திங்கள், 11 மே, 2026

தோல்விக்குப் பிறகும் பாடம் கற்காத மு.க.ஸ்டாலின்!!!

தமிழ்நாடு சட்டமன்றத்தின்[2026] ‘திமுக’ கட்சித் தலைவராக, மு.க. ஸ்டாலினால்[கட்சி தேர்வு செய்தது என்பது பொய்யுரை] தேர்வு செய்யப்பட்ட அவரின் மகன் உதயநிதி எதிர்க்கட்சித் தலைவர் ஆகிறார்.

பொதுமக்கள் என்றில்லை, 'திமுக’ கட்சிக்காரர்களே தங்களுக்குள் கேட்டுக்கொள்ளும் கேள்வி.....

“ஸ்டாலின் நடத்திய குடும்ப அரசியல்தான் ‘திமுக’ தோற்றதற்கான மிக முக்கியக் காரணம்[விளைந்த நன்மைகளுக்கிடையே] ஆகும். எதிர்க்கட்சி நிலைக்குத் தள்ளப்பட்ட பிறகும், செய்த தவற்றையே அவர் மீண்டும் செய்தது ஏன்?” என்பதுதான்.

இதை மறுக்கும் விதமாக, ‘துணை முதலமைச்சராகப் பணியாற்றிய அனுபவம். 2.சட்டமன்றத்தில் கடந்த 5 ஆண்டுகளாக அவரது செயல்பாடுகள். 3.திமுக இளைஞரணிச் செயலாளராகத் தொண்டர்களிடையே இருக்கும் செல்வாக்கு. 4.செய்தியாளர் சந்திப்புகளை எளிதாக ஹேண்டில் செய்யும் பக்குவம்.....’ ஆகியவை உதயநிதி ஸ்டாலினுக்குக் கைவந்துள்ளதால் எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்குப் பொருத்தமாக இருப்பார் என திமுக தலைமை கருதுவதாகச் சொல்லப்படுகிறது*

கட்சியில் அனுபவம் வாய்ந்தவர்களுக்கோ, ஆக்கபூர்வமாகச் செயல்படும் வேறு இளைஞர்களுக்கோ வாய்ப்புத் தராமல், தன் மகனுக்கே முக்கியத்துவம்[உதவி முதல்வர்+] தந்துகொண்டிருக்கும் நிலையில், வேறு எவரும் தம் தகுதியை/திறமையை வெளிப்படுத்துவது சாத்தியமே இல்லை என்பது கருத்தில் கொள்ளத்தக்கது. இத்தனைத் தகுதிகளை உதயநிதி பெற்றிருந்தும் ‘திமுக’ தோல்வியைத் தழுவியதும் கவனிக்கத்தக்கது.

இந்த உண்மையை அறியாதவரல்ல ஸ்டாலின். 

அறிந்திருந்தும் தன் பாசத்திற்குரிய மகனையே எதிர்க்கட்சித் தலைவராக்கியிருக்கிறார்.

தமிழ் மொழியையும் தமிழின உரிமைகளையும் பாதுகாக்கும் மிகப் பெரிய கடமையை ஆற்ற வேண்டிய ‘திமுக’ கட்சியால், இனியும் அதைச் சிறப்பாகச் செய்ய இயலாது என்பது உறுதி.

அதன் வீழ்ச்சி இனியும் தொடரவே வாய்ப்புள்ளது!

*https://tamil.oneindia.com/news/chennai/why-did-dmk-hand-over-the-opposition-leader-post-to-udhayanidhi-stalin-798473.html#google_vignette].

ஞாயிறு, 10 மே, 2026

தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு... அனுமதித்தவர் விஜய்?!

பதவியேற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்தை மூன்றாம் இடத்துக்குத் தள்ளித் தமிழை அவமதித்தது முதல்வராகியுள்ள ‘விஜய்’யின் விருப்பத்தின் பேரில் நடந்ததா?

இன்று காலையிலிருந்தே தமிழினத் தலைவர்கள் இதற்குக் கண்டனம் தெரிவித்து, இதற்குக் காரணமானவர்கள் யார் என்பதை விஜய் மக்களுக்குத் தெரியப்படுத்துதல் வேண்டும் என்று வலியுறுத்தியும், சற்று முன்னர்வரை புதிய முதல்வர் மௌனம் சாதிப்பது மேற்கண்டவாறு சந்தேகிக்கத் தோன்றுகிறது.

பிர்தமர் மோடியைத் திருப்திப்படுத்தி, எந்தவொரு சூழலிலும் தன் ஆட்சி கலைக்கப்படுதல் கூடாது என்பதற்காகவே தமிழை[மூன்றாம் இடத்துக்குத் தள்ளி] அவமதிக்க அனுமதித்தாரா இவர்?.

தமிழினத் தலைவர்கள் கலந்தாலோசித்து உரிய முறையில் செயல்படுவது உடனடித் தேவையாகும்.