திங்கள், 13 ஏப்ரல், 2026

21ஆம் நூற்றாண்டுக்குள் இந்தியாவை ‘இந்தி’யா ஆக்குவார் மோடி!!!

ப்ரல் 13, 2026 அன்று புது தில்லியில் நடைபெற்ற நாரி சக்தி வந்தன் சம்மேளனத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். 2029-க்குள் பெண்கள் இடஒதுக்கீடு சட்டத்தை(நாரி சக்தி வந்தன் அதினியம்) நடைமுறைப்படுத்துவது, பெண்களின் தலைமைத்துவத்தை ஊக்குவிப்பது, 'விக்சித் பாரத் 2047' இலக்கை அடைவதில் பெண்கள் பங்களிப்பது குறித்தெல்லாம் அவர் வலியுறுத்தினார்.

21-ஆம் நூற்றாண்டின் மிக முக்கியமான முடிவுகளில் ஒன்றை இந்தியா தற்போது எடுக்கவிருக்கிறது என்றும் கூறினார்['India is set to take one of the biggest decisions of 21st century': PM Modi on women's reservation bill]

1.நாரி சக்தி வந்தன்

2.நாரி சக்தி வந்தன் அதினியம்

3.விக்சித் பாரத் ‘2047’

21ஆம் நூற்றாண்டு முடிவதற்கு[75 ஆண்டுகள்[+2026] மோடி நிறைவேற்றவிருக்கும் லட்சியங்களில் மேற்கண்ட மூன்றும் அடங்கும்.

மூன்றுக்கும் இந்திப் பெயர்[சமஸ்கிருதம்?] சூட்டியிருக்கிறார்.

21ஆம் நூற்றாண்டுக்குள் இவை போன்ற திட்டங்களை நிறைவேற்றுவாரோ அல்லவோ, மாநில மொழிகளைப் படிப்படியா அழித்து, இந்தியாவை ‘இந்தி’யா ஆக்கும் தன் லட்சியத்தை நிறைவேற்றுவார் என்பது உறுதி. 

அப்புறமென்ன, ஒட்டுமொத்த இந்தியாவுவையும் ‘இந்தி’யன்கள் ஆளுவார்கள் என்பது உய்த்துணரத்தக்கது.

முக்கியக் குறிப்பு:

‘இந்திய அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையின்படி(Eighth Schedule), இந்தியாவில் 22 மொழிகள் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன’ என்பதையும், ஒன்றிய அரசின் திட்டங்களுக்கு மேற்கண்ட மொழிகளிலும் பெயர் சூட்டலாம் என்பதையும், ஏறத்தாழ ஒரு சர்வாதிகாரியான மோடியாரிடம் எடுத்துரைக்க வல்லார் யார்?