எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

திங்கள், 2 மார்ச், 2026

பெண்களே நல்லவர்கள்!!!

*நினைத்தபோது நினைத்த இடத்தில் நினைத்த வகையிலெல்லாம் காமச் சுகம் அனுபவிக்க இயலாத நிலையில், நம் முன்னோடிகளில் கணிசமானவர்களால் கற்பனை செய்யப்பட்டதே ‘காதல்’ ஆகும். மிக எளிதில் இந்தப் படுகுழியில் வீழ்பவர்கள் ஆண்களே; பெண்கள் அல்லர்.

*உடலுறவில் உச்சம் தொடுவது பெண்ணுக்குச் சாத்தியமா என்பது பற்றி இதுவரை எந்தப் பெண்ணும் கருத்துச் சொன்னதில்லை. வெட்டியாய், “ஆம்” என்றும் “இல்லை”யென்றும் தொடர் விவாதம் நடத்திக்கொண்டிருப்பவர்கள் ஆண்களே!
*வாழ்ந்து முடித்து மடிந்துபோவதை ‘ஆடி அடங்கும்  வாழ்க்கையடா’ என்றார்கள் நம் முன்னோர்கள். உடலுறவுக்கு முன்பு நாயாய்ப் பேயாய் ஓடியாடி அலைந்து திரியும் ஆண்கள் உடலுறவுக்குப் பின் அடங்கிவிடுகிறார்கள்; எப்போதும் இயல்பு நிலை மாறாதிருப்பவர்கள் பெண்கள்[பெரும்பாலோர்].

*‘இது’ விசயத்தில் லேகியம், ஆயின்மெண்ட், வயாகரா, நயாகரா என்று பித்துப்பிடித்து அலைபவர்கள் ஆண்களேபெண்கள் அமைதி காப்பவர்கள். 

*ஆசைப்பட்டபடியெல்லாம் அனுபவிக்க இயலாதபோது அதிகம் வருந்துபவர்கள் ஆண்களே. “போதும்” என்று மன நிறைவு பெறுபவர்கள் பெண்கள்[விதிவிலக்கானவர்களும் உளர்]

*ஆண்களைப் பொருத்தவரை இது விசயத்தில் ஆயுள் முழுக்க ஆட்டம் போடுகிறார்கள். பெண்கள்? 

கடவுள் எனப்படுபவர் பெண்களுக்கு மிகப் பெரிய துரோகம் செய்திருக்கிறார்.

ஞாயிறு, 1 மார்ச், 2026

'யாகம்’ செய்து மண்டைக் களிமண்ணை மூளையாக மாற்றலாம்!?!?!

 லைப்பை வாசித்தாலே போதும், ஊடகச் செய்தியின் முழு உள்ளடக்கத்தையும் அறிந்துகொள்ளலாம்.

திருவாரூர் அரசுப் போக்குவரத்துப் பணிமனையில், எவ்வளவுதான் பராமரிப்புச் செய்தாலும் அடிக்கடி அவை பழுதடைவதும், விபத்துக்கு உள்ளாவதும் நிகழ்கின்றனவாம். அதனால்,  அவை பழுதடைவதைத் தடுக்கவும், விபத்துகள் நேராமலிருக்கவும் சிறப்பு யாகம் செய்திருக்கிறார்கள்[யாகம் செய்து மண்டைக் களிமண்ணையும் மூளையாக மாற்றலாம் என்பதை இதன் மூலம் நாம் அறியலாம்]பணிமனை நிர்வாகிகள்.

வரவேற்கலாம்.

யாகம் செய்தால் வாகனங்களில் பழுதே ஏற்படாது; விபத்துகளும் நிகழாது என்பதை நம் மக்கள் மட்டுமல்ல, தமிழ்நாடு அரசே அறியாமலிருப்பது மிகவும் வருந்தத்தக்கது.

இனி.....

அரசுப் பேருந்துகள் மட்டுமல்ல, அரசுத் துறைகளில் பயன்படுத்தப்படும் அனைத்து வாகனங்களிலும்[முதலமைச்சர் பயணிப்பது உட்பட] பழுதே ஏற்படாமலிருக்கவும், ஆண்டுகள் பல கழிந்தாலும் பளபளப்பு மங்காமலும் அழுக்குப்படியாமலும் இருக்கவும்,  தலைமைச் செயலகத்தில் மிகப் பெரியதொரு ‘யாகம்’ செய்தல் உடனடித் தேவை.

இது குறித்த அறிவிப்பை அரசு உடனடியாக வெளியிடுவதோடு, திருவாரூர் போக்குவரத்துப் பணிமனை நிர்வாகிகளுக்கு, முதலமைச்சர் தலைமையில் பெரும் பாராட்டு விழா நடத்த வேண்டும் என்பது நம் வேண்டுகோள்[ஹி... ஹி... ஹி!!!]; நம் மக்களின் விருப்பமும் அதுவே.