எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

புதன், 27 ஜூன், 2018

[வாலிபப்] பருவம் படுத்தும் பாடு!!! [சிற்றின்பக் கதை]

ள்ளப் பார்வையுடன் கமுக்கமாய் நடந்துகொண்டிருந்த தொப்பை ஆசாமி, ‘படிகிற’ பார்ட்டிதான் என்று பட்டது பட்டாபிக்கு. மதுபானக்கடை இருக்கையைக் காலி செய்துவிட்டு அவரைக் குறிவைத்து நடந்தான்.

ஒரே நிமிடம்தான்...அந்த ஆளை நெருங்கி, சமமாய் நடந்து, கிசுகிசுப்பாய்க் கேட்டான்: “சார், வர்றீங்களா?”

‘நீ நினைக்கிற மாதிரியான ஆளில்லை நான்’ என்பது போல, அவனைக் கண்டுகொள்ளாமல் நடந்தார் அவர்.

“எல்லாமே டீசண்டான பொண்ணுங்க சார். காலேஜ் குட்டிகளும் இருக்கு. ஆணுறைக்கு அவசியமே இல்ல. அத்தனை சுத்தம்...” நாக்கில் தேன் தடவிக்கொண்டு சொன்னான் பட்டாபி.

அவர், அவன் பக்கம் திரும்பாமலே கேட்டார்: “ரேட் எப்படிப்பா?”

“ஒரு மணி நேரத்துக்குப் பத்தாயிரம். ஒரு ராத்திரிக்கு அஞ்சு லட்சம், பத்து லட்சம் போற சரக்கெல்லாம் இருக்கு. பெரிய இடத்துப் பொண்ணுகளும், சினிமா ஸ்டார்களும், வி.ஐ.பி.களும் வந்து போற இடம் சார் அது. வர்றீங்களா?”  ஐந்துக்கும் பத்துக்கும் அலைகிற ஆள் நானல்ல; பெரிய இடத்துச் சகவாசம் உள்ளவன்  என்பதாகப் பந்தாக் காட்டினான் பட்டாபி.
“அதெல்லாம் நமக்குச் சரிப்படாதுப்பா.”

முகம் சுழித்தான் பட்டாபி.

“அதோ தெரியுதே, சினிமா தியேட்டரை ஒட்டி ஒரு லாட்ஜ். அதுல சிங்கிள் ரூம் போடுங்க. உங்க ரேஞ்சுக்கு ஐநூறு ஆயிரம் ரேட்ல லாட்ஜ்காரன் குட்டிகளை நிறுத்துவான். ஆனா, எந்த நேரத்திலும் போலீஸ் வரலாம்” என்று சொல்லிவிட்டுப் ‘பார்ட்டி’யிடமிருந்து பதிலை எதிர்பார்த்தான்.

அவர், தீவிர யோசனையில் இருந்தார்.

“என்ன சார் யோசனை?”

“நீ சொன்ன இடத்துக்கு மட்டும் போலீஸ் வராதா?”

“நான்தான் சொன்னேனே, வி.ஐ.பி.க்கள் வர்ற இடம்னு. அங்கே போலீஸ் வராது. அப்படியே வந்தாலும், பேருக்கு நாலஞ்சி தொழில்காரிகளைத் தள்ளிட்டுப் போவாங்க. விடியறதுக்குள்ள ஜாமீனில் விட்டுடுவாங்க. வாடிக்கையாளர்களைக் கண்டுக்கவே மாட்டாங்க. தைரியமா என்கூட வாங்க சார்.”

“அது வந்துப்பா.....”

அது தேறாத பார்ட்டி என்பது பட்டாபிக்குப் புரிந்தது. “உனக்கு இங்கே எதுவும் சரிப்பட்டு வராது. நேரே மங்கம்மா குப்பம் போயிடு. ஊர்வசி தியேட்டருக்குப் பொறத்தாண்ட..... போலீஸ் அங்கே தலைகாட்டுறதே இல்ல. அதிகபட்சமே நூறு ரூபாதான்.” சொல்லிவிட்டு, “சாவு கிராக்கி” என்று முணுமுணுத்தவாறு நடந்தான்.

அதற்கப்புறமும் கண்கொத்திப் பாம்பாய் நோட்டம் விட்டு, சளைக்காமல் வலை வீசியதில், லாரி அதிபர் ஒருவர் மாட்டினார். ஆனந்தவல்லியின் ‘தொழில்’ கூடத்திற்கு அவரை அழைத்துப் போனான்.

‘பலான’ தொழில் நடத்துபவள் ஆனந்தவல்லி. பெரிய புள்ளிகளின் தொடர்பும் உண்டு. பேருந்து நிலையம், ரயில் நிலையம், திரையரங்குகள், தங்கும் விடுதிகள் என்று வெளியூர் ஆட்கள் வந்து போகிற மையங்களில் ஆனந்தவல்லிக்குப் புரோக்கர்கள் உண்டு. அவர்களில் பட்டாபியும் ஒருவன்.

அவனுக்கு ஆறு வயதாகும்போது, அம்மாக்காரி செத்துப் போனாள். அப்பன்காரன் இன்னொரு திருமணம் செய்துகொண்டான்; ஏழு வயதில் அவனை ஒரு திரையரங்கில் எடுபிடியாய்ச் சேர்த்துவிட்டான்.

வயது கூடியபோது, நுழைவுச் சீட்டு கிழித்தான் பட்டாபி. பதினைந்து வயது தொடக்கத்திலேயே, குப்பை கூட்டும் லட்சுமியைத் தொடக் கூடாத இடத்தில் தொட்டுவிட, முதலாளி அவன் சீட்டைக் கிழித்துவிட்டார்.

ஒரு சினேகிதன் உதவியால் ஆனந்தவல்லியிடம் வந்து சேர்ந்தான். இப்போது அவனுக்குப் வயது பதினாறு முடிந்திருந்தது.

“பட்டாபி.”

ஆனந்தவல்லி அழைத்தாள்.

லாரி அதிபரை உள்ளே அனுப்பிவிட்டுக் காத்திருந்த பட்டாபி, அவளை நெருங்கினான்.
“இன்னிக்கி ஒரே ஒரு பார்ட்டிதான் மாட்டிச்சா?” என்று கேட்டுக்கொண்டே நூறு ரூபாய் நோட்டு ஒன்றை நீட்டினாள் ஆனந்தவல்லி.

பட்டாபிக்குப் பயங்கரப் ‘பசி’.

இரவு நேரச் சிற்றுண்டிக் கடைக்குப் போனான்; புரோட்டா, ஆம்லெட் சாப்பிட்டான்.

வயிறு நிறைந்துவிட்ட நிலையில் இன்னும் பசிப்பது போல உணர்ந்தான். அது வேறு பசி என்பது வெகு சீக்கிரத்தில் புரிந்தது. அதைத் தணிப்பதற்கான வழிமுறையும் அவனுக்குத் தெரிந்தே இருந்தது. மங்கம்மா குப்பத்து வாலைக் குமரிகள் அவன் மனக்கண் முன் வந்து வந்து போனார்கள்.

சட்டைப் பையைத் துழாவினான் பட்டாபி. ஆனந்தவல்லி கொடுத்த நூறு ரூபாய் மட்டுமே இருந்தது. கடைக்காரர் பழக்கப்பட்டவர் என்பதால், கடன் சொல்லிவிட்டுப் புறப்பட்டான்.

அவனைத் தடுத்து நிறுத்தி, “அது மாதிரி இடத்துக்கெல்லாம் போக வேண்டாம். அது புதைகுழி. விழுந்தால் எழ முடியாது” என்று சொல்லித் திருத்தவோ, புது வழி காட்டவோ யாருமில்லாத நிலையில் அவன் கால்கள் மங்கம்மா குப்பம் நோக்கி நடந்தன.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

குமுதம் வழங்கிய, அப்துல் ரகுமானின் 'கவிதை'க் கதை!

கதையின் முடிவை அனுமானிக்க முடிகிறது என்றாலும், கவிக்கோவின் இந்தச் சிறுகதையில், நிகழ்வுகளினூடே பின்னிப் பிணைந்து கிடக்கும் கவித்துவ வரிகள் படைப்பின் தரத்தை வெகுவாக உயர்த்தியிருக்கின்றன.

உங்களின் தேடலைத் தவிர்க்கும் வகையில், அவ்வகையான வரிகளுக்கு வண்ணம் சேர்த்திருக்கிறேன்.

எவ்வகையிலும் என் குறுக்கீடு இல்லை. நீட்சிக்கு அஞ்சி ஆங்காங்கே சிற்சில வரிகளை மட்டும் நீக்கி, குமுதத்தில்[04.07.2018] உள்ளவாறே பதிவு செய்திருக்கிறேன். குமுதத்திற்கு நன்றி.
கதை.....

புதிதாகக் கட்டப்பட்ட அந்தப் பல்பொருள் வணிக வளாகம், புதுப் பெண் போல் வண்ண விளக்குகளால் ஊதாரித்தனமாக அலங்கரிக்கப்பட்டிருந்தது.

இன்னும் சிறிது நேரத்தில் அந்த அழகான வளாகக் கட்டிடம் வெடித்துச் சிதறப்போகிறது.

அந்தக் கட்டிடத்திற்கு வெடிகுண்டு வைத்தவன் எதிர்ப்புறம் பாதுகாப்பான தூரத்தில் ஒரு தேனீர்க் கடையில் அமர்ந்தவாறு அந்தக் கட்டிடத்தைக் கண்காணித்துக் கொண்டிருந்தான்.

கண்காணித்த இவன் பரபரப்பாகக் காணப்பட்டான். இவனின் கண்கள் தூண்டிலில் சிக்கிய மீனைப் போல் சஞ்சலத்துடன் அசைந்து துடித்துக்கொண்டிருந்தன. இவனுக்கெதிரே தேனீர் வைக்கப்பட்டிருந்ததை இவன் மறந்திருந்தான்.

பார்வை தடுமாறிக் கோப்பையில் விழுந்தபோது இவன் கோப்பையைக் கையில் எடுத்தான்.

விரல்களின் நடுக்கத்தில் கோப்பை தேனீரோடு ஆடி ஒலியெழுப்பியது.

அந்த வணிக வளாகத்துக்குள் மனிதர்கள் நுழைவதும் வெளியேறுவதுமாக இருந்தார்கள்.

அன்று ஞாயிற்றுக் கிழமை. மாலை நேரம். அதனால் கூட்டம் அதிகமாக இருந்தது. அதனால்தான் இந்த நாள் தேர்ந்தெடுக்கப்பட்டது, சேதம் அதிகமாக இருக்க வேண்டும் என்பதற்காக.

அங்கே மரணம் இலவசமாக வழங்கப்பட இருக்கிறது என்பது வாங்க வந்தவர்களுக்கோ விற்பவர்களுக்கோ தெரியாது.

தூக்கத்திலிருந்து திடீரென்று விழித்தது போல் காற்று வேகமாக வீசிக்கொண்டிருந்தது.

இவனுக்கிருந்த ஒரே அடையாளம் இவனின் பெயர் மட்டும்தான். அதுவும் ஒரு காலி பாட்டிலின் மேல் ஒட்டிய லேபுளைப் போல.

இவன் இவனுடைய பெற்றோருக்குப் பதினோராவது பிள்ளை. பிள்ளைகளைப் பெறுவதைத் தவிர வேறு எந்தப் பொறுப்பும் இவன் தந்தைக்கு இருந்ததாக இவன் அறிந்திருக்கவில்லை.

இவனின் வீட்டில் சாப்பிட எதுவும் இருக்காது. ஆனாலும், வறுமை இவனைத் தினம் தினம் சாப்பிட்டுக் கொண்டிருந்தது.

வீட்டைவிட்டு வெளியேறி, பசிக்காகத் திருடத் தொடங்கினான்.

ஒருமுறை ஒரு ரொட்டியைத் திருடிக்கொண்டு ஓடினான். கடைக்காரனும் இவன் பின்னால் ஓடி வந்தவர்களும் இவனைப் பிடித்துச் செம்மையாக உதைத்தார்கள். 

மனிதர்களை வெறுத்தான்; திருடினான்; குடித்தான்; சூதாடினான்; விபச்சார விடுதிகளுக்குச் சென்றான். மொத்தத்தில் திருத்த முடியாத ஒரு அச்சுப்பிழை ஆனான்.

ஒரு விபச்சார விடுதிக்குச் சென்றபோதுதான் அவளைச்[விபச்சாரி] சந்தித்தான். மனம் விட்டுப் பேசி, இருவரும் திருமணம் செய்துகொண்டார்கள். இவர்களை இணைத்தது காதல் அல்ல; தேவை.

இவர்களுக்கு ஒரு பெண் பிறந்தாள் நான்கு வயதுவரை நன்றாகத்தான் இருந்தாள். பின்னர், அடிக்கடி சோர்ந்து படுக்கத் தொடங்கினாள். 

மருத்துவரிடம் அழைத்துச் சென்றபோதுதான் அவளின் இதயத்தில் வால்வு பழுதாகியிருப்பது தெரிந்தது. சரி செய்ய மூன்று லட்சம் ரூபாய் செலவாகும் என்றார் மருத்துவர்.

மூன்று லட்சத்துக்கு இவன் எங்கே போவான்? அப்போதுதான் இவன் யாரென்றே அறியாத ஓர் அந்நியன் இவனைச் சந்தித்தான்; மூன்று லட்சம் தருவதாகச் சொன்னான்.

''நீ யார்? எனக்கு எதற்கு நீ மூன்று லட்சம் தரவேண்டும்?'' என்று இவன் கேட்டான்.

''முட்டாள். உனக்குப் பணம் வேண்டுமா? உன் கேள்விகளுக்குப் பதில் வேண்டுமா?'' என்றான் அவன். 

தான் செய்ய வேண்டியது என்ன என்று இவன் கேட்க, அவன் சொல்ல, இவன் முதலில் மறுத்துவிட்டான். மகள் மீதான பாசத்தால் பின்னர் ஒத்துக்கொண்டான்.

தெரு விளக்குகள் உற்சாகமின்றி எரிந்துகொண்டிருந்தன. எத்தனை விளக்குகள் எரிந்தென்ன, இருட்டை அழிக்க முடிவதில்லையே. இறுதியில் அதுதானே வெல்கிறது.

இவன் அடிக்கடி கடிகாரம் பார்த்தான். இன்னும் பத்து நிமிடங்கள்தான் இருந்தன.

பள்ளிச் சிறுமிகள் சிலர் வளாகத்தில் நுழைந்துகொண்டிருந்தார்கள். 'என் மகளைக் காப்பாற்ற இவர்களை நான் கொல்ல வேண்டுமா? என் மகளைப் பார்க்கும்போதெல்லாம் சிறுமிகளின் நினைவு என்னைச் சித்ரவதை செய்யுமே' என்று எண்ணி மனம் நொந்தான்.

செத்துப்போயிருந்த இவனின் மனசாட்சி உயிர் பிழைத்து எழுந்தது.

இவனை வெடி வைக்கத் தூண்டியவனுடன் தொடர்பு கொண்டு, ''வைத்த வெடிகுண்டைச் செயலிழக்கச் செய்ய இருக்கிறேன்'' என்றான்.

''உன்னை நாங்கள் கண்காணித்துக் கொண்டுதான் இருக்கிறோம். நீ அப்படிச் செய்தால் அடுத்த வினாடியே கூண்டோடு உன் குடும்பத்தை அழிப்போம்'' என்றான் அவன்.

இவனின் இதயத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டதுபோல் அது அதி வேகமாகத் துடித்தது.

செய்வதறியாது எதிரே இருந்த வணிக வளாகத்தையே பார்த்துக்கொண்டிருந்தான்.

புதுமணத் தம்பதியர் இருவர் உள்ளே நுழைந்துகொண்டிருந்தார்கள். 'பாவம், முன்னுரை எழுதும்போதே முடிவுரையா?' என்று வருத்தப்பட்டான் இவன்.

உள்ளேயிருந்து ஒரு கர்ப்பிணி தன் கணவனுடன் வெளியே வந்துகொண்டிருந்தாள். வாழ்க்கையும் மரணமும் காலமெல்லாம் கண்ணாமூச்சி ஆடுவதாகத் தோன்றியது இவனுக்கு.

தொடர்ந்து வணிக வளாகத்தையே பார்த்துக்கொண்டிருந்த இவன் திடுக்கிட்டான். இவனுடைய மகளும் மனைவியும் உள்ளே நுழைந்துகொண்டிருந்தார்கள்.

அவர்களின் பெயர்களைக் கூவியபடியே இவன் எழுந்து ஓடினான். இவன் அவர்களை நெருங்குவதற்குள் அது நடந்து முடிந்துவிட்டது.
========================================================================