//‘த.வெ.க.’ தலைவர் பட்டு வேட்டி, சட்டை அணிந்து திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்குச் சென்றார். இன்று அதிகாலை 5 மணியளவில் கோயில் நடை திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, நடைபெற்ற சிறப்புத் தரிசனமான விஸ்வரூப தரிசனத்தை விஜய் கண்டு களித்தார்//[இது இன்று ஊடகங்கள் பலவற்றிலும் வெளியாகியுள்ள செய்தி].
மக்கள் வாக்களித்து வெற்றிபெறச் செய்தால், அறிவு ஜீவியோ அடிமுட்டாளோ எவர் வேண்டுமானாலும் ஒரு மாநிலத்தின் முதல்வராக[அல்லது பிரதமர்> இதற்கு முன்னுதாரணம் உண்டு] ஆகலாம்.
நடிகர் விஜய்க்கும் அதற்கான தகுதி உண்டு என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.
ஆனால்,
ஒருவர் ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்தவராக இருந்து, எதிர்பாராத விதமாக வேறொரு மதத்தைத் தழுவுவது, பல மதக் கடவுள்களையும் வழிபடும் ஆகச் சிறந்ததொரு சர்வ மதப் பக்தனாக ஆகிவிடுவது எல்லாம் அத்தனை எளிதல்ல.
இதற்குக் கடவுள், மதங்கள் குறித்த ஆழ்ந்த சிந்தனையும் அதன் மூலம் பெற்ற நன்கு பக்குவப்பட்ட மனமும் தேவை.
இவ்வாறானதொரு மனப்பக்குவத்தைக் கடந்த காலத்தில் நடிகர் விஜய் பெற்றிருந்தார் என்பது இவரின் செயல்பாடுகளால் அறியப்படவில்லை.
இவர் கிறித்தவர் மட்டுமல்லாமல் இந்துவாகவும் இஸ்லாமியராகவும் தன்னை அடையாளப்படுத்தியிருப்பது அண்மைக்கால நிகழ்வுதான்.
இவரின் இந்த அதிசய மாற்றத்திற்கான காரணம் பதவி ஆசை.
இந்த அற்ப ஆசையெல்லாம் இவருக்கு இல்லை; மக்களுக்குப் பணி செய்ய வேண்டும் என்னும் பரந்த மனத்தவர் இவர் என்றால்.....
கர்த்தரும், அல்லாவும், கணக்கிலடங்காத இந்துமதக் கடவுள்களும் இந்தப் பிரபல நடிகரை ஆசீர்வதிப்பார்களாக!
