ஏப்ரல் 13, 2026 அன்று புது தில்லியில் நடைபெற்ற நாரி சக்தி வந்தன் சம்மேளனத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். 2029-க்குள் பெண்கள் இடஒதுக்கீடு சட்டத்தை(நாரி சக்தி வந்தன் அதினியம்) நடைமுறைப்படுத்துவது, பெண்களின் தலைமைத்துவத்தை ஊக்குவிப்பது, 'விக்சித் பாரத் 2047' இலக்கை அடைவதில் பெண்கள் பங்களிப்பது குறித்தெல்லாம் அவர் வலியுறுத்தினார்.
21-ஆம் நூற்றாண்டின் மிக முக்கியமான முடிவுகளில் ஒன்றை இந்தியா தற்போது எடுக்கவிருக்கிறது என்றும் கூறினார்['India is set to take one of the biggest decisions of 21st century': PM Modi on women's reservation bill]
2.நாரி சக்தி வந்தன் அதினியம்
3.விக்சித் பாரத் ‘2047’
21ஆம் நூற்றாண்டு முடிவதற்கு[75 ஆண்டுகள்[+2026] மோடி நிறைவேற்றவிருக்கும் லட்சியங்களில் மேற்கண்ட மூன்றும் அடங்கும்.
21ஆம் நூற்றாண்டுக்குள் இவை போன்ற திட்டங்களை நிறைவேற்றுவாரோ அல்லவோ, மாநில மொழிகளைப் படிப்படியா அழித்து, இந்தியாவை ‘இந்தி’யா ஆக்கும் தன் லட்சியத்தை நிறைவேற்றுவார் என்பது உறுதி.
அப்புறமென்ன, ஒட்டுமொத்த இந்தியாவுவையும் ‘இந்தி’யன்கள் ஆளுவார்கள் என்பது உய்த்துணரத்தக்கது.
முக்கியக் குறிப்பு:
‘இந்திய அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையின்படி(Eighth Schedule), இந்தியாவில் 22 மொழிகள் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன’ என்பதையும், ஒன்றிய அரசின் திட்டங்களுக்கு மேற்கண்ட மொழிகளிலும் பெயர் சூட்டலாம் என்பதையும், ஏறத்தாழ ஒரு சர்வாதிகாரியான மோடியாரிடம் எடுத்துரைக்க வல்லார் யார்?
