எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

ஞாயிறு, 13 ஏப்ரல், 2025

அந்த ‘ஜந்து’வைத் திருத்துவது தன்மானத் தமிழர்களின் கடமை!!!

சனிக்கிழமையன்று மதுரைக் கல்லூரி ஒன்றில் மாணவர்களிடையே உரையாற்றிய அந்த ‘ஜந்து’, ​​இந்துக் கடவுள் ராமருக்கு அஞ்சலி செலுத்துமாறு அழைப்பு விடுத்தது.

அது "ஜெய் ஸ்ரீ ராம்" என்று சொல்ல,  மாணவர்களும் “ஜெய் ஸ்ரீராம்” என்று முழக்கமிட்டார்கள்’ -இது ஊடகச் செய்தி.

உச்ச அதிகாரம் படைத்தவர்கள் கண்டித்தும் திருந்தாமல், தொடர்ந்து அந்த ஜந்து திமிர்த்தனமாய் நடந்துகொள்வதற்குக் காரணமாக இருக்கும் அந்த ‘இரட்டையர்கள்’ யாவர் என்பது தமிழ் மக்களுக்குத் தெரியும்.

மக்கள் மனம் வைத்தால் மட்டுமே அந்த நச்சுப் பாம்பு திருந்தும்; அதை ஆட்டுவிக்கும் அந்த அடாவடியர்களும் திருந்துவார்கள்! 

'சப்கா சாத், சப்கா விகாஸ்'... “இந்த மந்திரம் நம் நாட்டின் கொள்கை” -மோடி!!!

வெள்ளிக்கிழமையன்று தனது பயணத்தின்போது, ​​பிரதமர் மோடி இசாகரில் உள்ள ஸ்ரீ பரமஹன்ஸ் அத்வைத் மந்திர் மற்றும் குருஜி மகாராஜ் கோவிலில் பிரார்த்தனை செய்தார்[ஊடகச் செய்தி].

மோடி இந்த இடத்தை, “அழியாத ஞானத்தை வெளிப்படுத்தும் ஆன்மீக மையம்” என்றார்.

மந்திரில் இருப்பதை உண்மையிலேயே பாக்கியமாக உணர்கிறேன்” என்றும் பெருமிதப்பட்டிருக்கிறார்[இந்த நாட்டின் பிரதமராக இருப்பதை அவர் பாக்கியமாகக் கருதவில்லை?]

அவர் கோயில் வளாகத்தையும் சுற்றிப் பார்த்தார்.

“ஸ்ரீ பரமஹன்ஸ் அத்வைத் மடத்துடன் தொடர்புடைய அனைவரும் ஆன்மீகப் பாரம்பரியத்தை வளர்ப்பதற்குப் பங்களித்துள்ளனர்” என்று மடத்துடன் தொடர்புடையவர்களைப் பாராட்டினார்.

ஆனந்த்பூர் தாமில் நிறுவப்பட்ட தியானத்தின் ஐந்து வழிகாட்டும் கொள்கைகளை[தியானமாம். அதில் ஐந்து கொள்கைகளாம். நம்புங்கய்யா]ப் பற்றி அவர் பேசினார்.

இந்த இடத்துடன் தொடர்புடைய துறவிகள் மற்றும் முனிவர்களின் போதனைகளையும் மரபுகளையும் பிரதமர் பாராட்டினார்.

"நமது இந்தியா, நமது சமூகம், ஒரு கடினமான கட்டத்தைக் கடந்து செல்லும் போதெல்லாம், இந்தப் பூமிக்கு வந்து[இவர் கடவுளால் அனுப்பப்பட்டு இங்கு வந்தது போல்] சமூகத்திற்கு ஒரு புதிய திசையை[???] வழங்குகிறார்கள்" என்று அவர் கூறியிருக்கிறார்.

"'சப்கா சாத், சப்கா விகாஸ்' என்ற மந்திரம்... எங்கள் அரசாங்கத்தின் கொள்கை[!?!?!]" என்று உலகறியப் பறைசாற்றியிருக்கிறார்.

ஒரு ‘மந்திரம்’ ஒரு பெரிய நாட்டிற்கான கொள்கையா?

ஒரு மந்திரத்தை நாட்டின் கொள்கையாக அறிவித்த முதல் பிரதமர் உலகில் இவராகத்தான் இருக்கமுடியும்.

இந்த நாட்டின் கதி?!