சனி, 11 ஜூலை, 2026

மனம் உடைந்து, கண் கலங்கிக் கதறி[crying] அழும் முதல்வர் ஜோசப்!!!

முக்கிய அறிவிப்பு: “புரியாத கடவுள் தத்துவங்கள், மூடநம்பிக்கைகள், கத்துக்குட்டித்தனமான கதைகள், அறுவைக் கட்டுரைகள் என்று எதையெதையோ கிறுக்கிக்கொண்டிருந்த நீ, அடுத்தடுத்து நம் முதல்வரை விமர்சிக்கிறாயே, இருந்த சரக்கெல்லாம் தீர்ந்துவிட்டதா?” என்று கேட்க நினைக்கிறீர்கள்தானே?

உங்கள் கேள்வி நியாயமானதுதான். நான் விரும்பி எழுதவில்லை; முதல்வர் எழுதத் தூண்டுகிறார் என்பதே என் பதில். இயன்றவரை, இவரை விமர்சிப்பது இனி தவிர்க்கப்படும் என்பது உறுதி.

மேற்கண்ட காணொலிகளில், முதலமைச்சர் ஜோசப் அவர்கள் மனம் உடைந்து அழும்போது அவரின் கண்கள் நீர் தளும்பும் குளங்கள் ஆவதையும்,  அவர் கலங்கி அழும்போது கன்னங்களில் தாரை தாரையாய் அது வழிவதையும், கதறி[crying] அழும்போது அது அருவியாய்ப் பெருக்கெடுப்பதையும் காண்கிறோம்.

அவரைத் தேற்றுவதற்கான வழி ஏதும் தென்படவில்லை.

“இது விஜய் ஆட்சி... இது விஜய் ஆட்சி... இது விஜய் ஆட்சி... இது.....”

“அரசு அலுவலர்கள் லஞ்சம் கேட்டால் இது எங்கள் விஜய் ஆட்சி என்று சொல்லுங்கள்” -இது தமிழ்நாடு முதல்வர் ஜோசப் கரூர் பரப்புரைக் கூட்டத்தில் விண்ணதிரச் செய்த முழக்கம்.

இவருடைய பெயரைச் சொன்னதும், லஞ்சம் கேட்ட அதிகாரி அஞ்சி நடுங்கி நம் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்பார்; கொட்டைவடி நீரோ[காபி] குளிர்பானமோ தேனீரோ கொடுத்துக் குடிக்கச் செய்த பிறகே ஆகவேண்டிய காரியம் குறித்து விசாரிப்பார்; தன் கடமையைச் செய்துமுடித்து அலுவலக வாசல்வரை வந்து நம்மை வழியனுப்புவார்.

இது ஜோசப்பின் ஆட்சியில் நடக்கவுள்ள பேரதிசயம்.

இங்கே நாம் நம்மவர்களுக்கு வழங்கவுள்ள ஒரு பரிந்துரை.....

அலுவலரைப் பார்த்தவுடனே, “தமிழ்நாட்டில் நடப்பது எங்கள் விஜய் ஆட்சி” என்று அலுவலகத்தில் உள்ள பிறருக்கும் கேட்கும்படியாகவும் அழுத்தம் திருத்தமாகவும் சொல்லிவிடுங்கள்[லஞ்சம் கொடுக்காவிட்டால் காரியம் ஆகாதே என்று கவலைப்பட வேண்டாம்]. இதன் மூலம் அலுவலர் நம் காலில் விழுந்து அவமானப்படுவதும், உபசரிப்புக்காகச்  செலவு செய்வதும் தவிர்க்கப்படும்.

“லஞ்சமா, அது என்ன?” என்று கேட்கும் அதிசயம் இங்கு நிலவும். 

பிற மாநிலத்தார் உட்பட ஒட்டுமொத்த உலக மக்களும் ‘ஜோசப்’பின் நிர்வாகத் திறமையைப் பாராட்டுவார்கள்.

ஜோசப் நாமம் வாழ்க! அவர் புகழ் உலகெங்கும் பரவுக!!