எனது படம்
கடவுள் குறித்த ஆய்வுரைகளோ, மூடநம்பிக்கைச் சாடல்களோ, என் பதிவுகளின் உள்ளடக்கங்களின் தரம் எனக்கு வாய்த்துள்ள அறிவுக்கும் மனப் பக்குவத்துக்கும் ஏற்பவே அமையும். அவற்றை ஏற்பதும் மறுத்துப் புறக்கணிப்பதும், ஆறறிவும் ஆழ்ந்து சிந்திக்கும் திறனும் வாய்க்கப்பெற்ற உங்களின் விருப்பம் சார்ந்தது.

செவ்வாய், 16 ஏப்ரல், 2019

இதைச் சொன்னது நான்தானா?!

'மனிதர்கள், விலங்குகள், பறவைகள், நீர்வாழ் உயிரினங்கள் என அனைத்து உயிரினங்களுமே சில நுண்ணுயிரிகளிலிருந்துதான் தோன்றின' என்று சொல்லிச் சென்றார் டார்வின். இது பலரும் அறிந்ததே.
'அல்ல...அல்ல. ஏற்கனவே இருந்துகொண்டிருக்கும் உயிரினங்களிலிருந்து இம்மாதிரியான உயிரினங்கள் தோன்றின என்று சொல்வது கடவுளை அவமதிப்பதாகும். அவர்தான் தன்னுடைய சாயலில் மனிதனையும்[இதை வைத்துத்தான் மனிதர்களில் சிலர் தங்களைத் தாங்களே கடவுளின் அவதாரம் என்றும் நடமாடும் தெய்வம் என்றும் பீற்றிக்கொண்டு அலைந்தார்கள்; அலைகிறார்கள்] பிற உயிர்களையும் படைத்தார்' என்று அலறினார்கள் சில மதவாதிகள். இன்றளவும் உளறிக்கொண்டிருக்கிறார்கள்.

'அனைத்து உயிரினங்களுமே தொடர்ந்து பரிணாம வளர்ச்சி அடைந்துவருகின்றன. எனவே, இனியும் புதிய புதிய உயிர்கள் தோன்றுவது சாத்தியம்தான்' என்றார் அறிஞர் டார்வின். அவர் இன்னொரு அரிய கருத்தையும் முன்வைத்துச் சென்றிருக்கிறார். அது.....

'காலப்போக்கில், இன்றைய மனிதனைக் காட்டிலும் அதீத சக்தி வாய்ந்த மூளையுள்ள மனிதர்கள் தோன்றுவார்கள். இது 100% உறுதி'

'இதைச் சொன்னவர் டார்வின்தானா?' எனும் சந்தேகம் உங்களுக்கு எழுமாயின்,  சொன்னவர் 'பசி'பரமசிவம் என்று சொல்லுங்களேன்!

ஹி...ஹி...ஹி!
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------