நடிகன் ‘விஜய்’ முதலமைச்சராக[+அமைச்சர்கள்]ப் பதவி ஏற்ற விழாவில், வழக்கமாக, தமிழ்நாடு அரசு விழாக்களில் முதலாவதாகப் பாடப்படும் ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ப் பாடல் 3ஆம் இடத்துக்குத் தள்ளப்பட்ட ‘பரிதாபம்’ அரங்கேறியுள்ளது.
பெண்ணினத்தைப் போற்றினாலும், நம்மை ஈன்றெடுத்து வளர்த்து ஆளாக்கிய தாயையே அனைவரினும் மேலானவராக[“தெய்வத்துக்கு இணையாக...” என்பாரும் உளர்] மதிக்கிறோம்.
நம் தாய்மொழியாம் தமிழையும் அந்தத் தாய்க்குச் சமமாகத்தான் போற்றி வணங்குகிறோம்.
தமிழக வரலாற்றில் நேற்றுவரை[ஸ்டாலின் ஆட்சி முடிவுக்கு வரும்வரை] இதுதான் நடைமுறையாக இருந்தது. தேசியக் கீதத்துக்கு முதலிடம் தரவேண்டும் என்னும் நடுவணரசின் ஆணை பொருட்படுத்தப்படவில்லை. அது விழாவின் இறுதியில் பாடப்பட்டது. நடுவணரசும் கண்டுகொள்ளவில்லை.
நடிகன் விஜய் முதல்வராகப் பதவியேற்ற விழாவில் நம் தாய்மொழி தமிழ் அவமதிக்கப்பட்டுள்ளது[தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட்டிருந்தால் பதவி ஏற்பு விழாவை ஆளுநர் ரத்து செய்திருப்பாரா? வாய்ப்பே இல்லை].
‘பாஜக’வுடன் நட்புக்கொண்டுள்ள ‘அதிமுக’ தலைவர் எடப்பாடி பழனிசாமி முதல்வராகப் பதவி ஏற்றிருந்தாலும்[‘திமுக’வுடன் இணைந்து] தமிழுக்கு இப்படியொரு அவமதிப்பு நேர்ந்திருக்காது என்று நம்புகிறோம்.
தமிழ்நாட்டில் ‘பாஜக’ ஆதிக்கம் செலுத்துவதைத் தடுப்பதற்கென்றே ‘விஜய்’யை ஆதரித்த ‘விசிக’ தலைவர் திருமாவளவன்[என்றும் குறையாத தமிழ்ப் பற்றுடன் 100% தமிழனாக வாழ்பவர்] அவர்கள் விழிப்புணர்வு பெறுவார் என்று எதிர்பார்க்கிறோம்.
ஸ்டாலினுடன் மிக நெருக்கமான உறவு கொண்டுள்ள இந்தியத் தேசிய முஸ்லிம் லீக் கட்சியினருடன் இணைந்து, மே 13 அன்று[‘தவெக’ அறுதிப் பெரும்பான்மையை நிரூபிக்கும் நாள்] செயல்பட்டால், தமிழினத் துரோகி ‘விஜய்’ தமிழை அவமானப்படுத்துவது இனியும் நிகழவே நிகழாது[பதவி பறிபோவதால்].
என்ன செய்யப்போகிறார் தமிழன் திருமாவளவன்?