எனது படம்
கடவுள் குறித்த ஆய்வுரைகளோ, மூடநம்பிக்கைச் சாடல்களோ, என் பதிவுகளின் உள்ளடக்கங்களின் தரம் எனக்கு வாய்த்துள்ள அறிவுக்கும் மனப் பக்குவத்துக்கும் ஏற்பவே அமையும். அவற்றை ஏற்பதும் மறுத்துப் புறக்கணிப்பதும், ஆறறிவும் ஆழ்ந்து சிந்திக்கும் திறனும் வாய்க்கப்பெற்ற உங்களின் விருப்பம் சார்ந்தது.

திங்கள், 20 ஏப்ரல், 2020

இதோ ஒரு கரோனா மாந்திரீகர்! அடுத்து...

உத்தரப் பிரதேசம், வாரணாசி பகுதியில் வாழும் ‘சஞ்சய் திவாரி’ என்னும் ஜோதிடர், ரூ11/= கட்டணத்தில், மந்திரம் சொல்லிக் கரோனா நோயை விரட்டியடிப்பதாகக் கூறிவந்துள்ளார். தன் கைபேசி எண்ணை இணைத்து விளம்பரமும் செய்துள்ளார்.

இச்செய்தி சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்படவே, செய்தியறிந்த காவல்துறையினர் இவரைக் கைது செய்து, காவலில் வைத்து வழக்கும் தொடர்ந்துள்ளனர்.

இது, இன்றைய ‘செய்திப்புனல்’ செய்தி. [https://www.seithipunal.com/india/fraud-man-arrest-when-corona-virus-complete-solution-of\

இவர் ஒரு ஜோதிடர்.

கரோனாவின் கோரதாண்டவம் தொடருமேயானால்.....

இதைக் குணப்படுத்துவதற்கென்றே பெரிய பெரிய மகான்களெல்லாம் வருகைபுரிய இருக்கிறார்கள்.

அவர்களையெல்லாம் காவல்துறையால் கைது செய்ய முடியாது. காரணம்.....

அவர்கள் கடவுளின் அவதாரங்கள்!

corona-comedies
இந்த ஆள் https://kadavulinkadavul.blogspot.com/2020/04/blog-post_28.html கைது செய்யப்பட்டாரா?
========================================================================