எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

ஞாயிறு, 4 செப்டம்பர், 2016

திருந்துவார்களா தொ.கா.தொடர் தயாரிப்பாளர்கள்?


#.....தொலைக்காட்சிகளில் வரும் தொடர்கள், நிகழ்ச்சிகள் மற்றும் செய்திகள் மீதான புகார்கள் மொத்தம் 10 வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன.

சமூக நலன், மதச்சார்பின்மை, குழந்தைகளுக்கு எதிரானவை, தேசவிரோதம், நிறவேற்றுமை, ஆபாசம், முத்தக்காட்சிகள், நிர்வாணம், கலவரம், கிரைம் என இவை அனைத்தின் மீதும் மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்துக்குப் புகார்கள் வருகின்றன.

இப்புகார்களில் பெரும்பாலும் ஆபாசம் மற்றும் கலவரம் தொடர்பான புகார்கள் இதுவரை அதிகம் இருந்தன. ஆனால், தற்போது திகில், மந்திரதந்திரங்கள், பேய், பில்லி, சூனியம், பாம்புக் கதைகள் என மூடநம்பிக்கையை வளர்க்கும் தொடர்கள் மீது  புகார்கள் குவியத் தொடங்கியுள்ளன.

இந்த வகையில் ஆகஸ்டு 31 வரை அரசுக்கு வந்த 1850 புகார்களில் 1250 புகார்கள் மூடநம்பிக்கை தொடர்பாக உள்ளன.....#

என்று குறிப்பிடுவதோடு, மேலும் பல செய்திகளைத் தந்துள்ளது ‘தி இந்து’.

நடவடிக்கை எடுக்க, பிசிசிசி-க்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

நடவடிக்கை சாத்தியமா? எப்போது? போன்ற கேள்விகளுக்கு இப்போது விடை அறிய இயலாது எனினும், மக்கள் மனங்களில் ஏற்பட்டுள்ள மாற்றமும் எழுச்சியும் நம் போன்றவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்திருக்கிறது என்பது உண்மை.

நன்றி: ‘தி இந்து’[04.09.2016]
===============================================================================