//கோவை : நவம்பர் 19, 2025 அன்று நடைபெற்ற ‘தென்னிந்திய இயற்கை வேளாண்மை மாநாடு’ & ‘தென்னிந்திய இயற்கை விவசாயச் சிகர மாநாடு 2025’-இல் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு உரையாற்றினார். தமிழில் “வணக்கம்” என்று தொடங்கிய அவர், “சிறு வயதிலேயே தமிழ் கற்றிருந்தால் உங்களுடன் தமிழிலேயே பேசியிருப்பேன்” என்று கூறி அரங்கத்தை மகிழ்வித்தார்// -செய்தி.
தமிழன்: “பிரதமர் ஆன பிறகு கற்றிருக்கலாமே? இந்தி கற்க நேரம் இருந்தது; இதற்கு இல்லையா பிரதமருக்கு?”
//மேலும், தமிழக விவசாயிகளின் உற்சாக வரவேற்பைப் பார்த்து “பீகாரின் காற்று தமிழகத்திலும் வீசுகிறதோ?” என்று குறிப்பிட்டார்// -செய்தி.
தமிழன்: “வீசுது. சகிக்க முடியாத சாக்கடை நாற்றம் கலந்த காற்று அது!
//மாநாட்டில் தமிழக விவசாயத் தலைவர் பி.ஆர். பாண்டியன் தமிழில் உரையாற்றினார். பிரதமர் மோடி, “தமிழ் புரியாவிட்டாலும் அவரது உணர்வு எனக்கு முழுமையாகப் புரிந்தது. அந்த உரையை இந்தியில் மொழிபெயர்த்து எனக்கு அனுப்புங்கள்” என்று கேட்டுக்கொண்டார்// -செய்தி.
தமிழன்: “இங்கிலீசில் அனுப்பினால் புரியாதா மோடிக்கு?”
//பிரதமரின் தமிழ் மொழி மீதான அன்பும், இயற்கை வேளாண்மை மீதான ஆர்வமும் அரங்கில் உள்ள அனைவரையும் உற்சாகப்படுத்தியது// -செய்தி.
தமிழன்: “தமிழ் மொழி மீது நரேந்திரருக்கு அன்புள்ளது... சரி. ‘இந்தி & சமஸ்கிருதம்’ மீதான அன்பைவிடவும் இது எத்தனை மடங்கு அதிகம்?! அன்பாம் அன்பு, அரைக் காசு பொறாத அன்பு!”

