எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

வியாழன், 4 ஜூலை, 2024

மணவிலக்குப் பெற்றவளின் மானசீகக் கணவன்!!![கால் நிமிடக் காணொலி]

கீழ்க்காணும் குறுங்காணொலியில் இடம்பெற்றிருப்பது கற்பனை நிகழ்வுதான்.

கணவனுடனான அந்தரங்க உறவுப் பிரச்சினைகள் காரணமாக மணவிலக்குப் பெறுகிறாள் ஒரு பெண்[பெரும்பாலான மணவிலக்குகளில், மனதுக்குள் புதைத்து வைக்கப்படும் முக்கியக் காரணம் இதுதான்].

தாலி கட்டியவன் இல்லாத நிலையில், இச்சையைக் கட்டுப்படுத்தி நெறி பிறழாமல் வாழ்வது அத்தனை எளிதல்ல எனினும், பெண்களில்[அரிதாகச் சில ஆண்கள்] அப்படி வாழ்கிறவர்களும் உள்ளனர் என்பது மறுக்க இயலாத உண்மை.

அவ்வப்போது அதிரடியாய்த் தாக்கும் அந்தப் பொல்லாத உணர்ச்சியைக் கட்டுப்படுத்த, அவரவர் வாழும் சூழலுக்கும் மனப் பக்குவத்திற்கும் ஏற்ப உரிய வழிமுறைகள் கையாளப்படுகின்றன.

அவற்றில், கீழ்க்காணும் காணொலிப் பெண் கையாளும் வழி[விவாகரத்துக்குப் பிறகு தன் மனதுக்குகந்த ஒருவனைக் கணவனாக வரித்தல்] வித்தியாசமானது; விவேகமானதும்கூட!


                              *   *   *   *   *

*** அந்த 41 பேருக்கு[‘யூடியூப்’ பார்வையாளர்கள். ஹி... ஹி... ஹி!!!] நன்றி! உங்களுக்கும்தான்!!