’வந்தே மாதரம்’ பாடலை அவமதிப்பவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்குவதற்கான மசோதாவை ஒன்றிய அரசு தாக்கல் செய்துள்ளது’ என்பது ஊடகச் செய்தி.
’வந்தே மாதரம் பாடல் தாய்நாட்டை ஒரு தெய்வமாக(The Divine Mother / Shakti> லட்சுமி, சரசுவதி போன்ற பெண் சாமிகளும் அடக்கம்] உருவகப்படுத்தி எழுதப்பட்டுள்ளதால், மதச்சார்பற்ற நாட்டின் கொள்கைகளுக்கு இது முரணாக அமைகிறது’ என விமர்சகர்கள் கருதுகின்றனர்.
விமர்சிக்கப்படுவது மட்டுமல்ல, பிற மதத்தவர்கள்[குறிப்பாக இஸ்லாமியர்> அல்லாவை மட்டுமே தொழுபவர்கள்] இதை எதிர்க்கிறார்கள் என்பதும் அறியத்தக்கது.
சிறுபான்மையினராக இருந்தாலும், கடவுள் நம்பிக்கை இல்லாத நாத்திகர்களும் உடன்படமாட்டார்கள் என்பது உறுதி.
நம் பிரதமர் மோடி அவர்களிடம், ஒரு சமயச் சார்பற்ற குடிமகனாக நாம் முன்வைக்கும் சில கருத்துரைகள்:
நாடு சுதந்திரம் பெற்றதிலிருந்து அரசு நிகழ்வுகளில் தவறாமல் ’ஜனகணமன.....’ பாடுகிறோம். இதனால் இந்தியா என்னும் இந்த நாட்டின் மீதான நம் பற்று தக்கவைக்கப்பட்டுள்ளது என்பது நம் நம்பிக்கை.
நீங்களும் நம்புவீர்கள்.
அப்புறம் எதற்கு இந்த ’வந்தே மாதரம்’ திணிப்பு?
இதை அவமதித்தால் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்படும் என்கிறீர்கள்.
விழாக்களில் கலந்துகொண்டு வாயசைத்து இதைப்[சமஸ்கிருதத்திலும் கொஞ்சம் வங்காள மொழியிலும் எழுதப்பட்டது] பாடாதவர்களுக்குத் தண்டனை வழங்கப்படுமா?
”ஆம்” என்றால், கொடுக்கப்படும் கால அவகாசத்தில் இந்த மொழிகளைக் கற்றுத் தேர்ச்சி பெறாவிட்டாலும் தண்டனை உண்டா?
”உண்டு” என்பதே இந்தி&சமஸ்கிருத வளர்ப்பில் தீராத தாகம்[+மோகம்] கொண்டுள்ள உங்களின் பதிலாக இருக்கும்.
மோடிஜி அவர்களே,
எங்கள் தாய்மொழியான தமிழை நேசிப்பதுடன், இந்தியாவை எங்கள் நாடு என்று போற்றுகிற எங்களையெல்லாம், இந்த[சமஸ்கிருதம், இந்தி, கண்ட கண்ட கடவுள் வழிபாடு]த் திணிப்பை எதிர்த்துப் போராடத் தூண்டி, தண்டனைகள் வழங்கி, சமஸ்கிருதத்தையும் இந்தியையும் வலிந்து எங்கள் மீது திணித்து, எங்களை இரண்டாந்தர நாலாந்தரக் குடிமக்கள்[அடிமைகள்] ஆக்கி, இந்த நாட்டின் முழுமையான சர்வாதிகாரியாக மாற ஆசைப்படுகிறீர்களா?
தமிழர்களின்[+இந்தி பேசாத பிற மாநிலத்தவர்] தலைவிதியும், இந்த நாட்டின் விரும்பத்தக்க/தகாத எதிர்காலமும் நீங்கள் எடுக்கும் முடிவுகளைப் பொருத்தது.
நன்றி மோடிஜி!