திங்கள், 29 ஜூன், 2026

அடிவயிற்றில்[குடல் பகுதி] அதிக அளவில் மலம் தேங்கினால்.....?

 இது 53 வயதான ஆஸ்திரேலிய நபர் ஒருவரின் எக்ஸ்-ரே(X-ray) படம். 

கால்கள் செயலிழந்த நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டபோது, ​​அவரது கால்கள் உணர்ச்சியற்றும் குளிர்ந்த நிலையிலும் இருந்ததை மருத்துவர்கள் கண்டறிந்தனர். நோயைக் கண்டறிய எக்ஸ்-ரே எடுத்தபோது, ​​அவரது குடலில் பெருமளவில் மலம் தேங்கியிருப்பது தெரியவந்தது. 

அதனால், வயிற்றுப் பகுதியில் ஏற்பட்ட அதிகப்படியான உள்-அழுத்தம்['அப்டாமினல் கம்பார்ட்மென்ட் சிண்ட்ரோம்'> ACS] காரணமாக அவரது உள்ளுறுப்புகள் பாதிக்கப்பட்டு, கடுமையான வலியும் கால்கள் செயலிழப்பும் உண்டாயின. கால்களுக்கு ரத்தத்தை விநியோகிக்கும் தமனி அழுத்தப்பட்டதால், அவரது கால்களுக்குத் தேவையான ரத்தம் கிடைக்கவில்லை.....

.....கால்கள் செயலிழந்தது மட்டுமின்றி, வயிற்றுப் பகுதியில் ஏற்பட்ட அதிகப்படியான அழுத்தத்தால் தேங்கியிருந்த மலம் அவரது சிறுநீரகங்களையும் பாதித்தது’.

மலம் இயற்கையாக வெளியேறாத நிலையில், அறுவைச் சிகிச்சை மட்டுமே ஒரே தீர்வாக அமைந்தது. 

மொத்தம் 2 லிட்டர் அளவுள்ள மலம் அகற்றப்பட்டது. அவர் மீண்டும் நடக்கும் நிலையை அடைய, தீவிரச் சிகிச்சைப் பிரிவில்(ICU) 4 நாட்களும், அதன்பின் குணமடைய மேலும் 13 நாட்களும் தேவைப்பட்டன. 

அந்த நோயாளி குறைந்தது ஒரு மாதம்[இரண்டு நாட்களைக் கடந்தாலே மலம் கெட்டுவிட வாய்ப்புள்ளது] மலம் கழிக்காமல் இருந்திருக்கலாம் என்று மருத்துவர்கள் மதிப்பிட்டனர்.

                                            ==================

https://www.quora.com/?qv_src=email

ஞாயிறு, 28 ஜூன், 2026

‘திருமா’ என்னும் தன்மானத் தமிழா, நீயுமா தமிழினத் துரோகி ஆனாய்!?!?!

//தமிழ்நாடு முதல்வர் தலைமையிலான அரசால் நியமிக்கப்பட்டுள்ள ‘வெங்கட நாராயணா’வுக்கு, மாநில அமைச்சருக்கு இணையான அந்தஸ்தும் அதிகாரங்களும் வழங்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இது அரசுப் பொறுப்பு என்பதுடன், மத்திய & மாநில அரசுகளுக்கிடையிலான உறவைச் சுமுகமான முறையில் கொண்டுசெல்வதில் முக்கியப் பங்கு வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது// -இது செய்தி.

மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் இடையே தடையற்ற தகவல்தொடர்பை ஏற்படுத்தவும், தமிழகத்திற்கான திட்டங்கள் & நிதிகளை விரைந்து பெற்றிட மத்திய அமைச்சகங்களை அணுகவும் இந்த நியமனம் மிக முக்கியமானது ஆகும்.

இருப்பினும், வெங்கட நாராயணா வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதோடு, அவருக்குத் தமிழே தெரியாத நிலையில் அவர் எப்படித் தமிழ் நாட்டின் நலன் சார்ந்து மத்திய அரசிடம் கோரிக்கைகளை முன் வைப்பார் என்று எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.

இந்நிலையில்.....

‘விசிக’ தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் அவர்களிடம் இது குறித்துக் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு அவர் விளக்கம் அளித்தபோது.....

“இந்த நியமனம் என்பது முதல்வரின் உரிமைக்குட்பட்டது” என்று சொல்ல ஆரம்பித்து, இது அரசின் பொறுப்புதான் என்றாலும், அந்தப் பொறுப்பு ஆட்சி அதிகாரத்தில் முக்கிய முடிவுகளை எடுக்கும் முக்கியத்துவம் வாய்ந்தது அல்ல என்பதால், அது அவர்கள் உட்கட்சி விவகாரம் என்றும், முதல்வர் அவரது நம்பிக்கைக்குரிய ஒருவரைத் தேர்ந்தெடுத்திருக்கிறார் என்றும், இதனால் நிர்வாகத்தில் எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்றும் கூறி முடித்திருக்கிறார்[அமைச்சர் நிர்மல் குமார் பேச்சை ‘மேற்கோள்’ஆக்கியிருக்கிறார்].

தன்னைத் தன்மானமுள்ள தமிழனாக எண்ணித் தலைநிமிர்ந்து வலம் வந்த சிறுத்தைகள் தலைவன் திருமாவளவன், ஜோசப் பிச்சையாகப் போட்ட ஒரேயொரு அமைச்சர் பதவிக்காகக் குப்புறக் கவிழ்ந்தது நம்மைப் பெரும் வேதனைக்கு உள்ளாக்குகியிருக்கிறது.

இந்தப் பதவி முக்கியத்துவம் வாய்ந்தது அல்ல என்றால், இதற்கு எதற்கு ஓர் அமைச்சருக்கான அந்தஸ்து?

இதற்குத் தமிழ் தெரியாத ஒரு நபரைத் தேடிப் பிடிப்பது அவசியமா?

வெங்கட நாராயணா ஜோசப்பின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர் என்றால், இங்கு அவர் கட்சியில்[தவெக] உள்ளவர்கள் அத்தனைப் பேரும் நம்பத் தகாதவர்களா?

இப்படி இன்னும் பல கேள்விகள் கேட்கலாம். திருமாவளவனாருக்குக் கேட்கத் தோன்றாததற்கு, ஜோசப் போட்ட பதவி[வன்னியரசுக்கு]ப் பிச்சையே காரணம்[‘திமுக’கூட்டணியில் பதவி கிடைக்கவில்லை என்னும் விரக்தியும் காரணமோ?] என்பதால் கேட்க விரும்பவில்லை.

வளவனாரே, இத்தனைக் காலமும் உங்களைத் தன்மானமுள்ள தமிழினத் தலைவர்களுள் ஒருவர் என்று நினைத்தோம். அது எத்தனைப் பெரிய முட்டாள்தனம் என்பது இப்போது புரிந்தது.

நன்றி தலைவரே! 

https://www.nakkheeran.in/24-by-7-news/appointment-of-the-tamil-nadu-governments-special-representative-in-delhi-thirumavalavan-12113897