எனது படம்
ஒருவன் கெட்டழிவதற்கான சூழ்நிலை உருவானால், “அவனுக்கு இப்போது கேடுகாலம்” என்பார்கள் நம் முன்னோர்கள். அது வெறும் அனுமானம்தான் என்றாலும், இப்போதைய அரசியல் சூழ்நிலை தமிழினத்துக்கான கேடுகாலம் நெருங்குகிறதோ என்று எண்ணத் தூண்டுகிறது!

செவ்வாய், 16 ஜூன், 2026

சிரிப்பூட்டும் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை!!!

டலமைப்பால் ஓர் ஆணைவிடவும் பெண் பலவீனமானவளாக இருப்பது இயற்கையானது.

உடற்பயிற்சிகள் மூலம் உடம்பை வலுப்படுத்தினாலும், பாதுகாப்பிற்காக ஆயுதங்கள் வைத்திருந்தாலும், வன்முறையில் ஈடுபடும் ஒன்றுக்கும் மேற்பட்ட ஆயுதம் ஏந்திய ஆண்களிடமிருந்து அவள்[அவர்கள்] தன்னை[தங்களை]ப் பாதுகாத்துக்கொள்வது அத்தனை எளிதல்ல.

அப்பட்டமான ஓர் உண்மை.....

ஒரு சராசரி ஆணின் உடம்பைக் காட்டிலும் ஒரு பெண்ணின் உடம்பு[குறிப்பாக மார்பகங்கள், அடிவயிறு இன்ன பிற] மிக மிக மென்மையானது; உணர்ச்சி நரம்புகளால் கட்டமைக்கப்பட்டது. அவளின் அங்கங்கள் ஆடவனால் தீண்டப்படும்போது[தற்செயலாகவோ வலிந்தோ],  உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த மிகக் கடுமையாகப் போராடுவது தவிர்க்க இயலாதது; எதிரியை எதிர்த்துப் போராடி வெல்வது கடினமாகிறது.

இக்காரணத்தால்தான், மிகக் கடுமையான பாதுகாப்புப் பணிகளுக்கு ஆடவர் குழுப் படைகள் அனுப்பப்படுகின்றன.

எனவே, பெண்களுக்கான பாதுகாப்பை ஆண்களால் ஆன படைதான் சிறப்பாகச் செய்திட முடியும் என்பதால், சிங்கப்பெண் அதிரடிப் படை, சிறுத்தைப்பெண் அதிரடிப் படை அமைப்பதெல்லாம் வெற்று ஆரவார நடவடிக்கைள் மட்டுமே.

முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான பொன். ராதாகிருஷ்ணன் அவர்கள் அண்மையில் அளித்த பேட்டியில், "பெண்களின் பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படைக்குப் பாதுகாப்பு வழங்க, இன்னொரு புதிய பாதுகாப்புப் படை தேவை” என்று நக்கலடித்தது நினைவுகூரத்தக்கது!

திங்கள், 15 ஜூன், 2026

‘முகாம்பிகைக்கு ஜோசப் வெள்ளி வாள் காணிக்கை’... அலங்கரிக்கவா, அடகு வைக்கவா, விற்கவா?!

கோயில்களுக்குச் செல்லும் பக்தர்கள் உண்டியலில் பணம் போடுகிறார்கள்; தங்களின் எடைக்கு ஈடாக[துலாபாரம்] விரும்பும் பொருளைச் சாமிகளுக்குச் சமர்ப்பிக்கிறார்கள்; முடிக் காணிக்கை செலுத்துவதும் வழக்கத்தில் உள்ளது.

இவையெல்லாம் பொதுவாக மக்களுக்கோ, குறிப்பாகப்  பக்தர்களுக்கோ பயன்படுத்தப்படுகின்றன என்று நம்பலாம்.

அண்மையில், முகாம்பிகை[கர்னாடகா]யை வழிபடச் சென்ற நம் முதல்வர் ஜோசப் அவர்கள் தனக்கு வழங்கப்பட்ட மரியாதைகளை ஏற்றுக்கொண்டதோடு, ​​1.6 கிலோ எடையுள்ள வெள்ளி வாள்[ரூ4,32,000] ஒன்றைக் கோயிலுக்குக் காணிக்கையாக[நன்கொடை] வழங்கினார் என்பது செய்தி.

எதற்கு இந்த வெள்ளி வாள் காணிக்கை?

//வெற்றி மற்றும் தர்மத்தின் அடையாளமாக 1.6 கிலோ எடையுள்ள பிரம்மாண்டமான வெள்ளி வாளைக் காணிக்கையாகச் செலுத்தினார் முதல்வர் ஜோசப். மேலும், தனது ஜாதகத்தில் சுக்கிரத் தசை நடைபெறுவதால், அதற்கான பரிகாரமாக இந்த வெள்ளி வாளை[இது எதற்கு? வெற்று அலங்காரத்திற்கா? அம்மன் அரக்கர்களுடன்(!)போர் புரிவதற்கா? கோயிலுக்கு வருமானம் குறைந்தால் அடகு வைக்கவா, அல்லது, விற்றுப் பணம் பண்ணவா?] அம்மனுக்கு சமர்ப்பித்துச் சிறப்பு வழிபாடுகளையும் அவர் மேற்கொண்டார்// என்பது ஊடகங்கள் வாயிலாக அறியப்படும் காரணங்கள் ஆகும்.

மூடநம்பிக்கைகளின் ஒட்டுமொத்தப் புகலிடமா இவர்? இவரா இன்னும் ஐந்தாண்டுகளுக்கு நம்மை ஆளப்போகிறார் என்று அளப்பரிய வேதனையுடன் கேட்கத் தோன்றுகிறது.

நாம் கேட்கவில்லை. கேட்க வேண்டியவர்கள் நம் மக்கள். இவர்கள் ஒருபோதும் கேட்கமாட்டார்கள் என்பது முதல்வர் ஜோசப்புக்கு அத்துபடியாய்த் தெரியும். 

                                 =====================     

https://www.msn.com/en-in/money/topstories/cm-vijay-offers-prayers-at-kollur-mookambika-temple-donates-1-600-kg-silver-sword/ar-AA25yvDg?ocid=msedgdhp&pc=NMTS&cvid=6a2eb17708144679a2be748a977a0711&ei=92