறன், மனதைக் கட்டுப்படுத்துதல் போன்றவற்றில் பாதிப்பு.


*மறதி, எரிச்சல்,  மனச்சோர்வு, பதற்றம்.


இவ்வறிகுறிகள் சிலவாகவோ பலவாகவோ இருப்பினும் தாமதிக்காமல் மருத்துவரை அணுகுவது நல்லது.

====================

***‘புற்றுநோய்’ குறித்தான தேடலில் கிடைத்த தகவல்களின் தொகுப்பு[சுருக்கமாக].