எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

சனி, 26 அக்டோபர், 2019

தமிழறிஞர்களும் தணியாத தாம்பத்திய சுகமும்!

பழந்தமிழறிஞர் பலருக்கும் ஒன்றுக்கும் மேற்பட்ட மனைவியர் இருந்திருக்கிறார்கள்.
கலித்தொகையைப் பதிப்பித்தவராக அடையாளப்படுத்தப்படும் சி.வை.தாமோதரம்பிள்ளைக்கு மூன்று மனைவியர்; பத்துப் பிள்ளைகள். 

புதுமைப்பித்தன் ‘சாபவிமோசனம்’ கதையை எழுதுவதற்குக் காரணமாக அமைந்த ‘அகலிகை வெண்பா’ என்னும் நூலை எழுதிய கால்நடை மருத்துவரான வெள்ளக்கால் ப.சுப்பிரமணிய முதலியாருக்கு இரண்டு மனைவியர்; ஆறு பிள்ளைகள். 

1300 ஆண்டுகளுக்கான வானியல் பஞ்சாங்கத்தை உருவாக்கியவரும், கோள்களின் அடிப்படையில் இலக்கிய நூல்களின் காலத்தைக் கணித்தவருமான எஸ்.டி.சாமிக்கண்ணுப் பிள்ளைக்கு இரண்டு மனைவியர்; பதினாறு பிள்ளைகள்.

{தனித்தமிழ் இயக்கத்தின் முன்னோடியான மறைமலை அடிகளார், குடும்பத் தலைவனுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட மனைவியர்[ஒருத்தி கருவுற்றால் ‘அந்த’ச் சுகத்துக்கு இன்னொருத்தி தேவை. அவளும் கருவுற்றால்...கற்பனை செய்துகொள்க] தேவை என்னும் கொள்கை உடையவர்}.

15 வயதில் திருமணம் செய்துகொண்ட நாவலர் சோமசுந்தர பாரதியார், தம் 48ஆம் வயதில் மறுதிருமணம் செய்தார். [ஆதாரம்: ‘தமிழறிஞர்கள்’, காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோயில். தகவல் உதவி: தமிழ் இந்து 26.10.2019]

இவ்வாறாக நீண்டுகொண்டே போகிறது தமிழறிஞர்களின் தாம்பத்திய மோகம் குறித்த  பட்டியல்.

‘அது’ விசயத்தில் தமிழறிஞர்கள் அதீத ஆர்வம் படைத்தவர்களாக இருந்தமைக்கு.....

அகத்துறை இலக்கியங்களின் முக்கியப் பாடுபொருளாக இருந்த, பெண்களின் அண்ணாந்து ஏந்திய[மேல் நோக்கிய] மென் கொங்கைகள் குறித்தும் அகல்[அகன்ற] அல்குல் குறித்தும் ஆழ்நிலை ஆய்வுகளில் ஈடுபட்டது காரணமோ!?

அக்காலத் தமிழறிஞர்கள் அப்படி! இக்காலத் தமிழறிஞர்கள்?
===========================================================================