எனது படம்
கடவுள் குறித்த ஆய்வுரைகளோ, மூடநம்பிக்கைச் சாடல்களோ, என் பதிவுகளின் உள்ளடக்கங்களின் தரம் எனக்கு வாய்த்துள்ள அறிவுக்கும் மனப் பக்குவத்துக்கும் ஏற்பவே அமையும். அவற்றை ஏற்பதும் மறுத்துப் புறக்கணிப்பதும், ஆறறிவும் ஆழ்ந்து சிந்திக்கும் திறனும் வாய்க்கப்பெற்ற உங்களின் விருப்பம் சார்ந்தது.

வியாழன், 1 ஆகஸ்ட், 2024

மனிதமும் அறிவும் மாந்தரின் இரு கண்கள்!

னிதர்களுக்கு வாய்த்திருப்பது அற்ப வாழ்நாள்.

இந்தக் குறுகிய கால அவகாசத்தில், ஓரளவுக்கேனும் அமைதியாய் வாழ்ந்து முடிக்க உதவுபவை ஆறறிவும் மனிதநேயமும்.

வறுமை, நோய், பகைமை, இயற்கைச் சீற்றங்கள்[வயநாட்டுத் துயர நிகழ்வுகள் நினைவுகூரத்தக்கவை] என்றிவை போன்றவைதான் அடுக்கடுக்கான துன்பங்களுக்கு[நாம் அனுபவிக்கும் இன்பங்கள் குறைவு] அடிப்படைக் காரணங்களாக உள்ளன.

ஆறறிவைப் பயன்படுத்தி[னால்] இயன்றவரை இவற்றின் தாக்குதலிலிருந்து தப்பி வாழலாம்.

எவ்வளவுதான் இதைப் பயன்படுத்தினாலும், துன்பங்களிலிருந்து முற்றிலுமாய் விடுபடுவது சாத்தியமே இல்லை.

ஆனாலும், மனிதர்கள் மனித நேயத்துடன் ஒருவருக்கொருவர் உதவுவதன் மூலம் ஒருவர் உறும் துன்பத்தின் பாதிப்பை[இயற்கைச் சீற்றத்தால் விளையும் துயரங்கள் உட்பட] குறைத்திட முடியும்.

எனவே, மனிதராய்ப் பிறந்த அத்தனைப் பேரின் கடமை அறறிவை வளர்ப்பதோடு, மனித நேயத்தையும் வளர்ப்பதுதான்.

இவை இரண்டும்தான் மனிதர்களுக்கான தவிர்க்கவே கூடாத மிக முக்கியத் தேவைகளாகும்.

இவற்றை நாளும் வளர்ப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடாமல், செத்த பிறகான வாழ்க்கை[மீண்டும் பிறத்தல், சொர்க்கம் சேர்தல் போன்றவை] குறித்துக் கவலைப்படுவது, இல்லாத கடவுள் மீதான பக்தியைப் பெருக்குவது, சாதி மதப் பற்றை வளர்ப்பது, ஆதிக்க வெறியைத் தூண்டுவது என்றிவை போன்றவை அறிவீனர்கள் செய்யும் செயலாகும்; அவர்களை அயோக்கியர்கள் என்றும் சொல்லலாம்.