செவ்வாய், 8 செப்டம்பர், 2026

பரிசுத்த வேதாகமும்[பைபிள்] அசுத்த ஜோசப்பும்!

//சட்டசபையில் திமுக-வின் "மிசா" காலத் தியாகங்கள் & ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த காரசாரமான விவாதத்தின்போது, "மிசாவில் என்ன நடந்தது என்று எங்களுக்குத் தெரியும்" என்று முதல்வர் விஜய் பேசினார். அப்போது அவர் தனது வலது உள்ளங்கையைத் தாடையின் அருகே வைத்து ஒரு சைகையைக் காட்டினார்

1976 அவசரநிலைக் காலத்தில் மிசா(MISA) சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டபோது, மு.க.ஸ்டாலின் போலீஸ் காவலில் கடுமையாகத் தாக்கப்பட்டு அவரது தாடை எலும்பு முறிந்தது என்பது வரலாறு. விஜய் செய்த அந்தச் சைகை, ஸ்டாலினுக்கு ஏற்பட்ட அந்த உடல்ரீதியான பாதிப்பைக் கிண்டல் செய்யும் விதமாகவும், உருவக்கேலி(Body-shaming) செய்யும் வகையிலும் இருந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன//[ஊடகங்கள்]
எதிர்க்கட்சியினரின் குற்றச்சாட்டுகள் ஏற்கத்தக்கவை என்பதை உறுதிப்படுத்துகிறது இந்தக் காணொலி.
ஸ்டாலினோ வேறு எவரோ அவரின் உடல் குறைபாட்டைச் சுட்டிக்காட்டிக் கேலி செய்யும் ஜோசப்[தமிழ்நாட்டின் முதலமைச்சர்]புக்கு இந்தக் கழிசடைக் குணத்தைக் கற்றுக்கொடுத்தது கிறித்தவர் போற்றும் புனித நூலான பைபிளா?
அல்ல... அல்ல... அல்லவே அல்ல.
அதைப் ‘பரிசுத்த வேதாகமம்’ என்பார்கள்.
பரிசுத்தரல்ல இந்த ஜோசப்.

திங்கள், 7 செப்டம்பர், 2026

காலத்தை வென்ற ஒரு கவிதை! கருப்பொருள்: தெருநாய்!!

'கிளு கிளு' கன்னியரை வர்ணித்துக் கவிதை எழுதாத கவிஞர்களே இல்லை. தெரு நாய்களைப் பற்றி யாரேனும் கவிதை படைத்திருக்கிறார்களா?

காசாவயல் கண்ணன் எழுதிய, 'நடைபாதை நண்பர்கள்' என்னும் தலைப்பிலான ஒரு கவிதையை['காமதேனு’, 30 ஜூன் 2019] வாசித்து மனம் நெகிழ்ந்தேன்; கொஞ்சமே கொஞ்சம் புதுப்பித்து உங்களுக்காக இதைப் பதிவு செய்கிறேன்.

வீட்டு நாய்களைப் போல
இதுகளுக்கு
விருப்பப் பெயரெல்லாம் இருக்காது;
தெருநாய் என்ற பொதுப் பெயர்
மட்டும்தான். 

பல நாள் கழித்துப் பார்த்த
பால்ய நண்பனாக
வாஞ்சை காட்டும் ஒரு நாய்.

முன்னாள் காதலியைப் போல்
ஓரக்கண்ணால் பார்த்து
ஒதுங்கிப்போகும் மற்றொரு நாய்.

தாய் நாய் முலையில்
முட்டி முட்டிப்
பால் குடித்த ஞாபகத்தில்.....

என் கால் விரல்களை
விடாமல் சப்பும் குட்டிநாய்.

“என் பசி தணிப்பாய்தானே?” 

என்று 

பார்வையாலேயே கெஞ்சும் 

பாவப்பட்ட பிறவி.


நான்கு கவளம் எச்சில் சோற்றுக்கு

எத்தனை நேரமும் வாலாட்டும் 

நன்றியுள்ள ஜீவன்.


வீடுதோறும்
நாய் இருக்கிறதோ இல்லையோ
தெருநாய்கள் இல்லாத 
தெருக்களே இல்லை!