//தமிழ்நாட்டில் நடைபெறவிருக்கும் மதுராந்தகம் & தாராபுரம் ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்களில் பொதுவுடைமைக் கட்சிகள்(இடதுசாரிகள்) தனித்து போட்டியிடப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன//[ஊடகங்கள்].
//பாஜக அதிகாரத்திற்கு வருவதைத் தடுக்கவே தவெக அரசுக்கு அளித்து வரும் வெளிப்புற ஆதரவு தொடரும் என்றும், இதனால் தவெக ஆட்சிக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றும் பெ.சண்முகம்[+வீரபாண்டியன்] தெளிவுபடுத்தினார்//[ஊடகம்].
தமிழ்நாடு இடைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டாலும், ஜோசப் கட்சி ஆட்சியைத் தொடர்ந்து ஆதரிப்போம் என்று இவர்கள் சொல்வது முரண்பாடானது.
இடைத் தேர்தலில் போட்டியிடுகிற இவர்களுக்கு, ‘தவெக’ ஜோசப் உட்படப் போட்டியிடுகிற அனைத்துக் கட்சிக்காரர்களும் எதிரிகள்தான்.
தங்களின் வேட்பாளர்கள் வென்றால் ஏற்படும் நன்மைகளைப் பட்டியலிடுவதோடு, மற்றவர்கள்[+தவெக] வென்றால் விளையும் தீங்குகளையும் சுட்டிக்காட்டுவது தவிர்க்கவே இயலாதது. தவிர்க்கக்கூடாததை எப்படித் தவிர்ப்பார்கள் சண்முகனாரும் வீரபாண்டியனாரும்?
தவிர்த்தால்.....
இவர்களுக்கு ‘வேடதாரிகள்’, ‘பச்சோந்திகள்’, ‘குழப்பவாதிகள்’ என்றெல்லாம் முத்திரை குத்துவார்கள் தமிழ் மக்கள்.
அப்புறம் இவர்கள் தனித்துப் போட்டியிட்டபோதெல்லாம் கிடைத்த கொஞ்சம் வாக்குகளையும், இந்த இடைத் தேர்தலில் பறிகொடுக்க நேரும்; காலப்போக்கில் தமிழ்நாட்டில் பொதுவுடைமைக் கட்சிகள் இருந்த இடம் தெரியாமல் அழியும்.