பக்கங்கள்

அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

வெள்ளி, 19 ஏப்ரல், 2024

அண்ணாமலை ராஜினாமாவா? ஊஹூம்... அனுமதிக்கவே கூடாது!!!


"கோவையில், பாஜக சார்பில் வாக்குக்குப் பணம் கொடுக்கப்பட்டது என நிரூபிக்கப்பட்டால் நான் அரசியலை விட்டு விலகத் தயார்" என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை  தெரிவித்தார். -by Web Editor

அண்ணாமலை விலகினால்.....
*எதார்த்தம், நடைமுறை சாத்தியம், மக்களின் மதிப்பீடு என்று எதைப் பற்றியும் கவலைப்படாமல் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத தலைவனாகத்("இஸ்ரேல்-ஈரான் போரைத் தடுக்க மோடியால் மட்டுமே முடியும்"-அ.மலை>https://twitter.com/PTTVOnlineNews/status/1780103508185739321)தன்னைத் தலையில் சுமந்து கொண்டாட மோடிக்கு அண்ணாமலை போல் ஒரு தொண்டன் ஒருபோதும் கிடைக்கமாட்டான்.

*‘நீட்’தேர்வுத் திணிப்பை ரத்து செய்யவிடாமல் பாதுகாக்கத் தன் உயிரையே பணயம் வைக்கும் ஒரு தியாகி[அ.மலை] இந்த இந்திய மண்ணில் இனி அவதரிக்கவே மாட்டார் என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்லலாம்.

*தமிழன், தன்மானம் என்றெல்லாம் பேசித் திரியும் குறுமதியாளனாக இல்லாமல், ‘ஒரிஜினல்’ இந்தியனாக வாழும் அண்ணாமலைக்கு நிகரான ஓர் 'இந்தி'யன் இந்தப் புண்ணியப் ‘பாரத்’இல் இனியும் பிறக்க வாய்ப்பே இல்லை.

*தனக்குத் தெரிந்தவை தெரியாதவை பற்றிக் கிஞ்சித்தும் சிந்திக்காமல், எதைப் பற்றியும் எவரைப் பற்றியும் ஏடாகூடமாக விமர்சனம் செய்யும் இவரைப் போன்ற ஒரு பெரும் ‘பிறவி மேதை’யை எங்கே தேடினாலும் கண்டறிவது சாத்தியமே இல்லை.

*“மோடி... மோடி.....” என்று உள்ளிழுக்கும் உயிர்க் காற்றும் மோடி; வெளிவிடும் அசுத்தக் காற்றும் மோடியே. மோடி இல்லாமல் நானில்லை; மண் திணிந்த ஞாலமும் இல்லை” என்று தன்னலமின்றி மோடியைப் போற்றும் உத்தமச் சீடனை அவர் இழந்துவிடக்கூடாது.

மேற்கண்ட காரணங்களால், ‘பாஜக’ சார்பில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கப்பட்டதை நிரூபிக்கும் முயற்சியில் எவரும் ஈடுபட வேண்டாம்[ஈடுபட்டால், அரசியலிலிருந்தே அ.மலை விலகுவார்] என்று மிக்கப் பணிவுடன் அனைவரின் தாள் தொழுது வேண்டுகிறோம்.

வாழ்க தமிழ்நாட்டின் நிரந்தரப் ‘பாஜக’ தலைவர் அண்ணாமலை!