எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

சனி, 26 மார்ச், 2022

'கோயில்கள்'... தேவை 'வயாகரா' பிரசாதம்!!!

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மாவட்டத்தில் உள்ள 'பாபா ரோட் ஷா' கோயிலில் நடைபெறும் திருவிழாவில் பக்தர்களுக்குப் பிரசாதமாக மதுபானம் வழங்கப்படுகிறது[கோயிலுக்கு வரும் பக்தர்கள் போட்டி போட்டுக் கொண்டு 'பிரசாத மதுவை' வாங்கி குடிக்கும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது].

பாபாவின் ஆசீர்வாதம் பெறுவதற்காக மதுபானம் வழங்கும் இந்தச் சடங்கு 90 ஆண்டுகளாக நடந்துவருகிறதாம்[நம் ஊர்க்காரர்களுக்குத் தெரியாமல்போனது எப்படி?!]. 

பக்தர்கள் முதலில் 'பாபா ரோட் ஷா'வுக்கு வணக்கம் செலுத்துவார்கள். ஒரு குழுவினர் மதுவைச் சேகரித்து ஒரு பெரிய அண்டாவில் ஊற்றுவார்கள். அண்டாவிலிருந்து பாட்டில்களில் எடுத்துப் பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்குவார்கள்.

***வடை பாயசமோ, கொழுக்கட்டையோ, பொங்கலோ, மட்டன் பிரியாணியோ[அசைவச் சாமிகளுக்கு] முதலில் கடவுள்களுக்குப் படைக்கப்பட்டுப் பின்னர் பக்தகோடிகளுக்கு வழங்கப்படும்போது அவை 'பிரசாதம்' என்று பெயர் பெறுகின்றன.

இன்ப லோகத்தில் மிதக்கச் செய்கிற 'சோம பானம்' அருந்திப் பழக்கப்பட்ட கடவுள்களுக்கு மதுபானம் வைத்து வழிபடுவது ஒரு பெரிய விசயம் இல்லைதான். ஆனாலும், பக்தகோடிகளைப் பொருத்தவரை இது அவர்களைப் பரவசத்தில் ஆழ்த்துகிற நடவடிக்கை ஆகும்.

இதைவிடவும், மதுபானம் போல் மிக எளிதாகக் கடைகளில் வாங்க முடியாத கஞ்சா, அபினி என்று தடை செய்யப்பட்ட சரக்குகளையோ, வயாகரா போன்ற நீண்ட நேர உடலுறவுக்குப் பயன்படுகிற மாத்திரைகளையோ, கடவுள்களுக்குப் படைத்துப் பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கினால், அவர்கள் ஆனந்தப் பெருவெள்ளத்தில் மூழ்குவார்கள் என்பது உறுதி.

இதை, இந்தப் புண்ணியப் பூமியிலுள்ள அனைத்துக் கோயில் நிர்வாகங்களும் பரிசீலித்து ஆவன செய்திடல் வேண்டும் என்பது நம் வேண்டுகோள்.

==========================================================================

'காமுகி'களும் கருத்தடை அல்லது கருக்கலைப்புகளும்!!!


குளு குளு உதகை.

மூன்று முறை மணம் முடித்த ஒரு குடும்பத் தலைவி. அவளுக்கு ஒரு குழந்தை மட்டுமே.

மூன்றாவது கணவன் காலமான நிலையில் அவளுக்குக் கள்ளக் காதலர்கள் தேவைப்படுகிறார்கள். சுதந்திரப் பறவை என்பதால் விருப்பம்போல் காம சுகம் அனுபவிக்கிறாள்.

இவ்வகையிலான இவளின் வாழ்க்கை முறை குறித்து விமர்சிக்க எவருக்கும் உரிமையில்லை. ஏனென்றால், கட்டுபடியாகாத நிலையில் ஆண்கள் பல பெண்களுடன் உடலுறவு கொண்டு சுகம் அனுபவிப்பது இவ்வுலகில் இயல்பானதும் அனுமதிக்கப்பட்ட ஒன்றாகவும் இருப்பதுதான். 

ஆணாகட்டும் பெண்ணாகட்டும் அவர்கள் அடங்காத ஆசை மனம் கொண்டவர்களாயின், பிறருக்குப் பாதிப்பு இல்லாத வகையில் அந்தரங்க சுகம் தேடி அலைவதில் தவறில்லை என்றுகூடச் சொல்லலாம்.

இதைச் 'சட்டப்படி அல்லாத சமுதாய வாழ்வியல் முறை' என்பது பொருந்தும்.

மேலே குறிப்பிடப்பட்ட உதகைப் பெண் இந்தக் கட்டுப்பாட்டை நினைவில் கொள்ளத் தவறினாள் என்பதால், 'காம வெறி பிடித்த கொலைகாரி' என்னும் அவப்பெயருக்கு ஆளானாள்.

ஆம், தன் கள்ளக் காதலர்களுடனான் உல்லாச வாழ்க்கைக்கு இடையூறாக இருந்தது என்பதால்.....

தான் பெற்றெடுத்த குழந்தைக்கு மது கலந்த சோறு ஊட்டினாள் அவள்; அதன் தலையைச் சுவற்றுடன் மோதிக் கொலையும் செய்தாள்.

இது, இன்று[26.03.2022], காலை 06.45 மணி அளவில், 'பாலிமர் தொலைக்காட்சி'யில் வெளியான செய்தி.

கள்ள உறவுக்கு இடையூறு என்பதால், பெற்ற தாயே பிள்ளைக்கு விஷம் கொடுத்தோ, வேறு  வழிமுறைகளைக் கையாண்டோ கொலை செய்வது அபூர்வ நிகழ்வல்ல, அடிக்கடி நிகழ்கிற விபரீதம் என்றாகிவிட்டது.

இம்மாதிரி அவல நிகழ்வுகளைத் தவிர்ப்பதற்கு வழியே இல்லையா?

"உண்டு" என்று உறுதிபடச் சொல்லலாம். அவற்றில் சில.....

*பெண் பார்க்கும் சடங்கின்போது ஆணும் பெண்ணும் தனித்து உரையாடுகையில், பெண் தனக்குக் காம இச்சை அதிகம் என்பதைக் குறிப்பாகவோ  வெளிப்படையாகவோ சொல்லிவிடலாம்[இதை இயல்பாகக் கருதும் காலம் வரும்]. அது அந்த ஆண் ஒரு திடமான முடிவு எடுப்பதற்கு வாய்ப்பாக அமையும்.

*மணமான பிறகு, மிகையளவில் இருந்த பாலுணர்ச்சி பெருமளவில் குறைந்துவிட்டது என்பதை உறுதி செய்த பின்னரே குழந்தை பெற்றுக்கொள்ளுதல் வேண்டும்.

*உறுதி செய்வது இயலாத நேரங்களில், கருத்தடை முறையைக் கையாளலாம்; கருக்கலைப்பும் செய்துகொள்ளலாம்.

*குழந்தை அல்லது குழந்தைகளைக் கணவன் பொறுப்பில் ஒப்படைத்துவிட்டு, 'அது' விசயத்தில் முழுத் திருப்தி அளிக்கும் ஏற்றதொரு கள்ளக் காதலனுடன் ஓடிப்போகலாம்.

*கணவனை விவாகரத்துச் செய்துவிட்டு, தனித்து வாழும் 'சுதந்திர வாழ்க்கை முறை'யைத் தேர்வு செய்யலாம்.

யோசித்தால், இன்னும் ஆகச் சிறந்த நல்ல வழிவகைகளைக் கண்டறிதல் சாத்தியப்படக்கூடும்.

ஆக, மேலே குறிப்பிட்ட வகையினான பெண்கள், அந்தரங்கச் சுகபோக வாழ்க்கை முறை குறித்துத் திருமணத்திற்கு முன்னரே  'சுயபரிசோதனை' செய்துகொள்வது அவர்களுக்கு நல்லது; சமுதாயத்திற்கும் நன்மை பயப்பதாக அமையும்.

வாழ்க பெண்ணினம்!

==========================================================================