2026 தமிழ்நாடு சட்டமன்றத்திற்கான தேர்தலில் பெண்களின் பாதுகாப்புக் குறித்தும், அவர்களின் மேம்பாடு குறித்தும் ‘தவெக’ தலைவர் விஜய் அளித்த வாக்குறுதிகளை நம்பி, பெண்கள் பெருமளவில் அவருக்கு வாக்கு அளித்ததே அவரின் வெற்றிக்கு முதன்மைக் காரணமாக அமைந்தது என்பதை ஊடகங்களில் வெளியான விமர்சனங்கள் மூலம் அறிய இயலுகிறது.*
நம் குடும்பப் பெண்களில் பெரும்பாலோருக்கு[வீட்டிலேயே அடைந்து கிடப்பதால்] நாட்டு நடப்பையும் மனிதர் இயல்புகளையும் புரிந்துகொள்ளும் திறன் மிகவும் குறைவு; சினிமா நடிகர்கள் மீதான நம்பிக்கை மிக அதிகம்[“பெண்கள் தங்களின் கணவர்கள் சொன்னாலும் பொருட்படுத்தாமல் எனக்கே வாக்களிப்பார்கள்” என்று முன்னாள் முதல்வரான ‘எம்.ஜி.ஆர்’ பகிரங்கமாகப் பேசியது இங்கு நினைவுகூரத்தக்கது].
இந்தக் குறைபாடுதான் நடிகர் விஜய் பேச்சை முழுமையாக நம்பி அவர்கள் அவருக்கு வாக்களித்ததற்கான காரணம் ஆகும்.
விளைவு, நீண்ட இடைவெளிக்குப் பிறகு, தமிழ்நாட்டில் எந்தவொரு கட்சியும் நிலையானதொரு ஆட்சி அமைக்க இயலாத அவலம் நிலவுகிறது.
இனியேனும் பெண்கள், தொலைக்காட்சித் தொடர்களை மட்டுமே[+ஒளிபரப்பாகும் திரைப்படங்கள்] பார்ப்பதோடு அமையாமல், வெளியாகும் பலதரப்பட்ட செய்திகளையும் வாசித்துத் தங்களின் பொது அறிவை வளர்த்துக்கொள்வது நல்லது.
*//தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு மாபெரும் மாற்றம் இன்று 2026 மே 4 அன்று நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
பொதுவாகத் தமிழகத் தேர்தலில் திமுக அல்லது அதிமுக ஆகிய இரு அணிகளுக்கு இடையேதான் கடும் போட்டி நிலவும். ஆனால், 2026 தேர்தல் களம் மொத்தமாக மாறிப்போயுள்ளது. தற்போதைய நிலவரப்படி, 100-க்கும் மேற்பட்ட இடங்களில் தவெக முன்னிலை பெற்றுள்ளதால், அக்கட்சி தனித்து ஆட்சி அமைக்கவே அதிக வாய்ப்புகள் உள்ளதாகக் கருதப்படுகிறது.
எந்தக் கருத்துக் கணிப்புகளும் கணிக்காத இந்த அதிரடித் திருப்பத்திற்கு மிக முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுவது 'பெண்கள் வாக்கு' மட்டுமே. விஜய் தனது தேர்தல் பிரச்சாரங்களின்போது "பெண்களின் பாதுகாப்பு" என்பதையே தனது பிரதான அரசியல் ஆயுதமாகக் கையில் எடுத்தார்//