எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

சனி, 8 ஏப்ரல், 2023

‘மொழு மொழு’ மண்டையருக்கு ஓர் எச்சரிக்கை!!!


நீங்கள் வழுக்கைத் தலையரா?

வழுக்கை விழுந்தது எப்போது?

30 வயதுக்குப் பிறகு என்றால் நீங்கள் கொடுத்துவைத்தவர். இதை நினைந்து நினைந்து பெருமிதத்தில் மிதக்கலாம். காரணம்.....

‘வழு வழு’ மண்டையர்களுக்கு உடலுறவில் அதிக நாட்டம் இருக்கும் என்பது அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்ட உண்மை என்பார்கள்; ‘அது’ விசயத்தில் நீங்கள் சாதனை நிகழ்த்துபவரும்கூட. வயசுப் பெண்களை உங்கள் மொழு மொழு மண்டை வெகுவாகக் கவரும் என்பதையும் கருத்தில் கொள்வீராக.

ஆனால், இது குறித்த அதிர்ச்சிச் செய்தி என்னவென்றால், உங்களுக்கு வழுக்கை விழுந்தது 30 வயதுக்குள் என்றால், அது மிகுதியும் கவலைக்குள்ளாக்கும் ஆபத்தான நிலை என்கிறார்கள்.

இளவயதில் தலையில் வழுக்கை விழுந்தால் அது காலப் போக்கில் ‘புற்று நோய்’ ஆபத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு அதிகம் என்று கண்டறியப்பட்டுள்ளதாம்.

20 - 30 வயதுக்குள் இது நடந்தால், வயது கூடுகிறபோது ‘புராஸ்டேட்’(கலவியின்போது, வழுவழுப்பான திரவத்தைச் சுரக்கும் ஆண்களுக்கான சுரப்பி இது) புற்று நோயை ஏற்படுத்தும் வாய்ப்பை இது இரட்டிப்பாக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

எனவே, இந்தப் பாதிப்புக்கு உள்ளான வாலிப வயது இளவட்டங்கள், வழுக்கை விழுவதைத் தொடக்கத்திலேயே கண்டறிந்து, மருத்துவர்களை அணுகி, அவர்களின் ஆலோசனையின்படி வழுக்கை அதிகரிப்பதைத் தடுப்பதற்கான மருந்துகளை உட்கொள்வது மிக மிக அவசியமாகும்.

வழுக்கை மற்றும் புற்று நோய் ஆகிய இரண்டிலும் ஆண்களைப் பொருத்தமட்டில் ஹார்மோன்கள் பிரதான இடம் வகிக்கின்றன.


பிரான்ஸில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வின் முடிவிலேயே இந்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன என்பது செய்தி.

===============================================================================


‘ஆதி வேதாந்தி’ ஆளுநரின் உரையும், வாசகர்களின் அதிரடி விமர்சனங்களும்!!!

“ரிஷிகளாலும் வேதங்களாலும் உருவானதுதான் இந்தியா” என ராஜபாளையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ஆளுநர் ரவி பேசியிருக்கிறார். “இந்தியா ராஜாக்களால் உருவாக்கப்பட்டதில்லை” என்றும் அவர் சொல்லியிருக்கிறார்.

ஆளுநரின் இந்த அபத்த உரையைச் சாடும் நோக்கத்துடன் எழுதத் தொடங்கினேன். சாடல் முறை குறித்து யோசித்துக்கொண்டிருக்கையில் தற்செயலாக இவரின் பேச்சுக்கான வாசகர்களின் விமர்சனங்களை வாசிக்க நேரிட்டது. 

நான் வழங்க நினைத்திருந்த சாடல் விமர்சனத்தைவிடவும் பல மடங்கு அவை கனமானவையாகவும், காரசாரமானவையாகவும், சுவையானவையாகவும் இருந்ததால், அவற்றை இங்குப் பதிவு செய்திருக்கிறேன்.



விமர்சனங்கள்:

AGSN3

இன்னும் ரிஷி குஷின்னு என்னடா லொள்ளு? நீயும் கோமணம் கமண்டலம்னு திரியணும். எதுக்கு சூட்டு கோட்டுன்னு ஆங்கிலேயன் ஸ்டைலு? பேசறது ஒண்ணு. பீசரது ஒண்ணு. மானங்கெட்டவன். கவர்னர் என்ற போஸ்ட் இல்லைன்னா நீ தமிழ்நாட்டில் இப்படி பேசிக்கொண்டு திரிவாயா? தைரியமிருக்கா?

SUNDAR5d

கொஞ்சமாவது சூடு சுரணை இருந்தால் தமிழ்நாட்டை விட்டு ஓடு.

Thiru Vaadhaooraan5d

இந்தக் கூறுகெட்ட குப்பை இன்னும் ஒரு ஆண்டு மட்டுமே இப்படி உளறிக்கொண்டிருக்கும். அதன் பிறகு ஒன்றியத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, பொதுவானவர் பொறுப்பேற்பார். அதுவரை இந்தக் கழிசடையின் கண்றாவித்தனத்தைப் புறந்தள்ளிப் பொறுத்திருப்போம்.

SUNDAR5d

சனாதனம் என்பது 3 சதவீதம் தவிர்த்து, பெரும்பான்மையான இந்து மக்களுக்கு எதிரானது.

SUNDAR5d

3 சதவீத இந்துக்களுக்கு மட்டும் வக்காலத்து வாங்குகிறார்.

SUNDAR5d

ரம்மி ரவியின் உளறல் அதிமாகிவிட்டது.

shanmuganathanSUNDAR5d

முழுச் சந்திரமுகியாக மாறியவர்.

முகவை அப்துல்5d

பிராமண மேலாதிக்கம் உடைய நபர். எப்பப் பார்த்தாலும் சனாதனம், வேதம், ரிஷிகள்தான். அரசு அதிகாரியாக, பொதுப்படையாக இருக்க வேண்டியவன் பார்ப்பன, பண்டாரங்கள் பிரதிநிதியாக இருந்துகொண்டிருக்கிறார். வெட்கமில்லை. 

kovai ram5d

ரிஷிகளும் வேதங்களும் உண்டக்கட்டி தின்னுட்டு கோமியம் குடிக்க சொல்லுச்சு... இவரு மறைமுகமாகச் சொல்லுறாரு... எல்லாரும் பாப்பானுக்கு அடிமையா இருக்கணும்னு சொல்ல வராரு...!

s.sivamani5d

இவன் அடங்கமாட்டான் போலிருக்கு... சரிடா, நீ வேண்டுமானால் வேதத்தைக் கக்கத்தில் வைத்துக்கொண்டு இந்தியா முழுக்க திரிஞ்சிக்கிட்டுரு... எதற்குத் தமிழ்நாடு மக்களின் வரிப்பணத்தில் தண்டச்சோறு தின்னுற?

shanmuganathan5d

“ரிஷிகளாலும்...வேதங்களாலும் உருவானதுதான் இந்தியா...” -ஆளுநர் ரவி.

அதற்கு முன்னரே, இறைவனின் படைப்பின் தத்துவங்களையும் அறங்களையும் கொண்டு உருவாக்கப்பட்டது தமிழினம்.

இறைவனின் தன்மைகளை உணர்ந்து சிவலிங்க வழிபாடும் நடராசர் வழிபாடும் தமிழகத்தின் மன்னர்களால் மிகுந்த அளவில் கட்டமைக்கப்பட்டிருந்தது..

திராவிட இனமே இந்தியா முழுக்க ஆட்சி செய்தது.

திராவிட மன்னர்களால் ஆளப்பட்டதே இந்தியா.

பிராமணர்கள், தாங்கள் பிறப்பிலேயே உயர்ந்தவர்கள் என்று தவறான பதிவைச் செய்துவைத்தவர்கள்.

தாங்கள் பிறப்பால் உயர்ந்தவர்கள் என்ற ஆணவம் ஊட்டப்பட்டவர்கள்.

அந்த ஆணவம் கடவுளின் மற்றப் படைப்புகளான மனிதர்களைத் தாழ்த்தியது.

படைப்பின் கடவுள் பிரம்மாவின் தலையிலிருந்து வந்ததாகச் சொல்லி ஆணவத்தில் ஆடும் இந்தக் கூட்டத்தின் நாயகனாம் இந்திரனுக்கும் பூமியில் மரியாதை இல்லை.

பிரம்மனுக்கும் இந்தப் பூமியில் அங்கீகாரம் இல்லை.

வெளிநாட்டான்6d

1.நாடு முன்பு வேதமின்றி, அதனால் பேதமின்றி இருந்தது. இப்போது?

2.ஆண்டாள் கோயில் யானை தானாகவா ஆசிர்வாதம் செய்தது? ஆசீர்வாதங்கள் வெறும் மூட நம்பிக்கையே.

ஏன் ஒருவர் யானையின் துதிக்கையை ஒரு பாமரனின் தலையில் வைத்து அழுத்துகிறார்?[படத்தில் காணலாம்].

Kailash6d

அந்த ரிஷிகளும் வேதங்களும் வேலையே செய்யாமல் சோறு சாப்பிடக் கூடாது என்று சொல்லி இருக்கிறதுடா தண்டச் சோறு ரவி.

===============================================================================

https://tamil.oneindia.com/news/tamilnadu/governor-ravi-said-that-india-was-created-by-rishis-and-vedas-505545.html#vuukle-comments