செவ்வாய், வெள்ளி, புதன் போன்றவை[கிரகங்கள்] குறித்தும் பூமியின் துணைக் கோளான சந்திரன் பற்றியும் அறிவியலாளர்கள் ஆய்வுகளை நிகழ்த்திக்கொண்டிருக்கிறார்கள்.
சந்திரனில் கால் பதித்தும் நடந்தும் சாதனை நிகழ்த்திவிட்டார்கள். செவ்வாய்க்கு மனிதனை அனுப்புவது பற்றியும் விரிவான ஆய்வு நிகழ்த்தப்படுகிறதாம். [https://www.ariviyal.in/2011/11/blog-post_25.html]
நம் நோக்கம் அவர்களின் ஆய்வுகள் குறித்து ஆராய்வதல்ல[அதற்கான குறைந்தபட்சத் தகுதிகூட நமக்கு இல்லை]; நீண்ட நாட்களாகக் கேட்க நினைத்த ஒரு கேள்வியை முன்வைப்பது மட்டுமே.
ஒரு காலக்கட்டத்தில், சந்திரனோ செவ்வாயோ புதனோ வியாழனோ, வேறு எதுவோ, அவற்றில் ஒன்றிலோ பலவற்றிலுமோ மனிதர்கள் தங்கி வாழ்வது சாத்தியம் ஆகும் என்றால்.....
“மனிதர்களின் முயற்சியின்றித் தானாக அது நிகழாது” என்பது அறிவியலாளரின் பதிலாக இருக்குமாயின், எதற்கு வீணான இம்மாதிரி ஆராய்ச்சிகள்? கோடி கோடி கோடிக் கணக்கில் பண விரயம்?

