செவ்வாய், 26 மே, 2026

‘பொறுக்கி’ எம்.எல்.ஏ.க்களுக்குத் தேர்தலில் போட்டியிடத் தடை தேவை!

கீழ்க்காணும் 3 பேரும் 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வென்று[அதிமுக சார்பாக] உறுப்பினர்களாக[எம்.எல்.ஏ]ப் பதவியேற்றது 16.4.2026இல். பதவியை ராஜினாமா செய்தது 25.05.2026 அன்று.

ஒரு சில மாதங்கள்கூட நிறைவு பெறாத நிலையில் இவர்கள் பதவியை வெறுத்தது ஏன்?


கட்சித் தலைமையிடம் எதிர்பார்த்தது எதுவும் கிடைக்காத விரக்தியா?

தேர்தல் நடத்த அரசு பெருமளவில் செலவு செய்கிறது. அடுத்துவரும் தேர்தலில் போட்டியிட இவர்கள் அனுமதிக்கப்பட்டு, இப்போது சார்ந்துள்ள கட்சியின் சார்பாக வென்றால், அடுத்த கொஞ்சம் நாட்களிலேயே, ‘லாப நஷ்ட’க் கணக்குப் பார்த்து, அந்தக் கட்சியிலிருந்தும் இவர்கள் ராஜினாமா செய்யக்கூடும். அதற்கடுத்த தேர்தலில் இன்னொரு கட்சியில் போட்டியிடுவார்கள்.

இந்தக் கட்சிமாறிகளுக்காக அடிக்கடி இடைத்தேர்தல் நடத்தும்[வீண் செலவு] நிலை உருவாகும்.

தெருத்தெருவாகப் பொறுக்கித் திரியும் சொறி நாய்களுக்கும் இவர்களுக்கும் கொஞ்சமும் வேறுபாடு இல்லை.

காலநேரம் கருதாமல் கட்சி மாறும் இந்தக் கழிசடைகளின் அயோக்கியத்தனத்தை அரசு ஒருபோதும் அனுமதிக்கலாகாது. உடனடியாக உரிய சட்டத் திருத்தங்களைச் செய்து, இவர்கள் தேர்தலில் போட்டியிடுவதற்கான தகுதியைப் பறிப்பது உடனடித் தேவை.

திங்கள், 25 மே, 2026

ஊடகர்களே, சி.எம்.விஜய் அல்ல, முதல்வர் ‘ஜோசப்’ விஜய் என்பதை மறவாதீர்!

பெரும்பாலான ஊடகங்கள், நம் முதல்வர் தொடர்பான செய்திகளை வெளியிடும்போது, ‘சி.எம்.விஜய்[cm.vijay] என்றே குறிப்பிடுகின்றன.

இது நம் முதல்வர் ‘ஜோசப்’ விஜய் அவர்களின் மனதைப் புண்படுத்தும் செயலாகும்.

ஏனென்றால், நடிகராக இருக்கும்போது, வெறும் ‘விஜய்’ ஆக இருந்த இவர் முதல்வரானதும், மிக விரும்பித் தன் மத அடையாளமான ‘ஜோசப்’ஐ இணைத்துக்கொண்டார்[‘ஜோசப்’ விஜய்] என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.

மீண்டும் நினைவுபடுத்துகிறோம், நம் முதல்வரின் பெயர் வெறும் ‘விஜய்’ அல்ல, ‘ஜோசப் விஜய்’  ஆகும்.

வாழ்க நம் முதல்வர் ‘ஜோசப் விஜய்’!