எனது படம்
தமிழர்கள் தமிழ்ப் பற்றாளர்களாக இருந்தால் மட்டும் போதாது; இந்தி ஆதிக்கத்தைத் தகர்க்க, தமிழ் வெறியர்களாக ஆவது[பிற மொழியாளரும்தான்] மிக அவசியம். இந்தி வெறியர்களின் கொட்டத்தை அடக்கக் கடுமையான போராட்டங்கள் தேவைப்படலாம்.

புதன், 31 டிசம்பர், 2025

சிவபெருமானை வம்புக்கு இழுக்கும் சங்கி அமைச்சர் தர்மேந்திரப் பிரதான்!!!

மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திரப் பிரதான் குடும்பத்தோடு சாமி தரிசனம் செய்தார். அப்போது அவருக்குக் கோயில் சார்பாக மரியாதை செலுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர்.....

//இந்துக்கள் புனிதமாகக் கருதக்கூடிய திருப்பரங்குன்றம் மலை மீது விளக்கு ஏற்றுவதைத் தடுக்கக்கூடியவர்கள் முட்டாள்கள். சிவபெருமான் அவர்களுக்குப் பாடம் புகட்டுவார்] என்று தெரிவித்துள்ளார்]//*

ஓ..... தர்மேந்திரப் பிரதான் என்னும் தர்மவானே,

இந்நாள்வரை சிவபெருமான்[+அல்லாவோ கர்த்தரோ பிற கடவுள்களோ] என்றொரு கடவுள் இருப்பதை அறிவியல்பூர்வமாகக் கண்டறிந்து சொன்னவர் எவருமில்லை.

சிவபெருமானோ, அவருக்கும் மேலான கீழான கடவுளர்களோ இருந்தாலும், துன்புறுத்தும் கொடூரங்களுக்கும் கொலைபாதகங்களுக்கும் உள்ளாகும் உயிரினங்களின்[மனிதர்கள் உட்பட] வாழ்க்கையில் அவரோ அவர்களோ தலையிடுவதாக அறியப்படவில்லை.

கடவுள் அல்லது கடவுள்களின் பெயரைச் சொல்லிக்கொண்டு, மனிதர்களைச் சிந்திக்கவிடாமல் தடுத்து, மதங்களின் பெயரால் அவர்களிடையே கலவரங்களை உண்டுபண்ணும் கயமைத்தனங்களில் ஈடுபடுபவர்கள் உங்களின் சங்கிக் கூட்டத்தார்தான்.

நீங்கள் போற்றும் சிவபெருமான் என்றொரு கடவுள் இருந்தால், அவர் முதலில் உங்களுக்குத்தான் பாடம் புகட்டுவார்.

இனியேனும் எதார்த்தமாகவும் அறிவுப்பூர்வமாகவும் பேசக் கற்றுக்கொள்ளுங்கள் பிரதானே!

* * * * *

*https://news7tamil.live/no-one-can-stop-the-lighting-of-lamps-on-the-thiruparankundram-hill-says-dharmendra-pradhan-in-an-interview.html?utm_source=newsshowcase&utm_medium=gnews&utm_campaign=CDAqEAgAKgcICjCwq6ALML21uAMwntLuBA&utm_content=rundown


“தமிழ் மீது உலகமே அன்பு செலுத்துகிறது”... மோடியின் வஞ்சகப் புகழ்ச்சி!!!

தமிழ் மொழி மீது உலகம் முழுவதும் உள்ளவர்கள் அன்பு செலுத்துகிறார்கள் என்று ‘புகழ் மாரி’ பொழிவது இந்தப் பொய்மை விளம்பி[மோடி]க்கு வழக்கமாகிப்போனது.

உலகம் விரும்பும் தமிழை இவர் மட்டும் விரும்பவில்லை என்னும் உண்மை கீழ்க்காணும் ஐ.நா.வின் அறிக்கை[புத்தாண்டு வாழ்த்து> நகல் பதிவு] அம்பலப்படுத்தியிருக்கிறது.

இந்தப் போலித் தமிழ்ப் பற்றாளன் விரும்பியிருந்தால்.....

இந்திய மொழியான இந்தியுடன், ஐ.நா.மன்றம் தமிழிலும் வாழ்த்துத் தெரிவித்திருக்கும்[இந்தியாவில் வழக்கில் உள்ள மொழிகளில் தமிழும் ஒன்று என்பதை இந்த மோசடியாளனின் அரசு ஐ.நா.சபைக்குத் தெரியப்படுத்தவே இல்லை].

வாயளவில் தமிழைப் புகழ்ந்து புகழ்ந்து பேசி, வரும் தேர்தலில் தமிழர்களின் வாக்குகளை அள்ளி, அவர்களை அடிமைகளாக்கத் திட்டமிடும் ஓர் இந்திய அரசியல்வாதி இந்த நாட்டில் பிறந்ததில்லை.

இமாலயப் பொய்யன்!