எனது படம்
கடவுள் குறித்த ஆய்வுரைகளோ, மூடநம்பிக்கைச் சாடல்களோ, என் பதிவுகளின் உள்ளடக்கங்களின் தரம் எனக்கு வாய்த்துள்ள அறிவுக்கும் மனப் பக்குவத்துக்கும் ஏற்பவே அமையும். அவற்றை ஏற்பதும் மறுத்துப் புறக்கணிப்பதும், ஆறறிவும் ஆழ்ந்து சிந்திக்கும் திறனும் வாய்க்கப்பெற்ற உங்களின் விருப்பம் சார்ந்தது.

வியாழன், 10 அக்டோபர், 2019

பாலுறவுப் பொன்மொழிகள்!!!

*பல நேரங்களில் தவறு செய்ய முயலும்போது நம் மனசாட்சி நம்மைத் தடுத்துவிடுகிறது. நம் மீதான, இச்சைகளின்[குறிப்பாகக் காமம்] உச்சக்கட்டத் தாக்குதலின்போது அது எங்கோ ஓடி ஒளிந்துகொள்கிறது!

*நினைத்தபோது நினைத்த இடத்தில் நினைத்த வகையிலெல்லாம் உடலுறவு சுகம் அனுபவிக்க இயலாத நம் முன்னோடிகளில் கணிசமானவர்களால் கற்பனை செய்யப்பட்டதே ‘காதல்’ ஆகும்.

*உடலுறவில் உச்சம் தொடுவது பெண்ணுக்குச் சாத்தியமா என்பது பற்றி இதுவரை எந்தப் பெண்ணும் கருத்துச் சொன்னதில்லை. “ஆம்” என்றும் “இல்லை”யென்றும் தொடர் விவாதம் நடத்திக்கொண்டிருப்பவர்கள் அப்பாவி ஆண்களே!

*வாழ்ந்து முடித்து மடிந்துபோவதை ‘ஆடி அடங்கும்  வாழ்க்கையடா’ என்றார்கள் நம் முன்னோர்கள். உடலுறவுக்கு முன்பு நாயாய்ப் பேயாய்  ஓடியாடி அலைந்து உடலுறவுக்குப் பின் அடங்கிவிடுவதும் இதில் அடங்கும்தானே?!

*‘இது’ விசயத்தில் பெண்களின் பங்கு மிகவும் குறைவு. லேகியம், ஆயின்மெண்ட், வயாகரா, நயாகரா என்று அலைந்து திரிபவர்கள் ஆண்களே.

*உலக அளவில் எது எதிலோ கின்னஸ் சாதனை நிகழ்த்தப்படுகிறது. ‘இது’ விசயத்தில் முயற்சி ஏதும் செய்யப்பட்டதாகத் தெரியவில்லை.

*ஆசைப்பட்டபடியெல்லாம் அனுபவிக்க இயலாதபோது மனம் வருந்துவது மனித இயல்பு. அந்த வருத்தத்தை உரிய முறையில் கட்டுப்படுத்துவது மிக முக்கியம். தவறினால், உடல் நலிவுற்று, பின்னர் எதிர்பாராத வகையில் வாய்ப்புகள் கிடைத்தால் அவற்றைப் பயன்படுத்த இயலாமல் போவது மிகப் பெரிய சோகம்.

*ஆண்களைப் பொருத்தவரை இறுதி மூச்சுவரை புணர்ச்சி செய்ய இயலும். பெண்ணின் உடலமைப்பு அதற்கு ஏற்றவகையில் வடிவமைக்கப்படவில்லை. கடவுள் எனப்படுபவர் பெண்ணுக்கு இழைத்த மிகப் பெரிய துரோகம் இதுவாகும்.
===========================================================================