எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

புதன், 3 டிசம்பர், 2025

காலங்காலமாய்ச் 'சொர்க்க வாசல்' காட்டுகிறார்கள்! 'சொர்க்கம்' காட்டுவது எப்போது?!

திருமலை திருப்பதி தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி தர்மா ரெட்டி திருமலையில் நேற்று அனைத்துத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அவர் கூறியதாவது:

//ஜனவரி 13ஆம் தேதி வைகுண்ட ஏகாதசி தினம். இதற்காக 13ஆம் தேதியிலிருந்து 22-ஆம் தேதி வரை சொர்க்க வாசல் தரிசனத்திற்குப் பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். ஜனவரி 13ஆம் தேதி அதிகாலை 2:00 மணிக்குச் சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது// https://temple.dinamalar.com].

அடியேனும்[போலி நாத்திகன்] திருமலை வெங்கடேசப் பெருமாளின் ஆயுட்காலப் பக்தன் என்பதால், மேற்கண்ட செய்தியை வாசிக்கும்போதே ஆனந்தப் பரவசத்துக்கு உள்ளானேன்.

ஆனாலும், அடுத்த சில நொடிகளில் என்னுள் அளப்பரிய பெரும் சோகம் பரவியது. காரணம்.....

கடந்த கொஞ்சம் ஆண்டுகளாக, “சொர்க்கத்தின் வாசலை மட்டும் காட்டுகிற திருப்பதி தேவஸ்தானத்தார் சொர்க்கத்தை எப்போது காட்டப்போகிறார்கள்?” என்று கேட்டுக் கேட்டுக் கேட்டு என் மனம் வெகுவாக ஏங்கியதுதான்.

கோரிக்கை வைத்தாலும் அதை அவர்கள் ஏற்பது சந்தேகமே என்பதால், இந்த இருள் மனத்தவனின் வேண்டுகோளை நிறைவேற்றுமாறு அருள் வடிவான திருவேங்கடவனின் திருவடிகளின் முன் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்குகிறேன்[மானசீகமாக].

போற்றி போற்றி திருப்பதி வெங்கடாசலபதி போற்றி! அவரின் திருவடிகள் போற்றி!!