எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

செவ்வாய், 16 ஏப்ரல், 2013

இந்தியாவில் ‘ஆபாச’ இணையதளங்கள் அதிகரிப்பு! தடை செய்ய வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் மனு!!

``சிறுவர்களைக் கொண்டும் ஆபாசப் படங்கள் எடுக்கப்படுகின்றன! அவர்கள் கெடுவதற்கும் வாய்ப்புள்ளது.``-பொதுநல மனு.

“உங்கள் பதில் என்ன?” -நடுவணரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி.

பாச வலைத்தளங்களின் [இணையதளங்கள்] அசுர வளர்ச்சி பற்றியும், [ஓரளவு புள்ளிவிவரங்களுடன்], 14.04.2013 இல் என் கருத்தைப் பதிவு செய்திருந்தேன்.

அதற்கு வலிமை சேர்ப்பதாக, இன்றைய தினசரிகள் [16.04.2013] சிலவற்றில் ஒரு பொதுநல வழக்கு பற்றிய செய்தி வெளியாகியுள்ளமை அறியற்பாலது.

                   ‘ஆபாச இணையதளங்கள் அதிகரிப்பு
    மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்’

இது, தினமணி நாளிதழில் [16.04.2013] வெளியாகியுள்ள செய்தியின் தலைப்பு.

இந்தியாவில் ஆபாச இணையதளங்களைத் தடை செய்ய வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டதாகவும், அதை விசாரித்த தலைமை நீதிபதி அல்தமஸ் கபீர் தலைமையிலான அமர்வு [bench] இப்பிரச்சினை தொடர்பாகக் கவலை தெரிவித்ததுடன், இதற்குப் பதில் அளிக்குமாறு மத்திய செய்தி, ஒலிபரப்புத் துறை அமைச்சகத்துக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டிருப்பதாகவும் செய்தி வெளியிட்டுள்ளது இத்தினசரி.

பொதுநல மனுவில், ஆபாசத் தளங்களால் விளையும் தீமைகள் குறித்துப் பெரிதும் அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கொசுறுச் செய்தி:  

                 'internet porn wrecking conjugal ties'

இது, THE HINDU நாளிதழில் [APRIL 16, 2013]  வெளியான செய்தியின் தலைப்பு.

pornography பார்த்து உளவியல் ரீதியாகப் பாதிக்கப்பட்ட ஒரு பொறியாளரின் விவாகரத்து வழக்கு பற்றிய செய்தியில் ஓரிரு இடங்களை மட்டும் கீழே தருகிறேன்:

'His is only one of many cases that the Family Court here is hearing: divorce cases set off by excessive or addictive exposure to internet pornography.'

"in more than three years as a Family Court judge, i have seen a number of cases of porn-induced sexual dysfunction in men that resulted unusual and unbearable torture, both physical and mental, to the wives" says T.C.S Raja Chockalingam, Judge of the Family Court here. 

இவற்றுடன், தரப்பட்டுள்ள பிற தகவல்களையும் நீங்கள் படித்திருக்கக்கூடும் என்று நினைக்கிறேன்.

தங்களின் வருகைக்கு நன்றி.

00000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000








எச்சரிக்கை! இது ஒரு ’மரண மொக்கை’ப் பதிவு! தயவு செய்து இதைப் படிக்க வேண்டாம்!!

என் அண்மைப் பதிவொன்றுக்குப் பின்னூட்டம் இட்ட ஒரு 'unknown', என்னைப் பற்றி, ‘ஹிட்ஸ் வெறியன்’ என்று குறிப்பிட்டிருந்தார்! அவரைத் திருப்திபடுத்தவே இந்தப் பதிவு!!

[`0`ஹிட்ஸ் பெற்றுச் சாதனை படைக்கவிருக்கும் பதிவு இது!!!]

கதைத் தலைப்பு:                        உணர்தல்

லட்சோபலட்சம் மக்களால், ‘கடவுள் அவதாரம்’ என்று போற்றப்படும் அந்த மகான், அலங்கரிக்கப்பட்ட அரியணையில் வீற்றிருந்தார்.

அவரைச் சுற்றி ‘அரண்’ அமைத்தது போல அவரின் முரட்டு சீடர்கள்.

அருளாசி பெறக் காத்திருந்த மக்கள் வெள்ளம் அரங்கில் நிரம்பி வழிந்தது.

மகான் இன்னும் திருவாய் மலர்ந்தருளவில்லை; யாருடைய வரவுக்காகவோ காத்திருப்பதுபோல் தெரிந்தது.

மக்கள் வெள்ளத்தை ஊடுருவிக்கொண்டு உள்ளே நுழைந்தான் அந்த மனிதன். பலமுறை வேண்டுகோள் வைத்து, மகானைச் சந்திக்கச் சிறப்பு அனுமதி பெற்றவன் அவன்.

நெடுஞ்சாண்கிடையாக ஒரு முறை மகானின் திருப்பாதங்களில் விழுந்து எழுந்தான்.

சொன்னான்: “தங்களைப் போன்ற மகான்கள் கடவுள் என்று ஒருவர் இருப்பதாகச் சொல்கிறார்கள். மக்களும் நம்புகிறார்கள். அந்தக் கடவுளை அற்ப ஜீவிகளான என் போன்றவர்களுக்குக் காட்ட முடியுமா?” என்றான்.

“காட்ட முடியாது; ஐம்புலன்களால் அறியவும் முடியாது. ஆறாவது அறிவால் உணர மட்டுமே முடியும்” என்றார் மகான்.

“கடவுளின் ஒரு கூறான ஆன்மாவை...?”

“உணர மட்டுமே முடியும்.”

“கடவுளை உணரத்தான் முடியும் என்கிறீர்கள். தங்களைப் போன்ற மகான்களால்கூடவா பிறருக்கு உணர்த்த முடியாது?”

“யாரும் யாருக்கும் உணர்த்த முடியாது. அவரவர் ஊணர்வது மட்டுமே சாத்தியம்.”

“கடைசியாக ஒரு கேள்வி. தாங்கள் கடவுள் இருப்பதை உணர்ந்திருக்கிறீர்கள்தானே?”

“நிச்சயமாக.”

“தாங்கள் உணர்ந்திருக்கிறீர்கள் என்பதை என்னைப்போன்ற சாதாரண மனிதர்கள் உணர்ந்து நம்புவது எப்படி மகானே? நம்பினால்தானே தங்களை மகான் என்று ஏற்றுக்கொள்ள முடியும்?” என்றான் அந்த மனிதன் வெகு பவ்வியமாக.

மகானின் வதனம் சிவந்தது; உதடுகள் துடித்தன.

“நீ ஒரு குதர்க்கன்...கசடன்...நாத்திகன்...சாத்தானின் வாரிசு. கடவுள் உன்னைத் தண்டிப்பார்.”

அவர் சொல்லி முடிக்கும் முன்னரே, பக்த கோடிகள் அந்த மனிதனின் மீது பாய்ந்தார்கள்.

ஆக்ரோஷமாய்த் தாக்கினார்கள்; ஆடை கிழித்துத் தரையில் தள்ளிப் புரட்டியெடுத்தார்கள்; அவனின் உடம்பெங்கும் வீக்கங்கள்; ரத்தக் காயங்கள்.

“தொலையட்டும்... அவனை உயிர் பிழைத்துப் போக விடுங்கள்” என்றார் மகான்.

பிறந்த மேனியாய்த் தள்ளாடியபடியே வெளியேறினான் அந்த மனிதன்!

##############################################################################################################################

‘மரண மொக்கை’ என்பதற்கு என்னால் விளக்கம் தர இயலாது. அது unknown' க்கு மட்டுமே சாத்தியம்.

###################################################################################