புதன், 5 ஆகஸ்ட், 2026

அரசியல்வாதிகளின் அடி தொழுது ஆதாயம் தேடும் தமிழ் ஊடகங்கள்!!!

மேற்கண்ட காணொலியை வெளியிட்டது ‘பாலிமர்’ என்னும் பெயருடைய தொலைக்காட்சி. 

நிதிநிலை அறிக்கைக்கான கூட்டத்தொடரில், ஒரு முதல்வராக ஜோசப் சட்டமன்றத்திற்குள் நுழைகிறார். கோட்டு அணியாமல் வெகு இயல்பாகக் காட்சியளிக்கிறார்; சிக்கனமாகச் சிரித்து[முகத்தில் மகிழ்ச்சி பொங்கி வழியவெல்லாம் இல்லை] அவையில் உள்ளவர்களைக் கும்பிட்டு வணக்கம் சொல்கிறார்; அவைத் தலைவருக்குத் தனியாக ஒரு கும்பிடு போடுகிறார்; தனக்கே தனக்கான இருக்கையில் அமர்கிறார்; பின்னிருக்கையில் உள்ளவர்களைப் பார்த்துக் கொஞ்சம் பற்கள் தெரிய மீண்டும் சிரிக்கிறார்.

இவை அவரின் வழக்கமான செயல்பாடுகள்தான். குறிப்பிட்டுச் சொல்ல ஏதுமில்லை.

ஆனால் பாலிமரோ, அவர் மகிழ்ச்சியுடன் ‘மாஸ் என்ட்ரி’ தந்ததாகக் குட்டித் தலைப்பில் குறிப்பிட்டுக் குதூகலிக்கிறது.

எதற்கு?

அவரைக் ‘குஷி’ப்படுத்தவா?

படுத்தாவிட்டால் அடுத்தடுத்து ‘அன்பளிப்புகள்’ பெறுவது தடைப்படுமா?

இன்றைய ஊடகங்கள்[தமிழ்] பாலிமர் போலவே ‘அண்டிப் பிழைக்கும்’ அசிங்கத் தொழில்தான் செய்கின்றன. அதாவது, நடுநிலை உணர்வுடன் இயங்கும் ஊடகம் இல்லை என்றே சொல்லலாம்!  

செவ்வாய், 4 ஆகஸ்ட், 2026

'அவர்' போஜனப் பிரியர்! யார் அந்த அருள்மிகு ‘அவர்’?!

வேலைவெட்டி எதுவும் இல்லாதபோது வெறுமனே பொழுதைக் கழிக்க விரும்பாத நான், இணையம் வழியாகக் கடவுள் குறித்த ஐயங்களுக்கு விடை தேடுவது[ம்] வழக்கமாகிப்போனது. சற்று முன்னர் ‘கடவுளுக்குப் பசிக்குமா?’ என்றொரு கேள்வியுடன் இணைய உலகில் அலைந்து திரிந்தபோது, நான் அறிந்திராத தகவல் ஒன்று கிடைக்கப்பெற்றேன். வாசிப்போருக்குப் பயன்படுவதாக அமையக்கூடும் என்னும் நம்பிக்கையில் அதைப் பகிர்கிறேன், திருத்தம் ஏதும் செய்யாமல்.

                        ++++++++++++++++++++++

யான் குறிப்புகடவுளுக்குப் பசிக்குமா?

Posted on December 29, 2016 | By Trichy Farook

நூல்கள்: இயேசு இறை மகனா?

...ஆனாலும் சந்தோஷத்தினால் அவர்கள் இன்னும் விசுவாசியாமல் ஆச்சரியப்படுகையில்: புசிக்கிறதற்கு ஏதாகிலும் இங்கே உண்டா என்று அவர்களிடத்தில் கேட்டார். அப்பொழுது பொறித்த மீன்கண்டத்தையும் தேன்கூட்டுத் துணிக்கையையும் அவருக்குக் கொடுத்தார்கள். அவைகளை அவர் வாங்கி… (லூக்கா 24:41-43)

இயேசு… தாகமாயிருக்கிறேன் என்றார்.

(யோவான் 19:28)

ஏதோ ஓரிரு சந்தர்ப்பங்களில் தான் அவர் சாப்பிட்டார் என்று நினைத்து விடக் கூடாது. நன்றாக விரும்பிச் சாப்பிடக் கூடியவராக இருந்தார்.

இயேசு மதுபானம் அருந்தியதாகக் கூறும் வசனத்தில் (மத்தேயு 11:19) போஜனப் பிரியர்’ என்று கூறப்பட்டுள்ளது.

சாப்பிடுவதில் அதிக விருப்பம் உள்ளவராக இயேசு இருந்திருக்கிறார். சாப்பிடுதல் கடவுளின் இலக்கணமாகுமா? என்பதைக் கிறித்தவர்கள் சிந்திக்க வேண்டும்.

https://bayan.quranandhadis.com/