ஈரான் - இஸ்ரேல்&அமெரிக்கா இடையிலான போர் நீடித்துவரும் நிலையில்,
‘"முஸ்லிம்களே"! என்று ஒருவர் அழைப்பதைக் கேட்டுப் பதிலளிக்காதவர் முஸ்லிம் அல்ல’ என்ற நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் கூற்றுக்குச் சில இஸ்லாமிய அரசாங்கங்களின் நிலைப்பாடு முரணாக இல்லையா? இது எத்தகைய இஸ்லாம்?” என்று ஈரானின் உச்சகட்டத் தேசியப் பாதுகாப்புக் கவுன்சில்(SNSC) செயலாளராக உள்ள அலி லாரிஜானி[Iran’s National Security Chief Ali Larijani] கேள்வி எழுப்பினார் என்பது ஊடகச் செய்தி*
இதன் மூலம், இஸ்லாமிய நாடான ஈரான், தன் எதிரிகளை எதிர்கொள்வதற்கு, தன் மதம் சார்ந்த[இஸ்லாம்] அனைத்து நாடுகளையும் ஒருங்கிணைக்க முயல்கிறது என்பது தெரிகிறது[போர் மூளுவதற்கான மிகச் சரியான காரணம் எந்தவொரு தரப்பினராலும் தெளிவாக எடுத்துரைக்கப்படவில்லை].
ஈரான் குற்றம் சாட்டுவதுபோல், இஸ்ரேல்&அமெரிக்கா நாடுகளின் ஆதிக்க வெறியே போருக்குக் காரணமாக இருந்தால், இஸ்லாம் நாடுகள் மட்டுமல்லாமல், உலகின் அனைத்து நாடுகளையும் துணைக்கு அழைக்கலாம்.
“போரின் பெயரால் மதிப்பு மிக்க உயிர்கள் பலியாக்கப்படுவதை நாங்கள் வெறுக்கிறோம்; எதிர்க்கிறோம். மனித நேயம் போற்றும் எங்கள் மீது கெட்ட நோக்கங்களுடன் வலிந்து போர் தொடுத்துள்ளன இஸ்ரேலும் அமெரிக்காவும். நல்லவை நாடும் அனைத்து நாடுகளும் எங்களை ஆதரிக்க வேண்டும்; எங்களுடன் இணைந்து போரிட முன்வர வேண்டும்” என்ற வகையில் அறிக்கை வெளியிட்டிருந்தால் அது நடுநிலை வகிக்கும் நாடுகளைச் சிந்திக்கத் தூண்டியிருக்கும்.
ஈரான் பக்கம் நியாயம் இருப்பது உறுதியானால், தவறாமல் ஈரானுக்கு ஆதரவாக அவை களம் இறங்க வாய்ப்புள்ளது.
ஆனால் ஈரானோ, இஸ்லாமியர் ஆளும் நாடுகளை மட்டும் துணைக்கு அழைத்து ஒரு பெரிய தவற்றைச் செய்திருக்கிறது.
ஈரானின் அழைப்பை ஏற்று அனைத்து இஸ்லாம் நாடுகளும் களம் இறங்கினால், இஸ்லாம் அல்லாத நாடுகள் இஸ்ரேல்&அமெரிக்கா தரப்புக்கு ஆதரவாகக் களம் இறங்கக்கூடும். இந்நிலையில், இவைகளுக்கிடையேயான மோதல் உலகப் போராக மாறும் என்பதில் சந்தேகமில்லை.
இரானுக்கு எதிரான அணி பலம் வாய்ந்ததாக அமையும் வாய்ப்பும் உள்ளது.
போரின் முடிவைக் கணிப்பது அத்தனைக் கடினமல்ல.
இந்நிலையில், வெகு சாமானியனாகவும், சில நூறு[சில நேரங்களில் சில ஆயிரம்] வருகையாளர்களைப் பெற்றுள்ள வலைப்பதிவாளனாகவும் நாம் ஈரானுக்கு அறிவுறுத்துவது:
“மிகவும் மேம்பட்ட மதப்பற்றுள்ள நீங்கள், உங்கள் அபிமானத்திற்குரிய நபிகள் நாயகத்தின் கூற்றை மேற்கோள் காட்டி, ‘இஸ்லாமியர், இஸ்லாமியர் அல்லாதவர்’ ஆகியோருக்கிடையேயான உறவைச் சீர்குலைக்க வேண்டாம். இதனால், பெருமளவில் பாதிக்கப்படுவது உலகளாவிய இஸ்லாமியராக இருக்கலாம்.”
* * * * *
