புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு கிராமம். பெயர்? வேண்டாம். 'முட்டாள்கள்'னு எழுதியிருக்கிறேன். படை திரட்டிக்கொண்டு உதைக்க வருவார்கள்.
'அந்த'க் கிராமத்தில் ஒரு 12 வயதுப் பெண். அவளுக்குப் பக்தி அதிகம். அடிக்கடி, ''எனக்குப் பனிரண்டு வயசு ஆனதும் கற்சிலையா மாறிடுவேன்'' என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.
மனத்தளவில் அவள் பாதிக்கப்பட்டிருப்பதைப் புரிந்துகொண்டு, ஒரு மனநல மருத்துவரிடம் அவளை அழைத்துச் சென்றிருக்க வேண்டும். செய்யவில்லை. மாறாக, ஒரு ஜோதிடரைச் சந்தித்துப் பெண்ணைப் பற்றிச் சொல்லியிருக்கிறார்கள். அந்த நபர், பெண்ணின் ஜாதகத்தை ஆராய்ந்து, ''பொண்ணு சொல்லுறது நிசந்தான். இவளோட 12ஆவது பிறந்த நாளில் கோயிலுக்கு அழைச்சிட்டுப் போங்க. அங்கே இவ கற்சிலையா மாறிடுவா'' என்று சொல்லியிருக்கிறார்.
பெண்ணுக்கு 12 ஆவது பிறந்த நாளும் வந்தது. ''நான் இன்னிக்கிச் சிலையா மாறிடுவேன்...மாறிடுவேன்'' என்று அவள் சொன்னாள்; திரும்பத் திரும்பச் சொன்னாள்; சொல்லிக்கொண்டிருந்தாள்.
இந்தச் செய்தி, காட்டுத்தீயாக எட்டுப்பட்டி கிராமத்துக்கும் பரவியது.
சுற்றுவட்டார மக்கள் வேலைவெட்டிகளைக் கிடப்பில் போட்டுவிட்டு இந்த அதிசய நிகழ்வைக் காண வந்தார்கள்.
பெற்றோரும், இரவு வீட்டில் சிறப்புப் பூஜை நடத்தி, காலையில் பெண்ணுக்குப் பட்டுச்சேலை கட்டி, பூவினால் அலங்காரம் செய்து அம்மன் கோயில் வளாகத்திற்குக் காலையில் அழைத்துச் சென்றனர்.
சாமி முன்னால் கைகூப்பித் தொழுது நின்றாள் சிறுமி; கூப்பின கைகளோடு நீண்ட நேரம் நின்றுகொண்டிருந்தாளே தவிர சிலையாக மாறவேயில்லை.
கூடியிருந்த ஏராளமான கிராம மக்கள் பெருத்த ஏமாற்றத்தோடு திரும்பிப் போனார்கள். இது இன்றைய தினகரன்[03.07.2018] நாளிதழ்ச் செய்தி.
நம் நாட்டில், பட்டிதொட்டியெல்லாம் பள்ளிக்கூடங்கள் இருக்கின்றன..
இந்தக் கிராம மக்கள், இவர்களுக்கான பள்ளிகளில் பெற்றது வெறும் ஏட்டறிவுதானா? குறைந்தபட்சப் பகுத்தறிவுகூட இவர்களுக்கு வாய்க்காமல் போனது ஏன்?[இம்மாதிரிக் கிராமங்களை உள்ளடக்கியதுதான் புண்ணிய பாரதமா?]
பள்ளிப் பாடங்களில், 'பகுத்தறிவு' குறித்த படைப்புகள் அறவே இடம்பெறாமலிருப்பது ஒரு காரணம்.
மேலே குறிப்பிடப்பட்டிருப்பவர் போன்ற ஜோதிடர்கள் முக்கிய காரணம்.
இந்தக் கிராம மக்கள், இவர்களுக்கான பள்ளிகளில் பெற்றது வெறும் ஏட்டறிவுதானா? குறைந்தபட்சப் பகுத்தறிவுகூட இவர்களுக்கு வாய்க்காமல் போனது ஏன்?[இம்மாதிரிக் கிராமங்களை உள்ளடக்கியதுதான் புண்ணிய பாரதமா?]
பள்ளிப் பாடங்களில், 'பகுத்தறிவு' குறித்த படைப்புகள் அறவே இடம்பெறாமலிருப்பது ஒரு காரணம்.
மேலே குறிப்பிடப்பட்டிருப்பவர் போன்ற ஜோதிடர்கள் முக்கிய காரணம்.
பரப்புரைகள் நிகழ்த்துவதற்கென்று பகுத்தறிவாளர்கள் கணிசமான அளவில்கூட இல்லாத நிலையில், ஆன்மிகம் பேசுவதையே தொழிலாகக் கொண்ட பல சொற்பொழிவாளர்களும், விற்பனையை மட்டுமே நோக்கமாகக் கொண்ட பலதரப்பட்ட ஊடகங்களும் மூடநம்பிக்கைகளை வளர்க்கும் பக்திக் கதைகளை மக்களிடையே பரப்பிக்கொண்டிருப்பது மிக முக்கிய காரணம் ஆகும்.
[இப்பதிவு, குறிப்பிட்டதொரு கிராம மக்களின் அறியாமையை மட்டுமே மனதில் கொண்டு எழுதப்பட்டது]
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
[இப்பதிவு, குறிப்பிட்டதொரு கிராம மக்களின் அறியாமையை மட்டுமே மனதில் கொண்டு எழுதப்பட்டது]
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

