எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

வியாழன், 12 மே, 2016

இப்பதிவு, ‘குமுதம்’ இதழ் ஆசிரியருக்குச் சமர்ப்பணம்!

ஓர் எழுத்தாளரின்  படைப்பை அச்சரம் மாறாமல் இன்னொருவர்  தன் பெயரில் வெளியிட்டால் அது ‘கதைத் திருட்டு’. ‘கரு’வை மட்டும் சுட்டால் அதுவும் திருட்டுதான். அப்படியொரு திருட்டுக்குக் குமுதம் ஆசிரியர் உடந்தையாக இருந்திருக்கிறார்[!!!].

கீழ்க் காண்பது, 30.03.2015 குங்குமம் இதழில், ‘வேண்டாம்’ என்னும் தலைப்பில் சிறியேன்[நாமக்கல் பரமசிவம்] எழுதிய ஒரு பக்கக் கதை.
இனி நீங்கள் வாசிக்கவிருப்பது இந்த வாரக் குமுதத்தில்[18.05.2016] ‘ஒரு சொல்’ என்னும் தலைப்பில், ‘விஜயலட்சுமி’ என்பவர் பெயரில் வெளியாகியிருக்கும் ஒ.ப.கதை.
குமுதம் ஆசிரியர், ‘நம்பர் 1 போட்டி’ இதழான குங்குமம் வார இதழை வாசிக்கவே மாட்டாரா? இதழின் மற்ற அம்சங்களை வாசித்தாலும் ஒ.ப.கதைகளைப் படிக்கும் வழக்கம் அவருக்கு இல்லையா? பரமசிவம் போன்ற, குமுதம் இதழைச் சற்றே கடுமையாக விமர்சனம் செய்யும் கத்துக்குட்டிகளின் கதைகளை ஏறெடுத்தும் பார்க்க மாட்டாரா?

இப்பதிவு, மிகச் சிறந்த புனைகதைப் படைப்பாளரும், அசத்தும் ஆன்மிக எழுத்தாளரும்,  இங்கிதம் தெரிந்த இதழாசிரியரும், நம் மரியாதைக்கு உரியவரும் ஆன குமுதம் ஆசிரியர் ‘ப்ரியா கல்யாணராமன்’ அவர்களுக்குச் சமர்ப்பணம்.
===============================================================================