புதன், 27 மே, 2026

உயிர்வாழும் மனைவிக்கு ‘ஈமச்சடங்கு’ செய்த புத்திசாலிக் கணவன்!!!

'She Is Dead To Me': Husband Performs ‘Pind Daan’ For Living Wife Over Instagram Reels, Watch Videoதன் மனைவியின் ஆத்திரமூட்டும் சமூக ஊடகப் பதிவுகளால் பொறுமையிழந்த ஒரு கணவன், வழக்கறிஞரைக் கொண்டு விவாகரத்துக்கு வழி தேடுவது ஒருபுறம் இருக்க, இறந்தவர்களுக்காகப் பொதுவாகச் செய்யப்படும் ஒரு புனிதமான[கருதப்படுவது] இந்து மதச் சடங்கின் மூலம், தங்கள் திருமணத்தை முடிவுக்குக் கொண்டுவர முயற்சிக்கும் ஒரு விசித்திரம் அண்மையில் நிகழ்ந்துள்ளது[செய்தி].

உயிரோடு இருக்கும் மனைவியின் படத்துக்கு மாலை அணிவித்துப் பிண்டதானத்திற்கான சடங்கைச் செய்து, அதைக் குளத்து நீரில் வீசி, தன் மனைவி செத்துவிட்டதாக அறிவிக்கிறான் அந்தக் கணவன். வீசுவதற்கு முன்னால் படத்தின் மீது காறித் துப்புகிறான்.  

இவனின் இந்தச் செயலுக்குச் சமூக ஊடகங்களில் கண்டனங்களே வெளியாகியுள்ளன.

கணவனும் மனைவியும் மனம் ஒத்து வாழவே முடியாத நிலை உருவானால், கழுத்தை நெறித்தோ, விஷம் வைத்தோ, அடியாட்களை ஏற்பாடு செய்தோ ஒருவர் மற்றொருவரைக் கொன்றுவிட்டுச் சிறையில் வாழ்நாளைக் கழிக்க நேரலாம்[தூக்குத் தண்டனையும் வழங்கப்படலாம்] இது அவ்வப்போதான அவல நிகழ்வாக உள்ளது.

இதைக் காட்டிலும், ஒரு கணவன்[மனைவியாகவும் இருக்கலாம்] மேற்கண்டவாறு ‘பிண்டதானம்’ செய்துவிட்டு, இருவரும் பிரிந்து வாழ்வதே நல்லது[பிள்ளைகள் இருந்தால் அவர்களைப் பாதுகாத்து வளர்த்து ஆளாக்கும் பொறுப்பை இருவரும் பகிர்தல் முக்கியம்].

                                                *   *   *   *   *

'She is dead to me': Husband performs ‘pind daan’ for living wife over Instagram Reels; watch video

செவ்வாய், 26 மே, 2026

‘பொறுக்கி’ எம்.எல்.ஏ.க்களுக்குத் தேர்தலில் போட்டியிடத் தடை தேவை!

கீழ்க்காணும் 3 பேரும் 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வென்று[அதிமுக சார்பாக] உறுப்பினர்களாக[எம்.எல்.ஏ]ப் பதவியேற்றது 16.4.2026இல். பதவியை ராஜினாமா செய்தது 25.05.2026 அன்று.

ஒரு சில மாதங்கள்கூட நிறைவு பெறாத நிலையில் இவர்கள் பதவியை வெறுத்தது ஏன்?


கட்சித் தலைமையிடம் எதிர்பார்த்தது எதுவும் கிடைக்காத விரக்தியா?

தேர்தல் நடத்த அரசு பெருமளவில் செலவு செய்கிறது. அடுத்துவரும் தேர்தலில் போட்டியிட இவர்கள் அனுமதிக்கப்பட்டு, இப்போது சார்ந்துள்ள கட்சியின் சார்பாக வென்றால், அடுத்த கொஞ்சம் நாட்களிலேயே, ‘லாப நஷ்ட’க் கணக்குப் பார்த்து, அந்தக் கட்சியிலிருந்தும் இவர்கள் ராஜினாமா செய்யக்கூடும். அதற்கடுத்த தேர்தலில் இன்னொரு கட்சியில் போட்டியிடுவார்கள்.

இந்தக் கட்சிமாறிகளுக்காக அடிக்கடி இடைத்தேர்தல் நடத்தும்[வீண் செலவு] நிலை உருவாகும்.

தெருத்தெருவாகப் பொறுக்கித் திரியும் சொறி நாய்களுக்கும் இவர்களுக்கும் கொஞ்சமும் வேறுபாடு இல்லை.

காலநேரம் கருதாமல் கட்சி மாறும் இந்தக் கழிசடைகளின் அயோக்கியத்தனத்தை அரசு ஒருபோதும் அனுமதிக்கலாகாது. உடனடியாக உரிய சட்டத் திருத்தங்களைச் செய்து, இவர்கள் தேர்தலில் போட்டியிடுவதற்கான தகுதியைப் பறிப்பது உடனடித் தேவை.