https://kadavulinkadavul.blogspot.com
பக்கங்கள்https://kadavulinkadavul.blogspot.com/p/blog-page_1.html
சனி, 11 ஜூலை, 2026
மனம் உடைந்து, கண் கலங்கிக் கதறி[crying] அழும் முதல்வர் ஜோசப்!!!
“இது விஜய் ஆட்சி... இது விஜய் ஆட்சி... இது விஜய் ஆட்சி... இது.....”
“அரசு அலுவலர்கள் லஞ்சம் கேட்டால் இது எங்கள் விஜய் ஆட்சி என்று சொல்லுங்கள்” -இது தமிழ்நாடு முதல்வர் ஜோசப் கரூர் பரப்புரைக் கூட்டத்தில் விண்ணதிரச் செய்த முழக்கம்.
இவருடைய பெயரைச் சொன்னதும், லஞ்சம் கேட்ட அதிகாரி அஞ்சி நடுங்கி நம் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்பார்; கொட்டைவடி நீரோ[காபி] குளிர்பானமோ தேனீரோ கொடுத்துக் குடிக்கச் செய்த பிறகே ஆகவேண்டிய காரியம் குறித்து விசாரிப்பார்; தன் கடமையைச் செய்துமுடித்து அலுவலக வாசல்வரை வந்து நம்மை வழியனுப்புவார்.
இது ஜோசப்பின் ஆட்சியில் நடக்கவுள்ள பேரதிசயம்.இங்கே நாம் நம்மவர்களுக்கு வழங்கவுள்ள ஒரு பரிந்துரை.....
அலுவலரைப் பார்த்தவுடனே, “தமிழ்நாட்டில் நடப்பது எங்கள் விஜய் ஆட்சி” என்று அலுவலகத்தில் உள்ள பிறருக்கும் கேட்கும்படியாகவும் அழுத்தம் திருத்தமாகவும் சொல்லிவிடுங்கள்[லஞ்சம் கொடுக்காவிட்டால் காரியம் ஆகாதே என்று கவலைப்பட வேண்டாம்]. இதன் மூலம் அலுவலர் நம் காலில் விழுந்து அவமானப்படுவதும், உபசரிப்புக்காகச் செலவு செய்வதும் தவிர்க்கப்படும்.
“லஞ்சமா, அது என்ன?” என்று கேட்கும் அதிசயம் இங்கு நிலவும்.
பிற மாநிலத்தார் உட்பட ஒட்டுமொத்த உலக மக்களும் ‘ஜோசப்’பின் நிர்வாகத் திறமையைப் பாராட்டுவார்கள்.
ஜோசப் நாமம் வாழ்க! அவர் புகழ் உலகெங்கும் பரவுக!!
