ஞாயிறு, 20 செப்டம்பர், 2026

பராக்... பராக்... ‘2ஆம் புரட்சித் தலைவர்’ பராக்... பராக்... பராக்!

                    [சரணம்... சரணம்... ஜோசப் சரணம்!]

ஜோசப்புக்கு ‘2ஆம் புரட்சித் தலைவர்’ பட்டம் வழங்கிச் சிறப்பித்தப் புனிதர்[நன்றி கொல்வதில் அப்பனுக்குத் தப்பாமல் பிறந்த உத்தமப் புத்திரன்] ‘துரை வைகோ’
//“தமிழ்நாட்டின் மையப் பகுதியில் திருச்சி அமைந்திருப்பதால்தான் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்கள் அதைத் தமிழ்நாட்டின் தலைநகர் ஆக்க நினைத்தார். அவரின் அந்த எண்ணத்தை முன்னெடுத்து, 2ஆம் புரட்சித் தலைவரான நீங்கள்[ஜோசப்] அதை 2ஆம் தலைநகர் ஆக்கித் தரவேண்டும்” என்று வக்கோ’வின் மகன் கோரிக்கை வைத்துள்ளார்//[https://www.nakkheeran.in/special-articles/durai-vaiko-mp-says-cm-vijay-is-the-second-puratchi-thalaivar-12521607].

1ஆம்’ புரட்சித் தலைவருக்கு[எம்ஜிஆர்] அப்பட்டத்தை வழங்கிச் சிறப்பித்தப் பெருந்தகை:

//அக்.17 அன்று அதிமுகவைத் தொடங்கினார் எம்ஜிஆர். புதிய கட்சியின் அமைப்புச் செயலாளராகக் கே.ஏ.கிருஷ்ணசாமி பொறுப்பேற்றுக்கொண்டார். எம்ஜிஆருக்குப் ‘புரட்சித் தலைவர்’ என்று பட்டம் சூட்டியவரும் அவர்தான். கடற்கரையில் நடந்த அதிமுகவின் தொடக்க விழாவில் “புரட்சி நடிகர் பட்டம் வேண்டாம், இனிமேல் எம்ஜிஆரைப் ‘புரட்சித் தலைவர்’ என்று அழைப்போம்” என்றார் கே.ஏ.கிருஷ்ணசாமி//[https://www.hindutamil.in/news/opinion/columns/727280-admk-50.html].

வேண்டுகோள்: ‘புரட்சி’ என்னும் சொல்லுக்கான பொருளை இணையத் தேடல் மூலம் அறிந்திடுக.