எனது படம்
தமிழர்கள் தமிழ்ப் பற்றாளர்களாக இருந்தால் மட்டும் போதாது; இந்தி ஆதிக்கத்தைத் தகர்க்க, தமிழ் வெறியர்களாக ஆவது[பிற மொழியாளரும்தான்] மிக அவசியம். இந்தி வெறியர்களின் கொட்டத்தை அடக்கக் கடுமையான போராட்டங்கள் தேவைப்படலாம்.

வெள்ளி, 22 ஜூலை, 2022

ஒன்றரை வயதில் 'பூப்பு' எய்திய இங்கிலாந்துக் குழந்தை!!!

'லிசா' என்னும் இங்கிலாந்துப் பெண்ணுக்கு இப்போது 23 வயது.

ஒன்றரை வயதுக் குழந்தையாக இருந்தபோதே இவளின் பிறப்புறுப்பில் ரத்தம் வெளியேறத் தொடங்கியது. அது மேலும் சில நாட்கள் தொடர்ந்தது.

வருத்தம் அடைந்த இவளின் பெற்றோர் மருத்துவரை அணுகினார்கள். "இதற்கு முன்கூட்டிப் பருவமடைதல்' என்னும் அரிதான நிகழ்வு காரணமாக இருக்கலாம்" என்று ஆறுதல் மொழி கூறி அனுப்பினார் அவர்.


8 வயதிலிருந்தே, இவள் வயது வந்தவரைப் போல ப்ரா அணிய வேண்டியிருந்தது. இங்கிலாந்தின் நியூகேஸில் பகுதியைச் சேர்ந்தவரும், இப்போதைய, வாடிக்கையாளர் சேவை மைய ஊழியருமான 'லிசா லூயிஸ்', இந்த நிலை காரணமாகத் தனது வகுப்புத் தோழர்கள் தன்னை மோசமாக இழித்துப் பேசுவதாகக் கூறியுள்ளார்.

பேட்டி ஒன்றில், "மற்றவர்களைவிடவும் நான் மிகவும் வேகமாக வளர்ச்சியடைந்தேன். எனது மார்பகத்தின் அளவு மிகவும் அதிகரித்தது, 7 வயதிலிருந்தே அது வளர ஆரம்பித்திருந்தது. அதனால், பிரா அணிய நேர்ந்தது. தொடக்கப் பள்ளியில் படிக்கும்போது, ​​நான் எனது பள்ளித் தோழிகளுடன் நீச்சல் செல்வேன். உடை மாற்றும் அறையில், மற்றவர்கள் என்னைப் பற்றித் தங்களுக்குள் பேசிக்கொள்வார்கள். மார்பக மாற்று அறுவைச் சிகிச்சை செய்துகொண்டாயா என்று என்னிடமே கேட்டுக் கேலி செய்வார்கள்" என்று மிகவும் வருத்தப்பட்டாராம்.


இதை 'முன்கூட்டிப் பருவமடைதல்' என்று மருத்துவர் கூறினாரே, இந்த முன்கூட்டிப் பருவமடைதல் உலக அளவில் எத்தனைக் குழந்தைகளுக்கு நிகழ்ந்துள்ளது என்பதை அறிய இயலவில்லை.


பெற்றவர்கள் வேதனைக்கு உள்ளாகும் வகையில், பருவ வயதைத் தாண்டியும் பூப்பு எய்தாத பெண்களுக்கிடையே இந்தச் சிறுமியின் வாழ்வில் ஏன் இந்த அவலம்?!


எல்லாம் 'அவன்' செயல்! அவனின்றி அணுவும் அசையாது!! ஹி... ஹி... ஹி!!!

==============================================================

***பதிவு செய்திருந்த ஆங்கிலச் செய்தியின் ஆதார முகவரி, கவனக்குறைவால் காணாமல்போனது. சிறிது நேர முயற்சியில் மீட்டெடுக்க இயலவில்லை. வருந்துகிறேன்.