https://kadavulinkadavul.blogspot.com
பக்கங்கள்https://kadavulinkadavul.blogspot.com/p/blog-page_1.html
- 'பசி'பரமசிவம்
- மாந்தராய்ப் பிறந்த அத்தனைப் பேரும் ‘மனிதம்’ போற்றி, அச்சம் தவிர்த்து, அமைதியாக வாழ்ந்து முடிப்பதற்கான வழிவகைகளைக் கண்டறிவதே அறிவுடைமை ஆகும். கடவுளைத் தேடி அலைந்து, விதம் விதமாய் விழாக்கள் நடத்திக் கூத்தடித்துக் கோரிக்கைகள் வைத்துக் காத்திருப்பதால் பயனேதும் இல்லை.
வியாழன், 5 பிப்ரவரி, 2026
“ஜோதிமணி, சுதா... பிரதமரைத் தாக்கத் திட்டம்”... சங்கிச் சபாநாயகர்!
‘பெண் சாமி’ சிலைகளை அலங்கரிக்க ‘அர்ச்சகிகள்’ தேவை!!!
கல்லாலும் களிமண்ணாலும் உலோகங்களாலும் வடித்தெடுக்கப்பட்ட சிலைகளை[கடவுள்கள்]த்தான் மனிதர்கள் வழிபடுகிறார்கள்.
சிலைகளுக்குள், வழிபடப்படுகிற கடவுள்கள் இருக்கிறார்கள் என்பது இவர்களின் நம்பிக்கை.
சிலைகளை ஆண் சாமிகளுக்கானவை பெண் சாமிகளுக்கானவை என்று இருவகையாகப் பிரிக்கலாம்.
சாமி சிலைகளுக்கு அபிஷேகம் எனப்படும் சிறப்புப் பூஜை செய்யும்போதெல்லாம், அவை[சிலைகள்]களுக்கான ஆடைகளைக் களைந்து, புனித நீர் பெய்து சுத்தப்படுத்திய பிறகே பால், பழம், சந்தணம், பன்னீர் போன்றவற்றால் குளிப்பாட்டுகிறார்கள்[மீண்டும் அவற்றிற்கு ஆடைகளும் ஆபரணங்களும் அணிவிப்பது வழக்கமான ஒன்று] அர்ச்சகர்கள்.
பெரும்பாலான கோயில்களில், ஆண் கடவுள்கள் மட்டுமல்லாமல் பெண் கடவுள்களுக்கும்[அன்னை மீனாட்சி, லக்குமி, சீதேவி, பூதேவி போன்றவர்கள்] சிலைகள் உள்ளன என்பதையும், அவற்றுக்குள் சம்பந்தப்பட்ட அந்தப் பெண் கடவுள்கள் எழுந்தருளியிருக்கிறார்கள் என்பதையும் கவனத்தில் கொள்க.
இதை நேற்றுவரை அவர்கள் செய்தார்கள்; இன்றும் செய்கிறார்கள்.
இது தவறு; அபச்சாரம்.
இனியேனும், கோயில்களில் பெண் சாமிகளை அலங்கரித்து அவர்களுக்கு அபிஷேகம் செய்ய, உடனடியாகப் பெண் அர்ச்சகர்கள்[அர்ச்சகிகள்] நியமிக்கப்படுதல் வேண்டும்.
அரசிடம்[அறநிலையத் துறை] இதற்கான கோரிக்கையைப் பரிந்துரைத்து, உடனடியாகத் தமக்குரிய கடமையை நிறைவேற்றுவார்களா நம் பக்தர்கள்... குறிப்பாகப் பெண் பக்தர்கள்?
மீண்டும் நினைவூட்டுகிறோம்.....
பக்தர்களே, நீங்கள் வழிபடுவது வெறும் சிலகளையல்ல, உள்ளே நிரந்தரமாக எழுந்தருளியிருக்கும் ஆண் & பெண் கடவுள்களை!
