மேற்கண்டது போன்ற, நம்மைப் பேரதிர்ச்சிக்கும் பெரும் துயரத்துக்கும் உள்ளாக்கும் கொடூர நிகழ்வுகள், ‘எப்போதாவது’ என்னும் நிலை மாறி ‘அவ்வப்போது’ இடம்பெறுவனவாக மாறியுள்ளன.
நகர்ப்புறங்களைக் காட்டிலும், கிராமப்புறங்களில் முதிர் வயதுப் பெண்கள் தனியாகப் பாதுகாப்பின்றி வாழ்வது தவிர்க்க இயலாததாக உள்ளது.
இவ்வாறான சூழ்நிலையில் வாழும் வயோதிகப் பெண்கள் பற்றித் துல்லியமானதொரு பட்டியல் தயாரித்து, அவ்வப்போது அவர்களின் இருப்பிடத்தை அணுகி, அவர்களின் பாதுகாப்பைப் காவல்துறையினர் உறுதி செய்தல் வேண்டும். இயன்றவரை அவர்களின் வாழ்விடத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில், தின்று கொழுத்து வேலைவெட்டி இல்லாமல் திணவெடுத்துத் திரியும் ரவுடிகளின் நடமாட்டம் உள்ளதா என்பதையும் கண்காணித்தல் மிக முக்கியம்.
காவல்துறையினர் இப்பணிகளை இடர்ப்பாடு ஏதுமின்றிச் செய்வதற்கு உதவும் வகையில், கடமையுணர்வுடன் செயலாற்றும் இளைஞர் படையை[பாட்டிமார் பாதுகாப்பு அதிரடிப் படை] நிறுவுதல் தாமதப்படுத்தக் கூடாத அரசின் கடமை ஆகும்.
இந்தப் படை முழுக்க முழுக்க மூதாட்டிகளின் பாதுகாப்பிற்கானது.
‘சிங்கப் பெண்கள் சிறப்பு அதிரடிப்படை’ போன்ற கவர்ச்சிகரமான பெயர்களைச் சூட்டுவதெல்லாம் பயனற்ற செயல் என்பதை நம் முதல்வர் அவர்களுக்கு நினைவூட்டுகிறோம்.