‘தமிழ்நாடு தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடத்திற்கும் குறைவான காலமே உள்ள நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர் ஞாயிற்றுக்கிழமை ஒரு துணிச்சலான அறிவிப்பை[ஒரு நிகழ்வில் பேசும்போது] வெளியிட்டார்’ என்று தொடங்கி, அதன் உள்ளடக்கத்தையும் வெளியிட்டிருக்கிறது ஒரு முன்னணி ஊடகம்*
அறிவிப்பின் சாரம்:
=திராவிட அரசியல் என்பது தமிழர்களுக்கென்று தனி நாடு[திராவிட நாடு] அமைவதை முதன்மை நோக்கமாகக் கொண்டது.
=திராவிடச் சக்திகளின் உதவியின்றி நானோ, ப.சிதம்பரமோ தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்படுவது சாத்தியமில்லை.
=இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக்கு முன்னரே, இந்தத் திராவிடச் சக்திகள்' இந்தியாவை இந்துஸ்தான், பாகிஸ்தான், திராவிடநாடு என்று மூன்றாகப் பிரிக்கப்படுதல் வேண்டும் என்றன.
=இவர்களின் இந்தப் பிரிவினைக் கொள்கைக்கு, அலுவல் மொழிப் பிரச்சினை மையமாக இருந்துவருகிறது[1963 ஆம் ஆண்டு அலுவல் மொழி மசோதா நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டபோது, திமுக நிறுவனர் சி.என். அண்ணாதுரை[ஆதரவாளர்களால் அன்புடன் அண்ணா என்று அழைக்கப்பட்டார்] மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். ஜனநாயகம் என்பது பெரும்பான்மையை அடிப்படையாகக் கொண்டதல்ல[பெரும்பான்மையோரால் பேசப்படுவதாகச் சொல்லப்படும் ‘இந்தி’ மறைமுகமாகச் சுட்டப்படுகிறது].
=அண்ணாதுரை மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, அவர் ஒரு பிரிவினைவாதியாக வந்தார். அவர் அடல் பிஹாரி வாஜ்பாயிக்கு எதிராக வாதிட்டது குறிப்பிடத்தக்கது. நீங்கள் என் மீது இந்தியைத் திணித்தால், நான் இந்த நாட்டை விட்டு வெளியேறுவேன் என்று அவர் கூறியது அனைவருடைய சிந்தனையையும் தூண்டியது.
=இன்றும் கூட, உங்களில்[ஆட்சியாளர்கள்] எவரும் தமிழர்களைச் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை. தமிழ்நாடு நாட்டின் வேறு எந்தவொரு மாநிலத்தையும் போன்றதொரு மாநிலம் அல்ல. அதனால்தான், நானோ ப.சிதம்பரமோ திராவிடச் சக்திகளின் உதவிஉயின்றித் தேர்ந்தெடுக்கப்பட முடியாது என்கிறேன் நான்."
* * * * *
***எஞ்சியுள்ள, ஐயரின் கருத்துகளையும் வாசிக்கக் கீழ்க்காணும் முகவரியைச் சொடுக்குக.


