புதன், 15 ஜூலை, 2026

நாம்[இந்தியர்கள்] இனியும் ‘இந்தி'யன்களின் கொத்தடிமைகளே!!!

//9, 10ஆம் வகுப்புகளில் 3ஆவது மொழி[இந்தி] தேர்வில் தேர்ச்சி பெறுவது இனி கட்டாயம்>சிபிஎஸ்இ உத்தரவு... 2027-28 கல்வியாண்டு முதல் 10ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, இந்த 3ஆவது மொழிக்குத் தனியாக வாரிய அளவிலான பொதுத்தேர்வு ஏதும் நடத்தப்படாது//[https://www.dinakaran.com/news/language_proficiency_test_cbse/].

இது இந்தித் ‘திணிப்பின் ஒரு கட்டம். அடுத்தக் கட்டமாக, 2028-29லிருந்து பொதுத் தேர்வு நடத்தப்படும். 

அப்புறம், ஒன்றிய அரசுக்குள்ள அத்தனை அதிகாரங்களையும் பயன்படுத்தி, அனைத்துப் பள்ளிகளிலும்[மாநில அரசுகள் நடத்துபவை உட்பட] அனைத்து வகுப்புகளுக்கும் இந்தி கட்டாயம் ஆக்கப்பட்டுப் பொதுத் தேர்வும் நடத்தப்படும். இந்தியிலேயே பாடம் கற்பிக்கும்[பயிற்றுமொழி] முயற்சியும் மேற்கொள்ளப்படும்.

ஆக, எதிர்ப்புகளை முறியடித்து, இந்தியா முழுவதும் இந்தியைப் பரப்பி[ஒன்றிய அரசின் அனைத்து அலுவலகங்களிலும் இந்தியே ஆதிக்கம் செலுத்துகிறது. தனியார் நிறுவனங்களிலும் ஆதிக்கம் பரவும்], இந்திக்காரன்களும், அதனால் பயன் பெறுபவன்களும்[இதை ஆளுவதற்கான குறிப்பிடத்தக்க வேறு தகுதி ஏதும் இவன்களுக்கு இல்லை] இந்தியாவை நிரந்தரமாக ஆளுவதுதான் இவன்களின் ஒரே குறிக்கோள்.

இவன்கள் முழங்கும் ஒருமைப்பாட்டின் உள்நோக்கமும் இதுதான்.

ஒருமைப்பாடு என்பது.....

ஒரே நாடு: இந்தியா                                                                             


ரே இனம்: ‘இந்தி’யர்


ஒரே மொழி: இந்தி

ஒரே மதம்: இந்து[த்துவா]

ஒரே கலாச்சாரம்: வடவர் நாகரிகம்

ஒரே கட்சி ஆட்சி: ப.ஜ.க.


ஒரே ரேசன் கார்டு: ப.ஜ.க. கட்டுப்பாட்டில்     


ஒரே தேர்வு[எழுதும் மொழி]: இந்தியில்


‘இந்தி’யன்&இந்தியால் பயன் பெறுபவன்களின் சூழ்ச்சி முறியடிக்கப்பாடாவிட்டால், வெகு விரைவில் ‘இந்தி’யன்கள் அல்லாத இந்தியர்கள் இந்த நாட்டில் கொத்தடிமைகளாக ஆவார்கள் என்பதில் சிறிதும் சந்தேகத்திற்கு இடமில்லை.

'கடத்தலும் கற்பழிப்புகளும்’... ஒப்பாரி வேண்டாம்! உடனடி நடவடிக்கைகள் தேவை மக்களே!!

சூதுவாது அறியாத குழந்தைகளை[மற்ற வயதுப் பெண்களையும்தான், கிழவிகளை வீடு புகுந்து சீரழிப்பது உட்பட]க் கடத்தி வன்புணர்வு செய்து, வதைத்துச் சீரழித்துக் கொன்று, சாக்கடைகளிலும், ஊரின் ஒதுக்குப்புறங்களிலும் வீசுவது அன்றாடக் கொடூர நிகழ்வுகள் ஆகிவிட்டன.

“அய்யய்யோ, என்ன கொடுமைங்க இது. இதைச் செய்த கயவாலிகளை அடித்தே கொல்லணும்; தூக்கிலிடணும். கடவுள் இவர்களைத் தண்டிக்காமல் விடமாட்டார்” என்றெல்லாம் நம்மவர்கள் ஒப்பாரி வைத்துப் புலம்புவது வாடிக்கை ஆகிவிட்டது.

இதன் பயன் 0%தான்.

பொது மக்களின் ஒத்துழைப்புடன் இவற்றைத் தடுத்து நிறுத்துவது அரசின் தலையாய கடமை ஆகும்.

இக்கடமையைச் செவ்வனே செய்துமுடிக்க அரசுக்கு நாம் வழங்கும் முக்கியப் பரிந்துரைகள்:

*பள்ளிகளில், முதல் பாடவேளையில், வன்புணர்வு உட்பட மிக முக்கிய நாட்டு நடப்புகள் குறித்த செய்திகளை ஆசிரியர்கள் சுருக்கமாகவேனும் பிள்ளைகளிடம் சொல்லி விழிப்புணர்வூட்டலாம்[இது அரசாணை மூலம் கட்டாயக் கடமை ஆக்கப்படுதல் அவசியம்].

*வீடுதோறும், செய்தித்தாள் வாங்குவதோடு,[ஏழைகளாயினும் இது இயலாத ஒன்றல்ல] பிள்ளைகள் வீட்டுப் பாடங்களைச் செய்வதற்கு முன்பே மேலோட்டமாகவேனும் செய்திகளை வாசிக்கப் பழக்கப்படுத்தலாம். ஊடகங்கள் வாயிலாக அரசு இதை மக்களுக்கு அறிவுறுத்துதல் தேவை.

*ஊர்தோறும் இளம் வயதுப் பிள்ளைகளுக்கான, தற்காப்புக் கலைகளைக் கற்றுத்தருவதும் மிக முக்கியக் கடமை ஆகும். தேவையான அளவுக்குப் பயிற்சி நிலையங்களை உருவாக்குதல் வேண்டும்.

*குற்றவாளிகளுக்கு மிகக் கடுமையான தண்டனைகள் வழங்குதல் முக்கியம்[நிகழ்வுகளை ஊடகங்கள் வாயிலாக உலகறியச் செய்யலாம்].

*சமூக ஆர்வலர்கள் அடங்கிய அறிஞர் குழுக்களின் மூலம், மேலும் பல ஆலோசனைகளைப் பெற்றிட அரசு விரைந்து செயல்படுதல் உடனடித் தேவையாகும். 

தவறினால்.....

காலிகளின் வன்புணர்வு அட்டூழியம் தொடரும்! தொடர்ந்துகொண்டே இருக்கும்!!