[தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் ஒரு நாளில் தோராயமாக 1,200 முதல் 1,230 குழந்தைகள் பிறக்கின்றன[தகவல் இணையத்தில் பெறப்பட்டது]. தினமும் இத்தனைக் குழந்தைகளுக்கு முதல்வர் தங்க மோதிரம் அணிவிப்பது சாத்தியமா? செலவு?]
தாய்மாமன் என்பவர் யார்?
//தாய்மாமன் என்பவர் குழந்தையைப் பெற்றெடுக்கும் ஒரு தாயின் உடன் பிறந்த சகோதரர்(அண்ணன் அல்லது தம்பி) ஆவார். தமிழ்க் கலாச்சாரத்தில் இவர் தாய்க்கு நிகரானவராகக் கருதப்படுபவர்.
*தமிழர் பண்பாட்டில் தாய்மாமனின் பங்கு மிகவும் முக்கியமானது.
*காதணி விழா, பூப்புனித நீராட்டு விழா, திருமணம், வளைகாப்பு போன்ற அனைத்துக் குடும்பச் சுப நிகழ்ச்சிகளிலும் தாய்மாமனுக்கு முக்கிய இடமுண்டு.
*குழந்தைகளின் அனைத்து முக்கிய நிகழ்வுகளுக்கும் முதல் சீர்(பரிசுப் பொருட்கள்) கொண்டுவரும்[கொடுத்து அனுப்புதல் அல்ல] வழக்கம் இவரிடம் உள்ளது.
தாய்க்கு அடுத்தபடியாகக் குழந்தைகளின் மகிழ்ச்சிக்கும், பாதுகாப்பிற்கும் உறுதுணையாக இருப்பவர் தாய்மாமன்//.
ஆக, சகோதரி மகளின்[+மகன்] அனைத்துப் புனித நிகழ்வுகளிலும் கலந்துகொண்டு பரிசு[சீர் வரிசை] வழங்குபவரே தாய்மாமன் ஆவார்.
முதல்வர் ஜோசப், ஒவ்வொரு பெண்மணியும் குழந்தையைப் பெற்றெடுக்கும்போது[அரசு மருத்துவமனைகளில் மட்டும்] நேரில் வந்து வாழ்த்துச் சொல்லி, ஒரு கிராம் மோதிரத்தை அணிவிக்கப்போவதில்லை[ஒரு முறை மட்டும் நிகழ்வைப் புகைப்படம் எடுத்து அனைத்து ஊடகங்களிலும் வெளியிடச் செய்வார்].
வெளிப்படையாகச் சொன்னால்.....
சொகுசு மாளிகையில் இருந்துகொண்டு எடுபிடியை[அதிகாரிகளாகவும் இருக்கலாம்] ஒரு போலியான தாய்மாமனாக மருத்துவமனைக்கு அனுப்பி இந்த நாடகத்தை நடத்தப்போகிறார் ஜோசப்.
முதல்வர் ஜோசப் அவர்களுக்கு நாம் வழங்கும் பரிந்துரை.....
கடந்த தேர்தலில் வெற்றி பெற்று முதல்வர் ஆகும்வரை வெறும் ‘விஜய்’ ஆக இருந்த நீங்கள், முதல்வர் ஆனபோது ‘ஜோசப்’ஐ இணைத்துக்கொண்டீர்கள்[மதப் பற்றின் வெளிப்பாடு & பரப்பும் நோக்கம்]. அதைப் போலவே, முதல்வராக மட்டுமே இருந்த/இருக்கும் நீங்கள் ‘தாய்மாமா’வை இணைக்கிறீர்கள்.
மக்கள் எப்போதுமே முட்டாள்களாக இருப்பதில்லை; சில நேரங்களில் சிந்திக்கவும் செய்கிற அவர்கள், உங்களின் இந்த ‘மாறும் ஆசை’ வரும் தேர்தல்களில் பெண்களின் வாக்குகளை அள்ளுவதற்கான தந்திரம் என்பதைப் புரிந்துகொள்வார்கள். நீங்கள் எதிர்பார்ப்பது நடக்காது.
ஆகவே ஜோசப் அவர்களே,
முதல்வருக்குரிய கடமைகளை மட்டுமே செய்யுங்கள்[சிறப்பாகச் செய்தால் மக்கள் தொடர்ந்து ஆதரிப்பார்கள்]; ‘மாமா’வாக எல்லாம் மாற வேண்டாம்.
வேண்டவே வேண்டாம்!