எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

ஞாயிறு, 17 ஏப்ரல், 2022

ஆடவர் குலத்துக்கு அடிமேல் அடி!!!

'ஆண்களின் 'விந்து'வில் உள்ள அணுக்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டிருக்கிறது' என்பது நாம் ஏற்கனவே அறிந்த செய்தி. அது எந்த அளவிற்கு என்பதை நாம் அறிந்திருக்கவில்லை.

இது குறித்துச் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் ஆண்கள் 30 வயதை எட்டிய பிறகு, அடுத்தடுத்து வரும் ஒவ்வொரு ஆண்டும் அவர்களிடம் ஒரு சதவிகித ஆண்மை[பாலுறவுக்கானது]  குறைவதாகவும், சில ஆண்களில் இந்த ஆண்மைக் குறைவு 35 வயதிற்குமேல் தொடங்குவ தாகவும் கண்டறியப்பட்டு உள்ளது.

விந்தணுக்களை[Sperm]ப் பெண்ணின் கருப்பையை நோக்கிச் சுமந்து செல்லும் விந்துத் திரவம்[Seminal fluid... அதாவது, உறவை எளிதாக்கும் 'காமநீர்'] சுரப்பதும் ஆண்டுதோறும் குறைந்துவருகிறது என்பது கூடுதல் செய்தி.

இந்தத் திரவம் 25வயதிலேயே ஆண்களுக்கு குறைய ஆரம்பிக்கிறது என்பது மிகப் பெரிய சோக நிகழ்வாகும். ஆண்கள் 55வயதை அடையும்பொழுது, அவர்தம் உடலில் இருந்து 50சதவிகிதம் குறைந்துவிடுவதாகவும் ஆய்வு முடிவுகள் அபாய அறிவிப்புச் செய்கின்றன. 

விந்துத் திரவம் மட்டுமல்ல, ஆண் குழந்தை உற்பத்திக்குக் காரணமான, ஆணின் 'y'[பெண்ணின் x குரோமோசோமும், ஆணின் y குரோமோசோமும் இணைந்தால்தான் ஆண் குழந்தை உருவாகும்] குரோமோசோம்[Chromosome] எண்ணிக்கையும் குறைந்துகொண்டே வருகிறதாம்.

காலப்போக்கில் 'y' யின் உற்பத்தி அடியோடு நின்றுவிடும் ஆபத்தும் உள்ளது என்கிறார்கள்.

இது, காலங்காலமாகப் பெண்ணை அடிமைப்படுத்திவரும் ஆண் வர்க்கத்தைப் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் தகவலாகும்.

ஆண்கள் பாவம்! 

==========================================================================

கற்பனைக் குரங்கும் ஜெயந்தி விழாக் கலவரமும்!!!

நாடு முழுவதும் நடைபெறும் அனுமன் ஜெயந்திக் கொண்டாட்டங்களுக்கு மத்தியில், மகாராஷ்டிராவில் உள்ள ஒரு குக்கிராம மக்கள் குரங்குக் கடவுளுடனான அனுமனை[கிராம மக்களே 'குரங்குக் கடவுள்' என்றுதான் சொல்கிறார்கள்] வணங்குவதில்லை; தங்கள் குழந்தைகளுக்கு 'மாருதி' என்று பெயர் வைப்பதில்லை; மாருதிக் கார்களை வாங்குவதில்லை. மாருதி வாகனத்தை வாங்கும் எவருக்கும் துரதிர்ஷ்டம் ஏற்படும் என்று அவர்கள் நம்புகிறார்கள்.

மகாராஷ்டிராவில் உள்ள அஹமத்நகரில் இருந்து 70 கிமீ தொலைவில் உள்ள 'தைத்யானந்தூர்' என்னும் கிராமத்தில் வசிக்கும் மக்கள் இவர்கள்.

இந்த மக்கள் வழிபடுவது 'நிம்ப தைத்யா' என்ற ராட்சசரைத்தான்[அந்தக் கிராமத்தில் அனுமன் குரங்குக்குக் கோவில்கள் இல்லை. கிராமத்தில் உள்ளவர்கள் ஹனுமான் பற்றிப் படிப்பதில்லை. குரங்குத் தெய்வத்தின் சிலைகளோ படங்களோ அங்கு இல்லை. குரங்கின் பெயர் கொண்ட மாருதிக் காரைக்கூட அவர்கள் வாங்குவதில்லையாம்].

இதற்கும் ஒரு புராணக் கதை உண்டு. 

'தண்டகாரண்யத்தில் அனுமன் சீதையைத் தேடி அலைந்தபோது ஒரு ராட்சசனுடன் சண்டையிட நேர்ந்தது.

சண்டை நீடித்தபோது ஒரு கட்டத்தில் இருவருமே களைத்துப்போனார்களாம்.

இருவருமே ராமபிரானின் திருநாமத்தை உச்சரித்து வழிபட்டார்களாம்.

அவர்களுக்கு நேரில் காட்சியளித்த ராமர், "தண்டகாரண்யத்தில் 'நிம்ப தைத்தியா' என்னும் அந்த ராட்சசன் மட்டுமே வழிபடப்பட வேண்டும்" என்று சொல்லி மறைந்தாராம்.

இங்கே கவனிக்கத்தக்கது, அனுமன் என்னும் குரங்குப் பக்தனை வழிபடுமாறு ராமன் சொல்லவில்லை என்பது.

இதைப் புரிந்துகொண்ட கிராம மக்கள் ராட்சதனை மட்டுமே வழிபடுகிறார்கள்.

வால்மீகியின் கற்பனைப் படைப்பான குரங்கை வழிபடும் மூடத்தனம் நாடெங்கும் பரப்பப்பட்டுவிட்டது. ஆண்டுதோறும் அனுமன் ஜெயந்தி வேறு கொண்டாடுகிறார்கள்.

நேற்று டெல்லியில் நடந்த விழாவில் நடந்த இந்து-ரோகிங்கியா முஸ்லீம்' மோதல் கலவரமாக மாறிப் பெரும் சேதத்திற்கு வித்திட்டிருக்கிறதுClashes broke out between members of two communities in Delhi’s Jahangirpuri area after stones were allegedly pelted at a Hanuman Jayanti procession called ‘Shobha Yatra’.Delhi Commissioner of Police told CNN-News18that strict action will be taken against the rioters once the situation is brought under control. “Our first priority is to bring the situation under control…but strict action will be taken against rioters,” he said.#HanumanJayanti #DelhiNews #HanumanJayantiShobhaYatra #Shorts.https://www.msn.com/en-in/video/news/hanuman-jayanti-shobha-yatra-clashes-erupt-in-delhi-hanuman-jayanti-delhi-news-shorts/vi-AAWhVyA?ocid=msedgdhp&pc=U531&cvid=33eabe731b6c4eb7abf52442264681ca

ஒட்டுமொத்தப் பிரபஞ்சத்தையே துருவித் துருவி ஆராயும் அளவுக்குச் சிந்திக்கும் அறிவு வளர்ந்துவிட்ட நிலையிலும், ஒரு கற்பனைக் குரங்குக்கு ஜெயந்தி விழாக் கொண்டாடுவதும், கலவரத்தைத் தூண்டுவதும் சகிக்கவே இயலாத காட்டுமிராண்டித்தனம் ஆகும்.

நாட்டை ஆளுபவர்கள் நினைத்தால் மட்டுமே இம்மாதிரி அட்டூழியங்களைத் தடுத்து நிறுத்திட முடியும்!

==========================================================================

https://www.msn.com/en-in/news/india/no-hanuman-chalisa-or-temples-people-in-this-maharashtra-village-worship-a-rakshasa/ar-AAWhRwK?ocid=msedgdhp

அனுமன் ஜெயந்தி... கலவரக் காணொலி: