எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

செவ்வாய், 23 செப்டம்பர், 2025

நம் பிரதமருக்குத் தேவை தினசரித் ‘திருஷ்டி’ கழித்தல்!!!

இது[பாரத்> இந்தியா] புண்ணியப் பூமி. மக்கள் கொடுத்துவைத்தவர்கள்.

இல்லையெனில், ஒப்பனையில் சாதனை நிகழ்த்தியவரும், கம்பீரமும், கவர்ச்சியும், கொள்ளை அழகும் உள்ள ஒருவரைப் பிரதமராகப் பெறும் வாய்ப்பு கிடைத்திருக்காது.

உலக அளவில் பிரதமர், அல்லது அதிபர்களுக்கான ஆணழன் போட்டி நடத்தினால்  அதில் வென்று கிரீடம் சூடுபவர் நம் பிரதமரே.

அவரின் அமைச்சர்களுக்கும் உயர் அதிகாரிகளுக்கு நம் வேண்டுகோள்:

நம் பிரதமருக்குத் ‘திருஷ்டி’ கழிக்கும் சடங்கை நாள் தவறாமல் நிறைவேற்றுவீர்!

மோடி நீடூழி வாழ்க!

🔴கிண்டியில் இருப்பது ஆளுநர் மாளிகையா ஆண்டி மடமா!?!?!?


//கொலுவில் வைக்கப்படும் பொம்மைகள் பெரும்பாலும் களிமண்ணால் செய்யப்பட்டு, அடர்ந்த நிறங்களால் வர்ணம் பூசப்பட்டவையாக இருக்கும்//

கொலு வைப்பதன் நோக்கம் பொம்மை வடிவில் அம்பாளை வழிபடுவது[மனித உருவில் நடமாடும் அனைத்துப் பெண்களும் அம்பாள்களே. அவர்களையே வழிபடலாமே?] என்கிறார்கள். இதன் உண்மை நோக்கம், கொலு வைப்பவர்கள் தங்களின் மண்டையில் களிமன்தான் உள்ளது என்பதை அடையாளப்படுத்துவதே.

இதைச் செய்வது[தனிப்பட்ட முறையில்] அவரவர் விருப்பம் சார்ந்தது.

பல ஏக்கர் நிலப்பரப்பில், பல கோடிகள் செலவு செய்து உருவாக்கப்பட்ட  மாளிகையில், ராஜபோகியாக வாழ்ந்துகொண்டிருக்கும் ஆளுநன் ஆர்.என்.ரவி[அரசுப் பணியாளர்] கொலு விழா கொண்டாடுகிறார் என்பது செய்தி[காணொலி].

தமிழ்நாட்டில் நல்லாட்சி நடைபெறுவதைச் சீர்குலைப்பதற்கென்றே அனுப்பப்பட்ட இந்த நபர், அவ்வப்போது தமிழர்களின் சிந்திக்கும் அறிவைச் சிதைத்திடும் அடாவடித்தனங்களையும் செய்துகொண்டிருக்கிறார்.

அவற்றில் இதுவும் ஒன்று.

மூடநம்பிக்கைகளை வளர்த்து அரியணை ஏறும் சங்கிகளின் ஆட்சி இந்த மண்ணில் நீடிக்கும்வரை, இம்மாதிரியான ஆளுநன்களுக்குக் கொண்டாட்டம்தான்; தமிழர்களுக்கோ திண்டாட்டம்!