எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

திங்கள், 26 ஆகஸ்ட், 2024

அகிலமெங்கும் அனுமன் குரங்கின் புகழ் பரப்பும் அமெரிக்கச் சங்கிகள்!!!

ந்தறிவு உயிரினமான குரங்கை மனிதன் ஆக்கியவன் வால்மீகி[ராமாயணம் என்னும் 100% கற்பனைக் கதையை எழுதியவன்].

அந்தக் குரங்கு மனிதனைக் கடவுளாக்கி நாடெங்கும் சிலைகள் நிறுவி, தாங்கள் நிரந்தர முட்டாள்கள் என்பதை உலகறியச் செய்தவர்கள் இங்குள்ள சங்கிகள் என்னும் களிமண் மண்டையர்கள்.

பெரும்பாலோர் கிறித்தவர்களாயினும் அறிவுஜீவிகளும் வாழ்கிற அமெரிக்காவுக்குப் பிழைக்கப்போன இவர்கள், தாங்கள் இப்போதும் எப்போதும் காட்டுமிராண்டிப் பரம்பரைதான் என்பதை, அங்கே அனுமான் குரங்குக்கு 90 அடி உயரச் சிலை நிறுவியதன் மூலம் நிரூபித்திருக்கிறார்கள்.

இது போதாது, உலகிலுள்ள அத்தனை நாடுகளிலும் ஆஞ்சநேயக் குரங்குக்குச் சிலைகள் எழுப்பித் தாங்கள் பிறவி மூடர்கள் என்பதை இவர்கள் உலகறியச் செய்யலாம்.

இவர்களுக்குக் கடவுள் அவதாரமான மோடி தன் அமோக ஆதரவை நல்குவார் என்று எதிர்பார்க்கலாம்.

ஆதாரம்:

#அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஹூஸ்டனில் சுகர்லாண்ட் என்ற பகுதியில் ஸ்ரீ அஷ்டலக்ஷ்மி கோயில் உள்ளது. இங்கு 90 அடி உயரத்தில் பிரம்மாண்ட அனுமன் சிலை கட்டி முடிக்கப்பட்டு கடந்த 18-ஆம் தேதி ஸ்ரீ சின்னஜியர் சுவாமிகள் முன்னிலையில் திறந்துவைக்கப்பட்டது. இச்சிலைக்கு ஒற்றுமையின் சிலை என பெயரிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே அமெரிக்காவில் உள்ள அனுமன் சிலைகளில் மூன்றாவது மிகப்பெரிய அனுமன் சிலை இது என கூறப்படுகிறது#

https://www.dinamalar.com/news/world-tamil-news/90-feet-tall-hanuman-statue-unveiled-in-america--/3709291


இளம் பெண்களும் ‘அந்த’ இரண்டு நிமிடச் சுகமும்!!!

ல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதிகளில் ஒருவர், தாம் தீர்ப்பு வழங்கிய ஒரு வன்புணர்வு வழக்கில்[16 வயதுப் பெண்ணின் சம்மதத்துடன் ஆண் உடலுறவு கொண்டது], “இளம் பெண்கள் தங்களின் பாலியல் இச்சைகளைக் கட்டுப்படுத்த வேண்டும். இரண்டு நிமிடச் சுகத்துக்காகத் தங்களை இழந்து அவமானப்படுதல் கூடாது” என்று அறிவுரை வழங்கியிருக்கிறார்.

அறிவுரையில், ‘இரண்டு நிமிட உடலுறவுச் சுகம்’ நம் கவனத்தை ஈர்த்தது.

‘வெறும்’ இரண்டு நிமிடங்களில் உடலுறவு அனுபவம் முடிந்துவிடுவதைத்தான் ‘இரண்டு நிமிடச் சுகம்’ என்று குறிப்பிட்டிருக்கிறார் நீதியரசர் அவர்கள்.

ஆணும் பெண்ணும் இணைந்து[குறிப்பாகப் பதின்பருவத்தில், சாதனங்கள் ஏதும் பயன்படுத்தாமல்] அந்தரங்கச் சுகத்தைப் பெறும் கால அளவை மிகச் சரியாகவே கணித்துச் சொல்லியிருக்கிறார் எனலாம்[அரை அல்லது கால் அல்லது அரைக்கால் நிமிடத்திலேயே முடிந்துவிடுவதும் உண்டு].

நீதிபதி அவர்கள், ‘பெண்கள்’இன் முன்னால் ‘இளம்’ சேர்த்திருப்பது இங்கு கவனத்தில் கொள்ளத்தக்கது.

இளம் பருவத்தைக் கடந்தவர்களும் ‘அது’ விசயத்தில் அனுபவம் பெற்றவர்களுமான பெண்களால், அவர் குறிப்பிடுவது போல இச்சைகளைக் கட்டுப்படுத்துவது சாத்தியமாகலாம். ஆனால்.....

‘அந்த’ச் சுகானுபவத்தை அனுபவித்திராத இளசுகளால்[பெற்றோர் மிக அதிகக் கவனம் செலுத்த வேண்டிய பருவம்] அதைக் கட்டுப்படுத்துவது எளிதான செயல் அல்ல.

‘அல்வா[ஏதோ ஒரு இனிப்பு]’வின் ருசியை ஏற்கனவே சில முறையோ பல முறையோ சுவைத்தறிந்த ஒருத்தியால் அதன் மீதான ஆசையைக் கட்டுப்படுத்த முடியும்[விதிவிலக்கானவர்களும் உளர்]; அந்த அனுபவமே[உடலுறவிலும்தான்] இல்லாத சிறுசுகளிடம், ஆசை தீர அதை உண்ண வேண்டும் என்பதைவிடவும், ஒரே ஒரு முறையேனும் ருசித்துப்பார்க்க வேண்டும்[அ.சுகத்தை அனுபவிக்க வேண்டும்] என்னும் ஆர்வமே மேலோங்கியிருக்கும்.[இதனால் விளையும் தீங்குகளைச் சுட்டிக்காட்டி இவர்களின் மனதைப் பக்குவப்படுத்தும் பெரும் பொறுப்பு பெற்றோருக்கு உள்ளது].

ஆக, நீதியரசர் அவர்களிடம் நாம் சொல்லிக்கொள்ள விரும்புவது.....

“ஐயன்மீர், இளம் பெண்களுக்கு அறிவுரை வழங்கிய தாங்கள், அவர்களின் பெற்றோர்களுக்கும் உரிய அறிவுரைகளை வழங்கியிருந்தால் அது பெரிதும் விரும்பத்தக்கதாக அமைந்திருக்கும் என்பதே.
[மேற்கண்ட வயதுப் பெண்ணை அவள் சம்மதத்துடன் ஆண் திருமணம் செய்தாலும் அதைப் பொருட்படுத்தத் தேவையில்லையா?]