//முதல்வர் விஜய் துபைக்குச் சென்ற எமிரட்ஸின் யுஏஇ547 விமானத்தை, ஃபிளைட் ரேடார் தளத்தில் ஆயிரக்கணக்கானோர் ஒரே நேரத்தில் டிராக் செய்துள்ளனர். இதனால், அந்த விமானம் உலகில் அதிகளவில் டிராக் செய்யப்பட்ட விமானங்களின் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது//[https://www.dinamani.com/tamilnadu/2026/Sep/11/the-flight-travelled-chief-minister-vijay-tops-the-flightradar-rankings]
இன்று தமிழில் வெளியான மிகு பரபரப்பான செய்திகளிலும் இச்செய்தி முதலிடம் பிடித்துள்ளது.
ஜோசப் பயணித்த விமானம் உலக அளவில் மிக அதிகமாக டிராக் செய்யப்பட்டதன் மூலம், நம் ஜோசப் உலகின் நம்பர் 1 தலைவராகவும் உயர்வு பெற்றுள்ளார்.
தமிழர்கள் இனி உலகில் எந்தவொரு நாட்டுக்குச் சென்றாலும் தலை நிமிர்ந்து நடக்கலாம்.
பொறாமை உள்ளம் கொண்ட பொல்லாதவர்களால் தலைவருக்குக் ‘கண் திருஷ்டி’ படுவது உறுதி.
உலகில் தனக்கும் மேலான தலைவன் இல்லை என்று தலைக்கனத்துடன் அலையும் அமெரிக்கா அரசுத் தலைவரான டோனால்ட் டிரம்பால், திரும்புகாலில் நம் தலைவர் ஜோசப் பயணிக்கும் விமானத்துக்கு ஆபத்து நேரக்கூடும் என்பதால், அந்த விமானத்தைப் பாதுகாப்புடன் அழைத்துவர, குறைந்தபட்சம் நான்கைந்து வான்படை ஜெட் விமானங்களை அனுப்புவது பிரதமரான மோடியின் கடமையாகும்!
.jpg)

