‘வந்தேமாதரம்’{தாயே[இந்தியா] வணங்குகிறோம்} தொடர்பான விவாதம் ஆளும் கட்சிக்கும் எதிர்க் கட்சிகளுக்கும் இடையே தொடர்ந்து நடைபெறுகிறது.*
விவாதத்தின் முடிவு எதுவாயினும், நம்மை அடக்கி ஆண்ட ஆங்கிலேயரை விரட்டியடிக்க வந்தேமாதரமும் பயன்பட்டது என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.
ஆனால்,
ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெற்றுச் சுதந்திர நாடாக ஆன இந்தியாவை, பத்துக்கும் மேற்பட்ட ஆண்டுகளாக வாக்குத் திருடர்கள்[நிரூபணம்: ராகுல்காந்தி] கைப்பற்றி ஆண்டுகொண்டிருக்கிறார்கள்.
தங்களின் ஆதிக்கம் தொடர்வதற்காக, தேர்தல் ஆணையம், அமலாக்கத்துறை, வருமானவரித்துறை போன்றவற்றைத் தம் வசப்படுத்தி, தங்களின் அடாவடித்தனங்களைக் கண்டிக்கும் எதிர்க்கட்சியினரைப் பலவீனப்படுத்துதல் மட்டுமல்லாமல், மாநிலங்களின் உரிமைகளைப் பறித்தல், இந்தியைத் திணித்து மாநில மொழிகளை அழித்தல் போன்ற அட்டூழியங்களைத் தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறார்கள் அவர்கள்.
அவர்களை இந்த மண்ணைவிட்டே விரட்டியடிக்க, ஆங்கிலேயரை விரட்டியடிக்கப் பயன்பட்ட அதே ‘வந்தேமாதரம்’ முழக்கம் இனியும் தேவைப்படுகிறது.
