பக்கங்கள்https://kadavulinkadavul.blogspot.com/p/blog-page_1.html
- 'பசி'பரமசிவம்
- அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.
சனி, 4 அக்டோபர், 2025
மோடியின் ஓய்வில்லாத உலக[கனடா உட்பட]ச் சுற்றுலாவும் பயன்களும்?!
வீடு மறந்து, நாடு துறந்து, ஓய்வில்லாமல், விதம் விதமாய் ஆடம்பர உடையணிந்து மோடி உலகம் சுற்றியது பிற நாட்டுத் தலைவர்களுடன் கைகுலுக்கவும், இறுக்கமாகக் கட்டித் தழுவவும், புன்சிரித்துப் புகைப்படம் எடுத்துக்கொள்ளவும், விருந்துண்ணவும்தானா? இவற்றால் நம் மக்கள் பெற்றப் பயன்கள் என்ன[நன்மைகளா, தீமைகளா?] என்றெல்லாம் நம் மனதில் கேள்விகள் எழுந்தன கீழே இடம்பெற்றுள்ள அவலச் செய்தி[+காணொலிகள்> கீழே]யை வாசித்தறிந்தபோது.
வாசியுங்கள்; சிந்தியுங்கள்.
கனடாவில், இந்தியர்களுக்கும் ஹிந்துக்களுக்கும் எதிரான தாக்குதல்கள்[ஹிந்துக் கோவில்கள் மீதும் நடத்தப்படுகின்றன; காலிஸ்தான் ஆதரவு அமைப்புகள் இந்தியர்களுக்கு எதிராகச் செயல்பட்டுவருகின்றன; இந்தியர்களுக்கு எதிரான வெறுப்புணர்வு வாசகங்களை எழுதப்படுகின்றன] தொடர்ந்து நடத்தப்படுகின்றன. பாதுகாப்புக் கருதி அங்குள்ள திரையரங்குகள் இந்தியத் திரைப்படங்களைத் திரையிடுவதைத் தற்காலிகமாக நிறுத்தியுள்ளன[dinamalar.com].
* * * * *