சனி, 25 ஏப்ரல், 2026

தமிழ்நாடு 2026 தேர்தல்... யார் அந்த ‘24 லட்சம்’ பேர்?!

தமிழ்நாட்டில் ‘2021 தேர்தலைவிடவும் 2026 தேர்தலில், 24 லட்சத்துக்கும் மேற்பட்டோர் அதிகமாக வாக்களித்திருக்கிறார்கள்’ என்பது செய்தி. 

இந்த அதிகரிப்புக்கு, முதல் முறையாக வாக்குரிமை பெற்ற இளசுகள் ஆர்வத்துடன் வாக்களித்தது ஒரு காராணமாக இருக்கக்கூடும்.

முன்பெல்லாம் தேர்தலை அலட்சியம் செய்தவர்கள் விழிப்புணர்வு பெற்று இப்போது வாக்களித்திருக்கலாம்.

நடிகர் ‘விஜய்’யின் ரசிகர்கள் வாக்களித்ததாலும் பதிவின் எண்ணிக்கை அதிகரித்திருக்க வாய்ப்புண்டு.

மேற்கண்ட காரணங்களில் முதலிரண்டை ஒதுக்கி, அந்த 24 லட்சத்தில் பெரும்பாலோர் நடிகரின் ரசிகர்களே என்று சிலர் சொல்வது அபத்தமானது. அவர்களின் அதிகப்பட்ச எண்ணிக்கை சுமார் 2 லட்சங்களாக வேண்டுமானால் இருக்கலாம்.

எது எப்படியோ, புதிதாக வாக்களித்த 24[-2 லட்சம்] லட்சம் பேரும் யாருக்கெல்லாம் ஆதரவாக வாக்களித்திருப்பார்கள் என்னும் கேள்வி தவிர்க்க இயலாதது.

நம் கணிப்பு:

2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், ‘அதிமுக’ கூட்டணியில் போட்டியிட்ட பாரதிய ஜனதா கட்சி(பாஜக> மொத்தம் 4 இடங்களைக் கைப்பற்றியது]. பெற்ற மொத்த வாக்குகள் சுமார் 12,13,510.

மாநிலங்களின் உரிமைகளை ஒன்றன் பின் ஒன்றாகப் பறித்துவரும், ஒன்றியத்தை ஆளும் இந்த ஆதிக்க வெறிப் பாஜக சங்கிகள் செய்யும் அடாவடித்தனங்களால், அவர்களை 2021இல் ஆதரித்த 12 லட்சம்[+13 510] பேர் மட்டுமல்லாமல், புதிதாக ஏறத்தாழ 24 லட்சம்[-2 லட்சம்] பேர், மாநில உரிமைகளைத் தக்கவைக்கப் போராடும் கட்சிகளுக்கு வாக்களித்தது பதிவான வாக்குகளின் எண்ணிக்கை மேற்கண்டவாறு அதிகரிக்கக் காரணம் ஆகும். 

இந்த என் கணிப்பு மெய்ப்பிக்கப்படுதல் வேண்டும்மென்பது என் ஆசை. உங்களின் ஆசையும் இதுவாகத்தான் இருக்கும் என்பது என் நம்பிக்கை!

ஹி... ஹி... ஹி!!!

வெள்ளி, 24 ஏப்ரல், 2026

‘ஜால்முரி’ என்னும் கார உணவும் நம் பிரதமரின் அபார அறிவும்!!!

டந்த வாரம் ஜார்கிராமில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தின்போது ஒரு கடையில், வங்காளத்தில் பிரபலமான தெருவோர உணவான ஜால்முரி[jhalmuri] சாப்பிட்டாராம் நம் பிரதமர் மோடி.

அப்போது அவர், “நான் ஜால்முரி சாப்பிட்டதால், அதன் காரம்[ஜால்] திரிணாமுல் கட்சியைத் தாக்கியது; அதற்கு வலித்தது" என்று கூறி, மம்தா பானர்ஜியின் கட்சியைப் மறைமுகமாகச் சாடினாராம். இது ஒரு செய்தியாக ஊடகங்களில் வெளியாகிப் பரபரப்பூட்டியது என்பது செய்தி*

ஒரு கார உணவைச் சாப்பிடும்போது அதில் காரம் அதிகம் இருந்தால், சாப்பிடுபவருக்குப் பல கெடுதல்கள்[கார உணவு அளவோடு இருந்தால் நன்மைகள் விளைவதுண்டு] உண்டாகும்; காரம் காற்றில் பரவுவதால், சில நேரங்களில் அருகில் இருப்போருக்குத் தும்மல், இருமல், கண்களில் எரிச்சல் போன்ற மிக மிகக் குறைந்த அளவுப் பாதிப்புகளை மட்டுமே அது ஏற்படுத்தும்.

இது பிரதருக்குத் தெரியாததால்தான், தான் சாப்பிட்ட ‘ஜால்முரி’யின் காரம் திரிணாமுல் காங்கிரஸை[மம்தா கட்சி]ப் பாதித்துவிட்டதாகக் கிண்டலடித்திருக்கிறார்.

ஒரு மிகச் சாதாரணமானதும் ‘அல்ப’மானதுமான விசயம், ஒரு பெரிய நாட்டை ஆளுகிற நம் பிரதமர் மோடிக்குத் தெரியவில்லையே என்று யாரும் எள்ளி நகையாட வேண்டாம். ஏனென்றால்.....

அவர் ‘நம்’ பிரதமர்!

*https://www.msn.com/en-in/news/india/i-ate-jhalmuri-but-trinamool-felt-the-sting-pm-modi-in-bengal/ar-AA21xlgR?ocid=msedgdhp&pc=NMTS&cvid=69ea109c37e74f3daf8b9615c2bea882&ei=18மோடி