எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

திங்கள், 24 பிப்ரவரி, 2025

சொறிவது சுகம்! நன்மைகளும் உண்டு!![பகிர்வு]

ரு கொசு கடித்தவுடன், எறும்போ அல்லது ஒரு பூச்சியோ உடலில் ஊர்வது போன்ற உணர்வு ஏற்பட்டால், ஏற்படும் அரிப்பை உடனே விரல்களால் சொறிந்துகொள்வது நமக்கு ஒருவித ஆறுதலைக் கொடுக்கும்.

நிச்சயம் சொறிந்தே தீர வேண்டும் எனும் உணர்வு, நாம் எந்த இடத்தில் இருக்கிறோம் என்பதை மறந்து நம்மைத் தன்னிச்சையாகச் சொறியத் தூண்டிவிடும்.


அந்த ஆறுதல் உணர்வுக்குப் பிறகுதான், நம்மை யாரும் பார்த்தார்களா என்பதைக் கவனிப்போம். சிலருக்குப் பிறர் சொறிந்துகொள்வதைப் பார்த்தாலே, அவர்களுக்கு அரிப்பு ஏற்படுவதைப் போன்ற உணர்வு ஏற்படும்.


எலிகளை வைத்து மேற்கொள்ளப்பட்ட ஒரு சமீபத்திய ஆய்வின் முடிவில், தோலில் ஏற்படும் அரிப்பு நோய் எதிர்ப்புச் சக்தியைச் செயல்படுத்துகிறது என்றும், இது தீங்கு விளைவிக்கும் தொற்றுநோய்களிலிருந்து சருமத்தைப் பாதுகாக்க உதவுகிறது என்றும் கண்டறியப்பட்டுள்ளது.


ஆனாலும் பொதுவாக, 'அதிகம் சொறியக் கூடாது, தோல் அழற்சியாக இருந்தால் அதைச் சொறிவது இன்னும் அந்நிலையைத் தீவிரப்படுத்தும்' என்றே மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்[பிபிசி தமிழ்14 பிப்ரவரி 2025]


                                            *   *   *   *   *

கூடுதல் தகவல்களுக்கு:


https://www.bbc.com/tamil/articles/cz0le74dj7po


‘கும்ப்’ கூமுட்டைகள் 62 கோடி! இது யுகயுகாந்தர சாதனை!!

//‘மகா கும்பமேளாவில் இதுவரையில் 62 கோடி பேர் பங்கேற்றுப் புனித நீராடி உள்ளனர். இந்தக் கும்பமேளாவில் மக்களிடம் அதிக ஈர்ப்பு உண்டாகியுள்ளது. இது எனக்கு மிகவும் முக்கியமானது[ஆட்சியைத் தக்கவைத்திட]. ஆன்மிகம் மற்றும் கலாசாரம் நிறைந்து காணப்படும் பிரஜ் பூமிக்கு நான் வந்துள்ளேன்.

உலகில் நடக்கும் ஆன்மிக விழாவாக இருந்தாலும் சரி, அல்லது சுற்றுலா நோக்கத்திற்காக நடக்கும் நிகழ்வாக இருந்தாலும் சரி, ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் இவ்வளவு மக்கள் கூடுவது, இந்த நூற்றாண்டின் அரிய நிகழ்வாகும்’ எனக் கூறினார் யோகி ஆதித்யநாத்// இது செய்தி.


மேற்கண்டவாறு, மேலோட்டமாகக் கும்பமேளா நிகழ்வைப் புகழ்ந்து கூறிப் புளகாங்கிதப்பட்டுள்ளார் யோகி ஆதித்யநாத் என்னும் மொட்டைச் சாமியார்.


“இந்த நூற்றாண்டின் அரிய நிகழ்வு இது” என்றும் கூறியுள்ளார்.


நூற்றாண்டு என்றது தவறு. யுக யுகங்களாக நடந்திராத பக்திப் பித்தன்களின் ‘கும்மாளம்... கூத்தடிப்பு’ என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும்.


அழுக்கு நீர்க் குளியலின்போது நெரிசலில் சிக்கிச் செத்துப்போனவர்கள்[சொர்க்கம் சேர்ந்தவர்கள்], காணாமல் போனவர்கள், புதிதாக உருவாக்கப்பட்ட முட்டாள்கள் ஆகியோரின் எண்ணிக்கையும் கோடிகளில் இருக்கக்கூடும்.


அதற்கான நீண்டதொரு பட்டியலையும் தந்திருந்தால் இந்த மொட்டையனைரை யோக்கியன்ர் யோகி என்று சொல்லலாம்.


[எதுக்கு உள்காதில் வளையம்!?]

https://www.dinamalar.com/news/india-tamil-news/62-crore-people-will-participate-in-maha-kumbh-mela-yogi-adityanath--/3861967