வெள்ளி, 22 மே, 2026

எஸ்.பி.வேலுமணி இன்று[22.05.2026]சொன்னதும் சொல்லாமல் மறைத்ததும்!

“நாங்கள் பதவிக்காக ‘தவெக’ அரசை ஆதரிக்கவில்லை”[https://tamil.getlokalapp.com/tamilnadu-news/t’haweka-s-place-in-the-cabinet-s-p-velumani-explains-16809466].

முன்னாள் ‘அதிமுக’ அமைச்சர் வேலுமணி ஒரு பேட்டியில்[22.05.2026] மேற்கண்டவாறு சொல்லியிருக்கிறார்.

அவர் சொல்லாமல் மறைத்தது.....

“எனக்கு அளிக்கும் ஆதரவுக்குச் சன்மானமாக அமைச்சர் பதவி வேண்டுமா, அல்லது பதவியில் இருந்தால் 5 ஆண்டுகளில் சம்பாதிக்கும் லஞ்சப் பணத்தை[தோராயமாக] இப்போதே மொத்தமாகப் பெற்றுக்கொள்கிறீர்களா என்று மாண்புமிகு முதலமைச்சர் விஜய் கேட்டார். நாங்கள் இரண்டாவதைத் தேர்வு செய்ததால், அவர் எங்களுக்கு அமைச்சர் பதவி தரவில்லை.”

“தமிழர்கள் படு முட்டாள்கள் ! இது சத்தியம்!! [பகிர்வு]

‘நடந்துமுடிந்த தேர்தலில் வாக்களித்தவர்கள், 70-80களில் இருந்த கல்வியறிவு குறைந்த மக்களைவிடவும் சிந்திக்கும் திறன் குறைந்தவர்கள் என்பதைச் செவிட்டில் அறைந்து சொல்லியிருக்கிறது, ‘விஜய்’யின் ‘தவெக’வைத் தமிழ் மக்கள் பெரும்பான்மைத் தொகுதிகளில் வெற்றிபெறச் செய்தது.

பிரச்சாரம் செய்வதில் போதிய அக்கறை காட்டாமல், வீட்டில் படுத்துகொண்டிருந்தவர் இந்த விஜய்; ஆறு மணிக்கு மேல் வெளியே தலை காட்டாதவர்; தேர்தல் பரப்புரையில், 20 தொகுதிகளுக்கு மேல் மக்களைச் தேடிப்போய்ச் சந்தித்து வாக்குக் கேட்காதவர்.


முதலமைச்சர் ஆவதற்கான எந்தவொரு தகுதியும் இல்லாத இவரால் அரசை[தமிழ்நாடு] நடத்த முடியும் என்று நம்பி இந்த மக்கள் வாக்களித்திருக்கிறார்கள்.


சத்தியமாக இவ்வளவு முட்டாள்களாக இந்த மக்கள் இருப்பார்கள் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை! இவர்களுக்குக் கல்வி என்னதான் செய்தது என்ற கேள்வி மனதிற்குள் ஓடிக்கொண்டே இருக்கிறது.


கடந்த 106 ஆண்டுகளில் தமிழகம் காணாத அளவுக்கு மிகச் சிறப்பாக ஆட்சி நடத்தியவர்களைத் தூக்கி எறிந்திருக்கும் இந்த மக்களை என்ன சொல்லிக் கண்டிப்பது?  


சுத்தமாக அரசியல் என்றால் என்ன என்பதையோ, அரசு இயந்திரம் பற்றியோ கொஞ்சமும் அறியாத தற்குறிகளை இன்று பதவிகளில் நியமித்திருப்பவர் இந்த விஜய்.


தமிழ்நாட்டின் எதிர்காலம் மிகப் பெரிய கேள்விக்குறி!


* * * * *

நன்றி: https://namathu.blogspot.com/2026/05/fast-track.html[பதிவின் ஒரு பகுதியை மட்டும் சிறிதே மாற்றி வடிவமைத்துப் பதிவு செய்துள்ளேன்].