சனி, 13 ஜூன், 2026

ஆதிபராசக்தி முகாம்பிகையும் ஐயோ பாவம் முதல்வர் ஜோசப்பும்!!

‘எம்ஜிஆர்’ஐப் போலவே நம் முதல்வர் ஜோசப்பும், ஆதிபராசக்தியின் அவதாரமான முகாம்பிகை கோயிலுக்குப் போய்  வழிபட்டதைப் பரபரப்பான செய்தியாக்கியுள்ளன முன்னணி ஊடகங்கள் பலவும்.

சாகும்வரை மங்காத புகழுடன் தமிழ்நாட்டின் முதல்வராகப் பதவி வகித்தார் எம்ஜிஆர்.

அவரைப் போலவே, தானும் தன் ஆயுட்காலம்வரை முதல்வராகக் கோலோச்ச வேண்டும் என்னும் விருப்பம், ஜோசப் ‘விஜய்’யின் முகாம்பிகை வழிபாட்டுக்குக் காரணமாக இருக்கலாம்.

கட்டான உடலமைப்புக்கொண்ட எம்ஜிஆருக்கு, 1984-ஆம் ஆண்டு சிறுநீரகச் செயலிழப்புடன் சேர்த்து கடுமையான பக்கவாதம் ஏற்பட்டது. அந்தப் பக்கவாதத்தின் பாதிப்புகள் காரணமாகவே அவர் நீண்டகாலமாக உடல்நலக் குறைபாடுகளால் அவதிப்பட்டார். டிசம்பர் 24, 1987 அன்று அதிகாலையில், தூக்கத்தில் ஏற்பட்ட திடீர் மாரடைப்பு(Cardiac Arrest) காரணமாக மரணமடைந்தார்.

முகாம்பிகையின் அதி தீவிரப் பக்தரான புரட்சித்தலைவரை அம்மை கைவிட்ட கசப்பான நிகழ்வை, ஜோசப் விஜய் அறியாமலிருப்பது நம்மை ஆழ்ந்த வருத்தத்திற்கு உள்ளாக்குகிறது.

அவரைக் கர்த்தர் காப்பாற்றுவாராக!

வெள்ளி, 12 ஜூன், 2026

தமிழ்நாடு முதல்வரின்[ஜோசப் விஜய்] தொடரும் பக்தி நாடகம்!!!

‘கர்னாடகா கொல்லூரு முகாம்பிகை கோயிலில் விஜய் வழிபாடு’[சன் தொ.கா.>பிற்பகல் 03.35].

அரசுமுறைப் பயணத்தில்[டெல்லியிலிருந்து திரும்பும்போது] செலவில்லாமல் இதைச் செய்திருக்கிறார்.

அரசாங்கப் பணத்தை முறைகேடாகப் பயன்படுத்தும் ஆளும் வர்க்கத்தினர் சிலரில் முதல்வர் ஜோசப்பும் ஒருவர்.

ஏற்கனவே பிற மதம் சார்ந்த பல[!!!] சாமி கோயில்களுக்குப்  போய், எம்மதமும் தனக்குச் சம்மதமே என்று பக்திமான்களை நம்பச் செய்த இவர் முகாம்பியைத் தரிசித்ததன் மூலம், அந்த நம்பிக்கையை வலுப்படுத்தியிருக்கிறார்[படம் பிடித்து ஊடகங்களில் வெளியிடுவது 100% சுயநலம்].

தமிழ்நாட்டிலுள்ள பெரும்பான்மை[பக்திமான்கள்] மக்களின் மனங்களை அத்துபடியாய்ப் படித்த புத்திசாலி முதல்வர் இவர்.

புத்திசாலியோ அதிப் புத்திசாலியோ, தமிழ்நாட்டின் எந்தவொரு முதல்வரும் இவரளவுக்கு மூடநம்பிக்கை[அசாதாரணமான பக்தி] ‘திணிப்பு’க் கைங்கரியத்தைச் செய்ததில்லை.

அடுத்த ஐந்தாண்டுகளுக்கான தமிழர்களின் ‘தலைவிதி’ இந்த ஜோசப் விஜய் கையில்[அப்புறமும்?]!