புதன், 19 ஆகஸ்ட், 2026

முன்னணி மதங்களின் மூன்று சொர்க்கங்கள்! மிகச் சிறந்தது எது?!

*பைபிள்:  கர்த்தர் இப்போது சொர்க்கத்தில் ஒரு சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறார்[சங்கீதம் 115:3-ன் படி, நம்முடைய தேவன் பரலோகத்தில் இருக்கிறார்; தமக்கு இஷ்டமானதையெல்லாம் செய்கிறார்; அவர்[கர்த்தர்] சொர்க்கத்தில் வீற்றிருந்து, சர்வவல்லமையோடு இந்தப் பிரபஞ்சத்தை ஆண்டு வருகிறார்]. 

*இந்துமதம்: சொர்க்கத்தின் தலைவன் உடலெல்லாம் கண்கள்(???) கொண்ட இந்திரன்.[wikipedia] 

*இஸ்லாம்: இஸ்லாம் மார்க்கத்தின்படி, சொர்க்கம், நரகம் எல்லாம் உண்டு. அல்லாஹ் மனிதர்களைத் தன் தனிக் கருணையினால் சொர்க்கத்தில் அனுமதிப்பான்[சொர்க்கவாசிகள் நுழைந்த பின், அல்லாஹ் திரையை நீக்குவான் என்றும், அப்போது அவர்கள் தங்கள் இறைவனைப் பார்ப்பதைவிட பிரியமான எதையும் பெறமாட்டார்கள் என்றும் நபி வழிகாட்டல்களில் கூறப்பட்டுள்ளது>இணையம்]. 

சொர்க்கம் என்று ஒன்று இருக்குமானால், அதை ஆளுபவர் ‘ஒரு’ கடவுள் என்றே நாம் நம்பிக்கொண்டிருக்கிறோம்.

ஆனால், மூன்று முன்னணி மதங்களும், அதை ஆளுபவர்களாக அவை போற்றும் கடவுள்களையே[கர்த்தர், அல்லாஹ், இந்திரன்[பல கடவுள்களில் ஒருவன்] குறிப்பிடுகின்றன. இதன் மூலம் சொர்க்கம் ஒன்றல்ல; மூன்று என்றாகிறது.

மூன்றில் ஆகச் சிறந்த சொர்க்கம் எது?

வருங்காலத்தில் மேற்கண்ட சொர்க்கங்களுக்குத் ‘தொலைத் தொடர்பு’ வசதி[தொலைபேசி, இணையம்] கண்டுபிடிக்கப்பட்டால், அவற்றின் தலைவர்களுடன் தொடர்புகொண்டு, எதுஎதற்கு எவ்வளவு புண்ணியம் செய்திருக்க வேண்டும் என்பதை அறிந்து செயல்படலாம். 

அறிவியலாளர்களின் அடி பணிந்து கோரிக்கை வைத்தால், விரைவில் உரிய தொலைத் தொடர்புக் கருவிகளை(Similar to 'Wind Phone']க் கண்டுபிடிப்பார்கள். ஹி... ஹி... ஹி!!!
***காற்றின் தொலைபேசி(Wind Phone - Kaze no Denwa) என்று அழைக்கப்படும் இணைக்கப்படாத தொலைபேசிப் பெட்டியைக் குறிக்கிறது. ஜப்பானின் ஒட்சுச்சி நகரில் இறந்த உறவினர்களுடன் பேசும் எண்ணத்தில் இது உருவாக்கப்பட்டது. இது துயரத்திலிருக்கும் மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் ஒரு அடையாள இடமாகும்[wikipedia]