அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

வெள்ளி, 30 ஜூன், 2023

ஆளுநரா, அமித்ஷாவா, இந்தியக் குடிமகனா... இவர்களில் அப்பாவி யார்?!

ரு மாநிலத்தின் ஆளுநர் நியமனம் என்பது, அதிகாலையில் சம்பந்தப்பட்டவரைத் தடாலடியாய் வரவழைத்து, “நீங்கதான் இந்த[சம்பந்தப்பட்ட] மாநிலத்தின் கவர்னர். இப்பவே புறப்பட்டுப் போய்ப் பதவி ஏற்றுக்கொள்ளுங்கள்” என்று அதிரடியாய் உத்தரவு பிறப்பிக்கும் செயலல்ல.

சில மாதங்களுக்கு முன்பே, குறைந்தபட்சம் கொஞ்சம் வாரங்களுக்கு முன்பாவது அவருக்கு முன்னறிவிப்புச் செய்து, அவருக்கான[ஆளுநர்] அதிகாரங்கள் பற்றி அறிந்துகொள்ள அவகாசமும் தந்த பிறகே அவரைப் பதவி ஏற்க அனுமதிக்க வேண்டும்.

தவறினால், அவர் ஆளுநர் ஆன பிறகேனும், தனக்குரிய அதிகாரங்களைச் சட்ட நிபுணர்களின் உதவியுடன் அறிந்துகொள்வது கட்டாயம்.

இவ்வாறு ஆளுநருக்கான தகுதியை வளர்த்துக்கொள்ளாமல் ஒருவர் அந்தப் பதவியை ஏற்பதும் அதில் நீடிப்பதும் பல நிர்வாகப் பிழைகளுக்கு வழிவகிக்கும். 

அமைச்சர் செந்தில் பாலாஜியைப் பதவி நீக்கம் செய்வதாக உத்தரவு பிறப்பித்த ஐந்து மணி நேரத்தில் அதை நிறுத்தி வைப்பதாகத் தமிழ்நாடு ஆளுநர் அறிவித்திருப்பது, அவர் தன் பதவிக்கான தகுதியை வளர்த்துக்கொள்ளவில்லை என்றே எண்ணத்தோன்றுகிறது.

ஆளுநர் என்பவர் அனைத்துச் சட்ட விதிகளையும் அறிந்திருப்பது சாத்தியமில்லை என்றாலும், மிக மிக முக்கிய முடிவுகளை[செந்தில் பாலாஜி பதவி நீக்கம் போல], சட்ட நிபுணர்களை மட்டுமல்லாமல், உள்துறை அமைச்சர், பிரதமர் போன்ற, தனக்கும் மேலான அதிகாரம் படைத்தவர்களைக் கலந்தாலோசிப்பது மிக மிக மிக மிகவும் அவசியம்.

இந்த நியதியை ஆளுநர் ரவி அறிந்திருக்கவில்லையா? மேற்கண்டவர்களைக் கலந்தாலோசிக்கவில்லையா?

அறியாமலும், கலந்தாலோசிக்காமலும் அதிரடியானதொரு உத்தரவை எப்படிப் பிறப்பித்தார்?

இந்த அவசரகதியிலான உத்தரவால் பாலாஜியின் மனமும் உடலும் பாதிக்கப்படலாம் என்று யோசிக்காதது ஏன்?

யோசிக்காததற்கான காரணம் எதுவாகவோ இருக்கட்டும். ‘உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் தலையீட்டின் பேரில் ஆளுநர் ரவி தன் உத்தரவை நிறுத்தி வைத்துள்ளார்’ என்பது இன்று பிற்பகலில் வெளியான ஊடகச் செய்தி.

இந்தியா குடியரசாகி 74 ஆண்டுகள் ஆகின்றன.

இத்தனை ஆண்டுகளாக, ஒரு மாநிலத்தின் ஆளுநருக்கான அதிகார வரம்பு குறித்து மேல்மட்ட அமைச்சர்களும், உயர் அதிகாரிகளும், அரசுக்கு ஆலோசனை வழங்குகிற சட்ட நிபுணர்களும் அறிந்திருக்கவில்லையா?

அறியாமலிருந்து, இப்போதுதான்[ஆளுநரின் உத்தரவைச் சட்ட ரீதியாகச் சந்திப்போம் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்த பிறகு] சட்ட விதிகளை அலசி ஆராய்ந்து அறிந்துகொண்டார்களா?

அதனால்தான் ஆளுநருக்கு முன்கூட்டியே அலோசனை வழங்குவது சாத்தியம் ஆகாமல்போனதா?

இதற்குமேலும் கேள்விகள் கேட்பதற்கு ஒரு சாமானியக் குடிமகனுக்கு ‘நல்லதல்ல’ என்பதால் இத்துடன் முடிக்கிறேன்!



தமிழின் புகழ் பரப்பும் மோடியும், தமிழை வெறுக்கும் ‘பாஜக’ சாக்கடைப் பன்றிகளும்!!!

காசியில் தமிழின் சிறப்புகளைப் பறைசாற்றுதற்கென்று மாநாடு நடத்தியது, சொற்பொழிவாற்றும்போது திருக்குறளை மேற்கோள் காட்டுவது, சங்கப் பாடல் வரிகளை எடுத்தாள்வது,  பயணிக்கும் நாடுகளிலெல்லாம் மறவாமல் அதன் பெருமை பேசிப் பெருமிதப்படுவது என்று பல வகையிலும் தமிழ் மொழிக்குப் புகழ் சேர்த்திருக்கிறார் பிரதமர் மோடி என்பது மறுக்க முடியாத உண்மை.

அவர் செய்யும் அரசியல் நமக்குப் பிடிக்கிறதோ இல்லையோ, தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் நாம் என்ற வகையில் அவருக்குப் பெரிதும் கடமைப்பட்டிருக்கிறோம்.

அவரின் செயல்பாடுகளில், தமிழரிடையே செல்வாக்கும் பெறுவது உள்நோக்கமாக இருப்பினும் அதை நாம் பொருட்படுத்தாமல் அவரை மனதாரப் பாராட்டுதல் வேண்டும்.

மோடி அவர்களைப் பாராட்டுகிற அதே வேளையில், ‘பாஜக’ கட்சியிலுள்ள சில தறுதலைகள் தமிழுக்கு எதிராகச் செயல்படுவதை அவரின் கவனத்துக்குக் கொண்டுசெல்வதும், அவர்களைக் கட்சியிலிருந்து வெளியேற்றுமாறு ‘த.நா.பாஜக’ தலைவர் அண்ணாமலை அவர்களிடம் கோரிக்கை வைப்பதும் நம் விருப்பமாக உள்ளது.

ஒசூர் ரயில் நிலையம் அருகிலுள்ள ஒரு கோயிலில் நடக்கவிருந்த குடமுழுக்கு விழாவைத் தமிழில் நடத்த வேண்டும் என்று தமிழார்வலர்கள் கோரிக்கை வைக்க, அர்ச்சகர்கள், தமிழ், சமற்கிருதம் ஆகிய இரு மொழிகளிலும் நடத்தலாம் என்று ஒத்துக்கொண்ட நிலையில்.....

மஞ்சுநாத், வினோத் என்னும் இரு சொறிநாய்கள்[பாஜக] தலையிட்டு, தமிழில் நடத்தக்கூடாது என்று கூறிக் குழப்பம் விளைவித்ததோடு, தமிழினப் பற்றாளர்கள் மீது தாக்குதலும் நடத்தியிருக்கிறார்கள். இவர்கள் காவல்துறையால் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள் என்பது கூடுதல் செய்தி.


இந்தச் சாக்கடைப் பன்றிகள் மீது, உடனடியாகக் கடும் நடவடிக்கை எடுப்பது அண்ணாமலை அவர்களின் கடமையாகும்.

அவர் தவறாமல் இதைச் செய்வார் என்பது நம் நம்பிக்கை. ஒரு வேளை.....

இதை அவர் செய்யத் தவறினால், தமிழின் மீது மிகுந்த பற்றுக்கொண்ட பிரதமர் மோடி அவர்களின் வெறுப்புக்கு அவர் ஆளாவார் என்பதை அவருக்கு நினைவுபடுத்துகிறோம்.

வியாழன், 29 ஜூன், 2023

பாதயாத்திரை போகவிருக்கும் அண்ணாமலைக்கு ஒரு பச்சைத் தமிழனின் பரிந்துரை!!!


அண்ணாமலை அவர்களே,

2024இல் நடபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை மனதில்கொண்டு தமிழ்நாடெங்கும் ‘நடைப்பயணம்’[பாதயாத்திரை] செல்ல நீங்கள் முடிவெடுத்திருப்பதாகச் சற்று முன்னர் ‘மாலைமலர்’ இதழில் செய்தி படித்தேன்.

முதல் கட்டப் பயணம் ராமேஸ்வரத்தில் தொடங்கிக் கன்னியாகுமரியில்  முடிவடையவிருப்பதையும் அறிந்தேன்.

“என் மண். என் மக்கள்” என்னும் முழக்கத்துடன் பயணம் அமைவது குறித்து அளவிறந்த மகிழ்ச்சி எய்தினேன்.

நான் உங்களுக்குச் சில பரிந்துரைகளை வழங்கவிருப்பதற்குக் காரணமே, இந்த “என் மண். என் மக்கள்” என்னும் முழக்கம்தான்.

இங்கே, ‘என் மண்’ என்பது இந்திய மண்ணைக் குறிக்குமே தவிர, தமிழ் மண்ணை அல்ல. காரணம், “நான் தமிழ் நாட்டவன்” என்னும் குறுகிய மனப்பான்மை கொண்டவராக நீங்கள் எப்போதும் இருந்ததில்லை. 

அதைப் போலவே, உங்கள் நோக்கில் ‘என் மக்கள்’ என்பது இந்திய மக்கள் அனைவரையும் குறிக்குமே தவிர, தமிழ் மக்களை[மட்டும்]க் குறிக்காது.

‘கடைசி மூச்சு உள்ளவரை பெருமைமிகு கன்னடன்’ எனக் கூறியவர் நீங்கள். தமிழகத்தில் பா.ஜ.க-வில் இணைந்து “நான் என்றும் தமிழன்” என்று முழங்கினீர்கள். இதைத் தமிழர்கள் ஏற்கவில்லை. இந்த இரு பேச்சுகளையும் குறிப்பிட்டு நேரத்திற்கும், இடத்திற்கும் தகுந்தபடி பேசுவதாக உங்களை விமர்சித்தார்கள்.

நீங்கள் ஓர் இந்தியர்; இந்தியாதான் உங்களின் மண் என்பது உறுதிப்பட்டுவிட்ட நிலையில் நான் உங்களுக்கு வழங்கும் பரிந்துரையாவது.....

நீங்கள் மேற்கொள்ளவிருக்கும் நடைப்பயணத்தின் மூலம், நடபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டு மக்களின் வாக்குகளை அறுவடை செய்வது உங்களின் ‘உள்நோக்கம்’ என்பதால், நடைப்பயணத்தின்போது மறந்தும் “தமிழ் மண் என் மண்” என்றோ, “தமிழ் மக்கள் என் மக்கள்” என்றோ முழங்கிவிடாதீர்கள்.

அப்படி முழங்கினால், ஓட்டுக்காக நீங்கள் இப்படி முழக்கமிடுவதாகச் சொல்லி தமிழ் மக்கள் உங்களை எள்ளி நகையாடுவார்கள்.

எனவே, “இந்தியா என் மண்” என்றும், “இந்திய மக்கள் என் மக்கள்” என்றும் முழக்கமிடுங்கள்.

தமிழ்நாட்டு மக்கள் அதிபுத்திசாலிகள் என்பதால், ‘தமிழ் மண் இந்திய மண்ணுக்குள் அடங்கும் என்பதையும், தமிழ் மக்களும் இந்திய மக்களே என்பதையும் மனதில் கொண்டுதான் நீங்கள் இவ்வாறு பேசியிருக்கிறீர்கள் என்பதை மிக எளிதாகப் புரிந்துகொள்வார்கள்.

உங்களின் இந்திய ‘மண்’ பற்றுதலுக்காகவும், இந்திய மக்களின் மீதான உங்களின் பற்றுதலுக்காகவும் தவறாமல் உங்கள் கட்சியான ‘பாஜக’வுக்கு வாக்களிப்பார்கள் என்பது உறுதி.

மீண்டும் நினைவுபடுத்துகிறேன்.....

ஓட்டுக்காக, “தமிழ் மண் என் மண்” என்றோ, “தமிழ் மக்கள் என் மக்கள்” என்றோ முழக்கமிட்டுப் பிரிவினைக்கு வழிவகுத்துவிடாதீர்கள்! உங்கள் ‘நடைப்பயணம்’ நல்லதொரு வெற்றிப் பயணமாக அமைந்திட என் வாழ்த்துகள்!

மருத்துவப் பணிகளைச் சீரழிக்க முயலும் இஸ்லாம் மத வெறியர்கள்!!!

லகில் உள்ள ‘பெரிய’ மதங்களில் ‘இஸ்லாம்’ மதமும் ஒன்று என்பது யாவரும் அறிந்ததே. அந்த மதம் விதித்துள்ள கட்டுப்பாடுகள் அம்மதம் தழுவியோரை மட்டுமே கட்டுப்படுத்துவதற்கு உரியன.

அல்லாவை வழிபடும் அந்த மதத்தவர்கள் 'புர்கா’ மட்டுமல்லாமல்  ‘ஹிஜாப்’[அவர்களின் ஆடை குறித்த விவரம் இங்கு முழுமையாகத் தரப்படவில்லை] அணிவதும் வழக்கப்படுத்தப்பட்டுள்ளது.

அதைத் தவறு என்று சொல்ல எவருக்கும் உரிமையில்லை.

அதை விரும்பாத பெண்கள் ஹிஜாப் உடுத்தும்படி அச்சுறுத்தப்படுகிறார்கள் என்பது ஊடகங்கள் வாயிலாக அவ்வப்போது அறியப்படும் செய்தி.

அது உண்மையா பொய்யா என்று ஆராய்வதும், அது விசயத்தில் பிறர்[மதத்தவர் உட்பட]  தலையிடுவதும் தேவையற்றவை. 

ஆனால்.....

பொதுமக்கள் அனைவருக்குமான பொதுநிறுவனங்களில், மதச் சார்புள்ளவர்கள் தங்களின் தனிப்பட்ட மதம் சார்ந்த பழக்கவழக்கங்களைத் திணிக்கும் முயற்சி கண்டிக்கத்தக்கதாகும்.

கண்டிக்கத்தக்கதொரு செயலை, திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் படிக்கும் 6 மாணவிகள் மூலமாகச் செய்துமுடிக்க முயன்றிருக்கிறார்கள் இஸ்லாமிய மத வெறியர்கள்.

அவர்களின் தூண்டுதலால், அறுவைச் சிகிச்சை நடைபெறும் அறைகளில்[ஆப்ரேசன் தியேட்டர்] தலையையும் கைகளையும் மறைக்கும் விதத்தில் உடை அணிய அனுமதி கேட்டு, கல்லூரி முதல்வரிடம் மனு கொடுத்திருக்கிறார்கள் மாணவிகள்.

உயிருடன் போராடுபவர்கள் மனிதர்கள். அவர்களைக் காப்பாற்றப் போராடும் மருத்தவர்களும் மனிதர்களே. இங்கே தேவைப்படுவது மனிதாபிமானம்தான். மத அடையாளங்கள் அல்ல.

மேற்கண்ட நிகழ்வு மாணவிகளின் விருப்பத்தால் அல்ல என்பதையும், பின்னணியில் இஸ்லாம் மத வெறியர்கள் உள்ளனர் என்பதையும் மிக எளிதாக நம்மால் அனுமானிக்க முடிகிறது.

உலக அளவில் பெரும் எண்ணிக்கையினராக இருக்கும் தைரியத்திலோ என்னவோ, உயிர் காக்கும் மருத்துவமனைகளில் தங்களின் மதச் சடங்குகளைத் திணிக்க முயலும் இஸ்லாம் வெறியர்களின் முயற்சி கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.

ஆப்ரேசன் தியேட்டர்களில் ஆடை அணிவதில் உலக அளவிலான பொது வரன்முறை உள்ளது. எனவே, உங்களின் கோரிக்கை ஏற்கத்தக்கதல்ல” என்று மாணவிகளுக்கு அறிவுறுத்திய கல்லூரி முதல்வரின் செயல்பாடு பெரிதும் மெச்சத்தக்கதாகும். 


[இந்தப் பெண்கள் அறுவைச் சிகிச்சையின்போதும் மதம் வளர்க்கிறார்கள். இது நிகழ்ந்த ஒன்றா? எந்த நாட்டில்?... அறிய இயலவில்லை]

புதன், 28 ஜூன், 2023

நீங்களும் ‘சத்குரு’ ஆகலாம்!!!

‘மந்திர உச்சாடனம்’, ‘பிராண பிரதிஷ்டை’, ‘உயிர்த்தன்மை உணர்தல்’, ‘ஆத்ம சாதனை’.

மேற்கண்ட நான்கு தொகுப்புச் சொற்களும்.....

கோவை, ஈஷா யோகா மையத்தில் உள்ள தியான லிங்க மண்டபத்தில், 24ஆம் ஆண்டு லிங்கப் பிரதிஷ்டை தினம் கொண்டாடப்பட்டது குறித்த செய்தியில் இடம்பெற்றவை.

இவை, ‘சத்குரு’ என்று உலகோர் பலராலும் கொண்டாடப்படுகிற ‘ஜக்கி வாசுதேவ்’ஆல் எடுத்தாளப்பட்டவை.

இவற்றிற்கான விளக்கங்கள் செய்தியில் இடம்பெறாத நிலையில், இவற்றிற்கு ஜக்கி தந்துள்ள விளக்கங்களை, 'isha.sadhguru.org' போன்ற தளங்களில் தேடினேன். கிடைத்த விளக்கங்களோடு, கிடைக்காதவற்றால் என் மரமண்டையில் உதித்த ஐயங்களையும் பதிவு செய்துள்ளேன்.

பதிவான விளக்கங்களை அரைவேக்காடு அறிவுள்ள என்னால் புரிந்துகொள்ள இயலவில்லை. உங்களுக்குப் புரிகிறதா பாருங்கள். புரிந்தால்.....

நீங்களும் ஒரு ‘சத்குரு’தான்.

‘சத்குருவுக்குக் குரு’வாக மதிக்கப்படத்தக்க ஞானி என்றும் உங்களை விளித்துப் பாராட்டலாம்.

மந்திரம்:

//மந்திரம் என்பது ஏதோ பல வார்த்தைகளைப் போட்டுத் தொடர்ச்சியாகச் சொல்லக்கூடிய சொற்றொடர் அல்ல. அது, நமது எழுத்துகள் அல்லது அட்சரங்களில் உள்ள அதிர்வலைகளைப் பிரபஞ்சத்தில் உலாவவிட்டு நமக்குத் தேவையான பலன்களைக் கொடுக்கும் ஒரு முறை ஆகும்//[உச்சாடனம்: பேய் முதலான தீய சக்திகளை ஓட்டுவது > https://ta.wiktionary.org/s/7ga6]

பிரதிஷ்டை:

//"உரிய தொழில் நுட்பத்தின் துணையுடன், ஒரு சாதாரண வெளி அல்லது கல்லைக்கூடத் தெய்வீகச் சக்தியாக மாற்றிட முடியும். இதுதான் பிரதிஷ்டை எனும் அதிசயம்[பிராண பிரதிஷ்டை? பிராணன்>உயிர். உயிரைக்கூட பிரதிஷ்டை செய்ய முடியுமா? செய்து, அதைத் தெய்வீகச் சக்தியாக மாற்ற முடியுமா?]

உயிர்த்தன்மை உணர்தல்:

ஜக்கியின் விளக்கம் ஏதும் கிடைக்கப்பெறவில்லை. உயிர் இருப்பதே அறிவியல் ரீதியாக உறுதி செய்யப்படாத நிலையில், ‘உயிரின் தன்மை’ என்ன என்பது மட்டுமல்ல, அதை உணர்வதற்கான வழிமுறையும் புரிந்து தொலைக்கவில்லை.

ஆத்ம சாதனை:

‘ஆத்மா[ஆன்மா]’ இருப்பதாகச் சொல்கிறார்கள். அது சாதிக்குமா?

எதைச் சாதிக்கும்?

ஜக்கி மட்டுமே அறிவார்?




https://isha.sadhguru.org/mahashivratri/ta/shiva/12-things-may-not-know-shiva-lingas/

https://www.facebook.com/photo/?fbid=878026352342331&set

https://tamil.samayam.com/religion/hinduism/shiva-lingam-worship-secrets-shiva-lingam

-in-tamil/articleshow/72303902.cms?story=4

செவ்வாய், 27 ஜூன், 2023

ஆறறிவு யாருக்கு? ‘சீட்டு’ குலுக்கிய கடவுள்!

“உயிர்களில்[உயிரி>உயிர் உடையது] ஏற்பட்ட படிப்படியான மாற்றங்களே அவை பல்கிப் பெருகிடக் காரணமாக அமைந்தன” என்றார் அறிஞர் டார்வின்.*

அவற்றை ஓரறிவின, ஈரறிவின, மூவறிவின, நாலறிவின, ஐந்தறிவின என்று வகைப்படுத்தினார்கள் அறிவியலாளர்கள்.

“பரிணாமமாவது புடலங்காயாவது, பிரபஞ்சக் கோள்களையும் நட்சத்திரங்களையும் மட்டுமல்லாது, ஐந்து வகையான உயிரினங்களையும் படைத்தருளிப் பரிபாலனம் செய்பவர் கடவுள்” என்றார்கள் ஆன்மிகப் பேரருளாளர்கள்.

ஐந்து வகையான உயிரினங்களில், விலங்குகளும் பறவைகளும் ஐந்தறிவு வாய்க்கப்பெற்றவையாகும்.

ஓரறிவு முதல் ஐந்தறிவு வரையிலான உயிர்கள் கடவுளால் எவ்வாறு படைக்கப்பட்டனவோ அவ்வாறே இன்றளவும் வாழ்ந்துகொண்டிருக்கின்றன.

சில ஆயிரம் ஆண்டுகள்வரை, மனிதர்களும் எப்படிப் படைக்கப்பட்டார்களோ அப்படியே[ஐந்தறிவுடன்] வாழ்ந்தவர்கள்தான்.

கடவுள் மனிதர்களுக்கு மட்டும் ஆறாவதாக ஓர் அறிவை[சிந்திக்கும் அறிவு]க் கொடுத்தது புரியாததொரு புதிர்[எல்லாம் பரிணாம வளர்ச்சியே என்றாலும், அது நிகழ்வதற்கான காரணம் அறியப்படாததால் அதுவும் ஒரு புதிர்தான்] எனலாம்.

புதிர் பொதிந்த இந்த அதிசயத்தை நிகழ்த்துவதற்கான காரணம் எதுவாக இருப்பினும், ஆறாவது அறிவைப் பெறுவதற்கான அரிய வாய்ப்பை[அதிர்ஷ்டம்?] மனிதர்களுக்கு மட்டும் அவர் ஏன் வழங்கினார் என்பது விடை அறிய இயலாத இமாலயக் கேள்வி.

விலங்குகள், பறவைகள் என்று தான் படைத்த அனைத்து உயிர்கள் மீதும் அவர் அளப்பரிய பாசமும், மிகு பரிவும் கொண்டிருப்பார் என்பதால், எந்த இனத்துக்குச் சிந்திக்கும் அறிவைத் தருவது என்று வெகுவாக மனம் குழம்பியிருப்பார் கடவுள்.

மேலும், “எங்கள் இனத்திற்குச் சிந்திக்கும் அறிவைக் கொடு” என்று மனிதர்களோ பிற இனங்களோ கோரிக்கை வைப்பதற்கும் வாய்ப்பில்லை. ஏனென்றால், அந்த உயிரினங்கள் போலவே,  மனிதர்களும் முன்பு[ஆறாம் அறிவு வாய்க்காத நிலை] ஐந்தறிவு ஜீவன்களாக இருந்தவர்கள்தான்.

எந்தவொரு உயிரினமும் ஆறாவது அறிவுக்கான கோரிக்கையை வைக்காத நிலையில், கடவுள் மனிதனுக்கு இந்த அரிய வாய்ப்பை வழங்கியது ஏன் என்பது நாம் மீண்டும் மீண்டும் எழுப்புகிற விடை இல்லாத கேள்வியாகும்.

“ஏன்?” என்னும் கேள்விக்கு விடை இல்லையாயினும், “எப்படி?” என்னும் கேள்விக்கான விடையை நம்மால் அனுமானிக்க[சரியோ தவறோ] முடியும்.

எப்படி?

ஆறாம் அறிவைப் பெறுவதற்கான உயிரினத்தைத் தேர்வு செய்ய, ‘சீட்டு’ குலுக்கியிருப்பார் கடவுள் என்பதே அந்த அனுமானம். குலுக்கலில் மனித இனம் தேர்வாகியிருக்கும்[ஹி...ஹி...ஹி!!!].

இதிலிருந்து அறியத்தக்க பேருண்மை என்னவென்றால்.....

மனிதனுக்குள்ள சிந்திக்கும் அறிவு கடவுளால் விரும்பி வழங்கப்பட்டதல்ல என்பதே.

உண்மை இதுவாக இருக்க, “ஆகா, கடவுள் நமக்கு ஆறறிவைக் கொடுத்தார்; அளப்பரிய இன்பங்களை வாரி வழங்கியுள்ளார்” என்றெல்லாம் மனிதர்கள் வாய் கிழிய முழங்குவதும், கோயில் கட்டிக் கொண்டாட்டங்கள் நடத்திக் கூத்தாடுவது ஆறறிவுக்கு அழகல்ல!

                                            *  *   *   *   *   

*[‘பரிணாமம்’ என்பது எளிய தன்மை கொண்ட உயிரிகளிலிருந்து மேம்பட்ட தன்மை கொண்ட உயிரினங்களில் படிப்படியாக ஏற்படும் மாற்றங்களாகும்].

திங்கள், 26 ஜூன், 2023

‘பத்தரைமாற்று’ப் பகுத்தறிவாளர் சித்தராமையா!

ர்னாடகாவின் தலைநகரான பெங்களூருவில் உள்ள சட்டப்பேரவைக்கு[விதானசவுதா] வருகைபுரிந்தார் கர்னாடக மாநில முதல்வரான சித்தராமையா.

ஆலோசனைக் கூட்டம் முடிந்து அவருடைய அலுவலகத்திற்குச் சென்றபோது, அதன் தென்புறக் கதவு மூடப்பட்டிருந்ததைக் கண்ட அவர், அதற்கான காரணத்தை அதிகாரிகளிடம் விசாரித்தார்.

வாஸ்து சரியில்லை என்று அறியப்பட்டு அது மூடப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தார்கள்.

கடும் அதிர்ச்சிக்குள்ளான முதல்வர், “இருப்பிடத்திற்கு நல்ல வெளிச்சமும் காற்றும்தான் மிக அவசியமானவை[வாஸ்து பார்க்கத் தேவையில்லை]. நல்ல மனமும், நல்ல எண்ணங்களும்[மக்கள் மீதான அக்கறை போன்றவை] இருந்தால் நாம் வாழும் குடியிருப்பு முதலான எல்லாமே நல்லவையாகவே அமையும்” என்று அறிவுறுத்தினார்.

மூடநம்பிக்கை ஒழிப்பு என்பதை வெறும் பேச்சளவில் நிறுத்திக்கொள்ளாமல், அறையின் தென்புறக் அகதவைத் திறக்கச் சொல்லி, அந்த வழியாகவே அறைக்குள் நுழைந்தார் கர்னாடகா முதல்வர் சித்தராமையா என்பது பகுத்தறிவுச் சிந்தனையாளர்களைப் பெருமிதப்படவைக்கும் அரிய நிகழ்வாகும்[தினகரன், 25.06.2923]ஆகும்.

இவரின் இந்த நடவடிக்கையை நாடெங்குமுள்ள தலைவர்களில் எவரும் பாராட்டியதாகத் தெரியவில்லை.

மக்களில் பெரும்பாலோர் மட்டுமல்ல, இங்குள்ள தலைவர்களில் மிக மிக மிகப் பெரும்பாலோர் மூடநம்பிக்கைகளில் ஊறி வளர்ந்தவர்கள்; மூடநம்பிக்கைகளை வைத்துப் பிழைப்பு நடத்துபவர்கள் என்பதே இதற்கான காரணம்.

கர்னாடக முதல்வர் தவிக்காக நடந்த போட்டியில், தீவிரக் கடவுள் பக்தரான சிவக்குமார்[துணை முதல்வர்] தவிர்க்கப்பட்டு,


100% பகுத்தறிவாளரான சித்தராமையா முதல்வர் ஆனது வரவேற்கத்தக்கது.

பகுத்தறிவாளரான இவரின் மக்கள் பணி நாளும் சிறந்திட வேண்டும் என்பது நம் மிகு விருப்பம்!


தொடர்புள்ள இடுகைகள்:


ஞாயிறு, 25 ஜூன், 2023

‘த.நா.’ வரும் ‘வடக்கச்சி’களின் ‘தொழில்’ சுத்தம்! வரவேற்கப்படுவார்களா?!

ட மாநிலக் குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் சிலர்[முழு விவரம் சேகரித்தால் அவர்கள் பலராகவும் இருத்தல்கூடும்] சென்னைக்கு வேலை தேடி வருவது போல வந்து, ‘விபச்சாரம்’ செய்கிறார்கள்.

இவர்கள் செய்யும் இந்தத் தொழிலுக்கு, ‘குடும்ப விபச்சாரம்’ என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள் நம் ஊடகக்காரர்கள்.

வட நாட்டுப் பெண்கள் செய்யும் இந்தத் தொழிலை, ‘விபச்சாரம்’ என்பதற்கு மாறாக ‘பாலியல் தொண்டு’ என்று சொல்லத்தோன்றுகிறது.

இவர்கள், ஒரு நாளில் ஒருவருக்கு மட்டுமே அனுமதியளிக்கிறார்கள்[அந்த ஒரு நாளில் ‘ஒருத்திக்கு ஒருவன்’ என்னும் ஒழுக்க நெறி பின்பற்றப்படுகிறது! ஹி... ஹி... ஹி!!!].

கட்டணம் ‘வெறும்’ ஐயாயிரம்[24 மணி நேரத்துக்கு] ரூபாய் மட்டுமே.

வாடிக்கையாளருக்கு அவர்களே காலைச் சிற்றுண்டி கொடுக்கிறார்கள்.

பகலில், பிரியாணியுடன் சுவையான விருந்து படைத்து, ஒரு முழுநாளுக்கான  உல்லாசத்துக்கு அவரைத் தயார்ப்படுத்துகிறார்கள்.

எனவே, இத்தனைக் கௌரவமாகத் தொழில் செய்யும் இவர்களைப் ‘பாலியல் சேவகிகள்’ என்பதே ஏற்புடைத்தாகும்.


இவர்கள், சம்பாதித்த பணத்தை, அவ்வப்போது தங்களின் குடும்பத்தாருக்கு அனுப்புகிறார்கள்.


இடையிடையே, சொந்த ஊருக்குச் சென்று ஓய்வெடுத்துக்கொண்டு மீண்டும் சென்னைக்கு[தமிழ்நாடு முழுதும் பின்னர் விரிவுபடுத்தப்படக்கூடும்] வந்து தொழிலைத் தொடர்கிறார்கள்.


காவல்துறையால் கைது செய்யப்பட்டுத் தண்டனை அனுபவித்தாலும் தொழிலுக்கு முற்றுப்புள்ளி வைக்காமல், இவர்கள் பாலியல் சேவையைத் தொடர்ந்து செய்வது கனிக்கத்தக்கது[பாராட்டத்தக்கது?]


தொழில் தேடி இங்கு[தமிழ்நாடு] வந்த வட நாட்டவரை, ‘வடக்கன்ஸ்’ என்றார்கள் தமிழர்கள். அவர்களால் நம்மவர்களுக்கான வேலை வாய்ப்பு பாதிக்கப்படுவதாகச் சொல்லி அவர்களைச் சாடவும் செய்தார்கள்; விரட்டியடிக்கவும் முனைந்தார்கள்.


அரசு அவர்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்தது. 


வடக்கிலிருந்து வரும் இந்த ‘வடக்கச்சிகளால் தங்களின் பாரம்பரியத் தொழில் பாதிக்கப்படும் என்றெண்ணி இங்குள்ள பாலியல் தொழில்காரிகள் அஞ்சுவார்கள் என்பதில் சந்தேகமில்லை; ஒன்றிணைந்து, தெருவில் இறங்கி, “இங்கு வராதீர் வடக்கச்சிகளே! வந்தால் விரட்டியடிப்போம்” என்று முழக்கமிட்டுப் போராடும் நாளும் வரக்கூடும்.


வடக்கிலிருந்து வந்த தொழிலாளர்களுக்கு[வடக்கன்ஸ்]த் தகுந்த பாதுகாப்பளித்த தமிழ்நாடு அரசு, ‘தொழில் சுத்தம்’ காக்கும் ‘வடக்கச்சி’களுக்கும் உரிய பாதுகாப்பு வழங்கும் என்று எதிர்பார்க்கலாம்!


வருகைதரும் ‘வடக்கச்சி’களை இரு கரம் குவித்து வவேற்போம்!


ஹி...ஹி... ஹி!!!

* * * * *

https://www.dailythanthi.com/News/State/if-you-pay-rs-5-thousand-you-will-be-treated-with-a-party-and-a-family-prostitution-again-in-chennai-992630




சனி, 24 ஜூன், 2023

“இந்தியா பிரியக்கூடும்[பல நாடுகளாக]”... இது ‘ஒபாமா’ சொன்னது; சொல்லாதது?

//தென்ஸில் பிரபலப் பத்திரிகை ஒன்றுக்கு அமெரிக்க முன்னாள் அதிபர் ‘பராக் ஒபாமா’ அளித்த பேட்டியில், ‛‛இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள இந்தியாவில் இஸ்லாமியர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரின் பாதுகாப்பு முக்கியமானது. சிறுபான்மையினரின் உரிமைகள் பாதுக்காக்கப்படாவிட்டால், ஒரு கட்டத்தில் இந்தியா பிரிவதற்கான[பிளவுபடுவதற்கான] வாய்ப்பு அதிகமாகும்” என்று கூறியுள்ளார்//*

இது நேற்றையச்[23.06.2023] செய்தி.


‘இஸ்லாமியர் உள்ளிட்ட சிறுபான்மையினர்’ என்று ஒபாமா குறிப்பிட்டது இந்தியாவிலுள்ள பல மதங்களைச் சார்ந்த சிறுபான்மையினரை.

மதச் சார்பு மட்டுமல்ல, ‘இந்தி’யைத் தாய்மொழியாகக் கொண்ட ‘இந்தி’யரைத் தவிர, பல மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்டுள்ள இனச் சிறுபான்மையிரும் இங்குப் புறக்கணிக்கப்படுகின்றனர் என்பதை ஒபாமா அறிந்திருக்க வாய்ப்பில்லை.

சிறுபான்மை இனத்தவர் பெரும்பான்மையாக உள்ள மாநிலங்களில்,  அங்கு ஆட்சி செய்யும் அரசுகளுக்குரிய அதிகாரங்களைப் பறிப்பது; இந்தி மொழியைத் திணிப்பது; அதை வளர்ப்பதற்கு மட்டும் கோடிக்கணக்கில் செலவிடுவது; அதிகாரத்தைப் பயன்படுத்தி அமலாக்கத் துறையினரையும், வருமானவரித் துறையினரையும், லஞ்ச ஒழிப்புத் துறையினரையும் ஏவி, மாநில அரசுகளின் நற்பெயருக்குப் பங்கம் விளைவிப்பது,
ஆளுநர்கள் மூலம் மூடநம்பிக்கைகளைத் திணித்து மக்களின் சிந்திக்கும் அறிவைச் சீரழிப்பது; மாநில மக்களின் மொழிப் பற்றையும் இனப்பற்றையும் மழுங்கடிப்பது; மாநில அரசுகளின் உரிமைகளைப் பறிப்பது; மாற்றுக் கட்சியினர் வசமுள்ள  ஆட்சியைக் கலைப்பது
போன்ற ஒன்றிய அரசின் நடவடிக்கைகளால்  சிறுபான்மை இனத்தவர் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளார்கள் என்பதையும் அவர் அறிந்திருக்கமாட்டார்.

அறிந்திருந்தால்.....

“இந்தியா பிளவுபடுவதற்கான வாய்ப்பு உள்ளது” என்று சொல்லியிருக்கமாட்டார். மாறாக.....

“இந்தியா பிளவுபடும்; உடைந்து சிதறும். இது உறுதி” என்று கடும் எச்சரிக்கை விடுத்திருப்பார்.

ஒபாமாவின் இந்த எச்சரிக்கை எவ்வகையிலும் நமக்குப் பயன் அளிக்க வாய்ப்பில்லை, இதை நம் ஒன்றிய அரசு ஒரு பொருட்டாக மதிக்காது என்பதால்.

எனினும், இங்குள்ள சிறுபான்மை இனத்தினர் ‘இந்தி’யர் என்னும் பெரும்பான்மையினருக்குள் முற்றிலுமாய்க் கரைந்துபோவதைத் தடுக்க, உரிய அவசர நடவடிக்கைகளை மேற்கொள்வது, இந்திய ஒருமைப்பாட்டின் மீது அசையாத நம்பிக்கையும், நாட்டின் நலனில் அக்கறையும் கொண்ட நல்ல தலைவர்களின் கடமை ஆகும்.
                                             
                                             ++++++++++

வெள்ளி, 23 ஜூன், 2023

‘இது’க்கு ‘அது’ தேவலாம்![புதிர்&பொழுதுபோக்குக் கதை]

ங்கள் வீட்டிலிருந்து எட்டி நடைபோட்டால் பத்து நிடங்களில் பொதுநூலகத்தை அடைந்துவிடலாம். 

நூலகத்திற்கு எதிரே நான் வசிக்கும் பேட்டையையும் கடைவீதியையும் இணைக்கும் தார்ச்சாலை.

நூலகத்தை ஒட்டியிருக்கும் மண்தரையில் காய்கறிக்காரி, கடலைபொறிக்காரி, இளநீர் விற்பவர் ஆகியோர் கடைவிரித்திருப்பார்கள். அவர்களையடுத்து சற்றே வயதான ஒரு பிச்சைக்காரரும் இருப்பார்.

இருக்கிற கொஞ்சூண்டு அறிவை அபிவிருத்தி செய்வதற்காக அவ்வப்போது நான் நூலகத்திற்குச் செல்வதுண்டு.

அன்று நான் சென்றபோது, வழக்கம்போல அந்தப் பிச்சைக்காரர் கையேந்தினார்.

சற்றே யோசித்த பிறகு அவரிடம் ஐம்பது ரூபாய்த் தாளை நீட்டினேன்[காரியமாகத்தான்].

புருவம் சுருக்கி, விழிகளில் வியப்பைத் தேக்கி, “அம்பது ரூபாய் குடுத்திருக்கீங்க. மிச்சம் குடுக்குறதுக்கு என் கிட்டே ஏதுங்க பணம்?” என்று சொல்லி, தரையில் விரித்திருந்த அழுக்கேறிய துண்டுத் துணியில் கிடந்த கொஞ்சம் சில்லரையைக் காட்டினார்.

“ஐம்பதும் உனக்குத்தான்” என்று நான் சொன்னதும் அவர் முகத்தில் மகிழ்ச்சி பரவியது.

“உனக்கு எந்த ஊர்?” -கேட்டேன்.

சொன்னார்.

“குடும்பம்?”

“இருக்குங்க. பேரன் பேத்திகள் எல்லாம் இருக்கு. பெண்டாட்டியோடு பிணக்கு. பிள்ளைகள் எல்லாருமே அவள் பக்கம். வாழ்க்கை வெறுத்துப்போச்சு. வீட்டைவிட்டு வெளியேறிட்டேன். வயித்துப்பாட்டுக்காகப் பிச்சை எடுக்கிறேன்’ என்று நாற்பது ஆண்டுகள் போல நடத்திய வாழ்க்கைப் போராட்டத்தை நான்கு வரிகளில் சுருக்கிச் சொன்னார்..

‘மனநிலை பாதிக்கப்பட்டவரோ?’ என்னும் என் சந்தேகம் தீர்ந்தது.

அவருக்கு வயது அறுபதுக்கு மேல் இருக்கலாம்; ஆனாலும், உடம்பு திடகாத்திரமாகவே இருப்பது தெரிந்தது.

“நல்லாவே இருக்கீங்க. எதுவும் தொழில் செஞ்சு பிழைக்கலாமே. எனக்குத் தோணினதைச் சொல்லிட்டேன். யோசனை பண்ணுங்க” என்று சொல்லிவிட்டு நூலகம் நோக்கி நகர்ந்தேன்.

குடும்பச் சூழ்நிலை காரணமாக, இரண்டு மாதங்களுக்கு மேல் கடந்துவிட்ட நிலையில் அன்று நூலகத்துக்குப் புறப்பட்டேன்.

வழக்கத்துக்கு மாறாக, பிச்சைக்காரர் என் கண்ணில் படவில்லை. ‘நம் அறிவுரை வீண்போகவில்லையோ’ என்று என்னை நானே சிலாகித்தவாறு கடைகளைக் கடந்தபோது.....

“ஐயா நலமா இருக்கீங்களா?” என்ற விசாரிப்பு என்னை நின்று திரும்பிப் பார்க்க வைத்தது.

நெற்றியில் பட்டையும், கழுத்தில் உருத்திராட்சக் கொட்டையுமாக மங்களகரமாகக் காட்சியளித்த ஒரு கிளி சோதிடர் என்னைப் பார்த்துப் புன்னகைத்தார். சில வினாடிகள் அவகாசத்திலேயே அவர் நான் அறிந்திருந்த முன்னாள் பிச்சைக்காரர் என்பது புரிந்தது.

“நான் திருந்திட்டேனுங்க. உங்க புத்திமதி என்னைத் திருத்திடிச்சி” என்று நன்றியுணர்ச்சி பொங்கச் சொன்னார்.

“ரொம்பச் சந்தோசம்” என்று சொல்லிவிட்டு நகர்ந்தேன்.

சனங்களை முட்டாள் ஆக்குகிற இந்தத் தொழிலை[கிளி சோதிடம்]ச் செய்யுறதைவிட, முன்னாள் பிச்சைக்காரத் தொழில் எவ்வளவோ மேல். அதனால யாருக்கும் எந்தப் பாதிப்பும் இல்ல. நான் புத்தி சொல்லித் தப்புப் பண்ணிட்டேன்” -இது, அவர் ரொம்பவே வருத்தப்படுவார் என்பதால், சொல்ல நினைத்து நான்  சொல்லாமல் தவிர்த்தது!

                                         ++++++++++

***இது நடந்த நிகழ்வு என்றால் நம்புவீர்களா?

வேண்டாம். 

ஒரு திடகாத்திரப் பிச்சைக்காரருக்குப் புத்தி சொல்ல நினைத்து, “ஒத்தை ரூபா போட வக்கில்ல. புத்தி சொல்ல வந்திட்டாரு, புத்தி” என்று கடுப்படித்தால் என்ன செய்வது என்று பயந்து பின்வாங்கிய சூழலில் உருவான கதை இது!

ஹி... ஹி... ஹி!!!

வியாழன், 22 ஜூன், 2023

செயற்கைக் கோழி இறைச்சி விற்பனைக்கு! செயற்கைத் தாய்ப் பால்.....?

உலக அளவில் இறைச்சி உண்போர் அதிகரித்துவரும் நிலையில், விலங்கு, பறவை முதலான உயிரினங்களைக் கொன்று உண்பதற்கும் எதிர்ப்புத் தெரிப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்தவாறே உள்ளது.

இந்நிலையில்.....

அமெரிக்காவில் விலங்குகளின் உயிரணுக்களிலிருந்து செயற்கை இறைச்சி உருவாக்கப்பட்டுள்ளது என்பது அண்மையில் வெளியான மிக நல்ல ஒரு செய்தி.

ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட இந்தச் செயற்கை இறைச்சியை விற்பனை செய்வதற்கு அமெரிக்க உணவு&மருந்துகள் நிர்வாகம் இரண்டு நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது.

இன்னொரு மகிழ்ச்சியளிக்கும் செய்தி என்னவென்றால்,

சிங்கப்பூரில் கோழியின் உயிரணுவிலிருந்து தயாரிக்கப்பட்ட செயற்கை இறைச்சி, அரசாங்கத்தால் அனுமதிக்கப்பட்டு, விற்பனையில் சக்கைப்போடு போடுகிறதாம்.

விரைவில், மரபணுக்களிலிருந்து தயாரிக்கப்பட்ட ஆடு, மாடு, பன்றி, பாம்பு, மீன், மான் என்று உண்ணுவதற்கு ஏற்ற அனைத்து உயிரினங்களின் இறைச்சிகளும் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கலாம்.

ஆனால்.....

இவையெல்லாம் தயாரிக்கப்படுவதற்கு முன்னதாகவே, நம் மனிதக் குழந்தைகளுக்கான தாய்ப்பால் தயாரித்து விற்பனை செய்யப்படுவது மிக மிக முக்கியம்.


தாய்ப்பால் சுரக்காத தாய்மார்கள் மட்டுமல்லாமல், பாலிருந்தும் குழந்தைக்குப் பால் கொடுத்தால் கட்டுக் குலையும்; அழகு சிதையும் என்று தீராத கவலைக்கு உள்ளாகும் அன்னையர் குலத்துக்கும் இது வரப்பிரசதமாக அமையும்.

எனவே, அமெரிக்கா, சிங்கப்பூர் மட்டுமல்லாமல், செயற்கை உணவுகள் தயாரிக்கவுள்ள பிற நாடுகளும் இதைக் கருத்தில் கொள்ளுதல் வேண்டும் என்பது நம் கோரிக்கை!

[நன்றி: மாலைமலர்]

மூச்சுப் பயிற்சியும் ‘மோடி’[யைப்] பிரபலப்படுத்தும் யோகா பயிற்சியும்!!!


தரையில் சப்பணமிட்டு அமர்ந்து, மூச்சுக் காற்றைச் சீராக இழுத்துவிடுவது, உடல் நலத்திற்கான சிறந்ததொரு பயிற்சியாகும்.

இதனால் இதயத்திற்குத் தேவையான இரத்த ஓட்டம் சீராக அமையும். உடல் சுறுசுறுப்பாக இயங்க இது உதவும்.

தினமும் இப்பயிற்சியைச் செய்வதன் மூலம் நமக்கு ஏற்படக்கூடிய இதயம் சம்பந்தமான நோய்களைத் தடுக்க முடியும்.

மூச்சுப் பயிற்சியால், ரத்தக் குழாய்களில் தங்கியிருக்கும் மிகையான கொழுப்புகளும், ஊளைச் சதை எனப்படும் தேவையற்ற சதைகளும் கரைகின்றன.

மூளைவரை உயிர்க்காற்று[பிராணவாயு] பரவுகிறது. அதன் மூலம் மூளை சிறப்பாகச் செயல்படுகிறது.

மூச்சுப் பயிற்சியுடன் வேறு பல உடற்பயிற்சிகளையும் சேர்த்துச் செய்வதைத்தான் ‘யோகா’ என்கிறார்கள்.

வேறு பயிற்சிகள் எனப்படுவது, அமர்ந்த கோலத்திலோ, நின்ற நிலையிலோ கால்களை நீட்டி மடக்கியும், கைகளை உயர்த்தியும் இறக்கியும், முழு உடம்பையும் வளைத்தும் நெளித்தும் பக்கவாட்டுகளில் சுழற்றியும் செய்யப்படுபவை.

இவை உடற்பயிற்சிகளே தவிர, மூச்சுப் பயிற்சிக்கும் இவற்றிற்கும் சம்பந்தமே இல்லை.

உடற்பயிற்சி செய்ய இயலாதவர்கள்[உடல் நலம் குன்றியவர்கள், வயதானவர்கள் போன்றவர்கள்] மூச்சுப் பயிற்சியை மட்டும் செய்யலாம்.

தேவை எனின், அளவான உடற்பயிற்சியும் செய்யலாம். அதாவது, இரண்டையும் தனித் தனியாகவோ இணைத்தோ செய்யலாம். உடம்புக்குத் தீமையும் விளைவிக்கிற யோகாவைத் தவிர்க்கலாம்.

"தினமும் காலையில் யோகாசனங்கள் செய்வதால் நம்முடைய சிந்திக்கும் ஆற்றல் மேம்படுகிறது. மனப் பதற்றம், மனச் சோர்வு போன்றவை நீங்குகின்றன” என்று சொல்வது அப்பட்டமான பொய்யாகும்.

இவற்றைப் பெறுவதென்பது ‘மனப் பயிற்சி’யால் மட்டுமே சாத்தியமாகும்.

மூச்சுப் பயிற்சி, மனப்பயிற்சி, உடற்பயிற்சி ஆகிய மூன்றும் வேறு வேறானவை.

இவற்றாலும், நல்ல உணவுண்ணுவதாலும், வேறு நல்ல பழக்கவழக்கங்களாலும் விளைகிற அத்தனை நன்மைகளும் யோகா பயிற்சியால் கிடைக்கிறது என்று பரப்புரை செய்வது விரும்பத்தகாத செயலாகும்.

இந்தியப் பிரதமர் மோடி அதைத்தான் செய்கிறார்.

இவர் தலைமையில் நடைபெற்ற சர்வதேச யோகா தின விழாவில்[நியூயார்க், ஐ,நா.தலைமையக வளாகம்] பயிற்சி முடிவில்.....

‘ஓம்’ மந்திரமும் சமஸ்கிருத சுலோகங்களும் ஒலிபரப்பப்பட்டனவாம்.

இவற்றுக்கும், இவர்களால் பரப்புரை செய்யப்படும் யோகா பயிற்சிக்கும் என்ன சம்பந்தம்?

சமஸ்கிருதம் தேவ பாஷை. அதிலுள்ள மந்திரங்களும் சுலோகங்களும் சக்தி வாய்ந்தவை என்று மக்களனைவரையும் நம்ப வைப்பதற்கான சூழ்ச்சி இது என்பதே நம் எண்ணம்.

* * * * *
***பெருமளவில் கொண்டாடப்படும் இந்த யோகாவால் கெடுதல்களும் உண்டாகின்றன. அவற்றுள் சில:

//அறுவைச் சிகிச்சை செய்து குணமடைபவர்களுக்கு, அல்லது காயங்களில் இருந்து மீண்டுவருபவர்களுக்கு யோகா தீங்கு விளைவிக்கிறது[குணமடைதலைத் தடுக்கிறது].

அஷ்டாங்க யோகா பயிற்சியாளர்களில் ஈடுபட்டவர்களில் 62 சதவீதம் பேர் தசை&எலும்புக் காயங்களால் அவதிப்படுவதுண்டு.

யோகா, நன்மைகளுக்கிடையே ரத்த அழுத்தம், முதுகுக் காயங்கள், தசைப் பிளவுகள், கிளவ்கோமா தொடர்பான பிரச்சினைகள், பக்கவாதம், நரம்புச் சேதம், கடுமையான காயங்கள் போன்ற பாதிப்புகளையும் ஏற்படுத்தும். ஆதாரம்: https://www.javatpoint.com/advantages-and-disadvantages-of-yoga//

புதன், 21 ஜூன், 2023

அதீத ஆன்மிக நாட்டமும் ஆண்மைக் குறைவும்!!!

கர்நாடகாவில் கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் 18ஆம் தேதி ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும்[ஆணுக்கும் ஆணுக்கும் பெண்ணுக்கும் பெண்ணுக்கும் திருமணம் நடப்பது கருத்தில் கொள்ளத்தக்கது] திருமணம் நடந்தது. 

புது மாப்பிள்ளையான மணமகன், தன் மனைவியுடன் அவனது தாயார் வீட்டிற்குச் சென்றான். அங்குக் கிட்டத்தட்ட 28 நாட்கள் இருவரும் தங்கியிருந்தனர். இருந்தபோதும், அவர்களுக்குள் தாம்பத்திய உறவு நிகழவில்லை[இது செய்தி. கூடுதல் விவரம் பதிவின் பிற்பகுதியில்]. 

   *   *   *   *   *

திருமணத்தின் முக்கிய நோக்கமே உடலுறவு இச்சையைத் தணிப்பதுதான்.


ஆண்மகன் அந்த இச்சையைத் தன் மனைவியிடம் அப்பட்டமாக வெளிப்படுத்துவான். மனைவியோ மலையளவு காமம் சுமந்திருந்தாலும் அடங்கியே இருப்பாள். அவனின் வரவை எதிர்பார்த்துக் காத்திருப்பாள்.


காத்திருப்பதற்கும் ஓர் எல்லையுண்டு.


அவன் காலம் கடத்துவானேயானால்…..


எந்தவொரு மனைவியும், “படுக்க வா” என்று கூச்சநாச்சமின்றி அழைப்பு விடுக்கமாட்டாள்[விதிவிலக்கு உண்டு?!]. அது நம் பெண்களுக்குரிய பிறவிக் குணம்.


அது நடக்காமலே இருந்துவிட்டால், அதைக் கட்டுப்படுத்திக்கொண்டுதான் இருப்பார்கள். விரதம் இருப்பது, அரை வயிற்றுக்கு உண்பது, முழுப் பட்டினி கிடப்பது, காம உணர்வைத் தூண்டும் உணவுகளைத் தவிர்ப்பது, அடிக்கடி கோயிலுக்குப் போவது என்று அதற்கான வழிமுறைகளைக் கையாள்வார்கள்.


இதனால் பயன் ஏதும் விளையாதபோது, அடக்கியும் அடங்கியும் வீட்டோடு முடங்கியும் கிடப்பார்கள். அந்நிலை நீடித்தால், மனநிலை பாதிக்கப்பட்டுப் பைத்தியங்களாக ஆவதும் உண்டு.


இப்படியான பாவப்பட்ட பெண்களுக்குப் பேய் பிடித்துவிட்டது என்று முடிவெடுத்து, பேய் ஓட்டுதல், மாந்திரீகம் செய்தல் என்று பாடாய்ப்படுத்துவார்கள் நம் மக்கள்.


சில துணிச்சல்காரிகள், கள்ளக் காமுகனைத் தேடிக்கொண்டு அவனுடன் ஓடிப்போவது உண்டு. அவனால் கைவிடப்படும்போதோ, அது நாலு பேருக்குத் தெரியவரும்போதோ  தூக்கில் தொங்கிவிடுவதும் நடக்கிறது.


கள்ளக்காதலனுடன் ஓடிப்போய், ஒரு கட்டத்தில், ஒவ்வாத சூழலில் கொலை செய்யப்படுவதும் உண்டு.


ஆக, கட்டிய கணவன் என்பவன், தன்னை ஆகச் சிறந்த ஆன்மிகவாதி என்று சொல்லிக் கோயில் கோயிலாக அலைந்துகொண்டும், பக்தி முத்திப்போய்க் கண்ட கண்ட போலிச் சாமியார்களை தேடித் திரிந்துகொண்டும்[இதன் காரணமாக ஆண்மைக் குறைவு ஏற்படவும் வாய்ப்புள்ளது] மனைவிக்குரிய தாம்பத்திய சுகம் அளிக்கும் கடமையைச் சரிவரச் செய்யாதபோது[செய்தாலும் வரம்பு மீறுகிற பெண்களும் உளர்] அந்த மனைவியின் வாழ்க்கை முற்றிலுமாய்ச் சீரழிகிறது; சிதைகிறது.


கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிடப்பட்ட பெண் படித்தவளாகவும், பொது அறிவு படைத்தவளாகவும் இருந்ததாலோ என்னவோ, மேற்குறிப்பிட்ட அவலங்களுக்குள் சிக்கிக்கொள்ளாமல், துணிச்சலுடன் குடும்ப நீதிமன்றத்தை நாடினாள்.


தன் கணவனுக்கு எதிராகக் கடந்த 2020ஆம் ஆண்டு பிப்ரவரி 5ஆம் தேதி குடும்பநல நீதிமன்றத்தில் ‘இந்துத் திருமணச் சட்டப் பிரிவு 12(1)(ஏ)இன் கீழ்’ வழக்குத் தொடுத்தாள்.


'என் கணவர் என்னுடன் தாம்பத்திய உறவு கொள்வதே இல்லை. அவர் எப்போதும் ஆன்மீக வீடியோக்களையும்,  பிரம்மகுமாரி சமாஜத்தின் வீடியோக்களையும் பார்த்துக்கொண்டிருக்கிறார். அவரிடம் எப்போது தாம்பத்தியம் வைத்துக்கொள்ளலாம் என்று கேட்டாலும்[என்ன கொடுமை ஐயா இது!], தாம்பத்தியம் வேண்டாம் என்று கூறுகிறார். அவருடன் சேர்ந்து வாழ்வது எனக்குக் கொடுமையாக உள்ளது. எனவே எங்கள் திருமணத்தை ரத்து செய்ய வேண்டும்' என்று கோரிக்கை வைத்தார். 


இவ்வழக்கை விசாரித்த குடும்பநல நீதிமன்றம், கடந்தாண்டு நவம்பர் 16ஆம் தேதி, தம்பதிகளின் திருமணத்தை ரத்து செய்தது. 


விவாகரத்து வாங்கிய கையோடு, கணவன் திருமணத்திற்குப் பிறகு தாம்பத்தியத்தை மறுத்துக் கொடுமை செய்ததற்காக அவன் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கர்னாடக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தாள் அந்தப் பெண்.


இந்த வழக்கை விசாரித்த கர்நாடகா உயர் நீதிமன்றத் தனி நீதிபதி எம்.நாகபிரசன்னா, 'மனுதாரரின் கணவர் மீதான ஒரே குற்றச்சாட்டு, அவர் ஆன்மீகத்தைப் பின்பற்றுபவர் என்பதுதான். காதல் என்பது தாம்பத்திய உறவால் மட்டும் வருவதில்லை. ஆன்மாவுடன் ஆன்மாவை இணைப்பது[அது புதைகுழிக்குப் போன பிறகு சாத்தியம் ஆகலாம்?] என்று அவர் நம்புகிறார். அவர் தனது மனைவியுடன் தாம்பத்திய உறவில் ஈடுபட விரும்பவில்லை என்று கூறியுள்ளார். இந்துத் திருமணச் சட்டத்தின் பிரிவு 12(1)(இ)இன் கீழ், தாம்பத்திய உறவு கொள்ளாமல் இருப்பது கொடுமையானது என்று கூறப்பட்டாலும், ஐபிசி 498ஏ பிரிவின் கீழ், கணவர் தாம்பத்திய உறவு கொள்ளாமல் இருப்பதைக் கொடுமையாகக் கருத முடியாது. கணவன் மீது குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்க முடியாது’ என்று சொல்லிக் கிரிமினல் வழக்கைத் தள்ளுபடி செய்திருக்கிறார்.


அந்தரங்க உறவு விசயத்தில், கணவனால் முற்றிலுமாகப் புறக்கணிக்கப்படுகிற ஒரு பெண்ணின் மனநிலையையும், அவளுக்கு நேரும் அளவிறந்த பாதிப்புகளையும் கருத்தில் கொள்ளாமல் நீதிபதி தீர்ப்பு வழங்கியிருக்கிறார் என்றே சொல்லத் தோன்றுகிறது.


எதிர்காலத்திலேனும் இம்மாதிரி வழக்குகளில் அவர்கள் ஆழ்ந்து சிந்தித்துத் தீர்ப்புகள் வழங்குவது, வரவேற்கத்தக்கதாகவும் மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும் அமையும் என்பது நம் எண்ணம்.

                           +++++++++++++++++++++


https://tamil.oneindia.com/news/bangalore/karnataka-hc-quashes-section-498a-ipc-case-filed-against-husband-for-not-consummating-marriage-517535.html