எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

திங்கள், 13 நவம்பர், 2023

இந்துமதத்தைப் பாதுகாக்க உ.நீதிமன்றத்தில் மனு! பாவம் ‘பாஜக’!!

‘அவன்’ தன் உயிருக்குப் பகைவர்களால் ஆபத்து நேரலாம் என்று அஞ்சுகிறான். அவர்களை எதிர்கொள்ளும் வழி அறியாத அவன் தன் நாட்டு ஆட்சியாளரிடம் தனக்குப் பாதுகாப்பு வழங்கும்படி கோரிக்கை வைக்கிறான்.

ஆட்சியாளர்கள்[மத்திய&மாநில அரசுகள்] கண்டுகொள்ளவில்லை.

வேறு வழியில்லாமல் அவன் உச்ச நீதிமன்றத்தை அணுகுகிறான்.

“என் உயிருக்குப் பாதுகாப்பு வழங்கும்படி ஆட்சியாளர்களுக்கு உத்தரவிட வேண்டும் என்னும் கோரிக்கை மனுவைச் சமர்ப்பிக்கிறான்.

இவனின் கோரிக்கையில் நியாயம் இருப்பதால், உச்ச நீதிமன்றம் இது குறித்து ஆட்சியாளரிடம் விளக்கம் கேட்டு உரிய உத்தரவைப் பிறப்பிக்கும் என்று நம்பலாம்[நிகழ்ச்சி கற்பிக்கப்பட்டது].

இது தனி நபர் நலன் குறித்த வழக்கு.

இதனையொத்த ஒரு பொதுநல வழக்கு சில நாட்களுக்கு முன்பு[11.11.2023] உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

‘இந்தியாவில் இந்துமதத்தைப் பாதுகாப்பதற்கான வழிகாட்டுதல் நெறிகளை வகுத்திட மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என்னும் கோரிக்கை அதில் முன்வைக்கப்பட்டிருந்தது.

தீர்ப்பு வழங்குவதற்கு முன்பு, மனுதாரரின் பித்துக்குளித்தனத்தை எண்ணி நீதியரசர்கள் குறைந்தபட்சம் மனதுக்குள் நகைத்தார்களோ அல்லவோ நமக்கு வாய்விட்டுச் சிரிக்கத் தோன்றுகிறது.

இந்தியாவின் மதம்[இது மதச் சார்பற்ற நாடு என்பதெல்லாம் வெறும் வாய் வார்த்தை] இந்துமதம்; ஆளும் ‘பாஜக’ ஆட்சியாளர்கள் தம் உயிரினும் மேலாக நேசிக்கும் மதம்.

இந்த மதம் பாதுகாக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை மனுவைச் சுமந்து உச்ச நீதிமன்றம்வரை ஒருவர் சென்றிருப்பது வேடிக்கையானது.

இதையே இங்குள்ள சிறுபான்மை மதத்தவர்கள் செய்திருந்தால் அது இயல்பான ஒன்றாக இருந்திருக்கும்.

சிறுபான்மையோ பெரும்பான்மையோ, இந்து மதமோ, இஸ்லாமோ, கிறித்தவமோ எந்தவொரு மதமாயினும் அது பாதுகாக்கப்படுதல் வேண்டும் என்பது விரும்பத்தக்கதல்ல.

மதங்கள் உருவான/வளர்ச்சியடைந்த காலக்கட்டங்களில் எப்படியோ, இந்த இருபதாம் நூற்றாண்டில் இவற்றால் மனித இனத்துக்கு விளையும் நன்மைகளைவிடவும் தீமைகளே அதிகம்.

எனவே, மதங்கள் அனைத்தும் அழிக்கப்படுவதற்கான வழிவகைகளை ஆராய்வது குறித்து உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிடுவது வரவேற்கத்தக்கதாகும்.

அவ்வாறான உத்தரவைப் பெறுவதற்காக ஆயிரக்கணக்கில்/பல்லாயிரக்கணக்கில் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

அதற்கான மனப்பக்குவத்தை நம் மக்கள் விரைவில் பெறுதல் வேண்டும் என்பது நம் விருப்பம்!

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அளித்தத் தீர்ப்பு கீழே:

உலகின் 'நம்பர் 1' கிறுக்கன் விளாடிமின் புடின்[ரஷ்ய அதிபர்]!!!

துக்கிளியூண்டு ‘உக்ரைன்’ நாட்டின் மீது ‘ரஷ்யா’ நடத்திய... நடத்திக்கொண்டிருக்கும் தாக்குதலின்[20 மாதம்] விளைவு.....

310,650 போர் வீரர்களின் அரிய உயிர்களை அது இழந்துள்ளது[அண்மைச் செய்தி].

உக்ரைன் மீது போர் தொடுத்ததற்கான காரணம் நியாயமானதாகவே இருந்தாலும், இன்னும் பல மாதங்கள் என்ன, ஆண்டுக்கணக்கில் அதனுடன் போர் நடத்தினால் வெற்றி 100% நிச்சயம் என்றாலும்.....

போரால் நேர்ந்த பொருள் இழப்பை, உக்ரைனிடமிருந்து பெறும் தண்டத்தொகையால்[தோற்ற நாடு வென்ற நாட்டுக்கு ‘நஷ்ட ஈடு’ வழங்குவது வழக்கத்தில் உள்ள ஒன்று] ஈடு செய்திட முடியும் என்றாலும், பறிபோன 310,650 வீரர்களின் உயிர்களை மீட்டெடுக்க இயலுமா?

அது சாத்தியமே இல்லை.

போர் என்றால் உயிரிழப்புகள் நேர்வது இயல்புதான் என்றாலும் அதற்கு ஒரு வரன்முறையே இல்லையா?

பிறிதொரு நாடு ரஷ்யாவின் நிலப்பரப்பை ஆக்கிரமிக்கவோ, வேறு காரணங்களுக்காகவோ தாக்குதல் நிகழ்த்தியிருப்பின்[அல்லது, ரஷ்யாவின் மீது போர் திணிக்கப்பட்டிருப்பின்], அந்த எதிரி நாட்டுனான போரில் இத்தனைப் பெரும் எண்ணிக்கையிலான உயிர்களை இழக்க நேரிட்டிருந்தால் அது, நாட்டின் தன்மானம் காப்பதற்காக என்று நியாயம் கற்பிக்கலாம்.

ஆனால், ரஷ்யா 310,650 உயிர்களை இழந்தது புடினின் பிடிவாதத்தாலும், வறட்டுக் கௌரத்தாலும், முட்டாள்தனத்தாலும்தான்.

இவரின் தலைமையை எதிர்த்து ரஷ்யர்கள் கிளர்ந்தெழாமல் இருப்பது  புரியாத புதிராகவும், ஒட்டுமொத்த உலகையும் வியப்பில் ஆழ்த்துவதாகவும் உள்ளது!

                                       *   *   *   *   *

https://www.dagens.com/ தளத்தில் வெளியான அறியத்தக்கக் கூடுதல் செய்திகள்:

//‘உக்ரைன் போரில் ரஷ்யா தனது கொடிய நாட்களில் ஒன்றை அனுபவிக்கிறது’ -கியேவ் அறிக்கைகள்.

நியூஸ்வீக்கின்படி, உக்ரைன் மீதான முழு அளவிலான படையெடுப்பின் தொடக்கத்திலிருந்தே ரஷ்யப் படைகள் பெரும் இழப்புகளைச் சந்திக்கலாயின.

உக்ரேனின் கிழக்கு டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் தொழில்துறை மையமாகவும் உக்ரேனிய எதிர்ப்பின் அடையாளமாகவும் விளங்கும் அவ்திவ்காவைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, அக்டோபர் தொடக்கத்தில் இருந்து விளாடிமிர் புட்டினின் படைகளுக்கு உயிரிழப்புகளும் மற்றும் உபகரண இழப்புகளும் அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ரஷ்யா முந்தைய நாளில் மட்டும் 1,130 வீரர்களை இழந்துள்ளது; 20 மாத மோதலில் அது 310,650 ஆக உயர்ந்துள்ளது//

முக்கியக் குறிப்பு: ஒரு வல்லரசின் அதிபரான புதினை விமர்சிப்பதற்கான தகுதி உனக்கு[‘பசிபரமசிவம்] உள்ளதா என்று எவரும் கேள்வி எழுப்ப வேண்டாம். 

ஒரு முட்டாள் இன்னொரு முட்டாளை விமர்சிக்கத் தகுதி எதுவும் தேவையில்லை!

ஹி...ஹி...ஹி!!!

https://www.dagens.com/news/bad-news-for-putin-ukraine-reports-record-high-russian-casualties-in-single-day-of-war