அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

செவ்வாய், 31 ஜனவரி, 2023

வந்து குவியும் வட இந்தியத் தொழிலாளர்கள்! வரவழைக்கும் சுயநலத் தமிழர்கள்!!

தொழிற்சாலைகளிலும், வணிக நிறுவனங்களிலும் வட இந்தியத் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் லட்சக்கணக்கில் வேலை செய்வதை ஊடகச் செய்திகளின் மூலம் அறிய முடிகிறது.

உண்மையை ஒளிக்காமல் சொன்னால் அவர்களின் வருகைக்கு இங்குள்ள தமிழர்களே காரணம் ஆவார்கள். காரணங்களாவன.....

*லட்சக்கணக்கில் அவர்கள் இங்கு வேலை செய்கிறார்கள் என்றால், வணிக நிறுவனங்களிலும், தொழிற்சாலைகளிலும் அவர்கள் பணியமர்த்தப்பட்ட இடங்கள் ஏற்கனவே காலியாக இருந்தவை என்பதில் சந்தேகமில்லை.

அவை ஏன் நிரப்பப்படவில்லை?

நிரப்புவதற்கு இங்குப் போதுமான அளவில் ஆட்கள் இல்லையா?

இல்லை என்றால், இங்கு அவர்கள் வேலை தேடி வந்ததிலோ, வேலையில் சேர்ந்திருப்பதிலோ தவறே இல்ல.

*காலி இடமெல்லாம் இல்லை. இங்குள்ளவர்கள், உரிய நேரத்திற்கு வருகை தந்து, ஊதியத்திற்கேற்ற உழைப்பைத் தராததால், அப்படிப்பட்டவர்கள் வேலையிலிருந்து நீக்கப்பட்டு, வந்தேறிகள் அவ்விடங்களில் சேர்க்கப்பட்டார்கள் என்றால்.....

பாதிக்கப்பட்ட தமிழர்கள் ஒருங்கிணைந்தோ, தொழிற்சங்கங்களின் உதவியுடனோ போராடாதது ஏன்?

ஓசைப்படாமல் இருந்துவிட்டு, இப்போது வடவர்கள் வந்து குவிகிறார்கள்; நாளை அவர்கள் ‘பெரும்பான்மையினர்’ ஆகி நம் மீது ஆதிக்கம் செலுத்துவார்கள் என்று கூச்சல் எழுப்புவதில் அர்த்தமே இல்லை.

வட மாநிலத்தவர் வரவுக்கு முக்கியக் காரணக்கர்த்தாக்களாக இருப்பவர்கள் வணிக நிறுவன& தொழில் நிறுவன முதலாளிகளும்கூட.

இவர்களுக்கு, தமிழன் என்னும் இன உணர்வு எப்போதும் இருந்ததில்லை; இப்போதும் இல்லை. குறைவான சம்பளத்தில் நிறைய வேலை செய்யும் ஆட்களே இவர்களுக்குத் தேவை.

அந்தத் தேவை வடவர்களால் நிறைவேறுவதால், இரு கரம் கூப்பி அவர்களை வரவேற்கிறார்கள்.

அடுத்து, வடமாநிலங்களில் வேலையில்லாதவர்களைத் திரட்டி, கூட்டம் கூட்டமாக இங்கே அழைத்துவந்து நிறுவனங்களில் வேலையில் சேர்த்துக் ‘கமிஷன்’ பெறும் ஏஜண்டுகளும் வட மாநிலத் தொழிலாளர்களின் வரவுக்குக் காரணமாக இருக்கிறார்கள்.

ஏற்கனவே, இங்கு வேலை செய்துகொண்டிருக்கும் தொழிலாளர்கள், அங்கு வேலையில்லாமல் அலையும் தங்களின் சொந்தபந்தங்களை அழைத்து வருவதும் ஒரு காரணமாக உள்ளது.

மேற்கண்ட காரணங்களையெல்லாம் மறந்து இருந்துவிட்டு வடவர்களை வெளியேற்ற வேண்டும் என்று கூச்சல் எழுப்புவதால் எந்தவொரு பயனும் இல்லை.

இனி நாம் செய்யவேண்டியவை பற்றி யோசிக்கலாம்.

செய்ய வேண்டியவை:

1.நிறுவன உரிமையாளர்களிடம், தம்மிடம் வேலை செய்யும் வடவரை நீக்கிவிட்டு, அவர்கள் அளவுக்கு இல்லை என்றாலும், மனசாட்சிப்படி, ஊதியத்தேற்ற உழைப்பை வழங்கும் தமிழர்களை அவ்விடங்களில் நியமிக்கப் பரிந்துரை செய்யலாம். மறுப்பவர்களை வழிக்குக் கொண்டுவர, நிறுவனத்தை நடத்த அனுமதி வழங்குதல், புதுப்பித்தல் போன்ற அதிகாரங்களை அரசு பயன்படுத்தலாம்.

2.இங்குள்ள தொழிற்சங்கங்கள் மூலம் வேலையில்லாமல் அலையும் இஞைர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தலாம்.

3.பட்டங்கள் பெற்று, படிப்புக்கேற்ற வேலையைத் தேடிக் காலத்தை விரயம் செய்யும் இளைஞர்கள், தாம் விரும்பும் வகையிலான வேலை கிடைக்கும்வரை வடவர் செய்யும் வேலையைச் செய்திட முன்வருதல் வேண்டும்[பானிபூரி விற்பது உட்பட].

4இலவசங்கள் வழங்குவதில், அரசு இப்போதுள்ள தன் நிலையை மாற்றி, கடின உழைப்பைத் தர இயலாதவர்களுக்கும், முதியோர்களுக்கும் மட்டுமே ‘இலவசங்கள்’ என்னும் முடிவை மேற்கொள்ளுதல் வேண்டும்.

5.அரசும் அரசியல்வாதிகளும், தமிழ் மக்களிடையே உண்மையான தமிழின உணர்வைப் பரப்ப உரிய வழிமுறைகளைக் கையாள்வது உடனடித் தேவை.

அனைத்திற்கும் மேலாக, அரசு, இதற்கென வாழ்வியல் அறிஞர்கள் அடங்கிய குழுவை உருவாக்கி, தக்க ஆலோசனைகளை வழங்கச்செய்து அவற்றை நடைமுறைப்படுத்துவதில் கவனம் செலுத்துதல் வேண்டும்.

***மேற்கண்ட வழிமுறைகளை உரிய வகையில் அரசு நடைமுறைப்படுத்தினால், இனி வடமாநிலத் தொழிலாளர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதும், ஏற்கனவே இங்கு வேலை செய்வோரின் எண்ணிக்கையைக் குறைப்பதும் சாத்தியம் ஆகலாம்.

==============================================================================

***கருத்துகளைப் பதிவு செய்வதில் முழுக் கவனம் செலுத்தியதால், மொழியைக் கையாண்டதில் குறைகள் இருக்கலாம் என்பது அறியத்தக்கதாகும்.


திங்கள், 30 ஜனவரி, 2023

இழந்த இளமையை மீட்டெடுக்கும் 45 வயது லட்சோப லட்சாதிபதி[millionaire]!!!

“சத்துணவு உட்கொண்டு, உடற்பயிற்சி, யோகாப் பயிற்சி எல்லாம் முறையாகச் செய்தாலும்கூட, 45 வயதான ஒருவரின் இதயத்தை 37 வயதுக்காரருடையதைப் போலவும், நுரையீரலையும் உடலையும் 18 வயதே ஆன ஓர் இளைஞனுக்கு இருப்பதைப் போலவும், உடம்பின் தோலை 28 வயதுக்காரனுடையதை ஒத்ததாகவும் மாற்ற முடியுமா?” என்று கேட்டால்.....

“முடியும்” என்கிறார் 45 வயதான கலிஃபோர்னியாவைச் சேர்ந்த ஜான்சன் என்பவர்[மில்லியனர்].

இதற்காக, இவர் ஆண்டுக்குச் சுமார் 16 கோடி ரூபாய் செலவு செய்கிறார்[காணொலி கீழே].

இவரின் இல்லத்தில், உடல் நலம் பேணுவதற்கான சாதனங்களைப் பராமரிக்கப் பல மில்லியன் டாலர் செலவிடப்பட்டுள்ளது.

சிகிச்சை செய்யப் பல்துறை சார்ந்த 30க்கும் மேற்பட்ட மருத்துவ நிபுணர்கள் களத்தில் இருக்கிறார்கள்.  

இவரின் இந்த அபூர்வமான சாதனை முயற்சி பற்றி dnawebdesk@gmail.com தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த மில்லியனரின் முயற்சி வரவேற்கத்தக்கதுதான்.

ஆனாலும், இதயமும் நுரையீரலும் இளைஞர்களுடையதைப் போல் இருப்பதில் பாதிப்பு ஏதும் இல்லை. உடல் இளைஞருடையதைப் போல மாறினால் பல பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும். அவற்றில் முக்கியமானவை…..

இவர் திருமணம் ஆனவராக இருந்தால், வாலிபராக மாறிய இவரின் பாலியல் தேவையைக் கிழவியாகிக்கொண்டிருக்கும் இவரின் மனைவியால் நிறைவு செய்ய இயலாது. ஆதலால், அவரையும் குமரியாக்க வேண்டும். அதற்கும் கோடிக்கணக்கில் செலவு செய்தல் தவிர்க்க இயலாதது.

குழந்தைகள் இருந்தால், தோற்றத்தால் அவர்கள்  இவரைவிடவும் இளையவர்களாகவே இருந்துகொண்டிருப்பது கட்டாயம் ஆகிறது.  அவர்களுக்கும் சிகிச்சை தேவை.

வயது அதிகரிக்கும்போது அதனால் அனுகூலங்கள் சில உள்ளன. அவற்றை இழக்க நேரிடலாம். 

எது எப்படியோ, முதுமையை இளமைப்படுத்துவதில் பாதகங்களும் உண்டு என்றாலும்[காலப்போக்கில் அவை தவிர்க்கப்படலாம்] இம்முயற்சி வவேற்கத்தக்கதே.

காலப்போக்கில், பெரும் செல்வந்தர்கள் பலரும் ஜான்சனைப் பின்பற்றி இளைஞர்களாக வலம்வருவார்கள் என்பதில் சந்தேகமில்லை.

பணக்காரர்கள் என்றில்லாமல், ஏழைகளும் நடுத்தர வர்க்கத்தினரும் பயன்பெறும் வகையில் இதற்கு ஆகும் செலவைக் குறைப்பதற்கான கண்டுபிடிப்புகளை விஞ்ஞானிகள் நிகழ்த்துதல் வேண்டும். 

இன்றைய கிழங்கள் நாளைய குடு குடு கிழங்களாக ஆவதற்குள் இது நிகழ்த்தப்பட்டால் அது நம்மைப் போன்றோருக்குப் பெருமகிழ்ச்சி அளிப்பதாக அமையும் என்பது உறுதி!

ஹி… ஹி… ஹி!!!

================================================================================

https://www.msn.com/en-in/money/topstories/ageing-can-be-reversed-45-year-old-ceo-spends-rs-16-crore-every-year-to-look-18/ar-AA16M0pS?ocid=msedgdhp&pc=U531&cvid=390fb93ea5fd4b80bdc93b9b6b392ee7


ஞாயிறு, 29 ஜனவரி, 2023

அப்பாவிக் கணவன்களும் அடங்காப் ‘பிடாரி’களும்!!!

வள் 22 வயது அழகுப் பெண்.

கணவன் அழகாக இல்லை என்பதால் அவளுக்கு அவனைப் பிடிக்கவில்லை.


கணவன் மீதான வெறுப்பு அதிகமாகவே குழந்தைகளுடன் தாய் வீட்டிற்குச் சென்று அங்கேயே தங்கிவிடுகிறாள்.


கணவனாகப்பட்டவன் அடிக்கடி மாமியார் வீட்டுக்குப் போய்க் கொஞ்சியும் கெஞ்சியும் அவளின் கோபம் தணித்துத் தன் தாபத்தையும் தணிக்க முயல்கிறான்.

இவனின் தொல்லைகளைப் பொறுத்துக்கொள்ள இயலாத அவள், அவனுக்கு முத்தம் கொடுப்பது போல் பாவனை செய்து, அவனின் நாக்கைப் பாதி அளவுக்குக் கடித்துத் துண்டாக்கிவிடுகிறாள்[https://tamil.oneindia.com/].


[“நல்லவேளை ‘அதை’க் கடித்துத் துண்டாக்கவில்லை. மகராசி நல்லா இருக்கணும்”னு அவளை அவன் வாழ்த்தியிருப்பானோ?].


[கடித்தவளும் கடிகொடுத்தவனும்]
துண்டிக்கப்பட்ட நுனி நாக்குடன் அந்த அப்பாவி மருத்துவமனையைத் தேடி ஓடியிருக்கிறான். என்ன ஆகுமோ!

ன்னொரு பெண். தன் கணவனை 4 ஆண்டுகளுக்கு முன் மணவிலக்கு[விவாகரத்து]ச் செய்தவள் அவள். ஒவ்வோர் ஆண்டும் விவாகரத்துப் பெற்ற அந்த நாளைத் தனக்கான சுதந்திரத் தினமாகக் கொண்டாடுகிறாளாம்[இந்தியன் எக்ஸ்பிரஸ்]. 


[தன் திருமண நாளை அவள் துக்கத் தினமாகக் கொண்டாடவும் செய்வாள்].


வளும் ஒரு பெண்தான். அளவு கடந்த அன்பு காரணமாக மிக மிக மிக அழுத்த்த்த்தமாக அவளுக்கு அவள் கணவன் முத்தம் தருவான். இதனால் ‘மூச்சுத் திணறல்’ ஏற்பட்டுச்  சொல்லொணாத துன்பத்திற்கு ஆளானாள் அவள். அவளின் வாழ்க்கையே நரகமாக ஆனது. எவ்வளவோ முயன்றும் அவனைத் திருத்த முடியாததால் நீதிமன்றத்தை நாடி மணவிலக்குப் பெற்றாள்[இந்தியன் எக்ஸ்பிரஸ்].


[முத்தம் கொடுப்பதில் காட்டிய அதீத அழுத்தத்தைக் கட்டியணைப்பதில் அவன் காட்டியிருந்தால் இந்த அநீதி நிகழ்ந்திருக்காது! ஹி... ஹி... ஹி!!!]


இவையெல்லாம் கடந்த சில நாட்களில் ஊடகங்கள் வாயிலாக அறிந்த செய்திகள்.


இம்மாதிரியான ‘சில’ அடாவடிப் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்தால் அப்பாவி ஆண்களின் கதி என்ன?


வேறென்ன, 


எஞ்சிய வாழ்நாளைக் ‘கல்யாணம் ஆன பிரமச்சாரி’களாக் கழிப்பார்கள்.


அல்லது,


கவர்ச்சியுள்ள அழகான பெண் ரோபோக்கள் விற்பனை செய்யப்படும் நாடுகளுக்குச் சென்று அதுகளை வாங்கிவருவார்கள்.


மேலும்,


உள்நாட்டிலேயே பெண் ரோபோக்களை உற்பத்தி செய்வதற்குத் தொழில்சாலைகள் தொடங்கும்படி அரசுக்குக் கோரிக்கை வைப்பார்கள். அரசு தாமதித்தால் போராட்டத்தில் ஈடுபடுவார்கள்.


காலப்போக்கில்,


ஒருபாலினத் திருமணங்களும் அதிகரிக்கும்.


இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ? அதையெல்லாம்.....


காதல், காமம், கலவி, கள்ளப்புணர்ச்சி, களங்கம், கலக்கம், கலகம் என்று காலமெல்லாம் அலைந்து திரியும் ஆணையும் பெண்ணையும் முடிவில் அடங்க வைக்கிறானே ‘அவன்’... அவனன்றி வேறு யார் அறிவார்?!

==============================================================================

***உண்மைச் சம்பவங்களில் கொஞ்சம் கற்பனையும் நகைச்சுவையும் கலந்து  உருவாக்கப்பட்ட பதிவு இது. வம்புதும்பில் மாட்டிக்கொள்ளக் கூடாது என்பதால், சம்பந்தப்பட்டவர்களின் பெயர், ஊர் முதலியன சேர்க்கப்படவில்லை! ஹி... ஹி... ஹி!!!


சனி, 28 ஜனவரி, 2023

கருந்துளை ஒலியும் கடவுள் துகளும் பக்தகோடிகளின் புளுகும்!!!

ணுதான் பிரபஞ்சத்தின் தோற்றத்திற்கு ‘மூலம்’ ஆக இருப்பதாக அறிவியல் சொல்கிறது.

1964ஆம் ஆண்டில் ‘பீட்டர் ஹிக்ஸ்’ என்ற விஞ்ஞானி, அணுக்கள் உருவாவதற்கும் அடிப்படையாக இருப்பது ‘துகள்’ என்று கூறினார். அந்த ’மூலத் துகள்’ அவர் பெயராலேயே ஹிக்ஸ் போஸான்[போசான் என்பவரின் பங்கு இதில் உள்ளது] என்று அழைக்கப்பட்டது.

‘லியோன் லெடர்மான்’ என்ற இயற்பியல் விஞ்ஞானி 1993இல் ஹிக்ஸ் போஸானுக்குக் ‘கடவுள் துகள்’ (God particle) என்று பெயர் சூட்டினார்.

இந்தப் பிரபஞ்சத்தைக் கடவுள்தான் உண்டாக்கினார் என்று கூறும் ஆத்திகர்களைக் கேலி செய்வதற்காகவே அவர் அப்படிப் பெயர் சூட்டினார். அது தெரிந்திருந்தும், அணு உருவாகக் காரணமான துகளைக் ‘கடவுள் துகள்’ என்று சொல்லித் திரிந்தார்கள்... திரிகிறார்கள் ஆத்திகர்கள்.

கடவுள் துகள்தான் அனைத்திற்கும் ‘மூலம்’ என்றால், அந்தக் கடவுள் துகளின் தோற்றத்திற்கு மூலமாக அமைந்தது என்று கேள்வி எழுப்பி அதற்கான பதிலைத் தேடும் நேர்மைக் குணம் அவர்களுக்கு இல்லை.

கடவுள் துகளைக் கடவுள் ஆக்கி, பிரபஞ்சத் தோற்றம் குறித்த விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார்கள்.

ஆனால், துகளுக்கு மூலம் எது? அந்த மூலத்துக்கு ‘மூலம்’ எது? அந்தவொரு மூலத்தின் மூலத்திற்கு மூலமாக இருப்பது எது? என்றிப்படிக் கேள்விகள் கேட்டு அவற்றிற்குத் துல்லியமான விடை கண்டறிவது இன்றளவும் சாத்தியப்படவில்லை.

சாத்தியப்படாத நிலையில், அணுவின் தோற்றத்திற்கு ’மூலம்’ஆக உள்ள ‘அணுத் துகள்’ஐக் ‘கடவுள் துகள்’ என்று சொல்லி, கடவுள் இருப்பதை நிரூபித்துவிட்டதாக நினைத்தார்கள்; சொல்லிக்கொண்டார்கள்.

அறிவியல் கண்டுபிடிப்புகளைத் தங்களுக்குச் சாதகம் ஆக்கிக்கொள்ளும் இவர்களுக்கு, அண்மைக் காலத்தில்[2022], ‘அண்டவெளியிலுள்ள கருந்துளையிலிருந்து ‘ஒலி’ வெளியாகிறது என்பதை, ஆடியோ மூலம் விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள் என்பது தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

காணொலி:

https://www.bbc.com/tamil/science-62664710 [கிளிக்]

 இந்தச் செய்தி அவர்களுக்குத் தெரிந்திருந்தால்ல்.....

கருந்துளை ஒலிதான் ‘ஓங்கார ஒலி’[ஓம்] என்று அலப்பறை செய்திருப்பார்கள்.

கருந்துளையிலிருந்து ஒலி வெளியாகிறது என்று விஞ்ஞானிகள் நிரூபித்திருக்கிறார்களே தவிர, அந்த ஒலிதான் அனைத்திற்கும் ‘மூலம்’[அது உருவான இடமே கருந்துளை என்பதால்] என்று சொல்லவில்லை.

மாறாக, தோற்றம்’ குறித்த ஆய்வு தொடர்ந்து நிகழ்ந்துகொண்டிருக்கிறது.

இனியும் பிரபஞ்சத் தோற்றம் குறித்த ஆய்வு தொடந்துகொண்டிருக்குமே தவிர, இதற்கு முடிவு என்பது எப்போதும் இல்லை என்றே சொல்லலாம்.

அணுக்கள், துகள்கள், கருந்துளைகள், ஒலிகள் என்றிவை பற்றித் தொடர்ந்து நிகழ்த்தப்படும் இந்த ஆய்வுதான் சிந்திக்கும் அறிவிவை மேம்படுத்துகிறது; விரிவடையச் செய்கிறது.

இந்தச் சிந்திக்கும் அறிவுதான், அனைத்திற்கும் மாஉலமாக இருப்பவர் கடவுளே என்று முடிவு செய்வதற்குத் தடையாக அமைகிறது. மூடநம்பிக்கைகள் உருவாகாமல் தடுக்கிறது.

இம்மாதிரியான ஆய்வுகளை நம் மக்கள் அறியும்படிச் செய்வதன் மூலம், விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகளையே தங்களுக்குச் சாதகமாக ஆத்திகவாதிகள் பயன்படுத்துவதை நம்மால் தடுத்திட இயலும்.

===================================================================================

#ஏராளமான துகள்களும் காற்றும் வழித்தடமாக இருப்பதால், ஒலி எளிதாகப் பயணிக்க முடிகிறது.

2022ஆம் ஆண்டின் தொடக்கத்தில், கருந்துளையின் ஆடியோவை நாசா வெளியிட்டது. கிளிப்பில் ஒலி மிகவும் கேட்கக்கூடியதாக இருந்தாலும், கருந்துளைக்குள் இருந்தாலும், விண்வெளியில் யாராலும் அதைக் கேட்க முடியாது.

நாசா ஆராய்ச்சியாளர்கள், மக்கள் கேட்கும் வகையில் சேகரிக்கப்பட்ட ஒலிகளின் அதிர்வெண்ணை 144 முதல் 288 குவாட்ரில்லியன் மடங்கு உயர்த்தவேண்டியிருந்தது; சமீபத்தில்தான் ஆடியோ கோப்புகளை உருவாக்கிப் பொதுமக்களுடன் பகிர்ந்து கொள்ளமுடிந்தது. இந்த வெளியீட்டை லட்சக்கணக்கான மக்கள் பார்த்துள்ளனர்# 

வெள்ளி, 27 ஜனவரி, 2023

அமேசான் கிண்டிலில், /‘உடலுறவில் உச்சம்’...பச்சைப் பொய்!!!/... விறு விறு விற்பனையில்!

அமேசான் கிண்டிலில், /‘உடலுறவில் உச்சம்’... பச்சைப் பொய்!!!/ என்னுடைய 46ஆவது நூலாக வெளியாகியுள்ளது.

கிண்டில் சந்தாதாரர்கள் இலவசமாக வாசிக்கலாம். நன்றி!

‘உடலுறவில் உச்சம்’... பச்சைப் பொய்!!!: [கதைகளும் கட்டுரைகளும்] (Tamil Edition)

Tamil Edition | by ‘பசி’பரமசிவம் | Jan 24, 2023
Free with Kindle Unlimited membership Join Now
Available instantly
Or $0.99 to buy

‘உடலுறவில் உச்சம்’... பச்சைப் பொய்!!!: [கதைகளும் கட்டுரைகளும்] (Tamil Edition) by [‘பசி’பரமசிவம்]

வியாழன், 26 ஜனவரி, 2023

கோயம்புத்தூருக்கு இஸ்லாமியர் இனயத்துல்லா! நம்ம ஊர்களுக்கு?


திரு. எம்.ஏ. இனயத்துல்லா  கோவை, உக்கடம், கோட்டைமேடு பகுதியில் வசிப்பவர்.

கடந்த 20 ஆண்டுகளாக அனைத்துச் சமய மக்களிடமும் நட்புடன் பழகி வருவதுடன், மத ஒற்றுமை, கல்வியறிவு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்திவருபவர்; கோயம்புத்தூர் பகுதியில் உருவான பதட்டமான சூழ்நிலைகளின்போதெல்லாம், காவல்துறையினருடன் இணைந்து அமைதியை நிலைநாட்டப் பாடுபட்டவர்.


கோவை மாவட்ட சுன்னத் ஜமாத் கூட்டமைப்பின் சார்பில் பொருளாதாரத்தில் பின்தங்கிய அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் மத வேறுபாடின்றிக் கல்வி நிதி உதவி வழங்கிவருகிற இவர், மனிதநேயம், மத ஒற்றுமை மற்றும் கல்வி மேம்பாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திவருகிறார். 


கோயம்புத்தூர் கோட்டைமேடு பகுதியில் ஆண்டுதோறும் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு முஸ்லீம் இளைஞர்களால் நடத்தப்படும் மத நல்லிணக்க விழாக்களில் கலந்துகொண்டு, இந்து, கிறித்துவ மதக் குருக்களோடு இணைந்து மத நல்லிணக்கத்தைப் போற்றிப் பாதுகாக்கும் பணியைத் தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறார்.


மேலும், கடந்த 23.10.2022 அன்று கோயம்புத்தூர் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு கார்க்குண்டு வெடித்த சம்பவத்தின் தொடர்ச்சியாகக் கடந்த 03.11.2022 அன்று, திரு.எம்.ஏ.இனயத்துல்லா அவர்கள் அனைத்து சுன்னத் ஜமாத் அமைப்பு நிர்வாகிகளுடன் கோட்டை ஈஸ்வரன் கோவிலுக்குச் சென்று கோவில் நிர்வாகிகள் & அலுவலர்களைச் சந்தித்து, அச்சம்பவம் குறித்து வருத்தம் தெரிவித்ததுடன், கோயம்புத்தூர் நகரில் இந்து & முஸ்லீம் சமூகத்தினரிடையேயான சகோதரத்துவம் தொடர்ந்து பராமரிக்கப்படுவதற்கு ஒத்துழைப்பு நல்குவதாகத் தெரிவித்தார்.


மற்ற மதத்தவர்கள் செய்யத் துணியாத அல்லது, செய்யத் தயங்குகிற அரியதோர் நற்செயல் இதுவாகும்.


மனிதநேயம் போற்றி, எந்தவொரு சூழலிலும் மதக்கலவரங்கள் மூளாமல் தடுப்பதற்கு அனைத்து ஊர்களுக்கும் இனயதுல்லாக்கள் தேவை.


அவர்கள் எம்மதம் சார்ந்தவராயினும் அவர்களே உண்மையான மனிதர்கள் ஆவார்கள்.

=================================================================================

உதவி: https://tamil.oneindia.com/news/chennai/fort-amir-religious-harmony-medal-who-is-this-inayatullah-what-has-he-done-495992.html?ref_medium=Desktop&ref_source=OI-TA&ref_campaign=Sticky_Bottom


புதன், 25 ஜனவரி, 2023

“இங்கெல்லாம் பெரிய மனுஷங்களே இல்லையா பன்னீரு?!?!”

டைத் தேர்தல்[ஈரோடு கிழக்கு] வந்ததோ இல்லையோ, இங்குள்ள இரண்டு அடிமைகள், கூட்டணி சேரக் கட்சி கிடைக்காமலும், தேர்தலில் போட்டியிட வேட்பாளர்கள் இல்லாமலும் படும் அல்லல் சொல்லும் தரமானதாக இல்லை.

அம்மா அமரர் லோகம் சென்ற அன்றே தற்காலிக முதல்வராக இருந்த பன்னீரு, மோடியின் இரு கரம் பற்றி, “உங்கள் தயவு எனக்கு எப்போதும் தேவை” என்பது போல மேன்மைமிகு மோடியின் இடுப்பு மட்டத்துக்கு வளைந்து குனிந்து[தனிமையில் சந்தித்திருந்தால் நெடுஞ்சாண்கிடையாக விழுந்திருப்பார்] சரணாகதி அடைந்தார்.

ஒப்பாரும் மிக்காரும் இல்லாத சின்ன[அம்மா]த் தலைவி சசிகலாவின் கால்களில் விழுந்து  ‘திடீர்’ முதல்வரான எ.ப.சாமி, சமயோசிதமாகத் தலைமையை மாற்றி, மோடி அவர்களின் சேவகர் ஆனார். பதவி விலகும்வரையும் விலகிய பின்னரும் அவருக்கு விசுவாசமாக நடந்துகொண்டார்... கொள்கிறார். அதன் பயனாக, இந்த இடைத் தேர்தலில் ‘பாஜக’ ஆதரவு தனக்குக் கிடைக்கும் என்று நம்புகிறார்.

இந்தவொரு சூழ்நிலையை மிகச் சரியாகக் கணித்த பன்னீரு,  எடப்பாடிஜி கனவு நனவாகிவிடுமோ என்று பயந்து, தான்தான் மேதகு மோடியின் ‘நம்பர் 1’ அடிமை’ என்பதை மெய்ப்பிப்பது போல், “மோடி இரண்டு அணியும் இணைந்து செயல்பட வேண்டும் என்கிறார். ஒரு பெரிய மனுஷன்[மோடி] நல்லது சொல்கிறார். அதைக் கேட்க வேண்டும்” என்று அறிக்கை விட்டிருக்கிறார்[தினகரன், 25.01.2023].

இச்செய்தி, தமிழ்நாட்டில் பெரியமனுஷங்களே இல்லையா என்று பன்னீரிடம் கேட்கத் தூண்டுகிறது.

‘இல்லை’ என்று பன்னீர் கருதினால், “இரண்டு அணிகளும் இணைந்து செயல்பட வேண்டும் என்று பரட்சித் தலைவர் என் கனவில் காட்சியளித்துச் சொன்னார். சில நிமிடங்களுக்குப் பிறகு புரட்சித் தலைவி, தெய்வத்தின் தெய்வம் ஜெயலலிதா அம்மையாரும் சொன்னார்[கனவில்]” என்று சொல்லியிருக்கலாம்.

அப்படிச் சொல்லியிருந்தால் பன்னீரு நம் பாராட்டுக்கு உரியவராக இருந்திருப்பார்; இப்போது நம் பழிப்புக்கு ஆளாகியிருக்கிறார்.

இவரைப் போன்றவர்களுக்கு வாக்களித்து மக்கள் வெற்றி பெற்றிடச் செய்தால், தாங்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்தத் தமிழர்களையே பிற இனத்தாருக்குச் சேவகம் செய்யும் அடிமைகளாக மாற்ற முயற்சி செய்வார்கள் என்பது உறுதி!



===================================================================================

செவ்வாய், 24 ஜனவரி, 2023

மூளையுள்ள முதலாளியும் முட்டாள் தொழிலாளர்களும்!!![படைப்புத் தத்துவம்]

தொழில்சாலைகளில் வேலை செய்யும் தொழிலாளர்கள் என்றில்லை, இந்த மண்ணில் தோன்றி வாழ்ந்து அழிகிற அத்தனை பேருமே தொழிலாளர்கள்தான்.

இந்த மண்ணுலகம் என்னும் தொழில்சாலையில் மனிதத் தொழிலாளர்கள் செய்கிற தொழில், ஆணும் பெண்ணுமாகப் புணர்ந்து, பிள்ளைகளைப் பெற்று இனவிருத்தி செய்வதுதான்.

புணர்ச்சி செய்யத் தூண்டும் வகையில் அள்ள அள்ளக் குறையாத ஆசைகளை அவர்கள் நெஞ்சில் நிரப்பி வைத்திருக்கிறான் அவர்களுக்கான முதலாளி.

இனவிருத்தித் தொழிலைத் தொடர்ந்து செய்யவிருக்கும் பிள்ளைகளைப் பேணி வளர்த்து ஆளாக்குவதற்காகப் பெற்றவர்களைப் பற்று, பாசம், நேசம், என்னும் வலைகளில் சிக்கவைத்துக் காலங்காலமாய் விழிப்புடன் கண்காணித்துக்கொண்டிருக்கிறான் அவன்.

அதன் விளைவு.....

தடங்களேதுமின்றி மனித இன உற்பத்தித் தொழில்[மற்ற உயிரினங்களுக்கும் இது பெருமளவில் பொருந்தும்] சீரும் சிறப்புமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. உற்பத்தி செய்யும் தொழிலாளர்களுக்கு அவன் வழங்கும் ஊதியம், உண்ணுதல், உறங்குதல், புணர்தல் போன்றவை மூலமாகப் பெறும் சொற்ப சந்தோசங்கள் மட்டுமே[அற்ப வாழ்நாளில்].

அந்தச் சொற்பமான சந்தோசமும் வாய்க்கப்பெறாத பல மனிதர்கள் நிறைவேறாத ஏராள ஆசைகளையும், இச்சைகளையும் சுமந்து அலைந்து திரிந்து செத்தொழிகிறார்கள்.

மனித இனத்தை மட்டும் வாழவைத்து, அந்த  இனத்தைச் சார்ந்த எந்தவொரு தனி மனிதனையும் அற்ப ஆயுளில் அழித்துவிடுகிற அந்தக் கடவுள் என்னும் முதலாளியா கருணைவடிவானவன்?

அல்ல, கொடூரன்!

இந்த உண்மையை உணராமல், மக்கள் அவனுக்குக்  கோயில்கள் கட்டி விழாக்கள் எடுத்துக் கூத்தடித்துப் போற்றி வழிபடுவது அறியாமையின் உச்சம்!!   

===================================================================================       

***மனிதர்கள்[பிற உயிரினங்கள் உட்பட] கடவுளால் படைக்கப்பட்டவர்கள் என்று சொல்லப்படுவதைக் கருத்தில் கொண்டு இப்பதிவு எழுதப்பட்டது.                                                                                                                                                                

திங்கள், 23 ஜனவரி, 2023

‘ராம ராஜ்ஜியம்’... கனவு காண்போர் கவனத்திற்கு.....

[கே.எஸ்.பகவான்]

ராமனை ஓர் ‘அவதாரப் புருசன்’ என்று போற்றிப் புகழ்வதோடு, இந்தத் தேசத்தை ராம ராஜ்ஜியமாக ஆக்க வேண்டும் என்று ராம பக்தர்கள்[பாஜக ஆதரவுடன்] முனைப்புடன் செயல்படுகிறார்கள்.

வால்மீகி ராமாயணத்தின் உத்தர காண்டத்தைப் படித்தால், அவன் பெயரில் புதிய ராஜ்ஜியம் உருவாக்கும் அளவுக்கு ராமன் சிறந்தவன் அல்ல என்பதை இவர்களால் புரிந்துகொள்ள இயலும்.

‘ராமன் 11,000 ஆண்டுகள் ஆட்சி செய்யவில்லை, ஆண்டது 11 ஆண்டுகள் மட்டுமே[ஒரு மனிதனாக. கடவுள் அவதாரம் என்பதற்கு அறிவியல்பூர்வமான ஆதாரம் ஏதுமில்லை]. சீதையுடன் அமர்ந்து நாள் முழுக்கக் குடித்துக்கொண்டே இருப்பான்..... அவன் தன் மனைவி சீதையைக் காட்டிற்கு அனுப்பியதற்காகக் கவலைப்படவில்லை.’ 

இதற்கு வால்மீகி ராமாயணமே ஆதாரமாக உள்ளது என்கிறார் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற பேராசிரியரும் எழுத்தாளருமான கே.எஸ்.பகவான்[ANI செய்தி].

கடந்த காலங்களில் இந்து மதத்திற்கு எதிராகப் பேசியதற்காக அயோத்தி ராமனின் பக்தர்களால் பலவகையிலும் அவமானப்படுத்தப்பட்டவர் இவர்.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம், பெங்களூருப் பெண் ஒருவர், இவர் மீதான தன் வன்மத்தை வெளிப்படுத்தும் வகையில் இவர் மீது மை வீசினார்.

வால்மீகி ராமாயணத்தில் அயோத்தியா காண்டம் சரகம் 8, சுலோகம் 12ஐ ஆதாரமாகக் காட்டி, ராமன் பல பெண்களை வைப்பாட்டிகளாக வைத்திருந்தான் என்னும் செய்தியும் ஏற்கனவே சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது http://www.ttamil.com/2020/03/blog-post_3.html.

ராமன் என்னும் மனிதன் அயோத்தியை ஆண்டான் என்பதற்கே போதிய ஆதாரங்கள் இல்லாத நிலையில், அவன் திருமாலின் அவதாரம் என்று பொய்யுரை பரப்பி, இந்திய நாட்டை ராம ராஜ்ஜியம் ஆக்குவதற்கு ஓயாமல் உழைத்துக்கொண்டிருக்கும் ராமனின் விசுவாசிகளுக்கு நாம் சொல்ல விரும்புவது ஒன்றுண்டு.

அது.....

பேசும் மொழி, இனம், மதம், நாகரிகம், பழக்கவழக்கங்கள் ஆகியவற்றால் வேறுபட்டிருந்தாலும், இந்த நாட்டிலுள்ள மக்கள் அனைவரும் தம்மை இந்தியராகக் கருதி ஒற்றுமையுடன் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

தொடர்ந்து, “ராம ராஜ்ஜியம் அமைப்போம்” என்று கூவிக்கொண்டிருந்தால் அந்த ஒற்றுமை வெகு விரைவில் சிதைவுறும் என்பதைக் கவனத்தில் கொள்வீராக!!!

===================================================================

https://www.msn.com/en-in/health/nutrition/lord-rama-used-to-drink-all-day-after-meeting-sita-in-afternoon-retired-professor-ks-bhagwan-sparks-major-controversy-in-karnataka/ar-AA16BMBk?ocid=msedgdhp&pc=U531&cvid=f8d98b408fe8440c9e73046416ffe32a

ஞாயிறு, 22 ஜனவரி, 2023

புனித கங்கையும் புடலங்காயும்!!!

‘உத்தரப்பிரதேச பிரயாக்ராஜில் வழக்கம்போல இந்த ஆண்டும், ‘மவுனி’[?]அமாவாசை நாளில்[நள்ளிரவு 12 மணி > மதியம் 12 மணி] நடத்தப்பட்ட ‘மகாமேளா’வில் மட்டும் ஒன்றரைக் கோடி[1,500,0000]பக்த சிரோமணிகள் புனித நீராடினார்கள்’ என்பது உலக அளவிலான அனைத்துப் பக்தர்களையும் பரவசம் கொள்ளச் செய்யும் செய்தி[தினத்தந்தி, 22.01.2023]]யாகும்.

கணக்குவழக்கில்லாமல் அழுகிய பிணங்களும் அசுத்தச் சாக்கடை நீரும் நாளும் கலந்துகொண்டிருக்கிற ஆற்று நீர் புனிதமானதா?

புனித நீராடக் கங்கை, திரிவேணி சங்கமம், காவிரி போன்ற ஆறுகளில் கோடிக்கணக்கில் குவியும் மூடர்களின் மண்டையில் இந்த உண்மையை உணரவைக்க எந்தவொரு நாதியும் இல்லை.

ஆண்டவன் அணுவிலும் இருக்கிறான் துரும்பிலும் இருக்கிறான் என்கிறார்கள். அவ்வாறாயின், அவன் படைத்த அத்தனைப் பொருள்களுமே புனிதமானவைதானே?  ஓடும்  ஆற்று நீரை மட்டும் பக்தி ஞானம் போதிப்போர் ‘புனிதம்’ ஆக்கியது ஏன்? 

மக்கள் மூடர்களாகவே இருந்தால்தான் கடவுளுக்கு இணையான அந்தஸ்துடன் அவர்களால் சொகுசு வாழ்க்கை நடத்த முடியும் என்பதே காரணம்.

பொதுமக்கள் எப்போதும் முட்டாள்களாகவே இருந்தால்தான் தேர்தல்களில் வாக்குகளை அள்ள முடியும் என்பது  ஆட்சியாளர்களின் கணிப்பு.

இந்த இரு சாராரும் மக்கள் திருந்தி வாழ ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள்.

5000 போலீசார் அங்கே காவலுக்கு நிறுத்தப்பட்டுள்ளார்கள் என்பது ஒரு காவல்துறை அதிகாரி தந்த தகவல்.

புனித நீராடிய அத்தனை பேரும்[திருடர்கள், பெண்களைச் சீண்டுபவர்கள் உட்பட] புனிதர்களாகவும், பரமயோக்கியர்களாகவும் ஆகிவிடுவார்களே, அப்புறம் எதற்காக அங்கே போலீஸ் பாதுகாப்பு?

யாரெல்லாமோ எப்படியெல்லாமோ நம்மை முட்டாள்கள் ஆக்குகிறார்கள்.

நம்மை வேதனைக்குள்ளாக்கும் கசப்பானதொரு உண்மை என்னவென்றால்.....

புண்ணியம் சேரும் என்று நம்பிக் கங்கையிலும் திரிவேணி சங்கமத்திலும் குவிந்த பக்திப் பித்தர்களின் எண்ணிக்கை ஒன்றரைக் கோடி.

மனித நேயம் போற்றலாம் என்றோ, பகுத்தறிவு வளர்க்கலாம் என்றோ பரப்புரைக் கூட்டம் நடத்த அழைப்புவிடுத்தால் வந்து கூடுவோர் எண்ணிக்கை ஒரு நூறுகூடத் தேறுவதில்லை.

இந்த நாடு இப்போதைக்கு உருப்படாது முன்னேறிய நாடுகளின் பட்டியலில் இடம்பெறாது.

இது 100% உறுதி!

===================================================================================

சனி, 21 ஜனவரி, 2023

‘மானுடம்’ கொல்லும் மனித மிருகங்கள்!!!

குரங்கு ஒன்று தன் குட்டியை நாய்களின் தாக்குதலில் இருந்து காப்பாற்றும் காணொலி[வீடியோ]யை, அண்மையில் இணையத்தில்[ட்விட்டர்] காண நேர்ந்தது.

வலைதளங்களில் பெரும் பரபரப்பை[வைரல்] உண்டுபண்ணியது இந்தக் காணொலி.

காணொலிக்காரர் இதற்குத் தந்த தலைப்பு: ‘ஒரு தாய் தன் குழந்தைகளை இந்த நாய்களிடமிருந்து காப்பாற்ற, முடிந்த அனைத்தையும் செய்கிறாள்’...[இந்தித் தலைப்பின் தமிழாக்கம் இது].

குரங்குக்கு உதவாமல், வீடியோ பதிவு செய்த நபரைச் சமூக வலைதளவாசிகள் வசைபாடி வருகின்றார்களாம்.

"இந்த வீடியோவை உருவாக்கிய நபர் என் பார்வையில் மோசமான நபர்" என்கிறார் ஒரு பயனர்.

மற்றொரு பயனர், "குரங்கு ஒரு தாய்க்குரிய கடமையை நிறைவேற்றியுள்ளது, ஆனால், இந்த வீடியோவை எடுத்தவர் ஒரு மனிதனுக்கு இருக்கவேண்டிய கடமையை நிறைவேற்றவில்லை" என்கிறார்[‘News 18’ வெளியிட்ட காணொலியில் இடம்பெற்ற கருத்துரைகள் இவை].

வலிமை மிகுந்த கொடூர விலங்குகளில் ஒன்று மற்றொன்றைத் தாக்கி அழிக்கும்போது அழிவுக்குள்ளாகும் ஒன்றைக் காப்பாற்றுவது இயலாது. அந்நிலையில் அதைப் படம் பிடித்துக் காணொலியாக்கி, பிறர் காணும்வகையில் காட்சிப்படுத்துவது தேவையானதுதான். இம்மண்ணில் நிகழும் இது போன்ற எத்தனை எத்தனையோ கொடூரங்களை மக்கள் அறிந்திட உதவுகிறது அது.

ஆனால், சில கற்களைக் காட்டி மிரட்டினாலே நாய்கள் மிரண்டு ஓடுவது சாத்தியமாக இருக்கையில், மேற்கண்ட காட்சியைக் காணொலியாக்கிப் பகிர்ந்தது மனிதாபிமானமற்ற செயல் என்பதில் சந்தேகமில்லை.

இவரைப் போன்றவர்கள் மனித உருவில் நடமாடும் போலி மனிதாபிமானிகள் ஆவார்கள்.

காணொலி:

https://twitter.com/i/status/1602678990459674629 -‘கிளிக்’குக.

* * * * *


***சில மாதங்களுக்கு மாதம் முன்பு, ஒரு சிறுமி வன்புணர்வு செய்யப்பட்ட நிகழ்வை ஒருவன் காணொலியாக்கிப் பகிர்ந்ததைக் கண்டித்து எழுதிய பதிவின் முகவரி கீழே. 

https://kadavulinkadavul.blogspot.com/2022/10/blog-post_25.html

===================================================================================

வெள்ளி, 20 ஜனவரி, 2023

அறிவுஜீவி அமலா பாலுக்கு[நடிகை] அன்பானதொரு வேண்டுகோள்!!!


‘தென்னிந்திய நடிகை அமலா பால் சமீபத்தில் கேரளாவின் எர்ணாகுளத்தில் உள்ள திருவைராணிக்குளம் மகாதேவர் கோவிலுக்குச் சென்றுள்ளார், மதப் பாகுபாடு' காரணமாக அவரைக் கோவிலுக்குள் செல்ல அதிகாரிகள் அனுமதிக்கவில்லை.' -இது ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’வின் நேற்றையச்[19.01.2023] செய்தி[https://www.thanthitv.com/latest-news/an-upset-amala-paul-162747]

வளாகத்திற்குள் இந்துக்களை மட்டுமே அனுமதிக்கும் பழக்கவழக்கங்களைக் காரணம் காட்டி அதிகாரிகள் தரிசனத்திற்கான அனுமதியை மறுத்திருக்கிறார்கள்.


“இந்தியாவில் இஸ்லாம் வளருது; கிறித்தவம் வளருது” என்று நாளும் ஊளையிடுவோர் மசூதியைத் தேடியோ, தேவாலயத்தைத் தேடியோ செல்லும் இந்துக்களை அம்மதத்தவர்கள் இரு கரம் நீட்டி வரவேற்பதைப் பார்த்தும் பாடம் கற்கவில்லை.


தான் அவமதிக்கப்பட்டது குறித்துக் கருத்து தெரிவித்த 'அமலா பால்', 2023ஆம் ஆண்டிலும்[அறிவியல் யுகம்] மதப் பாகுபாடு நிலவுவது வருத்தமும் ஏமாற்றமும் அளிப்பதாக உள்ளது என்று குறிப்பிட்டதன் மூலம், தான் மதச்சார்பற்றவர் என்பதை உலகறியச் செய்திருக்கிறார்.


இந்த அறிவுஜீவிப் பெண்மணியை[இவரைப் போன்றவர்களையும்]ப் புரிந்துகொள்ளும் அறிவு மதவாதிகளுக்கு இல்லை என்பது, இவருக்குக் கோயில் நுழைவுக்கான அனுமதி மறுக்கப்பட்டதன் மூலம் உறுதியாகிறது.


எனவே, அமலா பாலிடம் நாம் முன்வைக்கும் கோரிக்கை.....

 

பக்தி நெறி போற்றும் மதங்கள் எல்லாமே ஏதாவது ஒரு வகையில் மூடநம்பிக்கையை வளர்ப்பவைதான். இவைகளால் மூடர்களின் எண்ணிக்கை பெருகுமே தவிரக் குறைவதற்கு வாய்ப்பே இல்லை.


எனவே, இந்த அறிவியல் யுகத்தில் மதப்பாகுபாடுகளை வேரறுக்க விரும்பும் நீங்கள் எந்தவொரு மதத்தையும் போற்றிப் புகழ்வதையோ, கோயில்களுக்குச் செல்வதையோ அறவே தவிர்த்து, முழுக்க முழுக்க ஓர் அறிவுஜீவியாக வாழ்ந்துகாட்டுதல் வேண்டும் என்பது நம் கோரிக்கை.


இவ்வாறு நீங்கள் வாழ்ந்துகாட்டினால், உங்களுக்குள்ள ஏராளமான ரசிகர்களும்  உங்களைப் பின்பற்றி அறிவுஜீவிகளாக வாழ்வார்கள்; வளர்வார்கள்.


இதன் மூலம் அறிவுஜீவிகளின் என்ணிக்கை அதிகரிக்கும் என்பது உறுதி!

===============================================================================


வியாழன், 19 ஜனவரி, 2023

காதல் கொடூரனும் ஒரு ‘கொடூரி’யும்[கலக்கல் புதிர்க் கதை]!

ற்றொரு கொலைக்குத் தயாராகிவிட்டான் சுந்தர்..... அழகான பெண்களாகத் தேர்ந்தெடுத்துக் காதல் வலையில் சிக்கவைத்துக் கொலை செய்துவிடும் ‘காதல் கொடூரன்’ அவன்!

இன்று கீதா!

முதல் சந்திப்பிலேயே அவனிடம் மனதைப் பறிகொடுத்தவள் இவள்; இரண்டாம் சந்திப்பில், "I love you" சொன்னவள்; அவன் அரவணைப்புக்காக மூன்றாம் சந்திப்பை எதிர்பார்த்துக் காத்திருப்பவள்.

கீதாவை முதல் முறை சந்தித்தபோதே தன் அப்பாவிடம், “கீதா ரொம்ப அழகுப்பா” என்றான் சுந்தர்.

“ஐயய்யோ... ரொம்ப ஆபத்துடா... உலகம் தாங்காதுடா மகனே. அழகான பெண்கள் அத்தனை பேரும் துரோகிங்க; ஆபத்தானவங்க. கூசாம அவங்களைக் கொல்லணும்டா சுந்தர்” என்றார் அப்பா. அழகழகான பெண்கள் அவருக்குச் செய்த  துரோகங்களால் விரக்தியின் விளிம்பைத் தொட்டவர் அவர்!

“கீதா உட்காருன்னா உட்காருறா; எழுன்னா எழுந்திரிக்கிறா. படுன்னா படுத்துருவா. இன்னிக்கி அவளைத் தீர்த்துடுறேன்” என்று தன் அப்பாவிடம் ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டு, பளபளக்கும் கூரிய கத்தியுடன் கிளம்பினான் சுந்தர்.

லியட்ஸ் பீச் இருட்டியிருந்தது.

சுந்தருக்காகக் காத்திருந்த கீதா, பலி ஆடு போல, அவனைப் பின் தொடர்ந்து நடந்தாள். ஒரு படகின் மறைவில் இருவரும் அருகருகாக அமர்ந்தார்கள்.

கீதாவின் கவர்ச்சி அங்கங்களைப் பார்வையால் விழுங்கிக்கொண்டே அவளின் வழவழப்பான சங்குக் கழுத்தைத் தன் இடக்கரத்தால் வளைத்தான் சுந்தர்.

‘க்ளுக்’..... அவளிடமிருந்து வெளிப்பட்ட மென் சிரிப்பு அவனை உற்சாகப்படுத்தியது. பேண்ட் பாக்கெட்டிலிருந்த கத்தியை எடுக்க முனைந்தபோது.....

அவன் நெஞ்சில் ‘சுரீர்’ வலி. சுந்தர் அலறினான்... “ஆ...ஆ...ஆ... ஐயோ...”

இப்போது, கீதாவின் கையில் ரத்தம் சொட்டும் கூரிய கத்தி இருந்தது.

கத்தியை மறைத்துக்கொண்டு வீடு திரும்பினாள் கீதா.

தன் அம்மாவின் புகைப்படத்தின் முன்னால் நின்று சொல்லிக்கொண்டிருந்தாள்.... “அம்மா, உனக்குக் கொடுத்த வாக்கைக் காப்பாத்திட்டு வர்றேன். சுந்தர் ஐந்தாவது ஆள். ஆண்கள் எல்லோருமே அயோக்கியர்கள்; உன்னைப் பாடாய்ப்படுத்தியவர்கள். இனியும் என் கொலை தொடரும்.”
===================================================================================
***தன் கதை சுடப்பட்டதைக்[வடிவமைப்பில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன] கண்டுகொள்ளாத ‘பத்மா ரவிசங்கர்’ அவர்களுக்கு நன்றி. கதை வெளியான இதழின் பெயர் மறந்துவிட்டது[இலையுதிர் பருவத்தின் கைங்கரியம்!]. 

***மறுபதிப்பு.

புதன், 18 ஜனவரி, 2023

பிரபலங்களைப் பாடாய்ப்படுத்தும் ‘ஆட்டோ இம்யூன்’ குறைபாடு!

நம்முடைய உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கும், நோய்களை எதிர்த்துப் போராடுவதற்கும் ‘ஆன்டி பாடி’களை நோய் எதிர்ப்பு மண்டலம் உருவாக்கும். இவை, நம் உடலிலுள்ள செல்கள், திசுக்கள் ஆகியவற்றைப் பாதுகாக்கின்றன.

செல்களையும் திசுக்களையும் பாதுகாக்கிற இந்த  ‘ஆன்டி பாடி’களே நம்முடைய வெள்ளை அணுக்களைக் கிருமிகள் என நினைத்துத் தாக்குவதும் உண்டு.

நோயெதிர்ப்பு மண்டலத்தின் இந்தத் தலைகீழான செயல்பாட்டால் உடலில் பல்வேறு நோய்கள் உருவாகும். இம்மாதிரியான நோய்களைத்தான் ‘ஆட்டோ - இம்யூன் நோய்கள்’ என்கிறார்கள் மருத்துவ வல்லுநர்கள்.

ஆட்டோ - இம்யூன் என்பது ஒரு தனி நோயல்ல. இது ஒரு குறைபாடு மட்டுமே. இந்தக் குறைபாட்டின் காரணமாக உடலில் கணிசமான அளவில் நோய்கள் உண்டாகும்.

இந்நோய்களில் குறிப்பிடத்தக்க சிலவற்றால் தாக்கப்பட்ட சில பிரபலங்கள்:



*பிரபல நடிகை சமந்தாவைத் தாக்கியிருப்பது ‘myositis’ என்னும் நோய். அவருக்குத் தசைகளில் அதிகப்படியான வலி, வீக்கம் ஆகியவை ஏற்பட்டிருக்கிறது. இதனால் உடலின் தசைகள் வெகுவாகப் பலவீனமடையும்; வலியும் அதிகமாக இருக்கும்.

*​சல்மான் கானை’ப் பாதித்திருப்பது ஆட்டோ இம்யூன். இவருக்கு இந்தக் குறைபாட்டால் மிக அரிதாக ஏற்படுகிற ‘ட்ரைஜெமினல் நியூரால்ஜியா’(trigeminal neuralgia) என்னும் நோய் பாதித்திருக்கிறது. இந்த நோய் பாதிக்கப்படும்போது முகத்தில் உள்ள நரம்புகளில் கடுமையான வலி உண்டாகும். இந்த வலி மூளைவரை பரவும்.

*ஆட்டோ இம்யூன் நோய் பாதித்த கிம் கர்தஷியான்.

’ரியாலிட்டி டீவி ஷோ’ பிரபலமும் மாடலுமான ‘கிம் கர்தஷியான்’ கடந்த 2011ஆம் ஆண்டு ஆட்டோ - இம்யூன் குறைபாடு காரணமாகச் சொரியாஸிஸ் (psoriasis) நோயால் பாதிக்கப்பட்டார்.


*அமெரிக்கப் பிரபல பாப் பாடகி செலினா கோம்ஸ்: இவர் தனக்கு ஆட்டோ இம்யூன் இருப்பதால் ‘லூபஸ்’ தொற்றியிருப்பதாகக் கூறினார். ‘லூபஸ்’ என்பது சிறுநீரகத்தைப் பாதிக்கும் மிக மோசமான நோயாகும்.

2017 ஆம் ஆண்டு இந்த லூபஸ்

நோயால் சிறுநீரகத் திசுக்களில்

தொற்றுக்கள் ஏற்பட்டு, கடைசி

யில் சிறுநீரக மாற்று அறுவைச்

சிகிச்சை செய்துகொண்டார் இவர்.

*ஆட்டோ இம்யூன் நோய் பாதித்த ‘நிக்கி ஜோன்ஸ்’

பிரபல இந்திய நடிகை ப்ரியங்கா

சோப்ராவின் கணவர் நிக்கி ஜோன்ஸ்.

வருக்கு13 வயதில் ஆட்டோ இம்யூன்

குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது.


*அமெரிக்க சூப்பர் மாடலான ‘ஜிகி ஹடிட்’ தனக்கு ஆட்டோ இம்யூன் குறைபாடு காரணமாக கடந்த 2016ஆம் ஆண்டு ஹாஷிமோட்டோ (Hashimoto's Thyroiditis) என்று அழைக்கப்படும் நோய் பாதித்திருப்பதாக இவர் கூறினார்.


இந்தப் பிரச்சினையால் இவருடைய உடலின் மெட்டபாலிசம்[விளக்கம் கீழே] வெகுவாகப் பாதிக்கப்பட்டதாம்.


*அமெரிக்கப் பாடகியும் பாடலாசிரியருமான ‘லேடி காகா’ குறித்து நெட்ஃபிளிக்ஸ் ’காகா’ என்னும் ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டது. அதில் லேடி காகா தனக்கு ஆட்டோ இம்யூன் குறைபாடு இருப்பதாகத் தெரிவித்திருந்தார். இவர், ஃபைப்ரோமியால்ஜியா(fibromyalgia) என்னும் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். 

இந்த நோயானது மனம். உடல் இரண்டிலுமே விளைவுகளை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும். இது உடல் தசைகளில் வலி, தூக்கமின்மை, ஞாபக சக்தி பாதிப்பு, வயிற்றுத் தசைகளில் பிடிப்பு ஆகிய பிரச்சினைகளை ஏற்படுத்தும்.


இப்படி உலக அளவில் பல பிரபலங்கள் இந்த ஆட்டோ - இம்யூன் குறை

பாட்டால் ஏற்படும் நோய்களால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

* * * * *

கீழ்க்காண்பவை ‘ஆட்டோ இம்யூன்’ குறைபாட்டால் ஏற்படக்கூடிய நோய்கள் ஆகும்.


*டைப் 1 நீரிழிவு

*ஆர்த்தரைடிஸ்[கீல்வாதம் - மூட்டுகளைப் பாதிக்கும் நோய்]

*ஹைபடைடிஸ்[கல்லீரல் அழற்சி நோய்]

*தைராய்டு பிரச்சினை

*சொரியாசிஸ்

*குடல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள்

*பிசிஓஎஸ்[ஒவ்வொரு ஆண்டும், செப்டம்பர் மாதம் ’பாலிசிஸ்டிக் ஓவரியன் சிண்ட்ரோம்’(PCOS) விழிப்புணர்வு மாதமாகக் கடைபிடிக்கப்படுகிறது. இது பொதுவாக இனப்பெருக்க வயதுப் பெண்களைப் பாதிக்கும் ஹார்மோன்களின் மாற்றமாகும். இது குறித்துப் பெண்கள் கட்டாயம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது அவசியம். பி.சி.ஓ.எஸ்க்கு முறையாகச் சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றால் டைப் 2 நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதயப் பிரச்சனைகள், எண்டோமெட்டீரியல் புற்றுநோய், கருவுறாமை உள்ளிட்டவைகளை ஏதிர்கொள்ள நேரிடும்]

*மயோசிடிஸ்[சமந்தாவைப் பாதித்திருப்பது]


* * * * *

மெட்டபாலிசம்:

‘‘நாம் உட்கொள்ளும் உணவு, நம்முடைய உடலில் உள்ள செல்லில் ஆற்றலாக மாற்றப்படும் ரசாயனச் செயல்பாடுகளை வளர்சிதை மாற்றம் (Metabolism) என்கிறோம். உடலின் செயல்பாட்டுக்கு மட்டுமல்ல; நாம் சிந்திக்கவும் ஆற்றல் தேவைப்படுகிறது.

தாவரம், விலங்கிலிருந்து மனிதன்வரை அனைத்து உயிர்களுக்கும் ஆற்றலைச் சேமித்து, தேவைப்படும்போது வெளிப்படுத்துவதற்கு மெட்டபாலிசம் தேவை. மெட்டபாலிச நடவடிக்கை நின்றால் உயிர்களின் மூச்சும் நின்றுவிடும். நாம் 2 நாட்கள்வரை சாப்பிடாமல் இருந்தாலும் சேமித்து வைக்கப்பட்ட ஆற்றலை உடல் தானாகவே எடுத்துக் கொள்ளும்.’’

===================================================================

https://tamil.samayam.com/lifestyle/health/celebrities-who-suffered-with-autoimmune-diseases/

articleshow/95450955.cms?story=7