எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

புதன், 29 நவம்பர், 2017

'காலை மலர்' தளத்துக்கு நன்றி!

ஜூன் 20,2016இல் என் பதிவை எடுத்தாண்டதுடன் மே 12, 2017இல் புதுப்பித்துள்ளது[சற்று முன்னர்தான் இதை அறிய நேர்ந்தது].  'காலை மலர்' தளத்துக்கு என் மனம் நிறைந்த நன்றி.














‘தி இந்து’[19.06.2016] வின் மூடநம்பிக்கை திணிப்பு['காலை மலர்' கொடுத்த தலைப்பு]

‘தி இந்து’[19.06.2016]வில் நான் படித்து நொந்த ஒரு செய்தி!!! http://kadavulinkadavul.blogspot.com/2016/06/19062016.html

.கீழே ஒரு படம் இணைத்திருக்கிறேன். அதைக் கூர்ந்து நோக்குங்கள். 
13427731_259793664387374_1859389908559154847_n
.உங்களுக்குத் தெரிவது என்னவாகவோ இருக்கட்டும். என்னைப் பொருத்தவரை அது வெறும் பாறை மட்டுமே.
.
இப்போது படத்தின்[தி இந்து,19.06.2016] கீழே இடம்பெற்றுள்ள குறிப்புரையைப் படியுங்கள்.
.
‘பாறையில், பார்ப்பவர்களை ஆச்சரியப்படுத்தும் வகையில் இயற்கையாக அமைந்துள்ள[து] பெருமாள் திருவுருவம்’ என்கிறார் மகேஷ்குமார் என்னும் அன்பர்.
.
கண்கள் இல்லை; புருவங்களைக் காணோம். உருக்குலைந்த மண்டை; சீரற்ற மூக்கு. இதுதான் பெருமாளின் திருவுருவமா? பாவம் பெருமாள்.
.
காணுகிற பொருளிலெல்லாம் தனக்கு உவப்பானவரின் உருவத்தை ஏற்றிப் பார்ப்பது ஒருவித மன நோய். இந்நோய்க்கு அதீத கடவுள் பக்தியும் ஒரு காரணம்.
.
வானத்தில் மிதக்கும் கருமேகக் சிதறல்களிலும், காரை பெயர்ந்த சுவரில் தென்படும் கோணல்மாணல்களிலும் யானை குதிரை போன்றவற்றின் உருவங்களைப் பொருத்திப் பார்ப்போமே, அது போலத்தான் இதுவும்.
.
வடிவம் சிதைந்த பாறையைப் பெருமாளின் உருவம் என்று நம்பிய மகேஷ், அந்த நம்பிக்கையை ‘தி இந்து’ மூலமாக பிறர் மனங்களிலும் திணிக்க முயன்றிருக்கிறார். மூடநம்பிக்கைத் திணிப்பு.
.
அன்பர் மகேஷ்குமாருக்கு ஒரு வேண்டுகோள்.
.
மீண்டும் ஒருமுறை, ‘நான் ஆறறிவு படைத்த ஒரு மனிதன்’ என்னும் நினைப்புடன் பாறையை உற்றுப் பாருங்கள். பெருமாளுக்குப் பதிலாக உயரமான கற்பாறையைக் காண்பீர்கள்.
.
மகேஷ்குமாருக்கு மட்டுமல்ல, ஏனைய பக்தகோடிகளுக்கும் நாம் சொல்லிக்கொள்ள விரும்புவது…..
.
கல்லை நோக்கும்போது அது கல் என்பதை உணருங்கள். மண்ணை மண்ணாக உணருங்கள்.
.
கண்ணில் காணும் பொருளையெல்லாம் இம்மாதிரி கடவுளாக உருவகம் செய்யும் பழக்கத்தை விட்டொழியுங்கள்.
.
இது உங்களின் அறிவு வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடும் என்பதை நம்புங்கள்; உங்களின் அதீத கடவுள் பக்தி மிகவும் ஆபத்தானது என்பதையும் ஆழ்மனதில் பதித்திடுங்கள்.
.
நன்றி.
.
‘பசி’பரமசிவம்
Posted by ‘பசி’பரமசிவம் at 6/19/2016 05:48:00 PM
.
கடவுளின் கடவுள் பிலாக்ஸ்பாட்.
ஆதாரம்: http://kadavulinkadavul blogspo