https://kadavulinkadavul.blogspot.com
பக்கங்கள்https://kadavulinkadavul.blogspot.com/p/blog-page_1.html
புதன், 18 பிப்ரவரி, 2026
அக்கா அக்கா... தமிழிசை அக்கா! நீங்க மட்டுமே அக்கா![ஹி... ஹி... ஹி!!! பதிவு]
‘தமிழன்’ சீமானுக்குப் பாராட்டும் புத்திமதியும்!!!
சீமானைத் ‘தமிழன்’ என்றழைப்பதை அவரை வெறுப்பவர்கள் உட்பட, எதிர்ப்பவர் எவரும் இல்லை என்று உறுதிபடச் சொல்லலாம். அந்த அளவுக்கு அவர் அப்பழுக்கற்ற இனவுணர்வு கொண்டவர்.
தமிழினத்தின் மேம்பாட்டுக்கு என்றே ‘நாம் தமிழர்’ என்னும் பெயரில் கட்சி நடத்துகிறார், சிறிதும் தன்னலம் கருதாமல்.
தமிழ்நாட்டில் தேர்தல்[சட்டமன்றம்> 2026] நடக்கவுள்ள நிலையில், கட்சிகள் பலவும் ஏதாவது ஒரு கூட்டணியில் இடம்பிடித்து, பதவிக்காகவும் வருமானத்திற்காகவும் பேரம் பேசித் திரிந்துகொண்டிருக்க, ‘தமிழனைத் தமிழனே ஆள வேண்டும்’ என்னும் உன்னத லட்சியத்துடன் தேர்தலை எதிர்கொள்ளவுள்ள சீமானின் மனவுறுதியை நெஞ்சாரப் பாராட்டலாம்.
கடுமையாக உழைக்கிறார். இந்த உழைப்பு 2026இல் இல்லையென்றாலும், அடுத்துவரும் தேர்தலிலேனும் உரிய பலனை நல்கக்கூடும்.
ஆனால்.....
ஆழ்ந்து சிந்திக்காமல் அதிரடியாய் இவர் பேசும், தமிழர் அல்லாத பிற இனத்தவர் குறித்த பேச்சுகள் அதற்குத் தடைக்கற்களாக அமையும் என்று உறுதிபடச் சொல்லலாம்.
குறிப்பாகக் கன்னடர், தெலுங்கர் மீதான வெறுப்புரை.
தாம் நடத்திய ‘குடியரசு’ இதழின் முதல் பக்கதில்[தலைப்புப் பகுதி], ‘திராவிட நாடு திராவிடருக்கே’ என்னும் வாசகத்தை, ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்று மாற்றியமைத்தவர் பெரியார் ஈ.வெ.ரா. பிறப்பால் கன்னடராயினும், மூடநம்பிக்கை ஒழிப்பிற்காகவும், தமிழரின் முன்னேற்றத்திற்காவும்[தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்றது அதன் வளர்ச்சியின்மையைச் சுட்டிக்காட்டிச் ‘சொரணை’ ஊட்டுவதற்காகவே] அரும்பாடு பட்டவர். அவர் கட்சி நடத்தியது கன்னடர்களுக்காக அல்ல[எல்லாம் தெரிந்திருந்தும், தேர்தலில் பக்தர்களின் வாக்குகளை அள்ளுவதற்காகவே சீமான் பெரியாரைக் கடுமையாகச் சாடுகிறார்].
‘வைகோ’ பிறப்பால் தெலுங்கர் எனினும் தமிழினத்திற்கென்றே தன்னை அர்ப்பணித்தவர்.
விதிவிலக்காகச் சிலரோ[முன்னாள் காமாட்சி நாயுடு; இந்நாள் பாக்கியராஜ்> கம்மா பாக்கியராஜுலு> தெலுங்குப் பேச்சு; ராதா ரவி] கணிசமானோரோ இருப்பினும், மிகப் பெரும்பாலான தெலுங்கு மரபினர் இங்குத் தமிழராகவே வாழ்ந்துகொண்டிருப்பவர்கள்.
வீட்டிற்குள் தெலுங்கு[ஆந்திர மாநிலத் தெலுங்குக்கும் இவர்கள் பேசும் தெலுங்கிற்கு நிறைய வேற்பாடு உண்டு] பேசுவதைத் தவிர, வெளியிடங்களில் அவர்கள் தங்களுக்குள்ளேகூடத் தெலுங்கில் பேசுவதில்லை.
‘பிஎஸ்ஜி’[கோவை> தெலுங்கு நாயுடுகள் கல்லூரி] கலை அறிவியல் கல்லூரிதான், ‘கல்லூரியில் தமிழ்ப் பயிறிமொழி’ வகுப்புகளை முதலில் நடத்தியது என்பதெல்லாம் தமிழின் மீதான தெலுங்கரின் பற்றுதலை அடையாளப்படுத்துகிறது.
ஆக, இங்குள்ள தெலுங்கர், கன்னடர் மீதான தேவையற்ற சீமானின் தொடர் தாக்குதல் பேச்சு, அவர்களைத் தங்களின் பாதுகாப்புக்காக, இன அமைப்புகளை வலுப்படுத்தி, தமிழருக்கு எதிராக இணைந்து செயல்படத் தூண்டும்.
எனவே, போகிறபோக்கில் வாரி இறைக்கிற இன வெறுப்பை வளர்க்கும் ஆவேசப் பேச்சை, இனியேனும் தவிர்ப்பது சீமானுக்கு மட்டுமல்ல, தமிழினத்திற்கும் நன்மை பயப்பதாக அமையும்.
