எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

திங்கள், 27 ஜூன், 2016

தலாய் லாமா!...இவர் வழியில் நாம் செல்லலாமா?

தலைப்பு இதுவாயினும், ‘தலாய் லாமா’ குறித்து ஏதும் எழுதுவது இப்பதிவின் நோக்கமன்று. இன்றைய ‘தி இந்து[27.06.2016]’, இவர் பற்றிய சிறு குறிப்புடன், இவர் உதிர்த்த 15 அரிய கருத்துகளைத் தொகுத்து[வணிக வீதி, மூன்றாம் பக்கம்] வழங்கியிருக்கிறது.
அவற்றில் சில, என்னை வியப்பில் ஆழ்த்தின; மகிழ்ச்சிப்படுத்தின; தலாய் லாமா மீதான பதிப்பைப் பன்மடங்கு உயர்த்தின. ஒரு மதத்தின்[புத்தம்] தலைவரான இவர் சொன்ன அவை.....

1. கோயில்க[ள்]ளுக்கு அவசியமில்லை. சிக்கலான தத்துவங்கள் தேவையில்லை. நமது சொந்த அறிவு மற்றும் இதயமே நம் கோயில். கருணையே தத்துவம். இதுவே என் எளிய மதம்.

2. மதம் மற்றும் தியானம் இல்லாமல் நம்மால் வாழ முடியும். ஆனால், மனிதநேயம் இல்லாமல் வாழ முடியாது.

3. நீங்கள் ஒரு குறிப்பிட்ட மதம் அல்லது நம்பிக்கை சார்ந்தவராக இருந்தால் நல்லதே. அது இல்லாமலும் உங்களால் வாழ முடியும்.
00000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000