“விஜய் தனக்கான பெரும்பான்மை ஆதரவை நிருப்பித்த சட்டமன்ற நிகழ்வில், அவருக்கு ஆதரவளித்த ‘அதிமுக’வினர் 25 பேர் மீதும், சட்டமன்றச் செயலர்[‘தவெக’காரர் அல்ல; தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டவர்] நடவடிக்கை எடுப்பதாகச் சொல்லியிருக்கிறார்” என்று சொல்லிக்கொண்டிருக்கிறார் தளவாய் சுந்தரம்[எடப்பாடியார் 'அதிமுக’].
எடப்பாடி பழனிசாமியார் தன் பங்குக்கு, “தனக்கு ஆதரவளித்த ‘அதிமுக’வினரில் 6 பேருக்கு அமைச்சர் பதவி அளிப்பதாக உறுதியளித்திருக்கிறார் விஜய்” என்று துப்பறிந்து கூறியிருக்கிறார்.
இந்தப் பரபரப்பான சூழலில், தமிழ்நாடு காங்கிரஸ் செயலாளர் கணபதி சிவக்குமார், “விஜய்க்கு ‘அதிமுக’வினர் ஆதரவு தருவதை எங்கள் தலைமை விரும்பவில்லை” என்று பகீர் கிளப்பியுள்ளார்.*
இந்தவொரு குழப்பமான சூழலில், த.நா.சட்டமன்றச் செயலர் விஜய்க்கு ஆதரவளித்த 25 ‘அதிமுக’வினரைப் பதவி நீக்கம் செய்வது, காங்கிரஸ் உறுப்பினர்கள் 5 பேரும் விஜய்க்கான ஆதரவைத் திரும்பப் பெறுவது என்னும் விஜய்க்குப் பாதகமான சூழல் உருவானால்.....
விஜய் அரசு மீது ‘நம்பிக்கை இல்லாத் தீர்மானம்’ கொண்டுவரப்படலாம்[மே 2026இல் தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய் தலைமையிலான அரசு மீது, எதிர்க்கட்சிகள் எப்போது வேண்டுமானாலும் நம்பிக்கையில்லாத் தீர்மானம்(No-Confidence Motion) கொண்டுவர முடியும். இதற்குத் தனிக் கால அவகாசம் எதுவும் இல்லை].
தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் விஜய் ஆட்சி கவிழும் என்பது உறுதி.
ஆக, தமிழ்நாட்டில் நிலவும் அவலமான அரசியல் சூழ்நிலை பெரிதும் கவலையளிப்பதாக உள்ளது
* * * * *
