“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

ஞாயிறு, 13 ஏப்ரல், 2025

அந்த ‘ஜந்து’வைத் திருத்துவது தன்மானத் தமிழர்களின் கடமை!!!

சனிக்கிழமையன்று மதுரைக் கல்லூரி ஒன்றில் மாணவர்களிடையே உரையாற்றிய அந்த ‘ஜந்து’, ​​இந்துக் கடவுள் ராமருக்கு அஞ்சலி செலுத்துமாறு அழைப்பு விடுத்தது.

அது "ஜெய் ஸ்ரீ ராம்" என்று சொல்ல,  மாணவர்களும் “ஜெய் ஸ்ரீராம்” என்று முழக்கமிட்டார்கள்’ -இது ஊடகச் செய்தி.

உச்ச அதிகாரம் படைத்தவர்கள் கண்டித்தும் திருந்தாமல், தொடர்ந்து அந்த ஜந்து திமிர்த்தனமாய் நடந்துகொள்வதற்குக் காரணமாக இருக்கும் அந்த ‘இரட்டையர்கள்’ யாவர் என்பது தமிழ் மக்களுக்குத் தெரியும்.

மக்கள் மனம் வைத்தால் மட்டுமே அந்த நச்சுப் பாம்பு திருந்தும்; அதை ஆட்டுவிக்கும் அந்த அடாவடியர்களும் திருந்துவார்கள்!