வெள்ளி, 17 ஏப்ரல், 2026

பெண்ணின் கன்னித்தன்மையின் விலை ரூ90 லட்சம்[‘உ.பி.’யில்]!!!

த்தரபிரதேச மாநிலம் ஆக்ரா அருகே உள்ளது ஜகதீஷ்புரா என்னும் ஊர்.

இங்கு, சுபயோஹ சுபதினத்தில் ஒரு பெண்ணுக்கும் ஆணுக்கும் திருமணம் நடைபெற்றது.

முதலிரவுக்கான ஏற்பாடுகள் முடிந்து, அலங்கரிக்கப்பட்டதொரு அறையில், பலானது பற்றியக் ‘கிளு கிளு’ கற்பனைகளுடன் காத்திருந்தான் மணமகன்.சர்வ அலங்காரத்துடன் முதலிரவு அறையில் நுழைந்து, அன்ன நடை பயின்று, வெட்கத்தால் தாழ்ந்த தலையுடன் பால் குவளையை அவனிடம் நீட்ட வேண்டிய மணமகள், “பேசிய ரூ.90 லட்சத்தைக் கொடு” என்று கை நீட்டினாள்.

அதிர்ச்சிக்குள்ளான அவன் கடுஞ்சினத்துடன் மறுக்க, இவள் கண்டிப்புடன், “முதலில் ரூ90 லட்சம். அப்புறம்தான் அது” என்றாள்.

கடும் வாக்குவாதத்துடன் இருவரும் அறையிலிருந்து வெளியேற, அதன் தொடர்ச்சியாக மணமகன் மணமகள் ஆகிய இரு தரப்பு வீட்டாரும் மோதிக்கொள்ள, தகவலறிந்து காவல்நிலையத்தார் விசாரணை மேற்கொண்டார்கள்.

விசாரணை முடிவில் அந்தப் பெண்[மணமகள்] தந்த வாக்குமூலம்.....

“மனம் விரும்பி இந்த ஆளை[மணமகன்] நான் மணக்கவில்லை; ரூ90 லட்சம் வரதட்சணைக்காகத்தான் சம்மதித்தேன்” என்பதாகும்.

ஒரு பெண் தன் கன்னித்தன்மையை ரூ90 லட்சத்துக்கு விற்பனை செய்த இந்த நிகழ்வு நம்மைக் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கினாலும், ஆணுக்கு நிகராகப் பெண்களும் வரதட்சணை வாங்கும் காலமும் வந்ததை[ஏற்கனவே மிக மிகக் குறைந்த அளவில் நடைமுறையில் உள்ளது] நினைத்து ஆறுதல் பெறலாம்.

https://www.dailythanthi.com/news/india/newlywed-woman-screams-at-newlywed-in-the-room-on-the-first-night-sensational-incident

புதன், 15 ஏப்ரல், 2026

அப்புறம்... அப்புறம்... அப்புறம்... !?!?!

 பிறந்ததன் விளைவாகப் பிற உயிர்களை வதைத்துச் சிதைத்து உணவாக்கி வாழ்கிறோம்.

ஆசைப்பட்டபடியெல்லாம் வாழ்ந்து முடிப்பதற்குள், வகை வகையான உணர்ச்சிப் போராட்டங்களுக்கிடையே கண்ணுக்குத் தெரிந்த, தெரியாத உயிரினங்களின் தாக்குதலுக்கு உள்ளாகிச் சிதைகிறோம்.

பிறப்புக்கும் இறப்புக்குமான இடைப்பட்ட காலத்தில், ஆணும் பெண்ணுமாகச் சதையோடு சதை தேய்த்துச் சந்ததிகளை உருவாக்குகிறோம். எதனுடனோ எவருடனோ எல்லாமோ போராடி வதைபடுகிறோம். வாழ்நாள் முடிந்ததும் செத்துத் தொலைக்கிறோம்.
அப்புறம்.....

“ஒன்னுமே புரியல.”

                                             *   *   *   *   *
இப்பதிவை எழுதத் தூண்டிய ‘ஔவை’யின் பாடல்: 

‘வருந்தி அழைத்தாலும் வாராத வாரா
பொருந்துவன போமென்றால் போகா -இருந்தேங்கி 
நெஞ்சம் புண்ணாக நெடுந்தூரம் தாம்நினைந்து
   துஞ்சுவதே மாந்தர் தொழில்’  
      [துஞ்சுதல் - இறத்தல்]              
=============================================================
***புதுப்பிக்கப்பட்ட பதிவு இது.