எனது படம்
ஆயுளின் இறுதி நாள்வரை நோய்களின் தாக்குதல் இல்லாமல் உடல்நலத்துடனும் மனநலத்துடனும் வாழ்ந்துமுடிக்க, நமக்கு வாய்த்துள்ள அறிவை முழுமையாகப் பயன்படுத்துதல் முக்கியம். சாமி பக்தி, சாமியார்களின் ஆசீர்வாதம், ஜாதகக் கணிப்பு போன்றவை ஆறறிவைச் சீரழிக்கும் என்பது உறுதி!

சனி, 27 ஜூன், 2026

'கே.பாக்கியராஜ் மரணம்'... நிறைய வருத்தம்! கொஞ்சம் மகிழ்ச்சி!

தமிழ்த் திரையுலகின் புகழ்பெற்ற இயக்குநரும், நடிகருமான கே. பாக்யராஜ்(வயது 73) மாரடைப்பு காரணமாக ஜூன் 27, 2026 அன்று காலமானார்[ஊடகச் செய்தி].

இன்னும் பல ஆண்டுகள் இவர் வாழ்ந்திருந்தால், திரைப்படங்கள் வாயிலாக வாழ்க்கைக்குப் பயன்படும் பல அரிய சிறந்த கருத்துக்களை நமக்கெல்லாம் நல்கியிருப்பார் என்பது உறுதி.

இவரின் மறைவு பெரிதும் வருந்துதற்குரியது என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமே இல்லை.

மரணித்தல் என்பது அனைத்து உயிர்களுக்கும் பொதுவானது; வாழும்  ஆயுட்காலம் முன்பின்னாக அமையலாம். 

விதிவிலக்கானவர் என்று எவரும் இல்லை.

கொடிய நோய்களுக்கு ஆளாகி, கட்டிலில் முடங்கிக் கிடந்து, சிறுநீர் பெய்து மலம் கழித்து, மனம் வெந்து நொந்து மரணத்தைத் தழுவுவது போன்றதொரு வேதனை வாழ்க்கையில் வேறு எதுவும் இல்லை.

உடல்நலம் சீராக இருந்து அன்றாடக் கடமைகளில் ஈடுபடும்போதோ, ஆழ்ந்த உறக்கத்திலோ எதிர்பாராமல் செத்துப்போனால், அதை ‘நல்ல சாவு’ என்பார்கள்.

‘திடீர் மாரடைப்பு[cardiac arrest] பாக்கியராஜ் அவர்களின் ‘நல்ல சாவுக்கு’[நடைப் பயிற்சி முடிந்து ‘கை பேசியில்’ உரையாடும்போது மயங்கி விழுந்து மரணத்தைத் தழுவினார் என்பது செய்தி] உதவியிருக்கிறது.

இது, மிகுந்த வருத்தத்திற்கிடையே, விரும்பத்தக்கதும் சிறிதேனும் மகிழத்தக்கதுமான ஒரு நிகழ்வு என்று சொல்லலாம்.

வெள்ளி, 26 ஜூன், 2026

முழுமுதல் கடவுள் ஆனார் முதல்வர் ஜோசப்!!!

[குறிப்பிட்ட ஒரு நபர் குறித்து அடுத்தடுத்துப் பதிவுகள் எழுத நேர்ந்தமைக்கு மிகவும் வருந்துகிறேன்]
டவுள் என்று ஒருவர் இருப்பதை ஐம்புலன்களாலும் ஆறாவது அறிவாலும் எவரும் உணர்ந்ததில்லை; உணர்த்தியதும் இல்லை.

ஆனாலும் ‘அவரொருவர் இருப்பதாக மக்கள் அன்று நம்பினார்கள்; இன்றும் நம்புகிறார்கள். 

அந்த நம்பிக்கையை உறுதிப்படுத்தும் வகையில், ஜோசப் விஜய்தான் அந்தக் கடவுள்[மாரியம்மன் சிலையைத் தூக்கிக் கடாசியிருக்கலாம்] என்பதை, ஒட்டுமொத்த உலகமும் அறிந்து உணரச் செய்த, நாமக்கல் ‘த,வெ.க.’வினருக்கு நம் கோடானுகோடி நன்றிகள்.

ஊர் தவறாமல் பெரிய பெரிய கோயில்கள் எழுப்பி, ஜோசப் கடவுளை அங்கெல்லாம் குடியேற்றி, கும்பாபிஷேகம், பாலாபிஷேகம், பழ அபிஷேகம், சந்தன அபிஷேகம், சத்துள்ள காய்கறிகள் அபஷேகம், குங்கும அபிஷேகம் எல்லாம் நடத்தி, அந்த ஜோசப் கடவுளின் புகழ் பரப்புமாறு, அவரின் பின்னோடிகள் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்தப் பக்தக்கோடிகளிடமும் வேண்டுகோள் வைக்கிறோம்.