செவ்வாய், 21 ஜூலை, 2026

இவர்கள் மக்களால் தேர்ந்தெடுப்பப்பட்டவர்களா, மன்னர் பரம்பரையினரா!?!?!

விஐபி(VIP) அல்லது தலைவர்களின்[ஜோசப் உட்பட] கார்களின் முன்னால் பாதுகாப்புப் படையினர் ஓடுவது என்பது, முற்றிலும் தவறானதும் ஏற்றுக்கொள்ள இயலாததுமான ஒரு செயல்முறை ஆகும்.

விஐபி கார்கள் மணிக்கு 50 - 60 கி.மீ வேகத்தில் செல்லும்போது, அவர்களுடன் ஓடும் காவலர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிறது[வாகனத்தில் ஏற்படும் சிறு தொழில்நுட்பக் கோளாறுகூட பெரிய விபத்தை ஏற்படுத்தலாம்]. இது அவர்களை அவமானப்படுத்துகிற செயலும் ஆகும்.
இது மனிதர்களின் உடல் திறனைத் தவறாகப் பயன்படுத்துவதாகவும், கண்ணியமற்ற நடைமுறை எனவும் மனித உரிமை ஆர்வலர்களால் விமர்சிக்கப்படுகிறது.
நவீன காலத்தில் தலைவர்களின் பாதுகாப்பிற்கு அதிநவீன குண்டு துளைக்காத கார்கள்(Bulletproof cars), ஜாமர்கள்(Jammers), கவச வாகனங்கள் போன்றவை பயன்படுத்தப்படுகின்றன. இவற்றுக்கு மத்தியில் மனிதர்கள் ஓடிப் பாதுகாப்பளிப்பது தேவையற்றது.
மிகவும் குறுகியதும் மக்கள் நெருக்கம் மிகுந்ததுமான தெருக்களில் தலைவர்கள் செல்லும்போது, கூட்டத்தைக் கட்டுப்படுத்தவும், அவசரக் காலங்களில் வாகனத்தை வழிநடத்தவும் குறைந்த வேகத்தில் பாதுகாப்புப் படையினர் ஓடுவது அனுமதிக்கப்படலாம்.

அடிக்கடி நிகழும் இந்த அவல நிகழ்வுகளை, தலைவர்கள் என்று சொல்லப்படுபவர்கள் தடுக்கும் முயற்சியில் ஈடுபடாதது மக்களை இழிவுபடுத்தும் செயலாகும்.

திங்கள், 20 ஜூலை, 2026

ஜோசப்பின்[த.நா.முதலமைச்சர்] சுயரூபம்!!!

//சமீபத்தில் முதல்வர் விஜய் வெளியிட்ட வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

மக்கள் தொகைக் கணக்கெடுப்பு தொடர்பாக அவர் வெளியிட்டிருந்த விழிப்புணர்வு வீடியோவில் முதல்வரின் மேஜையில் வைக்கப்பட்டிருந்த சிலுவை தான் இவ்வளவு பிரச்சனைக்கும் காரணம்.

மதச்சார்பற்ற அரசின் முதல்வர் எனக் கூறிக்கொள்பவர் மத அடையாளத்தைத் தனது டேபிளில் வைக்கலாமா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர் சிலர்[பலர்].

அதே நேரத்தில் இதற்கு முன்னால் இருந்த முதல்வர்கள் மத அடையாளங்களைப் பயன்படுத்திய புகைப்படங்களைப் பகிர்ந்து பதிலடி கொடுத்து வருகின்றனர் தமிழக வெற்றிக் கழகத்தினர்[கூத்தாடிகள் கவர்ச்சிக் குமரிகளுடன் அடிக்கும் கூத்தில் தீராத மயக்கம் கொண்டவர்கள்]*

இவன்கள் பொய்யன்கள். முன்னாள் முதல்வர்களில் எவரும் முதல்வர் அறையில் மதச் சின்னங்களை வைத்திருந்ததில்லை என்பதே உண்மை[அரசு அலுவலகங்கள் மற்றும் பணியிடங்களில் மதம் சார்ந்த குறியீடுகள் மற்றும் சின்னங்களை வைக்கக் கூடாது என்பது கொள்கை முடிவு. இந்த மரபுப்படி, தமிழ்நாட்டின் முதலமைச்சர்கள் தங்கள் அலுவலக மேஜைகளில் மதம் சார்ந்த சின்னங்களை வைத்ததில்லை. [1, 2]

1968-ஆம் ஆண்டு அன்றைய முதல்வர் சி.என்.அண்ணாதுரை, அரசு அலுவலகங்களில் கடவுள்களின் படங்கள் மற்றும் சிலைகள் இருப்பதைப் படிப்படியாக அகற்ற வேண்டும் என்று சுற்றறிக்கை வெளியிட்டார். பின்னர், 1993-ஆம் ஆண்டு முதல்வர் ஜெ. ஜெயலலிதா பிறப்பித்த அரசாணை(G.O.) மூலம், அரசு அலுவலகங்களில் மத வழிபாடு மற்றும் சின்னங்களை வைப்பது முறையாகத் தடை செய்யப்பட்டது> ஆதாரங்கள்: முகநூல், டைம்ஸ் நவ் போன்ற ஊடகங்கள்.

மதம்[கிறித்தவம்] பரப்பும் வெறிகொண்டவர்[தனிப்பட்ட முறையில் இவரின் மதப்பற்று விமர்சனத்துக்கு உரியதல்ல] ஜோசப் என்பதற்கு இந்த நிகழ்வே சான்றாகும்.

கொஞ்சமும் ’மத வெறி’ இல்லாத மக்கள் இணைந்து, ஜோசப்பின் விசிலடிச்சான்களைத் திருத்த முயன்றால் அது பெரிதும் வரவேற்கத்தக்கது.

***ஜோசப் முதலமைச்சராகப் பதவி ஏற்றபோதும், பின்னரும் நான் வெளியிட்ட பதிவுகள்[அவசியம் வாசிக்கத்தக்கவை]:

https://kadavulinkadavul.blogspot.com/2026/05/blog-post_560.html

https://kadavulinkadavul.blogspot.com/2026/07/blog-post_01.html

                      =================

*https://tamil.oneindia.com/news/chennai/vijays-desk-cross-sparks-secularism-debate-across-social-media-817421.html