சனி, 18 ஏப்ரல், 2026

வாசல்தோறும் ‘விசில்’ கோலம்! இல்லம்தோறும் ஒலிக்கும் அதிரடி விசில் ஓசை!!

நேற்று முன் தினம் சென்னையில் நடைபெற்ற தவெக தேர்தல் அறிக்கை வெளியீட்டு விழாவில் பேசிய விஜய், "தேர்தல் நெருங்கிவிட்டது. என் அன்புக்குரிய அம்மாக்கள், அக்காக்கள், தங்கைகள் அனைவரும் உங்கள் வீட்டு வாசலில் நமது ‘விசில்' சின்னத்தைக் கோலமாக இடுங்கள். அது நீங்கள் எனக்குக் கொடுக்கும் மிகப்பெரிய ஆதரவாக இருக்கும்" என வேண்டுகோள் விடுத்தார்.*

தலைவனின் அன்பு வேண்டுகோளின்படி, வீடு தவறாமல்[தமிழ்நாடு முழுவதும்] பெண்கள் தத்தம் வாசல்களில் ‘விசில்’ சின்னம் வரைவார்கள் என்பது உறுதி.

ஆண்கள்?

பெண்கள் கோலம் வரையும் கண்கவர் காட்சியை வெறுமனே வேடிக்கை பார்க்காமல், ஆண்கள் அத்தனைப்பேரும் தமிழினத் தானைத் தலைவன் தந்த விசிலைத் ‘தம்’ பிடித்து ஊத வேண்டும், கோலம் வரைந்து முடிக்கும்வரை.

விசில் வரைவதற்கும், அதை ஊதுவதற்கும் ஒரு குறிப்பிட்ட நேரத்தை[மிகச் சரியாகக் காலை 6 அல்லது 7 மணி] நிர்ணயித்தால், அந்த நேரத்தில் ஆண்கள் ஊதும் விசில் சத்தத்தால் ஒட்டுமொத்தத் தமிழ்நாடும் அதிரும். “விசிலுக்கே நம் ஓட்டு” என்று அத்தனை வாக்காளர்களும் சபதம் ஏற்பார்கள்.

விசில் கோலங்களை எதிரிகள் அழித்துவிடாமல் தடுக்கவும், விசில் பெறாதவர்களுக்கு அதை வழங்கவும் ஆங்காங்கே தொண்டர் படை அமைத்திடத் தலைவன் ஆவன செய்தல் வேண்டும்.

அதிரடிப் புரட்சித் தலைவன் விஜய் வாழ்க! வெல்க!!

* * * * *

*https://www.hindutamil.in/news/tamilnadu/tvk-whistle-art-trending

வெள்ளி, 17 ஏப்ரல், 2026

பெண்ணின் கன்னித்தன்மையின் விலை ரூ90 லட்சம்[‘உ.பி.’யில்]!!!

த்தரபிரதேச மாநிலம் ஆக்ரா அருகே உள்ளது ஜகதீஷ்புரா என்னும் ஊர்.

இங்கு, சுபயோஹ சுபதினத்தில் ஒரு பெண்ணுக்கும் ஆணுக்கும் திருமணம் நடைபெற்றது.

முதலிரவுக்கான ஏற்பாடுகள் முடிந்து, அலங்கரிக்கப்பட்டதொரு அறையில், பலானது பற்றியக் ‘கிளு கிளு’ கற்பனைகளுடன் காத்திருந்தான் மணமகன்.சர்வ அலங்காரத்துடன் முதலிரவு அறையில் நுழைந்து, அன்ன நடை பயின்று, வெட்கத்தால் தாழ்ந்த தலையுடன் பால் குவளையை அவனிடம் நீட்ட வேண்டிய மணமகள், “பேசிய ரூ.90 லட்சத்தைக் கொடு” என்று கை நீட்டினாள்.

அதிர்ச்சிக்குள்ளான அவன் கடுஞ்சினத்துடன் மறுக்க, இவள் கண்டிப்புடன், “முதலில் ரூ90 லட்சம். அப்புறம்தான் அது” என்றாள்.

கடும் வாக்குவாதத்துடன் இருவரும் அறையிலிருந்து வெளியேற, அதன் தொடர்ச்சியாக மணமகன் மணமகள் ஆகிய இரு தரப்பு வீட்டாரும் மோதிக்கொள்ள, தகவலறிந்து காவல்நிலையத்தார் விசாரணை மேற்கொண்டார்கள்.

விசாரணை முடிவில் அந்தப் பெண்[மணமகள்] தந்த வாக்குமூலம்.....

“மனம் விரும்பி இந்த ஆளை[மணமகன்] நான் மணக்கவில்லை; ரூ90 லட்சம் வரதட்சணைக்காகத்தான் சம்மதித்தேன்” என்பதாகும்.

ஒரு பெண் தன் கன்னித்தன்மையை ரூ90 லட்சத்துக்கு விற்பனை செய்த இந்த நிகழ்வு நம்மைக் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கினாலும், ஆணுக்கு நிகராகப் பெண்களும் வரதட்சணை வாங்கும் காலமும் வந்ததை[ஏற்கனவே மிக மிகக் குறைந்த அளவில் நடைமுறையில் உள்ளது] நினைத்து ஆறுதல் பெறலாம்.

https://www.dailythanthi.com/news/india/newlywed-woman-screams-at-newlywed-in-the-room-on-the-first-night-sensational-incident