‘எம்ஜிஆர்’ஐப் போலவே நம் முதல்வர் ஜோசப்பும், ஆதிபராசக்தியின் அவதாரமான முகாம்பிகை கோயிலுக்குப் போய் வழிபட்டதைப் பரபரப்பான செய்தியாக்கியுள்ளன முன்னணி ஊடகங்கள் பலவும்.
சாகும்வரை மங்காத புகழுடன் தமிழ்நாட்டின் முதல்வராகப் பதவி வகித்தார் எம்ஜிஆர்.
அவரைப் போலவே, தானும் தன் ஆயுட்காலம்வரை முதல்வராகக் கோலோச்ச வேண்டும் என்னும் விருப்பம், ஜோசப் ‘விஜய்’யின் முகாம்பிகை வழிபாட்டுக்குக் காரணமாக இருக்கலாம்.
கட்டான உடலமைப்புக்கொண்ட எம்ஜிஆருக்கு, 1984-ஆம் ஆண்டு சிறுநீரகச் செயலிழப்புடன் சேர்த்து கடுமையான பக்கவாதம் ஏற்பட்டது. அந்தப் பக்கவாதத்தின் பாதிப்புகள் காரணமாகவே அவர் நீண்டகாலமாக உடல்நலக் குறைபாடுகளால் அவதிப்பட்டார். டிசம்பர் 24, 1987 அன்று அதிகாலையில், தூக்கத்தில் ஏற்பட்ட திடீர் மாரடைப்பு(Cardiac Arrest) காரணமாக மரணமடைந்தார்.
முகாம்பிகையின் அதி தீவிரப் பக்தரான புரட்சித்தலைவரை அம்மை கைவிட்ட கசப்பான நிகழ்வை, ஜோசப் விஜய் அறியாமலிருப்பது நம்மை ஆழ்ந்த வருத்தத்திற்கு உள்ளாக்குகிறது.
அவரைக் கர்த்தர் காப்பாற்றுவாராக!