எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

வியாழன், 15 ஜூன், 2023

மாம்பழம் உண்ணும் நடிகையும் மதி கெட்ட ஊடகமும்!

கீர்த்தி சுரேஷ் ஒரு நடிகை என்பது சிறுசுகள் முதல் பெருசுகள்வரை எல்லோருக்கும் தெரியும்.

//அவர் இன்று மாம்பழம் சாப்பிட்டாராம்.

“சீசன் முடிவதற்குள் பண்டூரி மாம்பழங்களைச் சாப்பிடுங்கள்” என்று சொன்னதோடு ஒரு குட்டிக் காணொலியும்[வீடியோ] வெளியிட்டார். அதற்கு ஒன்பது லட்சம் லைக்குகளை அள்ளிக் கொடுத்திருக்கிறார்கள் ரசிகர்கள்”// என்பது ‘தினமலர்’ச் செய்தி.

நான் மட்டுமே கூமுட்டைன்னு நினைச்சிட்டிருந்தேன்.

இதிலிருந்து என்னைவிடவும் மோசமான படு கூமுட்டைகள் லட்சக் கணக்கில் இருக்காங்கன்னு தெரியுது.

இதையும் ஒரு செய்தியாக வெளியிட்ட ‘தினமலர்’க்காரனும் ஒரு கூமுட்டைதான்.

அந்த அம்மா சூப்பிட்டுத் தூக்கி எறிந்த கொட்டையை நாளை ஏலத்தில் விடப்போகுதாம்.

அதை ஏலத்தில் எடுக்க பல லட்சம் ரசிகக் கூமுட்டைகள் வரிசை[கியூ]கட்டி நிற்குறாங்களாம்.

அம்மணி சப்பிப்போட்ட கொட்டை எத்தனைக் கோடிக்கு ஏலம் போனதுங்கிற விவரம் நாளை தினமலரில் வெளியாகும்.

தவறாம படிங்க[முடி திருத்தும் கடைக்குப் போனா ஓசியில் படிச்சுடலாம். தினமலரைக் காசு கொடுத்து வாங்க வேண்டாம்].

https://m.dinamalar.com/cinema_detail.php?id=114040


                                             *   *   *   *   *

நன்றி: கூமுட்டை https://kuuumutttai.blogspot.com

‘முத்தப் பரிசு’..... கிளு கிளு காதல் கதை!


ர் இனிய மாலைப் பொழுதில், அன்பரசு அமுதாவுக்கு ஒரு பேனா கொடுத்தான். “இது நான் உனக்குத் தரும் பிறந்தநாள் பரிசு. பதிலுக்கு ஒன்னு கொடு” என்று இதழ் குவித்துக் கன்னம் காட்டினான்.

“அன்பளிப்புன்னு கொடுத்துட்டு பதிலுக்கு ஒன்னு கேட்குறே. நீயென்ன காதலனா, வியாபாரியா?” என்றாள் அமுதா.

“காதல் வியாபாரி” என்று கண்ணடித்தான் அவன்.

“போடா, வெளியே போடா” -போலியாய் விரட்டினாள் அவள்.

“கல்யாணத்துக்கு அப்புறம் கொடுக்கப்போறதை....”

குறுக்கிட்டாள் அவள். “அப்போ பார்த்துக்கலாம்.” 

“நான் என்ன எல்லார்த்தையும் இப்பவே பார்க்கணும்னா சொன்னேன்?” குறுகுறுத்த பார்வையுடன், ஒவ்வொரு வார்த்தையாய் நிறுத்தி நிறுத்தி அவன் சொல்ல அவளுக்கு வெட்கம் பிடுங்கித் தின்றது.

கட்டிலில் கிடந்த தலையணையை அவன் மேல் வீசினாள். ‘முத்தமிடு' என்று அதில் எம்ராய்டரி செய்யப்பட்டிருந்தது.

“இதோ தர்றேன்” என்று அவளை நெருங்கினான் அவன்.

அவன் பிடியில் சிக்காமல் கட்டிலைச் சுற்றிச் சுற்றி ஓடினாள் அவள்.

துரத்தினான் அவன். மூச்சு வாங்கியது.

“கண்ணா. தம்மெல்லாம் அடிக்காதேன்னு சொன்னேனே, கேட்டியாடா? ஓட முடியல பாரு. உன்னால ஒரு பொம்பளையைப் பிடிக்க முடியல. என்னடா ஆம்பிளை நீ?” -வளைந்து நெளிந்து குலுங்கிக் குலுங்கி ஒய்யார நடனம் ஆடினாள் அவள்.

அவனின் ஆண்மை விழித்துக்கொண்டது. 

“விடமாட்டேன்டி” -தம் பிடித்து அவளை நோக்கி முன்னேறினான்.

அவனுக்கு பழிப்புக் காட்டிவிட்டுப்  சுழன்று ஓடினாள் அவள்.

திடீரெனப் பாய்ந்து சுவரோடு சேர்த்து அவளை அமுக்கிவிடத் திட்டமிட்டான் அவன்.

”நீ ஜெயிச்சுட்டே. நில்லுடி” என்றான்.

அவளும் அவனுக்கு மார்பு காட்டி, சுவரோடு முதுகு சேர்த்து நின்றாள்.

ஒரே பாய்ச்சலில் சுவரோடு சேர்த்து அவளை அமுக்கினான் அவன். 

தன் நிராதரவான நிலையைப் புரிந்துகொண்ட அவள், “கன்னத்தில் மட்டும் ஒன்னு கொடு போதும்” என்றாள்.

“ஒன்னோடு நிறுத்த முடியாது. முதலிரவு அன்னிக்கி மொத்தமா தந்துடுறேன்” என்று பின்வாங்கி நகர்ந்தான் அன்பரசு.

அவனை ஏக்கத்துடன் பார்த்தாள் அமுதா.

                             *   *   *   *   *
சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு ‘குமுதம்’ இதழில் வெளியான கதை, ஆங்காங்கே சில மாற்றங்களுடன்.