எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

வெள்ளி, 24 மே, 2019

நாத்திகர் ஸ்டாலின்[?] வாழ்க!

ஸ்டாலின் நாத்திகரா ஆத்திகரா என்பது குறித்து நான் ஒருபோதும் சிந்தித்ததில்லை; அறியும் முயற்சியிலும் ஈடுபட்டதில்லை.

மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர்..... 

கடவுள்/கடவுள்கள் குறித்துக் கணக்குவழக்கில்லாமல் கற்பனைக் கதைகள் சொல்லிப் பிழைப்பு நடத்திவரும் ஒரு கூட்டத்தார், ''ஸ்டாலின் ஒரு நாத்திகன். மதநம்பிக்கையாளர்களின் மனம் புண்படும் வகையில் பேசுபவர். மறந்தும் அவருக்கோ அவரின் கட்சியினருக்கோ தேர்தலில் வாக்களித்துவிடாதீர்கள்'' என்று கூட்டம் போட்டுத் தீர்மானம் நிறைவேற்றினார்கள்.
ஊடகங்களுக்குப் பேட்டி தந்து விதம் விதமாய்ச் சாடினார்கள்.

பத்திரிகைகளிலும்  எழுதினார்கள்.

இயன்ற வகைகளிலெல்லாம் ஓயாமல் ஒழியாமல் மனம் சலிக்காமல் பரப்புரை செய்தார்கள். இரவுபகலாய்க் கண்விழித்து இல்லாத கடவுள்களுக்கெல்லாம் யாகங்கள் செய்து வழிபட்டார்கள். என்ன செய்தும்.....

இவர்கள் எதிர்பார்த்தபடி தேர்தல் முடிவுகள் அமையவில்லை.

அரசியல்வாதிகளால் தமக்கு விளையும் நன்மைகள் குறித்து மட்டுமே சிந்தித்து வாக்களிக்கும் வழக்கமுள்ள நம் தமிழ் மக்கள், ஸ்டாலின் சார்ந்த கட்சிக்கும் ஏனைய தோழமைக் கட்சிகளுக்கும் வாக்களித்து மக்களவைத் தேர்தலில் அவர்கள் போட்டியிட்ட மிக மிக மிகப் பெருபாலான தொகுதிகளில் வெற்றிபெறச் செய்திருக்கிறார்கள்.

இனி நடக்கவிருக்கும் தேர்தல்களிலும் ஸ்டாலின் தலைமையிலான அணியை வெற்றிபெறச் செய்வார்கள்.

ஸ்டாலின் வாழ்க! 'நாத்திகர்' ஸ்டாலின் வாழ்கவே!!