எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

வியாழன், 30 டிசம்பர், 2021

திருநீறும் நெற்றியும்![புத்தம் புதிய புதுக்கவிதை]

[படங்கள்: கூகுள்]
நான் மதச் சார்பற்றவன்.

ஆடவர்கள்

நெற்றி நிறையத் திருநீறு தீட்டுவது

எனக்கு

அறவே பிடிக்காது. 

ஆனாலும்,

பிறை வடிவ நெற்றியில் 

புருவ இடைவெளிப்

பொட்டுக்குச் சற்று மேலே

வரிவரியாகவும் சின்னஞ்சிறு கீற்றாகவும்

பெண்கள் இட்டுக்கொள்ளும் 

திருநீறு

எனக்கு ரொம்பவே பிடிக்கும்.

அவர்கள் பக்தைகள் என்பதால் அல்ல;

அது

அவர்களின் அழகு முகத்துக்கு

மேலும் அழகு சேர்ப்பதால் மட்டுமே!

==========================================================================