எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

வியாழன், 30 மார்ச், 2023

“ராமன் கற்சிலையோ மரச் சிற்பமோ அல்ல”... ‘ராஜ்நாத் சிங்’ சொன்ன அறிவியல் உண்மை!

‘ராமநவமியை முன்னிட்டு, தனியார் தொலைக்காட்சி நடத்திய கருத்தரங்கில் ராஜ்நாத் சிங் பேசினார்’ என்பது சற்று முன்னரான செய்தி*.

“அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில் அவருக்குப் பிரம்மாண்டமான கோவில் கட்டுவதற்கான நிலை உருவானபோது, அந்த இடத்தில் மருத்துவமனை கட்ட வேண்டும் என்றும், பள்ளிக்கூடம் அமைக்கலாம் என்றும் யோசனைகள் சொன்னவர்கள் பலர். சிலரோ அங்கே தொழிற்சாலை அமைக்கலாம் என்றார்கள். இவர்கள் அனைவரும் கடவுள் ராமரைப் புரிந்துகொள்ளாதவர்கள்” என்று பேசிய ‘ராம்[ராஜ்]நாத் சிங்’ அவர்கள்.....


கடவுள் ராமர் கல் அல்லது மரத்தில் உருவான வெறும் சிலை அல்ல” என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்லியிருக்கிறார்.



அவர் சொன்னது 100% உண்மை.


மண்ணுலகில், ஒரு மன்னனுக்கு மகனாகப் பிறந்து, மன்னனாக வாழ்ந்து மறைந்ததாகச் சொல்லப்படும் ராமன் ஐம்புலன்களுடனும் சிந்திக்கும் அறிவுடனும் வாழ்ந்த ஒரு மனிதன் மட்டுமே.


அவன், மரணத்தைத் தழுவாமல் இன்றளவும் ஒரு மனிதனாக வாழ்ந்துகொண்டிருந்தால், மனிதருள் சிறந்தவன் என்று போற்றி வழிபடுவதில் தவறில்லை.


பொழுது போகாதவர்கள், விழாக்கள் எடுத்து, கொண்டாட்டங்கள் நடத்திக் குதூகலிக்கலாம். தவறே இல்லை. ஆனால்…..


கோயில் கட்டி, உயிருள்ள ஒரு மனிதனை அங்குக் குடியேற்றி, இரவுபகலாய் இருந்த இடத்திலேயே குந்தியிருக்கச் செய்வது நடைமுறை சாத்தியம் இல்லாதது.


அதனால்தான், அவனை[மரணத்திற்குப் பிறகு]ப் போல மரத்தாலும் கல்லாலும் சிலைகள் செய்து நிற்கவோ உட்காரவோ வைத்தார்கள்; படுக்கவும் வைத்தார்கள்.


அது தவறு என்பது, “ராமன் கல்லால் அல்லது மரத்தால் ஆன சிலை அல்ல” என்று அமைச்சர் கூறியிருப்பதிலிருந்து புரிகிறது.


அப்புறம் எதற்கு கல் அல்லாத, மரம் அல்லாத ராமனுக்கு அயோத்தியில் பிரமாண்டமான கோயில் கட்டவேண்டும் என்கிறார் அவர்?


கற்களையும் மரங்களையும் தவிர்த்துவிட்டு, ஒரு கடவுளாக மட்டும்[உருவிலி] அவனைக் காட்டவோ, உணர்த்தவோ முடியாது[அனுமானிக்கலாம். அனைத்து அனுமானங்களும் உண்மை ஆகிவிடா] என்பதால்தான்.


அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு மட்டுமல்ல, அவரனைய பிற ராம பக்தர்களுக்கு நாம் பணிவுடன் சொல்லிக்கொள்ள விரும்புவது…..


கல்லைக் கல்லாக மட்டுமே பாருங்கள். மரத்தை மரமாகப் பாருங்கள். அவற்றை நுண்ணறிவு கொண்டு ஆராயுங்கள்[இதைச் செய்வதால்தான் அறிவியல் வளர்கிறது]. அவற்றுள் கடவுளைத் திணிக்காதீர்கள்.


ஆராய்ச்சி தொடரத் தொடர அறிவு வளரும். அறிவு வளர்ச்சியால் மனித இனத்துக்கு ஏராள நன்மைகள்[மனதைப் பண்படுத்துவது உட்பட] விளையும்.


மாறாக, கல்லிலும் மண்ணிலும் மரத்திலும், அவற்றால் செய்யப்பட்ட சிலைகளிலும் ராமன் போன்ற கடவுளைத் திணித்துக் கும்பிடுவதை வழக்கமாக்கினால் மனிதனுக்கு மட்டுமே வாய்த்த சிந்திக்கும் அறிவு சீரழியும்; முடங்கும்.


உண்மையில் கடவுள் என்று ஒருவர் இருந்தால், உண்டு உறங்கி, கழிவுகளை வெளியேற்றி வாழ்ந்த மனிதர்களை கடவுளாக்கி[தம்மைத்தாமே கடவுளாக்கிக்கொள்வோரும் உளர்... ஜக்கி வாசுதேவ் போல]ப் பிழைப்பு நடத்துவதை அவர் ஒருபோதும் மன்னிக்கமாட்டார்!

=========================================================================


*https://m.dinamalar.com/detail.php?id=3280155&utm_source=newsshowcase&utm_medium=gnews&utm_campaign=CDAQuobhuNPRmrOTARj4l5Dm0vWyvKIBKhAIACoHCAowkZmPCzDyo6ED&utm_content=rundown


கண்ணகி, மார்பகம் அறுத்தது மதுரையை எரிக்க! ‘நங்கிலி’ அறுத்தது?!?!


அன்றையத் திருவாங்கூர் ராஜ்யத்தில் ‘முலக்கரம்’ என்று மலையாளத்தில் அழைக்கப்பட்ட ‘முலைவரி’ பிற்படுத்தப்பட்டவர்களும் தாழ்த்தப்படுத்தப்பட்டவர்களுமான பெண்களுக்கு விதிக்கப்பட்டதென்பது நாம் அறிந்ததே.

திருவாங்கூர், கொச்சி சமஸ்தானங்களில், சாதியில் தாழ்த்தப்பட்ட பெண்கள் மேல் சாதிக்கார ஆண்கள் அல்லது அரசு அதிகாரிகள் முன்னிலையில் தங்களின் மார்பை மறைக்கும் சேலைத் தும்பை[முந்தானை] அகற்றி, மார்பகங்களைக் காட்டி மரியாதையை வெளிப்படுத்தும் முறையும் கட்டாயமாக்கப்பட்டிருந்தது என்பதும் தெரிந்ததே.

நம்மில் பலரும் அறியாத பேரவல நிகழ்வு ஒன்று உண்டு.

‘முலை வரி’ வசூலிக்க வந்த அரசு அதிகாரிகளின் முன்னிலையில், திறந்த மார்பகங்களுடன் நின்ற ‘நங்கிலி’ என்னும் பெண், வரி செலுத்த இயலாத பரிதாப நிலையை எடுத்துரைத்தும், அதிகாரிகள் வரி வசூலிப்பதில் கண்டிப்புக் காட்டியபோது.....


அந்தப் பெண் செய்த செயல் பெண்ணினத்தைக் காலமெல்லாம் கண்ணீர் சிந்த வைப்பது மட்டுமல்ல, ஆண் இனத்தவரை, வெட்கித் தலைகுனிய வைப்பதும் ஆகும்.


நங்கிலி, தான் செலுத்த வேண்டிய வரிக்குப் பதிலாக, வரிவிதிப்புக்குள்ளான தன் மார்பகம் ஒன்றை அறுத்து அதிகாரிகளிடம் கொடுத்தாள்; மரணத்தைத் தழுவினாள்.


பூமி, ஆறு என்று எதையெதையெல்லாமோ பெண்ணாக்கி, தெய்வ நிலைக்கு உயர்த்தி, அவளைத் தாங்கோ தாங்கென்று தாங்கிய அதே ஆடவர்கள்தான், உழைக்கும் வர்க்கத்தைச் சார்ந்த பெண்களுக்கு இம்மாதிரியான[முலை காட்டல்; வரி செலுத்துதல்] கொடுமைகளை இழைத்து ஆனந்தப் பரவசத்தில் திளைத்திருக்கிறார்கள்.


இவையெல்லாம் வரலாற்றில் இடம்பெற்றவை.


உயர் சாதி ஆடவர் முன்னிலையில், முலை காட்டி நிற்பதோடு, அம்மணமாக முழு உடலையும் காட்ட வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதும் நிகழ்ந்திருக்கலாம். இது வரலாற்றில் இடம்பெறாதது.


வரலாற்றைத் தோண்டித் துருவி ஆராய்ந்தால் ஆதாரங்கள் கிடைக்கக்கூடும்!

* * * * *

{‘இந்து’ பத்திரிகையில் கட்டுரையின் சாரம் இது. இக்கொடுமை, ஆங்கில அரசின் முயற்சியால் பிற்காலத்தில்[19 ஆம் நூற்றாண்டின் இறுதி] தடை செய்யப்பட்டது}.

==================================================================================

<tamil-personalized-digest@quora.com>

==================================================================================

***ஏற்கனவே படித்திருந்தாலும் மீண்டும் படிக்கத்தக்க அதி சுவாரசியக் கதை இது. முகவரியைக் கிளிக்கி வாசியுங்கள்

https://kadavulinkadavul.blogspot.com/2019/01/blog-post_17.html