எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

சனி, 11 மார்ச், 2023

"அப்படிப் போடு ராஜா!”... கன்னட[கர்னாடகா] சகோதரருக்கு நம் பாராட்டுகள்!!

தன்னுடைய ஆட்டோவில் ஏறிய பயணிகள் கன்னடத்திற்குப் பதிலாக இந்தியில் பேசியதால் உணர்ச்சிவசப்பட்ட ஆட்டோ ஓட்டுநர், இந்தியில் பேசுமாறு கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிகழ்வு குறித்த காணொலி ஒன்று இணையத்தில் உலா வருகிறது.

இந்தக் காணொலி[வீடியோ] இப்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. இது கர்நாடகாவில் சரியாக எங்கே நடந்தது என்று துல்லியமாகத் தெரியவில்லையாம். 


“இது பெங்களூரில்தான் நடந்தது” என நெட்டிசன்கள் கூறுகிறார்களாம்.


இந்த வீடியோவில் ஆட்டோ டிரைவர், "இது கர்நாடகா. நீங்கள் கன்னட மொழியில்தான் பேச வேண்டும். நான் ஏன் இந்தியில் பேச வேண்டும்?" என்று கூறுகிறார்[அதைப் பயணம் செய்த பெண் பயணிகள்தான் வீடியோவாக எடுத்துள்ளனர்]. 


இரு தரப்புக்கும் எப்படி, ஏன் இந்த வாக்குவாதம் தொடங்கியது என்பது தெரியவில்லை. எனினும், டிரைவர் பேசத்தொடங்கிய பிறகு உள்ள காட்சிகள்தான் சுற்றி வருகின்றன.


ஓட்டுநர் கன்னடத்தில் பேசச் சொல்ல, ஒரு பெண் பயணி, "முடியாது.. நாங்கள் கன்னடத்தில் பேச மாட்டோம்" என்று கூறியதோடு, டிரைவரிடம், "நாங்கள் ஏன் கன்னடத்தில் பேச வேண்டும்" என்று கேட்கிறார்.


அதற்கு அந்த ஆட்டோ ஓட்டுநர், "நீங்கள் வட இந்தியர்கள், இது எங்கள் நிலம்; உங்கள் நிலம் அல்ல. இங்கு நீங்கள் கன்னடத்தில் பேச வேண்டும். அதைவிட்டுவிட்டு என்னை ஏன் இந்தியில் பேசச் சொல்கிறீர்கள்? நான் ஏன் இந்தியில் பேச வேண்டும்" என்று கேட்கிறார்[பயணிகள் தமிழராயிருந்து, தமிழில் பேசச் சொல்லியிருந்தாலும் -தெரிந்தால் பேசுங்கள் என்று கேட்பதில் தவறில்லை- ஓட்டுநர் இதே பதிலைத்தான் சொல்லியிருக்க வேண்டும்]. இது காணொலியில் பதிவாகியுள்ள தகவல்கள்.


எது எப்படியோ, இந்தித் திணிப்புக்குக் கர்னாடகாவில் ஓர் ஆட்டோ ஓட்டுநர் எதிர்ப்புத் தெரிவிப்பது, இந்தித் திணிப்பை விரும்பாத அனைத்துத் தரப்பினருக்கும் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்வே.

https://tamil.oneindia.com/news/bangalore/why-i-should-speak-hindi-heated-argument-between-karnataka-auto-driver-passenger/articlecontent-pf877687-502513.html

===========================================================================================

ஹோலிப் பண்டிகையா, காலிகள் நடத்தும் காமக்கூத்தா?!

சந்த காலத்தை வரவேற்கும் விதமாக இந்தியாவின் வட மாநிலங்களில் ஹோலிப் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறதாம்.

இந்த ஆண்டு ஹோலி மார்ச் 8ஆம் தேதியான மகளிர் தினத்தன்று தொடங்கியது. மக்கள் ஒருவர் மீது மற்றொருவர் கலர்ப் பொடிகளைத் தூவியும், பூசியும் கொண்டாட்டத்தைத் தொடங்கி வைத்தார்களாம்.


அப்புறம் என்னவெல்லாம் நடந்தது?


கலர் பவுடர்களைப் பூசுகிறோம் என்கிற பெயரில் பெண்களின் உடல் பாகங்களைத் தொடுவது போன்ற அநாகரிகச் செயல்கள் அரங்கேறியுள்ளன.


ஜப்பான் நாட்டுப் பெண் ஒருவரின் தலையில் முட்டையை உடைத்தும் கழுத்து, இடுப்பு என்று பல அந்தரங்க இடங்களில் கலர்ப் பவுடரைத் தடவியும் அட்டூழியம் செய்துள்ளனர். இந்நிலைமையை எதிர்கொள்ள முடியாமல் தவித்த அந்தப் பெண் அங்கிருந்து எப்படியாவது தப்பினால் போதும் என்று விலகி நடக்க முயன்றிருக்கிறார். 


ஒருவன் அப்பெண்ணின் அந்தரங்கப் பகுதியில் கலர்ப் பவுடரைப் பூசியுள்ளான்.


உடனே அப்பெண் அவன் கன்னத்தில் அறைந்துள்ளார்[இந்த அறைதல், காலிப்பயலின் கன்னத்தில் மட்டுமல்ல, ஒவ்வொரு இந்தியனின் கன்னத்தில் மட்டுமல்ல, மோடி, அமித்ஷா ஆகியோர் கன்னங்களிலும் விழுந்திருக்கும் என்பதை நாம் உணர்தல் வேண்டும்].


இதனையடுத்து,

கைகளைக்கொண்டு உடலை மறைத்தவாறு அப்பெண் அங்கிருந்து தப்பிச் சென்றிருக்கிறார்; இந்தியாவிலிருந்து வெளியேறியிருக்கிறார்.

இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பகிரப்பட்ட நிலையில், டெல்லி மகளிர் ஆணையம் தானாக முன்வந்து இந்த விடியோ குறித்து விசாரணை செய்து வழக்குப்பதிவு செய்யுமாறு காவல்துறைக்குப் பரிந்துரைத்ததாம்.


இத்தகவல்கள், புதிய தலைமுறை, தினத்தந்தி, ’தமிழ் ஒன் இண்டியா’ போன்ற ஊடகங்கள் பலவற்றிலும் பகிரப்பட்டுள்ளன.


ஊடகங்கள், காமக் களியாட்டம் நடத்திய காலிகளில் பிஞ்சில் பழுத்த[சிறுவர்] கழிசடைகளும் இருந்ததாகக் குறிப்பிடுகின்றன. பிஞ்சில் வெம்பிப் போனவன்களே இப்படியென்றால், திணவெடுத்து வெறியேறித் திரிந்த தடியர்கள் இன்னும் என்னவெல்லாம் செய்தார்களோ?


இந்த ஒழுக்கசீலர்களைத்தான்["இங்குள்ளவனெல்லாம் யோக்கியன்களா?” என்று ஜெயரஞ்சன் போன்றவர்கள் முணுமுணுக்கக்கூடும்] இரு கரம் குவித்துக் கும்பிட்டு “வாங்க... வாங்க” என்று வரவேற்றுப் புகலிடம் தருகிறோம்.


வசதிவாய்ப்புகளைப் பெற்ற பிறகு இவர்களும் ஹோலிக் கூத்துகளை இங்கு கொண்டாடுவார்கள்.


எதிர்த்து நாம் குரல் எழுப்பினால்.....


“இது இந்தியா. இந்தியக் குடிமகனுக்கு எங்கு வேண்டுமானாலும் ஹோலிகூத்து நடத்த உரிமை உள்ளது” என்று நம் மண்டையில் அடித்துத் தேசத் துரோகிப் பட்டம் சூட்டுவார்கள்.


இனி இங்கே இதுவும் நடக்கும்; எதுவும் நடக்கும். இது பிடிக்காதவனெல்லாம் வாயை மட்டுமல்ல, ..... ஐயும் மூடிக்கொண்டு உள்ளுக்குள் முணங்கிக்கொண்டிருக்கலாம்.


இது ஒரே நாடு! ஒரே இனம்! ஒரே மொழி! ஒரே கலாச்சாரம்! ஒரே கட்சி ஆட்சி!


வாழ்க பாரதம்!!

* * * * *

தொடர்புடைய காணொலி:


video:

https://twitter.com/i/status/1634045266591399937 [copy & paste]

‘தமிழ்நாடு’ மாநிலம் தமிழருக்கானதா, வ.மா.தொழிலாளருக்கானதா?!?!?!

டமாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்கு முன்னதாக வந்திருந்து வேலை பார்ப்பவர்கள் ஏராளம். பலர் பல்வேறு தொழில்களிலும் ஈடுபடுகிறார்கள். தமிழரிடமிருந்து எந்தவித எதிர்ப்பும் எழுந்ததில்லை[வந்தாரை வாழவைப்பதோடு ஆளவும் வைத்து வாயிளிப்பவன் இவன்].

அண்மைக்காலத்தில், ஆயிரம், பல்லாயிரம் என்று வட மாநிலத்தவர் வந்து குவிந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்து, சமூக வலைத்தளங்கள் வாயிலாக[செய்தி ஊடகங்களின் பங்கு மிக மிகக் குறைவு]த் தங்களின் எதிர்ப்பைத் தெரிவித்தார்கள்.

மிக மிகச் சிறு சிறு அசம்பாவிதங்கள் நடந்தனவே தவிர[அசம்பாவிதங்களுக்கு வ.மா.தொழிலாளரும் காரணமாக இருந்திருக்கிறார்கள்] தமிழர்கள் அமைதி காக்கவே செய்தார்கள்.

அவர்களின் வரவை எதிர்த்து இவர்கள் ஊர்வலங்கள் நடத்தவில்லை; உண்ணாவிரதப் போர் நிகழ்த்தவில்லை; கலவரங்கள் செய்யவில்லை. உண்மை இதுவாக இருக்க.....

அ.மா.தொழிலாளர்[கவனிக்கவும், ‘வடக்கன்ஸ்’ என்று நான் எழுதவில்லை] அடித்து விரட்டப்படுவதாகவும், கொலை செய்யப்படுவதாகவும், தூக்கிலிடப்படுவதாகவும் வதந்தி பரப்பி நாடெங்கும் பதற்றத்தை உருவாக்கியவர்கள் வடநாட்டவர்தான்.

இவற்றில் எதுவும் உண்மை இல்லை என்று இரு மாநில அதிகாரிகளும், அமைச்சர்களும், அங்கிருந்து வந்த ஆய்வுக் குழுவினரும் அறிவித்தார்கள். அமைதி நிலைநாட்டப்பட்டது.

வடநாடோ தென்னாடோ கையில் செல்ஃபோன் இல்லாதவர் இன்று எவருமில்லை[குறிப்பாகத் தொழிலாளர்கள்].

அவ்வப்போது வெளியாகும் அறிவிப்புகளை அவர்களால் மிக எளிதாக அறிந்துகொள்வது சாத்தியமே.

நிலைமை இதுவாக இருக்க, நம் அரசும் காவல்துறையும் பல முறை வ.மா. தொ.களுக்குத் தைரியம் சொல்லி அறிக்கை விட்டதோடு தொழிலாளர்களை நேரிலும் சந்தித்துத் தாங்கள் விடும் அறிக்கைகள் உண்மையானவை என்று உறுதிப்படுத்தினார்கள்; படுத்துகிறார்கள்[எவரும் ‘சத்தியம்’ செய்திருக்க மாட்டார்கள் என்பது என் நம்பிக்கை. ஹி... ஹி... ஹி!!!].

மேலும், ‘பாஜக’ பி டீம் தலைவர்[பீகார்], அரசியல் புரோக்கர், இங்குள்ள ‘பாஜக’ எடுபிடிகள் என்று எவரெவரோ வ.மா.தொ.களுக்கு ஆதரவாக அறிக்கை விட்டும் எச்சரிக்கை செய்தும் தங்களின் பங்களிப்பைச் செய்தார்கள்.

நம் முதல்வரே தொழிலாளர்களை நேரில் சந்தித்துத் தைரியம் சொன்னார்.

இதற்கப்புறமும், அதிகாரிகள் வ.மா.தொ.களைச் சந்தித்துத் தைரியம் சொல்வது தொடர்ந்தது; தொடர்கிறது என்பதுதான் இந்தப் பதிவை எழுதுவதற்கான உண்மைக் காரணம்.

அவர்கள் அஞ்சும்படியாக இங்கு எதுவும் நடக்கவில்லை என்றாலும், அவர்களுக்கு ஆறுதலும் தேறுதலும் சொல்வது அரசின் கண்ணோட்டத்தில் தேவையாக இருக்கலாம். ஆனால், அதற்கு ஓர் அளவு இல்லையா?

நேற்றுக்கூட[10.03.2023], 'கோத்தகிரி அருகே உள்ள சோலூர்  போலீஸ் நிலைய சப் -இன்ஸ்பெக்டர் யாதவகிருஷ்ணன் மற்றும் போலீசார், கடந்த சில தினங்களாக, சோலூர்மட்டம் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வட மாநில தொழிலாளர்கள் பணிபுரியும் இடங்களுக்கு நேரில் சென்று அவர்களிடம் பேசியும், போலீஸ் உயர் அதிகாரிகளின் விழிப்புணர்வு[???] வீடியோவைக் காண்பித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்' என்றொரு செய்தி வெளியாகியுள்ளது. https://tamil.getlokalapp.com/tamilnadu-news/nilgiris/coonoor/the-police-had-a-discussion-with-the-north-state-workers-9488263

தமிழன் வயிற்றுப் பிழைப்புக்காகச் சென்ற இடமெல்லாம், உதைபட்டான்; ஓட ஓட விரட்டப்பட்டான்[இவனுக்கு உதை வாங்கித்தான் பழக்கம். உதைக்கத் தெரியாது] அங்கெல்லாம் ஆட்சி நடத்தியவர் எவரும், இப்படித் தேடித் தேடிப் போய்த் தைரியம் சொன்னதில்லை.

இந்தப் பயந்தாங்கொள்ளித் தமிழன், வ.மா.தொ.களை எதிர்த்து ஊர்வலமோ, உண்ணாவிரதமோ, கலவரமோ செய்யவில்லை என்பதை மீண்டும் நினைவுபடுத்துகிறேன்.

இதுவே உண்மை.

உண்மை இதுவாக இருக்க, வடநாட்டிலிருந்து வதந்தி பரப்பியவர்கள் எவரோ, ‘வதந்தியெல்லாம் பொய்’ என்று உண்மை நிலவரத்தைத் தங்களின் தொழிலாளர்களுக்குப் பரப்புவது  அந்த அவர்களுக்குரிய கடமை.

இந்தக் கடமையை அவர்கள் செய்திருந்தால், தமிழ்நாட்டில் தங்களுக்கு அச்சுறுத்தல் எதுவுமில்லை என்பதைச் செல்போன் வாயிலாக ஒவ்வொரு வடக்கனும், மன்னிக்கவும் வட இந்தியத் தொழிலாளியும் அறிந்திருப்பான்ர்.

[நம் மாநிலத் தொழிற்சாலைகளில்[சிறு சிறு கடைகள் ஒரு பொருட்டல்ல] வேலை செய்ய ஆள் பற்றாக்குறை உள்ளது என்று அரசோ, தொழில் நிறுவனங்களோ எத்தனை முறை அறிவிப்புச் செய்தார்கள்? விளம்பரங்கள் கொடுத்தார்கள்?[புள்ளிவிவரங்களுடன்]. இல்லைதானே? இளைஞர்களைத் தேர்வு செய்து தேவையான தொழில்நுட்பப் பயிற்சி கொடுத்திருக்கலாம். இதனால் எதிர்பார்த்த பயன் விளையாதபோது இங்கு வட நாட்டவரை அனுமதித்திருக்கலாம். செய்தார்களா?]

அவர்கள்[வட மாநிலத்தவர்] தங்களின் கடமையைச் செய்யவில்லை.

மாறாக, இங்கே உள்ளவர்கள் வ.மா.தொ.களைத் தேடித் தேடிப் போய்த் தைரியம் ஊட்டும் வேலையை வெகு சிறப்பாகச் செய்கிறார்கள்.

போகிற போக்கைப் பார்த்தால்.....

கொஞ்ச காலத்திற்கு, தமிழ்நாடு மாநிலத்தின் பெயரை, ‘வ.மா.தொழிலாளர் மாநிலம்’ என்று பெயர் மாற்றம் செய்து, அவர்களில் ஒருவரை[கொஞ்ச காலத்திற்குத்தான்]த் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆக்குவதும் இங்கு நடக்குமோ என்று ஒரு சந்தேகம் எழுவதைத் தவிர்க்க இயலவில்லை.

இது வெறும் சந்தேகம்தான்.

                                       *   *   *   *   *

முக்கியக் குறிப்பு:

இந்தப் பதிவின் நோக்கம் வ.மா.தொழிலாளர் நலனுக்கு எதிராக ‘வதந்தி’ பரப்புவதல்ல[அவர்கள் எங்கிருந்தாலும் வாழ்க வளமுடன்]; தமிழர்கள் கலவரக்காரர்களாகச் சித்திரிக்கப்படுகிறார்களே என்னும் மன வேதனையை வெளிப்படுத்துவது மட்டுமே.