எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

ஞாயிறு, 17 ஜூலை, 2022

'ஜின்பிங்' இன்று சொன்னார்! 'மோடி' என்று சொல்வார்?!


"நாட்டில்[சீனா] உள்ள மதங்கள், ஆளும் சீன கம்யூனிஸ்ட் கட்சியால் பின்பற்றப்படும் சோசலிச சமூக அமைப்புக்கு ஏற்பத் தகவமைத்துக் கொள்ளுதல் வேண்டும்" என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ஜி ஜின்பிங், "சீனாவில் இஸ்லாமியர் நோக்குநிலையில் சீனராக இருத்தல் வேண்டும்" என்றும் கூறியுள்ளார்[Breaking news coming in from China as President Xi Jinping directed the officials to beef up efforts to support the principle that Islam in China must be Chinese in orientation and that every religion in the country should adapt to the socialist society pursued by the ruling party. Watch the video to know more in detail!#uighyurmuslims #china] #worldnews   - Jul 17, 2022 | (timesnownews.com)

தன் நாட்டு மக்கள் அனைவரும் இனப்பற்று உள்ளவராக, அதாவது, சீன இனத்தவராக இருத்தல் வேண்டும் என்பதே அவரின் நோக்கம். ஒருவர் புத்த மதத்தவரா, இஸ்லாமியரா பிறிதொரு மதத்தவரா என்பது இரண்டாம்பட்சம்[மதச் சார்பு இல்லாதவருக்கும் இனப்பற்று அவசியத் தேவை].

சீனாவைப் போல் பிற நாட்டு ஆட்சியாளர்களும் இப்படியொரு அறிவிப்பை வெளியிடுவது சாத்தியமா?

மற்ற நாடுகள் எப்படியோ, இந்தியப் பிரதமர் 'நரேந்திர மோடி' அவர்கள் விரும்பினால்  இங்குள்ள இஸ்லாமியரையும் கிறித்தவரையும் பஞ்சாபியரையும், பிற மதத்தவரையும் விளித்து, "நீங்கள் முதலில் இந்தியராக இருங்கள். நமக்கு நம் இனம்தான்[இந்திய இனம். இதில் தமிழினமும் தெலுங்கர் இனமும் இன்ன பிற இனங்களும் உள்ளன] முக்கியம்; மதங்களெல்லாம் அப்புறம்" என்று சொல்வார் என்று நம்பலாம்.

அவர் அப்படிச் சொன்னால் அது பெரிதும் வரவேற்கத்தக்கது. அதே வேளையில்.....

இந்துமதச் சார்புள்ளவர்கள் மட்டுமல்லாமல், அதிலுள்ள வெறியர்களையும் விளித்து, "நாம் அனைவரும் 'இந்திய இனத்தவர்' என்பதுதான் முக்கியம். இந்து மதத்தவர் என்பது இரண்டாம்பட்சம். இனி மத வெறியுடன் பிற மதத்தவர் மீது தாக்குதல் நடத்துவதைக் கைவிடுங்கள்" என்று வலியுறுத்திச் சொல்வாரா?

அவர் சொல்லி, அனைத்து மதம் சார்ந்தவர்களும், அனைத்து மத வெறியர்களும் அவர் சொல்லுக்குக் கட்டுப்பட்டு நடந்துகொண்டால்.....

சீனாவைப் போல், அல்லது சீனாவைவிடவும் அறிவியல், தொழில்நுட்பம் என்று பல துறைகளிலும் இந்தியா வெகு வேகமாக முன்னேறும்.
===============================================================================================

'கலி'காலம்டா சாமி!!![பொழுதுபோக்கு]

கீழே படத்தில் இருக்கிற பொம்மணாட்டிக்குச் சொந்த ஊர் கேரள மாநிலமத்தின்'கண்ணூர் சோலையாடு'. பெயர் ஷைலஜா[வயசு 34].

இவர் சிறுவயதாக இருக்கும்போது இவருடைய முகத்தில் அதிக அளவு முடி வளர்ந்ததாம்; அக்கம் பக்கத்தாரெல்லாம் கேலி செஞ்சாங்களாம். ஆரம்பத்தில் வருத்தப்பட்டாலும் அப்புறம் பழகிப்போச்சாம்.

பெரிய மனுஷி ஆனதுக்கப்புறம் பாலக்காட்டைச் சேர்ந்த லட்சுமணனுக்கும் இந்த அம்மணிக்கும் திருமணம் நடைபெற்றது.

அப்புறம், திருப்பூர் பனியன் தொழிற்சாலையில் வேலைக்குச் சேர்ந்தார். 

அப்புறம்.....

"அப்புறம் என்ன, குழந்தை பெத்துகிட்டாங்க, பொண்ணா பொறந்துடிச்சேன்னு வருத்தப்பட்டாங்க"ன்னு வெட்டிக்கதை சொல்லப்போறியான்னு கேட்குறிங்கதானே?

இல்லீங்க, நீங்க நினைக்கிற மாதிரியெல்லாம் இல்ல; நடந்ததே வேறு; நீங்க கொஞ்சமும் எதிர்பாராதது.

திருப்பூரில் வேலைக்குச் சேர்ந்ததிலிருந்தே மீசை வளர்க்க ஆரம்பிச்சுது இந்த அம்மா. அதுவும் அட்டகாசமான அழகு மீசை. படத்தைப் பாருங்க.

பாலின பாகுப்பாட்டை உடைத்தெறிந்த திருமணமான பெண்! குடும்பத்தினரும் உறுதுணையாக ஆதரவு | Meeshakari Shaija Kerala Women With Musthache

இப்போது இந்தப் பகுதியில் உள்ள பெண்கள்கூட ஷைலஜா மாமி வளர்க்கும் மீசையைப் புகழ்ந்துதள்ளுறாங்க;  மீசை வளர்ப்பதற்கு ஆதரவும் அளிக்கிறாங்க. கேலி பேசிய ஆண்கள்கூட வாய் வலிக்கப் பாராட்டுறாங்களாம்.

ஒட்டுமொத்தத் திருப்பூரே 'மீசைக்காரி ஷைலஜா' பற்றியே பேசுது. இவங்களைத் தெரியாதவங்களே இல்ல. ஏன், இந்தப் புரட்சிப் பெண்மணியோட புருசனே ஆதரவு தெரிவிச்சுட்டாராம்; மீசை வளர்ப்பு பற்றி விதம் விதமா அலோசனைகள் தர்றாராம்.

முகத்தில் உள்ள ரோமங்கள் நீங்கச் சிறிதளவு கஸ்தூரி மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு பால் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து சருமத்தில் இருக்கும் ரோமங்கள் மீது தடவி, சிறிது நேரம் கழித்து, முகத்தைக் குளிர்ந்த நீரால் கழுவினால் போதும், முடி காணாமப் போயிடும்.

கால் கப் கடலை மாவு, கால் கப் தேன், ஒரு கப் தண்ணீர் மற்றும் இரண்டு ஸ்பூன் எலுமிச்சைச் சாறு என்று நான்கையும் ஒன்றாகப் பேஸ்ட் போல் கலந்து முகத்தில் சீராகத் தடவினால் முடி நீங்கிடும்.

ஒரு முட்டையின் வெள்ளைப் பகுதி, ஒரு ஸ்பூன் சர்க்கரை, அரை ஸ்பூன் மக்காச்சோள மாவு ஆகியவற்றை ஒன்றாகப் பேஸ்ட் போல் கலந்து முகத்தில் தடவி அரை மணி நேரம் காத்திருந்தால் ரோமம் இருந்த இடம் தெரியாமல் மறையும்.

இப்படி எத்தனையோ இயற்கை வைத்தியங்கள் இருக்கு.

அதில்லாம,  பிளக்கிங், வேக்ஸிங், ஷேவிங் என்று ஏதேதோ செய்கிறார்கள்.

மேலும், ஏகப்பட்ட லோசன் அது இதுன்னு நிறையச் சாதனங்கள் இருக்கும் நிலையில் இந்த அம்மையார் இப்படி மீசை வளர்ப்பது ஒரு புரட்சிகரமான செயல்னு நமக்குத் தோணுது["பொண்ணுன்னா, முகம் பளிச்சின்னு வழவழா தளதளா பளபளான்னு இருந்தாத்தான் மூடு வரும்"னெல்லாம் ஆண்கள் முணுமுணுக்காதீங்க}.

இதைக் 'கலியுகப் புரட்சி'ன்னு சொல்லலாமா?

மீசை வளர்த்தாப் போதாது. கூந்தலை வெட்டி எடுத்துட்டுக் 'கிராப்' வைத்துக்கொள்ளலாம். காதுல உள்ள தொங்கட்டானைக் கழட்டிடலாம். கழுத்தில் வடக்கயிறு போல் தடித்த சங்கிலி மாட்டிக்கலாம். மேலும், தாடி முளைக்கும்னா, வளர்த்து 'ட்ரிம்' பண்ணிட்டுக் கம்பீரமா ஒரு ஆண்பிள்ளையா நடமாடலாம். எந்தவொரு காலிப்பயலும் நெருங்கிவந்து தொட்டுப் பேசப் பயப்படுவான். 

செய்வாரா ஷைலஜா?

===================================================================================

ஆதாரம்: https://news.lankasri.com/article/meeshakari-shaija-kerala-women-with-musthache-1657963282?itm_source=parsely-api