‘இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்[பிரதமர்] ஆகத் தன்னை பாவித்துக்கொண்டு, அதிகாரப் போதையில் அனைத்து மாநிலங்களையும் அடக்கியாள நினைக்கும் மோடியை, “மிரட்டவில்லை; எச்சரிக்கிறோம்” என்று நீங்கள் சொல்லியிருக்க வேண்டாம்.
அனைத்துப் போதைகளைவிடவும் ‘அதிகாரப் போதை’ ஆபத்தானது. அதிலிருந்து அவரை ஓரளவுக்கேனும் விடுவிக்க ‘மிரட்டல்’ தேவைதான்.
உங்களின் துணிவைப் பாராட்டுகிறோம். ஒட்டுமொத்தத் தமிழ்நாடும் போராட்டக் களத்தில் உங்களின் பின்னால் அணிவகுக்கும்.
