எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

புதன், 30 ஏப்ரல், 2025

பயமுறுத்தும் பக்திமான் மோடியும் ‘பக்கா’ பகுத்தறிவாளன் ‘டிரம்ப்’பும்!!!

‘NEWS தமிழ்’ தொலைக்காட்சியில் காலை 09.45 மணிக்கு வெளியான ஒரு செய்தி என்னைப் பிரமிக்கச் செய்தது.

“நான் அடுத்த ‘போப்’ ஆக விரும்புகிறேன்” -முகத்தில் வசீகரப் புன்னகை தவழ இதைச் சொன்னவர் அமெரிக்கக் குடியரசுத் தலைவர்[ஜனாதிபதி] ‘டொனால்டு டிரம்ப்’ ஆவார்.

தான் மதச்சார்பற்ற ஒரு பெரிய நாட்டின் பிரதமர் என்பதை மறந்து, கோயில்களைக் காணும்போதெல்லாம் நீட்டிப் படுத்துக் கும்பிடு போடும் மோடியுடன்[வழிபடுவது அவரின் உரிமை. ஆனால், படம் பிடித்து ஊடகங்களில் வெளியிட்டு விளம்பரம் தேடுவது ஏற்கத்தக்கதல்ல] ஒப்பிட்டபோது.....

உலக அளவில் முன்னணி பெற்றிருப்பதும், அமெரிக்காவில் அதிக அளவில் பின்பற்றப்படுவதுமான கிறித்தவ மதத் தலைவர் ‘போப்’ பதவியை டிரம்ப் கிண்டலடித்தது அடியேனைப் பெரிதும் வியக்கச் செய்தது.

மூடநம்பிக்கைகளின் விளைநிலங்களான[மதங்களால் விளைந்த நன்மைகளைவிடவும், உண்டாகும் தீமைகள் மிக மிக ஆதிகம்] மதங்கள் மீது மக்கள் கொண்டிருக்கும் அளவிறந்த மோகம் டிரம்ப் போன்றவர்களின் செயல்பாடுகளால் படிப்படியாக குறையும் என்று நம்பலாம்.

அமெரிக்கக் குடியரசுத் தலைவருக்கு என் மன நிறைந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

காணொலி: