புதன், 12 ஆகஸ்ட், 2026

சிந்திக்கும் ஆற்றலை அதிகரிக்க உதவும் பயிற்சிகளும் உணவுகளும்!

னித மூளையில் சிந்திக்கும் திறனை அதிகரிப்பது முக்கிய நரம்புக்கடத்தியான(neurotransmitter) டோபமைன்(Dopamine) ஆகும். இது ஒரு ஹார்மோனாகவும் செயல்பட்டு, புதியனவற்றைக் கற்பதற்கும், சாதனைகள் நிகழ்த்துவதற்கும் ஆன உந்துசக்தியையும் அளிக்கிறது.

இதை அதிகரிப்பதற்கான உடற்பயிற்சி: ஓடுதல், மெதுவோட்டம்[ஜாகிங்> Jogging), எடை தூக்குதல், நடனம், மூச்சுப் பயிற்சி,
சூரிய ஒளியில் காய்தல், குளிர்ந்த நீரில் குளித்தல் போன்றவை. இப்பயிற்சிகள் மூளையில் டோபமைன், எண்டார்பின் ஆகியவற்றின் அளவை வேகமாக உயர்த்துகின்றன.

மனப்பயிற்சி: பிடித்த பாடல்களைக் கேட்பது; ஓவியம் வரைவது போன்ற பிடித்தமான கலைகளில் ஈடுபாடு கொள்வது; எந்தவொரு செயலையும் மகிழ்ச்சியுடன் செய்வது; செய்த பின் மனநிறைவு பெறுவது.

உணவுகள்:

புரதச் சத்து நிறைந்த முட்டை, பால் பொருட்கள், பாதாம், கோழி இறைச்சி, மீன், வாழைப்பழம், சோயா பொருட்கள், பீன்ஸ் வகைகள், புளித்த மோர், தயிர் வகைகள்.

***உதவி: இணையம்

செவ்வாய், 11 ஆகஸ்ட், 2026

நான் பொறாமையில் புழுங்குகிறேன்!!!

நான் இருந்துகொண்டிருக்கிறேன். 


இன்றோ நாளையோ 

இன்னும் சில/பல ஆண்டுகள் கழித்தோ 

இருந்துகொண்டிருக்கும் நான் 

இல்லாமல் போயிருப்பேன். 


இருந்துகொண்டிருந்து இல்லாமல்போகும் 

என்னைப் போலவே, 

மனிதர்கள் உட்பட

மண்ணில் இருந்துகொண்டிருக்கும் 

உயிரினங்களில் பலவோ மிகப் பலவோ 

இல்லாமல் போய்க்கொண்டே இருக்கும். 


புதிது புதிதாய்த் 

தோன்றிக்கொண்டே இருக்கும் உயிரினங்கள் 

இருந்துகொண்டே இருக்கும்.


அவையும் பின்னர் இல்லாமல்போய், 

புதியன தோன்றி இருந்துகொண்டிருப்பதும் 

இல்லாமல்போவதும் 

தொடர்ந்துகொண்டே இருக்கும். 


இருந்துகொண்டிருந்து 

இல்லாமல் போய்க்கொண்டே இருப்பதற்குக் 

கால வரம்பு ஏதுமில்லை. 


இதற்கு விதிவிலக்கானவர் 

கடவுள் எனப்படுபவர் மட்டுமே என்கிறார்கள். 


இல்லாமல் போகாமல் 

என்றென்றென்றென்றென்றென்றும் 

இருந்துகொண்டே இருக்கும் அவரை நினைத்து 

என் மனம்

பொறாமையில்

புழுங்கிக்கொண்டே இருக்கிறது!