எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

வியாழன், 30 டிசம்பர், 2021

திருநீறும் நெற்றியும்![புத்தம் புதிய புதுக்கவிதை]

[படங்கள்: கூகுள்]
நான் மதச் சார்பற்றவன்.

ஆடவர்கள்

நெற்றி நிறையத் திருநீறு தீட்டுவது

எனக்கு

அறவே பிடிக்காது. 

ஆனாலும்,

பிறை வடிவ நெற்றியில் 

புருவ இடைவெளிப்

பொட்டுக்குச் சற்று மேலே

வரிவரியாகவும் சின்னஞ்சிறு கீற்றாகவும்

பெண்கள் இட்டுக்கொள்ளும் 

திருநீறு

எனக்கு ரொம்பவே பிடிக்கும்.

அவர்கள் பக்தைகள் என்பதால் அல்ல;

அது

அவர்களின் அழகு முகத்துக்கு

மேலும் அழகு சேர்ப்பதால் மட்டுமே!

==========================================================================