எனது படம்
கடவுள் குறித்த ஆய்வுரைகளோ, மூடநம்பிக்கைச் சாடல்களோ, என் பதிவுகளின் உள்ளடக்கங்களின் தரம் எனக்கு வாய்த்துள்ள அறிவுக்கும் மனப் பக்குவத்துக்கும் ஏற்பவே அமையும். அவற்றை ஏற்பதும் மறுத்துப் புறக்கணிப்பதும், ஆறறிவும் ஆழ்ந்து சிந்திக்கும் திறனும் வாய்க்கப்பெற்ற உங்களின் விருப்பம் சார்ந்தது.

வியாழன், 17 அக்டோபர், 2024

மூடநம்பிக்கை வளர்ப்பில் முக்கியப் பங்காற்றும் ஊடக மூடர்கள்!!!

பருவ இதழ்களிலாகட்டும்[பக்திச் செய்திகளுக்கான இணைப்புகள்], இணையங்களிலாகட்டும் மூடநம்பிக்கையை வளர்ப்பதிலும் பரப்புவதிலும் முக்கியப் பங்காற்றுபவர்கள் ஊடகக்காரர்களே[குறிப்பாக, பகுத்தறிவாளர்கள் என்று சொல்லிக்கொள்கிற ‘முரசொலி மாறன்’ வாரிசுகள், தினமலர்க்காரன் போன்றவர்கள்] இவர்களோடு ஒப்பிடும்போது பக்தி வளர்க்கும் ஆன்மிகர்களின் பங்கு வெகு அற்பம்.

ஓர் எடுத்துக்காட்டு:
 
கன்னியாக்குமரியில் கடல் உள்வாங்கும்போதெல்லாம் ஏற்கனவே ஆங்காங்கே மூழ்கிக் கிடக்கும் உடைந்த/உடையாத கற்சிலைகள் தென்படுவதுண்டு. 

இதில் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை.

கன்னியாகுமரியில் ஓரிரு நாட்களாகக் கடல் நீர் உள்வாங்கியதால், வழக்கம்போல் சிலைகள் தென்படுவதை, முருகன் அருளால் அவை நிகழ்ந்ததாகக் காணொலி மூலம் கதை அளந்திருக்கிறான் ‘புதிய தலைமுறை[செய்தி ஊடகம்]க்காரன்.

காணொலி:


முருகன் போன்ற கடவுள்களின் திருவிளையாடல்களைக் கண் முன் நிறுத்துகிற இந்த ஊடகர்கள் கடவுள்களிடம் சொல்லி கடலுக்குள்ளும் ஆறுகளுக்குள்ளும் மூழ்கிக் கிடக்கிற அத்தனைச் சிலைகளையும்  மக்கள் காணும் வகையில் மிதக்கச் செய்வார்களா, சில மணி நேரங்களேனும்?!