கோயில் கும்பாபிஷேகம், அர்ச்சனை, அபிஷேகம், கிரஹப்பிரவேசம்[புதுமனை புகு விழா] போன்ற நிகழ்வுகளின்போது, அர்ச்சகர்களால் ஓதப்படும் வேத மந்திரங்களைப் பயபக்தியுடன் கேட்டு மெய் சிலிர்ப்பது, அன்று முதல் இன்றுவரையிலான நம்மவர்களின் வழக்கம்[இந்நாள்வரை அவற்றிற்கான பொருள் அறிந்திட எவரும் முயன்றதில்லை!].
காக்கும் கடவுள்களில் ஒன்றான காளிதேவிக்கான ‘கவர்ச்சிமிகு’ மந்திரங்கள்:
வேத விற்பன்னர்கள், காளி தேவிக்கான பூஜையில் சொல்லும் மந்திரங்கள் சிலவற்றின் உள்ளடக்கம்[பொருள்] இங்கே பட்டியலிடப்பட்டுள்ளது.
வாசித்த பிறகேனும் சிந்தித்து மனம் திருந்தி, தாய்த் தமிழில் மட்டுமே வழிபாடு நிகழ்த்துவார்களா நம் பக்தர்கள்?
‘ஸூத்ருசோ.......................................................ப்ரஜபேன்மனும்...’[இரண்டு வரிகள்]
பொருள்: ஓர் அழகிய பெண்ணின் குறியைப் பார்த்துக்கொண்டு பத்தாயிரம் முறை காளிதேவியை நினைந்து மந்திர செபம் பண்ணுகிறவன் தேவகுருவுக்குச் சமம் ஆவான்.
‘சாவம் ஹ்ருதயமாருஹ்ய................................................................’[நான்கு வரிகள்].
பொருள்: சுடுகாட்டில் அம்மணமாகப் பிணத்தின் மார்பில் அமர்ந்துகொண்டு, தன் வீரியத்தில்[விந்து] தேய்க்கப்பட்ட ஆயிரம் எருக்கம் பூக்களினால் மந்திரம் சொல்லிக் காளிதேவியைப் பூசிக்கிறவன் வெகு சீக்கிரம் அரசனாவான்.
‘ரஜ: கீர்ணபகம் நார்யா த்யாயன்யோயுத.............’[இரண்டு வரிகள்]
பொருள்: வீட்டுக்குத் தூரமான பெண்ணின் ரத்தத்தோடு கூடிய பெண்குறியைத் தியானித்துக்கொண்டு பதினாயிரம் உரு[மந்திரம்] செபிக்கிறவன் மதுரமான தன் பாடல்களால் உலகை மயக்கும் வல்லமை பெறுவான்.
‘..............சவஸ்ய ஹ்ருதி ஸமஸ்திதாம்’[நான்கு வரிகள்]
பொருள்: புன்சிரிப்புடன் கூடிய முகத்தை உடையவளான காளிதேவியைத் தியானித்தவாறு, ஒரு பெண்ணைப் புணர்ந்துகொண்டே ஆயிரம் முறை செபிக்கிறவன் சிவபெருமானுக்கு ஒப்பாவான்.
‘ஸ்ருணோதி நூபுராராவம்..............’[நான்கு வரிகள்]
பொருள்: மந்திரம் செப்பிப்பவன், தேவியின் சிலம்பொலியும் சங்கீதமும் கேட்டுக்கொண்டே மந்திரம் செபித்துக்கொண்டிருந்தால், தேவியானவள் மிக்க விருப்புடன் இவனைப் புணர்ச்சி செய்ய வருவாள். புணர்ச்சி முடிந்ததும் இவனுடைய அத்தனை விருப்பங்களையும் நிறைவேற்றுவாள்.
***சுவாமி சிவானந்த சரஸ்வதி அவர்கள் எழுதிய ‘ஞான சூரியன்’[சாமி புக்ஸ், சென்னை]’ என்னும் நூலில் இவை போன்ற படு படு படு சுவாரசியமான[ஹி... ஹி... ஹி!!!] செய்திக் குறிப்புகள் உள்ளன.
=================
இந்துத்துவாக்களால் பெரிதும் போற்றப்படுகிற வேத சாஸ்திரங்களில்.....
அசுவத்தாமன் குதிரைக்கும்,
காங்கேய முனிவர் கழுதைக்கும்,
காலக்கோட்டு ரிஷி மானுக்கும்,
ஜம்புகர் நரிக்கும்,
காங்கேயர் கழுதைக்கும்,
மாண்டவியர் தவளைக்கும்,
சவுனகர் நாய்க்கும்,
கணாதர் கோட்டானுக்கும்,
சுகர் கிளிக்கும்,
ஜாம்புவந்தர் கரடிக்கும்
காங்கேயர் கழுதைக்கும்,
மாண்டவியர் தவளைக்கும்,
சவுனகர் நாய்க்கும்,
கணாதர் கோட்டானுக்கும்,
சுகர் கிளிக்கும்,
ஜாம்புவந்தர் கரடிக்கும்
என்றிவ்வாறாக, மனிதர்களை விலங்குகளும் பறவைகளும் பெற்றெடுத்ததாகக் கதைகள் சொல்லப்பட்டிருக்கின்றன[ஆதாரம்: ‘ஞான சூரியன்’, சாமி புக்ஸ், மயிலாப்பூர், சென்னை]

